பாடம்: 11
எந்த உயிரும் தனக்கென எழுதப்பட்டுள்ள இடத்தில்தான் மரணிக்கும் என்பது தொடர்பாக வந்துள்ளவை.
2146. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு (குறிப்பிட்ட) இடத்தில் ஓர் அடியார் இறப்பார் என அல்லாஹ் தீர்மானித்துவிட்டால், அந்த இடத்தில் அவருக்கு ஒரு தேவையை அவன் ஏற்படுத்திவிடுவான்.
அறிவிப்பவர்: மத்தர் பின் உகாமிஸ் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், அபூஅஸ்ஸா (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்தர் பின் உக்காமிஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ், ‘ஹஸன் ஃகரீப்’ எனும் தரத்தில் அமைந்ததாகும்.
மத்தர் பின் உக்காமிஸ் (ரலி) அவர்கள் இந்த நபிமொழியைத் தவிர வேறெதுவும் அறிவித்திருப்பதாக அறியப்படவில்லை.
இந்த ஹதீஸ் மத்தர் பின் உக்காமிஸ் (ரலி) அவர்கள் வழியாக மேலும் இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
«إِذَا قَضَى اللَّهُ لِعَبْدٍ أَنْ يَمُوتَ بِأَرْضٍ جَعَلَ لَهُ إِلَيْهَا حَاجَةً»
وَفِي البَابِ عَنْ أَبِي عَزَّةَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ، وَلَا يُعْرَفُ لِمَطَرِ بْنِ عُكَامِسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرُ هَذَا الحَدِيثِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا مُؤَمَّلٌ، وَأَبُو دَاوُدَ الحَفَرِيُّ، عَنْ سُفْيَانَ، نَحْوَهُ
சமீப விமர்சனங்கள்