Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-165

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

165. (திட) உணவு சாப்பிடாத தன் சிறு வயது மகனை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்ததாகவும், அக்குழந்தையை தன் மடியின் மீது நபி(ஸல்) அவர்கள் உட்கார வைத்ததும் அவர்களின் ஆடை மீது அது சிறுநீர் கழித்தது. தண்ணீர் வரவழைத்த நபி(ஸல்) அவர்க்ள அதை (தன் மடியில்) தெளித்தார்கள். கழுவவில்லை எனவும் மிஹ்ஸன் அவர்களின் மகள் உம்மு கைஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


أَنَّهَا أَتَتْ بِابْنٍ لَهَا صَغِيرٍ، لَمْ يَأْكُلِ الطَّعَامَ، إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَجْلَسَهُ فِي حَجْرِهِ فَبَالَ عَلَى ثَوْبِهِ، «فَدَعَا رَسُولُ اللَّهِ بِمَاءٍ فَنَضَحَهُ وَلَمْ يَغْسِلْهُ»


muwatta-malik-164

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 38

சிறுவரின் சிறுநீர் பற்றி..

164. நபி(ஸல்) அவர்களிடம் சிறுவர் கொண்டு வரப்பட்டார். அவர்களின் ஆடை மீது சிறுநீர் கழித்தார். உடனே நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரச் செய்து தெளித்துக் கொண்டார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம் ல் இடம் பெற்றுள்ளது).


أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِصَبِيٍّ فَبَالَ عَلَى ثَوْبِهِ، «فَدَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَاءٍ فَأَتْبَعَهُ إِيَّاهُ»


muwatta-malik-161

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

161. தொடர்ந்து இரத்தப் போக்கு ஏற்பட்டவள் மீது ஒரு தடவை (மட்டும்) குளிப்பதைத் தவிர வேறு (எதுவும்) இல்லை. (ஆனாலும்) பின்பு ஒவ்வொரு தொழுகைக்கும் ஒளுச் செய்து கொள்வாய் என உர்வா கூறுகின்றார்கள்.


«لَيْسَ عَلَى الْمُسْتَحَاضَةِ إِلَّا أَنْ تَغْتَسِلَ غُسْلًا وَاحِدًا، ثُمَّ تَتَوَضَّأُ بَعْدَ ذَلِكَ لِكُلِّ صَلَاةٍ»


muwatta-malik-160

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

160. இரத்தப் போக்கு ஏற்பட்டவள் எப்படி குளிப்பாள் என ஸயீத் இப்னு முஸய்யப் அவர்களிடம் கேட்டு வரும்படி என்னை காகா இப்னு ஹகீம், ஸைய்யித் இப்னு அஸ்லம் ஆகிய இருவரும் அனுப்பி வைத்தனர். ஒரு சுத்தத்தில் இருந்து மறு சுத்தத்திற்காக குளிப்பாள். ஒவ்வொரு தொழுகைக்காகவும் ஒளுச் செய்வாள். அவளுக்கு இரத்தம் (வருவது) மிகைத்தா;ல (துணியால்) இறுகக் கட்டிக் கொள்வாள் என பதில் கூறினார்கள் என்று அபூபக்கர்(ரலி) அவர்களின் அடிமை சுமையா கூறுகின்றார்.


أَنَّ الْقَعْقَاعَ بْنَ حَكِيمٍ وَزَيْدَ بْنَ أَسْلَمَ أَرْسَلَاهُ إِلَى سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، يَسْأَلُهُ كَيْفَ تَغْتَسِلُ الْمُسْتَحَاضَةُ؟ فَقَالَ: «تَغْتَسِلُ مِنْ طُهْرٍ إِلَى طُهْرٍ، وَتَتَوَضَّأُ لِكُلِّ صَلَاةٍ، فَإِنْ غَلَبَهَا الدَّمُ اسْتَثْفَرَتْ»


muwatta-malik-159

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

159. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபு(ரலி) அவர்களின் மனைவியும், ஜஹ்ஷ் அவர்களின் மகளுமான ஜைனப்(ரலி) அவர்கள் (தொடர்) இரத்தப் போக்கு ஏற்பட்டவர்களாக இருந்தார்கள். குளித்து விட்டு, தொழவும் செய்வார்கள் என அபூ ஸலமா(ரலி) வின் மகள் ஜைனப்(ரலி) கூறுகின்றார்கள்.


رَأَتْ زَيْنَبَ بِنْتَ جَحْشٍ الَّتِي كَانَتْ تَحْتَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَكَانَتْ تُسْتَحَاضُ فَكَانَتْ «تَغْتَسِلُ وَتُصَلِّي»


muwatta-malik-158

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

158. அல்லாஹ்வின் தூதரே! நான் (இரத்தப் போக்கிலிருந்து) சுத்தமாகுவதே இல்லை. நா;ன தொழுகையை விடடு விடவா? என அபூஹுரைரா அவர்களின் மகள் பாத்திமா(ரலி) அவர்கள் கேட்க, இது ஒரு நோய் தான்.மாதவிடாய் அல்ல. மாதவிடாய் (காலம்) வந்தால் தொழுகையை விட்டு விடு! மாதவிடாயின் (கால) அளவு முடிந்து விட்டால், உன்னில் இருந்து ரத்தத்தைச் சுத்தப்படுத்து. தொழுது கொள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ யில் இடம் பெற்றுள்ளது).


أَنَّ امْرَأَةً كَانَتْ تُهَرَاقُ الدِّمَاءَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَفْتَتْ لَهَا أُمُّ سَلَمَةَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «لِتَنْظُرْ إِلَى عَدَدِ اللَّيَالِي وَالْأَيَّامِ الَّتِي كَانَتْ تَحِيضُهُنَّ مِنَ الشَّهْرِ، قَبْلَ أَنْ يُصِيبَهَا الَّذِي أَصَابَهَا، فَلْتَتْرُكِ الصَّلَاةَ قَدْرَ ذَلِكَ مِنَ الشَّهْرِ، فَإِذَا خَلَّفَتْ ذَلِكَ فَلْتَغْتَسِلْ، ثُمَّ لِتَسْتَثْفِرْ بِثَوْبٍ ثُمَّ لِتُصَلِّي»


muwatta-malik-157

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 37

தொடர் இரத்தப் போக்கு ஏற்பட்டவள்?

157. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஒருவர் இரத்தப் போக்குடையவராக இருந்தார். (அவர் என்ன செய்வது? என) அவருக்காக நபி(ஸல்) அவர்களிடம் நான் மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். இந்நிலை ஏற்படும் முன்னாள் மாதத்தின் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்ட இரவு – பகலை (நாட்களை) எண்ணட்டும்! அந்த நாள் சென்றதும் குளிக்கட்டும்! பின்பு துணியால் இறுகக் கட்டிக் கொள்ளட்;டும்! பின்பு தொழட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று உம்மு சலமா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

இது அபூதாவூத், நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


قَالَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَا أَطْهُرُ، أَفَأَدَعُ الصَّلَاةَ؟ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا ذَلِكِ عِرْقٌ وَلَيْسَتْ بِالْحَيْضَةِ، فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَاتْرُكِي الصَّلَاةَ، فَإِذَا ذَهَبَ قَدْرُهَا، فَاغْسِلِي الدَّمَ عَنْكِ وَصَلِّي»


muwatta-malik-156

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

156. நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண், எங்களின் ஒரு பெண் தன் ஆடையில் மாதவிடாய் இரத்தத்தைக் கண்டால், அவள் எப்படி நடந்து கொள்வாள் என்று கூறுங்கள்? என்று கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், உங்களில் ஒரு பெண் ஆடையில் மாதவிடாய் இரத்தம் இருந்தால், அதை அவள் சுரண்டி விட்டு, பின்பு அதை தண்ணீரால் கழுவட்டம்! பின்பு அதில் தொழட்டும் என்று கூறினார்கள் என அஸ்மா பின்த் அபுபக்கர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


سَأَلَتِ امْرَأَةٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: أَرَأَيْتَ إِحْدَانَا إِذَا أَصَابَ ثَوْبَهَا الدَّمُ مِنَ الْحَيْضَةِ، كَيْفَ تَصْنَعُ فِيهِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَصَابَ ثَوْبَ إِحْدَاكُنَّ الدَّمُ مِنَ الْحَيْضَةِ فَلْتَقْرُصْهُ ثُمَّ لِتَنْضِحْهُ بِالْمَاءِ ثُمَّ لِتُصَلِّ فِيهِ»


muwatta-malik-155

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

155. நான் மாதவிடாய்க் காரியாக இருந்த நிலையில், நபி(ஸல்) அவர்களின் தலையை நான் வாரி விடுபவளாக இருந்தேன் என ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இதன் கருத்து புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


كُنْتُ «أُرَجِّلُ رَأْسَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا حَائِضٌ»


muwatta-malik-154

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

154. இரத்தத்தைக் கண்ட கர்ப்பிணிப் பெண் (என்ன செய்வாள்) என இப்னு ஷிஹாப் அவர்களிடம் தான் கேடட போது, அவள் தொழுகையை விட்டும் ஒதுங்கி விடுவாள் எனக் கூறினார்கள் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


أَنَّهُ سَأَلَ ابْنَ شِهَابٍ، عَنِ الْمَرْأَةِ الْحَامِلِ تَرَى الدَّمَ؟ قَالَ: «تَكُفُّ عَنِ الصَّلَاةِ»

قَالَ يَحْيَى قَالَ مَالِكٌ: «وَذَلِكَ الْأَمْرُ عِنْدَنَا»


Next Page » « Previous Page