அத்தியாயம்: 15
நபி (ஸல்) அவர்களிடமிருந்து வந்துள்ள குற்றவியல் தண்டனைகள் பற்றிய பாடங்கள்.
பாடம்: 1.
யாருக்கு (இந்த வகை) தண்டனை இல்லை என்பது பற்றி வந்துள்ளவை.
1423. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“மூன்று நபர்களிடமிருந்து (செயல்களைப் பதிவு செய்யும்) எழுதுகோல் உயர்த்தப்பட்டுவிட்டது (அவர்களுக்குக் குற்றம் எழுதப்படாது):
1 . உறங்குபவர் விழிக்கும் வரை,
2 . சிறுவன் பருவமடையும் வரை,
3 . புத்தி சுவாதீனமற்றவர் தெளிவுபெறும் வரை.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் ஆயிஷா (ரலி) வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அலீ (ரலி) அவர்கள் வழியாக வரும் இந்த அறிவிப்பாளர்தொடர் “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.
இந்த ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்து வேறு வகை அறிவிப்பாளர்தொடர்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிலர் “சிறுவன் பருவமடையும் வரை” என்பதை வேறு வார்த்தையில் கூறியுள்ளனர்.
ஹஸன் அல்பஸரீ அவர்கள் அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகச் செவிமடுத்ததாக நமக்குத் தெரியவில்லை. இருப்பினும், இந்த ஹதீஸ் அதாஉ பின் ஸாஇப் —> அபூளப்யான் —> அலீ பின் ” رُفِعَ القَلَمُ عَنْ ثَلَاثَةٍ: عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ، وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَشِبَّ، وَعَنِ المَعْتُوهِ حَتَّى يَعْقِلَ “
சமீப விமர்சனங்கள்