Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-153

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 36

மாதவிடாய் பற்றி இதர சட்டங்கள்

153. இரத்தத்தைக் கண்ட கர்ப்பிணிப் பெண், தொழுகையை விட்டு விடுவாள் என ஆயிஷா(ரலி) கூறினார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


فِي الْمَرْأَةِ الْحَامِلِ تَرَى الدَّمَ: أَنَّهَا «تَدَعُ الصَّلَاةَ»


muwatta-malik-151

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

151. இரவின் ஒரு பகுதியில் (எழுந்து) சில பெண்கள் விளக்குகளை எடுத்து, (மாதவிடாய்) சுத்தமாகி விட்டதா? எனப் பார்ப்பார்கள் என (ஆயிஷா(ரலி)க்கு) செய்தி கிடைத்ததும், அப்பெண்களைக் குறை கூறி விட்டு, இவ்வாறு பெண்கள் செய்ய வேண்டியதில்லை எனக் கூறியதாக ஸைத் இப்னு ஸாமித்(ரலி) அவர்களின் மகள் கூறினார்கள்.

(குறிப்பு: இதன் அறிவிப்பாளரான ஸைத்(ரலி) அவர்கள் மகள் யார் என்று குறிப்பு வரவில்லை. எனினும் இதை புகாரி இமாம் அறிவிப்பாளர் வாரிசை ஏதுமின்றிக் கூறியுள்ளார்கள்)…..


أَنَّ نِسَاءً كُنَّ يَدْعُونَ بِالْمَصَابِيحِ مِنْ جَوْفِ اللَّيْلِ يَنْظُرْنَ إِلَى الطُّهْرِ فَكَانَتْ تَعِيبُ ذَلِكَ عَلَيْهِنَّ، وَتَقُولُ: «مَا كَانَ النِّسَاءُ يَصْنَعْنَ هَذَا»


muwatta-malik-150

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 35

மாதவிடாய் பெண் சுத்தமாகுதல்?

150. சில பெண்கள் மாதவிடாய் ரத்தத்தினால் மஞ்சளான பஞ்சு வைக்கப்பட்ட பெட்டியை அன்னை ஆயிஷா(ரலி) அவர்களிடம் அனுப்பி (இதுபோல் இருக்கும் போது தொழுதல்) பற்றிக் கேட்டார்கள். அந்த பஞ்சு வெள்ளையாக ஆகும் வரை நீங்கள் அவசரப்பட வேண்டாம் என அவர்களிடம் கூறினார்கள். வெள்ளைப் பஞ்சு என்பது மூலம் அவர்கள் மாதவிடாய் இருந்து சுத்தமானதையே நாடினார்கள் என அல்கமா அவர்களின் தாய் (ஆயிஷா(ரலி) அவர்களின் அடிமைப் பெண்_ மர்ஜானா(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.


كَانَ النِّسَاءُ يَبْعَثْنَ إِلَى عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، بِالدِّرَجَةِ فِيهَا الْكُرْسُفُ، فِيهِ الصُّفْرَةُ مِنْ دَمِ الْحَيْضَةِ، يَسْأَلْنَهَا عَنِ الصَّلَاةِ. فَتَقُولُ لَهُنَّ: «لَا تَعْجَلْنَ حَتَّى تَرَيْنَ الْقَصَّةَ الْبَيْضَاءَ». تُرِيدُ بِذَلِكَ الطُّهْرَ مِنَ الْحَيْضَةِ


muwatta-malik-149

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

149. மாதவிடாய்ப் பெண் ஒருத்தி, அவள் சுத்தமாகி, அவள் குளிக்கும் முன் தன் கணவனிடம் உடலுறவு கொள்ளலாமா? என்று ஸலாம் இப்னு அப்துல்லா, சுலைமான் இப்னு யஸார் ஆகிய இருவாரிடம் கேட்கப்பட்டது. அவ்விருவரும், அவள் குளிக்கும் வரை கூடாது என்று பதில் கூறினார்கள்.


أَنَّ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ وَسُلَيْمَانَ بْنَ يَسَارٍ سُئِلَا عَنِ الْحَائِضِ، هَلْ يُصِيبُهَا زَوْجُهَا إِذَا رَأَتِ الطُّهْرَ قَبْلَ أَنْ تَغْتَسِلَ؟ فَقَالَا: «لَا حَتَّى تَغْتَسِلَ»


muwatta-malik-148

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

148. மாதவிடாய் காரியான தன் மனைவியை ஒருவன் கட்டி அணைக்கலாமா? என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்க ஒருவரை உபைதுல்லாஹ் இப்னு அப்துல்லா இப்னு உமர் அனுப்பினார்கள். அப்போது ஆயிஷா(ரலி) அவர்கள், அவளின் கீழே அவள் தன் கீழாடையை அவள் இறுக்கிக் கொள்ளட்டும்! பின் அவன் விரும்பினால் அவளைக் கட்டி அணைக்கலாம் எனக் கூறினார்கள். இதை நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَرْسَلَ إِلَى عَائِشَةَ يَسْأَلُهَا: هَلْ يُبَاشِرُ الرَّجُلُ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ؟ فَقَالَتْ: «لِتَشُدَّ إِزَارَهَا عَلَى أَسْفَلِهَا ثُمَّ يُبَاشِرُهَا إِنْ شَاءَ»


muwatta-malik-147

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

147. ஆயிஷா(ரலி) அவர்கள், ஒரே ஆடை விரிப்பில் படுத்திருந்தார்கள். அவர்களுக்கு கடும் ரத்தக் கசிவு ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம், உனக்கு என்ன நேர்ந்தது? மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா? என்று கேட்டார்கள். ஆம்! என்று ஆயிஷா(ரலி) கூறினார்கள். உன் கீழாடையை நீ இறுக்கமாகக் கட்டிக் கொள். பின் உன் படுக்கையில் படுத்துக் கொள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَتْ مُضْطَجِعَةً مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ثَوْبٍ وَاحِدٍ. وَأَنَّهَا قَدْ وَثَبَتْ وَثْبَةً شَدِيدَةً، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا لَكِ؟ لَعَلَّكِ نَفِسْتِ»، يَعْنِي الْحَيْضَةَ. فَقَالَتْ: نَعَمْ، قَالَ: «شُدِّي عَلَى نَفْسِكِ إِزَارَكِ ثُمَّ عُودِي إِلَى مَضْجَعِكِ»


muwatta-malik-146

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 34

மாதவிடாய் பெண்னான தன் மனைவியிடம் ஒரு ஆணுக்குள் அனுமதி!

146. ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம், மாதவிடாய் காரியான என் மனைவியுடன் எனக்கு அனுமதிக்கப்பட்டது எது? என்று கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், அவளின் கீழாடையை அவள் இறுக்கிக் கட்டிக் கொள்ளட்டும். பின்பு அதன் மேலாக உன் காரியம் உனக்குண்டு என்று கூறினார்கள். இதை ஸைத் இப்னு அஸ்லம் கூறுகின்றார்கள்.


أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: مَا يَحِلُّ لِي مِنِ امْرَأَتِي وَهِيَ حَائِضٌ؟ فَقَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «لِتَشُدَّ عَلَيْهَا إِزَارَهَا ثُمَّ شَأْنَكَ بِأَعْلَاهَا»


muwatta-malik-143

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 33

குளிப்புக் கடமைக்காக தயம்மும் செய்தல்

143. குளிப்புக் கடமையான ஒருவர் தயம்மும் செய்கிறார். பின்பு தண்ணீரைப் பெற்றுக் கொள்கிறார். (இவர் நிலை என்ன?) என ஸயீத் இப்னு முஸய்யப் அவர்களிடம் கேட்டார். அவர் தண்ணீரைப் பெற்றுக் கொண்டால் (இனி செய்யவிருக்கும்) வரும் அமல்களுக்காக குளிப்பது அவர் மீது கடமை என ஸயீத் கூறினார்கள்.


أَنَّ رَجُلًا سَأَلَ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ، عَنِ الرَّجُلِ الْجُنُبِ يَتَيَمَّمُ ثُمَّ يُدْرِكُ الْمَاءَ؟ فَقَالَ: سَعِيدٌ: «إِذَا أَدْرَكَ الْمَاءَ، فَعَلَيْهِ الْغُسْلُ لِمَا يُسْتَقْبَلُ»


muwatta-malik-141

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

141. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் முழங்கை வரை தயம்மும் செய்வார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «يَتَيَمَّمُ إِلَى الْمِرْفَقَيْنِ»


muwatta-malik-140

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 32

தயம்மும் செய்யும் முறை..

140. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களும், நானும் ஜுர்ப் என்ற இடத்திற்கு செல்லும் வழியில் ‘மர்பத்” என்ற இடத்திற்கு அப்துல்லா(ரலி) இறங்கினார்கள். தூய்மையான மண்ணில் தயம்மும் செய்தார்கள். தன் முகத்தையும் முழங்கை உட்பட கைகளையும் தடவினார்கள். பின்பு தொழுதார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.

(இது புகாரியில் பாடத் தலைப்பாக இடம் பெற்றுள்ளது).


أَنَّهُ أَقْبَلَ هُوَ وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ مِنَ الْجُرُفِ حَتَّى إِذَا كَانَا بِالْمِرْبَدِ نَزَلَ عَبْدُ اللَّهِ «فَتَيَمَّمَ صَعِيدًا طَيِّبًا، فَمَسَحَ وَجْهَهُ، وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ ثُمَّ صَلَّى»


Next Page » « Previous Page