Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-3

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3. அதாஉ பின் யஸார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் பற்றிக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்காமல் அமைதியாக இருந்தார்கள். மறுநாள் ஃபஜ்ர் நேரம் உதயமானதும் ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். பின்பு (மறுநாள்) கிழக்கு வெளுத்தப் பின் (அதாவது நன்கு வெளிச்சம் ஆன பிறகு) ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள்.

பின்னர், “தொழுகையின் நேரம் பற்றிக் கேட்டவர் எங்கே?” என்று கேட்டார்கள். அவர், “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் இங்கே இருக்கிறேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள், “(நேற்றும் இன்றும் தொழ வைத்த) இந்த இரண்டு நேரங்களுக்கு இடைப்பட்ட நேரம் தான் (ஸுப்ஹுத் தொழுகையின்) நேரம்” என கூறினார்கள்.


جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَهُ عَنْ وَقْتِ صَلَاةِ الصُّبْحِ. قَالَ: فَسَكَتَ عَنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا كَانَ مِنَ الْغَدِ، صَلَّى الصُّبْحَ حِينَ طَلَعَ الْفَجْرُ، ثُمَّ صَلَّى الصُّبْحَ مِنَ الْغَدِ بَعْدَ أَنْ أَسْفَرَ. ثُمَّ قَالَ: «أَيْنَ السَّائِلُ عَنْ وَقْتِ الصَّلَاةِ؟» قَالَ: هَأَنَذَا يَا رَسُولَ اللَّهِ فَقَالَ: «مَا بَيْنَ هَذَيْنِ وَقْتٌ»


muwatta-malik-2

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2. மேலும் உர்வா (ரஹ்) அறிவித்தார்:

எனது அறையிலிருந்து சூரிய ஒளி (முழுவதும்) அகலாத நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையை நடத்துவார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.


 أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا، قَبْلَ أَنْ تَظْهَرَ»


muwatta-malik-1

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

بسم الله الرحمن الرحيم

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அல்லாஹ், நமது நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மீதும் அருள் புரிவானாக! மேலும் அவர்களுக்கு முழுமையான சாந்தி அளிப்பானாக!


முஅத்தா மாலிக் நூலின் பிரதிகளில் இந்த பிரதியின் அறிவிப்பாளர்தொடர்:

“மார்க்க மேதை அபூஅப்துல்லாஹ்-முஹம்மது பின் ஃபரஜ் (ரஹ்) (ரலியல்லாஹு அன்ஹு-அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்வானாக!) அவர்கள் இந்த மாலிக் நூலை, அல்காழீ அபுல்வலீத் யூனுஸ் பின் அப்தில்லாஹ் பின் முஃகீஸ் (குர்துபாவின் நீதிபதி; இப்னுஸ் ஸஃப்பார் என்று பிரபலமானவர்) —> அபூஈஸா யஹ்யா பின் அப்தில்லாஹ் பின் அபூஈஸா —> உபைதுல்லாஹ் பின் யஹ்யா —> யஹ்யா அல்லைஸீ என்ற அறிவிப்பாளர்தொடரில் எங்களுக்கு அறிவித்தார்கள்.

இதை (ஸ்பெயினின்) குர்துபா எனும் நகரில் உள்ள அவரது மஸ்ஜிதில், ரபீஉல் ஆகிர் மாதத்தின் ஆரம்பத்தில், ஹிஜ்ரீ 494 ஆம் ஆண்டில், அவரிடம் (மாலிக் நூல்) படித்துக் காட்டப்பட்டது. அப்பொழுது நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.


அத்தியாயம்: 1

தொழுகை

பாடம்: 1

தொழுகையின் நேரங்கள்.

1. இப்னு ஷிஹாப்-முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் அப்துல்அஸீஸ் ஒரு

أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ أَخَّرَ الصَّلَاةَ يَوْمًا ، فَدَخَلَ عَلَيْهِ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ، فَأَخْبَرَهُ أَنَّ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ أَخَّرَ الصَّلَاةَ يَوْمًا وَهُوَ بِالْكُوفَةِ ، فَدَخَلَ عَلَيْهِ أَبُو مَسْعُودٍ الْأَنْصَارِيُّ فَقَالَ مَا هَذَا يَا مُغِيرَةُ؟ أَلَيْسَ قَدْ عَلِمْتَ أَنَّ جِبْرِيلَ نَزَلَ فَصَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ – صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ – صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ – صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ – صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ – صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – فَقَالَ : بِهَذَا أُمِرْتُ ،

فَقَالَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ : اعْلَمْ مَا تُحَدِّثُ يَا عُرْوَةُ ، أَوَ إِنَّ جِبْرِيلَ هُوَ الَّذِي أَقَامَ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقْتَ الصَّلَاةِ  –

قَالَ عُرْوَةُ : كَذَلِكَ كَانَ بَشِيرُ بْنُ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيُّ يُحَدِّثُ عَنْ أَبِيهِ


« Previous Page