Category: திர்மிதீ

Tirmidhi-107

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

107.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يَتَوَضَّأُ بَعْدَ الغُسْلِ»،


Tirmidhi-106

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

106.


«تَحْتَ كُلِّ شَعْرَةٍ جَنَابَةٌ، فَاغْسِلُوا الشَّعْرَ، وَأَنْقُوا البَشَرَ»


Tirmidhi-105

ஹதீஸின் தரம்: விபரம் கீழே


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي امْرَأَةٌ أَشُدُّ ضَفْرَ رَأْسِي، أَفَأَنْقُضُهُ لِغُسْلِ الجَنَابَةِ؟ قَالَ: «لَا إِنَّمَا يَكْفِيكِ أَنْ تَحْثِي عَلَى رَأْسِكِ ثَلَاثَ حَثَيَاتٍ مِنْ مَاءٍ، ثُمَّ تُفِيضِي عَلَى سَائِرِ جَسَدِكِ المَاءَ، فَتَطْهُرِينَ»، أَوْ قَالَ: «فَإِذَا أَنْتِ قَدْ تَطَهَّرْتِ»


Tirmidhi-104

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

104.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கு நிலையிலிருந்து குளிக்க நினைக்கும்போது, முதலில் தம் இரு கைகளையும் (தண்ணீர் கொண்டு வந்த) பாத்திரத்தில் விடுவதற்கு முன்பே கழுவுவார்கள். பின்னர், தம் மறைவிடத்தைக் கழுவுவார்கள். பிறகு, தொழுகைக்காக அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போல் அங்கத் தூய்மை செய்வார்கள். பின்னர், தம் தலைமுடிக்கு தண்ணீர் ஊற்றி (நனைத்து) விடுவார்கள். பிறகு, தம் தலையின் மீது மூன்று முறைகளாக கைப்பிடி தண்ணீர் எடுத்து ஊற்றுவார்கள்.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَغْتَسِلَ مِنَ الجَنَابَةِ: بَدَأَ فَغَسَلَ يَدَيْهِ قَبْلَ أَنْ يُدْخِلَهُمَا الإِنَاءَ، ثُمَّ غَسَلَ فَرْجَهُ، وَيَتَوَضَّأُ وُضُوءَهُ لِلصَّلَاةِ، ثُمَّ يُشَرِّبُ شَعْرَهُ المَاءَ، ثُمَّ يَحْثِي عَلَى رَأْسِهِ ثَلَاثَ حَثَيَاتٍ


Tirmidhi-103

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

பெருந்தொடக்கினால் குளிப்பது (கட்டாயம்) என்பது குறித்து வந்துள்ளவை.

103. மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் வைத்தேன். அவர்கள் பெருந்துடக்கினால் (கடமையான) குளிப்பை நிறைவேற்றினார்கள். அப்போது இடது கையால் பாத்திரத்தை வலது கையின் மீது சாய்த்து, தமது இரு உள்ளங்கைகளையும் கழுவினார்கள். பிறகு தமது கையை பாத்திரத்தினுள் நுழைத்து, தமது மர்ம உறுப்பின் மீது தண்ணீரை ஊற்றினார்கள். பிறகு தமது கையால் சுவரையோ அல்லது தரையையோ தேய்த்து, வாய் கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார்கள். பின்னர் தமது முகத்தையும், இரு முழங்கைகளையும் கழுவினார்கள். பிறகு தமது தலையின் மீது மும்முறை தண்ணீரை ஊற்றினார்கள். பின்னர் தமது உடலின் மற்ற பாகங்கள் மீது தண்ணீரை ஊற்றினார்கள். பிறகு சற்றே விலகிச் சென்று தமது கால்களைக் கழுவினார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன், ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.

இப்பாடப்பொருள் தொடர்பான செய்திகள் உம்மு ஸலமா (ரலி), ஜாபிர் (ரலி), அபூஸயீத் (ரலி), ஜுபைர் பின் முத்இம் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.


«وَضَعْتُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غُسْلًا، فَاغْتَسَلَ مِنَ الجَنَابَةِ، فَأَكْفَأَ الإِنَاءَ بِشِمَالِهِ عَلَى يَمِينِهِ، فَغَسَلَ كَفَّيْهِ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ فَأَفَاضَ عَلَى فَرْجِهِ، ثُمَّ دَلَكَ بِيَدِهِ الحَائِطَ، أَوِ الأَرْضَ، ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْشَقَ، وَغَسَلَ وَجْهَهُ وَذِرَاعَيْهِ، ثُمَّ أَفَاضَ عَلَى رَأْسِهِ ثَلَاثًا، ثُمَّ أَفَاضَ عَلَى سَائِرِ جَسَدِهِ، ثُمَّ تَنَحَّى فَغَسَلَ رِجْلَيْهِ»


Tirmidhi-102

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

102. அபூஉபைதா பின் முஹம்மத் பின் அம்மார் பின் யாஸிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம் காலுறைகள் மீது மஸ்ஹு செய்வது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “என் சகோதரர் மகனே! அது நபிவழி” என்று பதிலளித்தார்கள். மேலும் நான் தலைப்பாகை மீது மஸ்ஹு செய்வது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “முடிக்குத் தண்ணீர் படச் செய்” என்று பதிலளித்தார்கள்.


سَأَلْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ عَنِ المَسْحِ عَلَى الخُفَّيْنِ؟ فَقَالَ: «السُّنَّةُ يَا ابْنَ أَخِي»، وَسَأَلْتُهُ عَنِ المَسْحِ عَلَى العِمَامَةِ؟ فَقَالَ: «أَمِسَّ الشَّعَرَ المَاءَ»


Tirmidhi-101

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

101. பிலால் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் காலுறைகள் மீதும் தலைப்பாகை மீதும் (மஸ்ஹு) ஈரக் கையால் தடவினார்கள்.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَسَحَ عَلَى الخُفَّيْنِ وَالخِمَارِ»


Tirmidhi-3579

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3579. அல்லாஹ் தன் அடியாருக்கு மிக நெருக்கமாக இருக்கும் நேரம் இரவின் கடைசிப் பகுதி நேரமாகும். எனவே அந்த நேரத்தில் அல்லாஹ்வை நினைவு கூர்பவர்களில் நீயும் ஒருவனாக இருக்க முடிந்தால், அவ்வாறு இருப்பாயாக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றேன்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அபஸா (ரலி)


«أَقْرَبُ مَا يَكُونُ الرَّبُّ مِنَ العَبْدِ فِي جَوْفِ اللَّيْلِ الآخِرِ، فَإِنْ اسْتَطَعْتَ أَنْ تَكُونَ مِمَّنْ يَذْكُرُ اللَّهَ فِي تِلْكَ السَّاعَةِ فَكُنْ»


Tirmidhi-1751

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

உருவப்படம் வரைவோர் குறித்து வந்துள்ளவை.

1751. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உலகில் ஓர் உருவப் படத்தை வரைகிறவர் மறுமை நாளில் அந்த உருவத்தினுள் உயிரை ஊதும்படி பணிக்கப்படுவார். ஆனால், அவரால் ஊத முடியாது.

தாம் கேட்பதை மக்கள் வெருண்டோடும் நிலையில் ‘அவர்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), அபூஹுரைரா (ரலி), அபூஜுஹைஃபா (ரலி), ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் மேற்கண்ட ஹதீஸ் “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.


«مَنْ صَوَّرَ صُورَةً عَذَّبَهُ اللَّهُ حَتَّى يَنْفُخَ فِيهَا – يَعْنِي الرُّوحَ – وَلَيْسَ بِنَافِخٍ فِيهَا، وَمَنْ اسْتَمَعَ إِلَى حَدِيثِ قَوْمٍ وَهُمْ يَفِرُّونَ مِنْهُ صُبَّ فِي أُذُنِهِ الْآنُكُ يَوْمَ الْقِيَامَةِ»


Tirmidhi-3085

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3085.


«لَمْ تَحِلَّ الغَنَائِمُ لِأَحَدِ سُودِ الرُّءُوسِ مِنْ قَبْلِكُمْ، كَانَتْ تَنْزِلُ نَارٌ مِنَ السَّمَاءِ فَتَأْكُلُهَا»

قَالَ سُلَيْمَانُ الأَعْمَشُ: ” فَمَنْ يَقُولُ هَذَا إِلَّا أَبُو هُرَيْرَةَ، الآنَ،

فَلَمَّا كَانَ يَوْمُ بَدْرٍ وَقَعُوا فِي الغَنَائِمِ قَبْلَ أَنْ تَحِلَّ لَهُمْ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {لَوْلَا كِتَابٌ مِنَ اللَّهِ سَبَقَ لَمَسَّكُمْ فِيمَا أَخَذْتُمْ عَذَابٌ عَظِيمٌ} [الأنفال: 68] “


Next Page » « Previous Page