Category: திர்மிதீ

Tirmidhi-3681

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

அபூஹஃப்ஸ்-உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்:

3681. “அல்லாஹ்வே! அபூஜஹ்ல் பின் ஹிஷாம் அல்லது உமர் பின் கத்தாப் ஆகிய இருவரில் உனக்கு விருப்பமானவரைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் (அல்லாஹ்விடம்) பிரார்த்தனை செய்தார்கள்.

அவ்விருவரில் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வுக்கு விருப்பமானவராக ஆகிவிட்டார்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்னு உமர் (ரலி) வழியாக வரும் இந்தச் செய்தி “ஹஸன் ஸஹீஹ் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.


«اللَّهُمَّ أَعِزَّ الإِسْلَامَ بِأَحَبِّ هَذَيْنِ الرَّجُلَيْنِ إِلَيْكَ بِأَبِي جَهْلٍ أَوْ بِعُمَرَ بْنِ الخَطَّابِ»

قَالَ: وَكَانَ أَحَبَّهُمَا إِلَيْهِ عُمَرُ


Tirmidhi-1114-2

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1114-2. அபுல்அஜ்ஃபாஉ அஸ்ஸுலமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் (ஒரு உரையில்) பின்வருமாறு கூறினார்கள்:

அறிந்துகொள்ளுங்கள்! பெண்களுக்கு வழங்கும் திருமணக்கொடை (மஹர்)களில் (அளவு கடந்து கொடுப்பதன் மூலம்) வரம்பு மீறாதீர்கள். இவ்வுலகில் அது மதிப்புமிக்க செயலாகவோ அல்லாஹ்விடம் இறையச்சத்திற்குரிய செயலாகவோ இருக்குமானால் அவ்வாறு வழங்குவதற்கு உங்களையெல்லாம்விட மிகத் தகுதி வாய்ந்தவர்கள், நபி (ஸல்) அவர்கள்தாம்.

(ஆனால்) நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியருள் யாருக்கும் பன்னிரண்டு ஊக்கியாக்களைவிடக் கூடுதலாக மணக்கொடை வழங்கயதாகவோ அல்லது அவர்களுடைய புதல்வியருள் யாருக்கும் பன்னிரண்டு ஊக்கியாக்களைவிடக் கூடுதலாக மணக்கொடை பெற்றதாகவோ நான் அறியவில்லை. (அவ்வாறு கண்டதில்லை)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.

அபுல்அஜ்ஃபாஉ அஸ்ஸுலமீ (ரஹ்) அவர்களின் இயற்பெயர் “ஹரிம்” என்பதாகும். கல்வியாளர்களின் வழக்கில் ஒரு ஊக்கியா என்பது 40 திர்ஹங்களாகும். எனவே 12 ஊக்கியா என்பது 480 திர்ஹங்களாகும்.


أَلَا لَا تُغَالُوا صَدُقَةَ النِّسَاءِ، فَإِنَّهَا لَوْ كَانَتْ مَكْرُمَةً فِي الدُّنْيَا، أَوْ تَقْوَى عِنْدَ اللَّهِ لَكَانَ أَوْلَاكُمْ بِهَا نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «مَا عَلِمْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَكَحَ شَيْئًا مِنْ نِسَائِهِ وَلَا أَنْكَحَ شَيْئًا مِنْ بَنَاتِهِ عَلَى أَكْثَرَ مِنْ ثِنْتَيْ عَشْرَةَ أُوقِيَّةً»


Tirmidhi-665

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

யாசிப்பவரின் உரிமைக் குறித்து வந்துள்ளவை.

665. அப்துர்ரஹ்மான் பின் புஜைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்தவர்களில் ஒருவரான எனது பாட்டி உம்மு புஜைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு தடவை) நான், அல்லாஹ்வின் தூதரே! சில நேரம் எனது வாசலில் ஒரு ஏழை நிற்கும்போது அவருக்கு கொடுப்பதற்கேற்ற எதுவும் என்னிடம் இருப்பதில்லையே என்று கூறினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், அப்போது உம்மிடம் எதுவும் இல்லாவிட்டால் (குறைந்த பட்சம்) கால்நடைப் பிராணிகளின் கரிந்த குளம்பே இருந்தாலும் அதை அவரின் கையில் கொடுத்துவிடு! என்று கூறினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப்பொருள் தொடர்பான செய்தி அலீ (ரலி), ஹுஸைன் பின் அலீ (ரலி), அபூஹுரைரா (ரலி), அபூஉமாமா (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உம்மு புஜைத் (ரலி) அவர்களின் (மேற்கண்ட) செய்தி “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.


يَا رَسُولَ اللَّهِ، إِنَّ المِسْكِينَ لَيَقُومُ عَلَى بَابِي فَمَا أَجِدُ لَهُ شَيْئًا أُعْطِيهِ إِيَّاهُ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ لَمْ تَجِدِي لَهُ شَيْئًا تُعْطِيهِ إِيَّاهُ إِلَّا ظِلْفًا مُحْرَقًا فَادْفَعِيهِ إِلَيْهِ فِي يَدِهِ»


Tirmidhi-2616

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

தொழுகையின் அவசியம் குறித்து வந்துள்ளவை.

2616. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பயணத்தின் போது, நபி (ஸல்) அவர்களுடன் நான் இருந்தேன். ஒருநாள் அவர்களுக்கு நெருக்கமாக நான் இருந்த போது, “அல்லாஹ்வின் தூதரே! என்னை சொர்க்கத்தில் நுழையச் செய்து, நரகத்திலிருந்து தூரமாக்கும் நற்செயலை எனக்கு அறிவியுங்கள்!” என்று கேட்டேன்.

அதற்கவர்கள், “நீர் பெரிய விஷயத்தை பற்றி என்னிடம் கேட்டு விட்டீர்; அல்லாஹ் யாருக்கு அதனை இலகுவாக்கித் தருகிறானோ அவருக்கு அது இலகுவானது தான். (அவைகள்:)

அல்லாஹ்வை வணங்குவீராக! அவனுக்கு எதையும் இணை வைக்க வேண்டாம்! தொழுகையைப் பேணி, ஸகாத்தையும் வழங்குவீராக! ரமலானில் நோன்பு வைப்பீராக! கஅபா எனும் ஆலயத்திற்கு சென்று ஹஜ் செய்வீராக!” என்று கூறினார்கள்.

பிறகு அவர்கள், “நன்மைகளின் வாசல்களை உமக்கு கூறட்டுமா?” என்று கேட்டு விட்டு, நோன்பு பாவங்களை தடுக்கும் கேடயமாகும். தண்ணீர் நெருப்பை அணைப்பது போல் அது பாவத்தை போக்கி விடும். அத்துடன் ஒரு மனிதன் நடுஇரவில் தொழுவதும் (கேடயமும், பாவங்களைப் போக்குவதும்) ஆகும்” என்று கூறிவிட்டு,

அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்)

كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَأَصْبَحْتُ يَوْمًا قَرِيبًا مِنْهُ وَنَحْنُ نَسِيرُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الجَنَّةَ وَيُبَاعِدُنِي عَنِ النَّارِ، قَالَ: «لَقَدْ سَأَلْتَنِي عَنْ عَظِيمٍ، وَإِنَّهُ لَيَسِيرٌ عَلَى مَنْ يَسَّرَهُ اللَّهُ عَلَيْهِ، تَعْبُدُ اللَّهَ وَلَا تُشْرِكْ بِهِ شَيْئًا، وَتُقِيمُ الصَّلَاةَ، وَتُؤْتِي الزَّكَاةَ، وَتَصُومُ رَمَضَانَ، وَتَحُجُّ البَيْتَ»

ثُمَّ قَالَ: ” أَلَا أَدُلُّكَ عَلَى أَبْوَابِ الخَيْرِ: الصَّوْمُ جُنَّةٌ، وَالصَّدَقَةُ تُطْفِئُ الخَطِيئَةَ كَمَا يُطْفِئُ المَاءُ النَّارَ، وَصَلَاةُ الرَّجُلِ مِنْ جَوْفِ اللَّيْلِ ” قَالَ: ثُمَّ تَلَا {تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ المَضَاجِعِ} [السجدة: 16]، حَتَّى بَلَغَ {يَعْمَلُونَ} [السجدة: 17]

ثُمَّ قَالَ: «أَلَا أُخْبِرُكَ بِرَأْسِ الأَمْرِ كُلِّهِ وَعَمُودِهِ، وَذِرْوَةِ سَنَامِهِ»؟ قُلْتُ: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «رَأْسُ الأَمْرِ الإِسْلَامُ، وَعَمُودُهُ الصَّلَاةُ، وَذِرْوَةُ سَنَامِهِ الجِهَادُ»

ثُمَّ قَالَ: «أَلَا أُخْبِرُكَ بِمَلَاكِ ذَلِكَ كُلِّهِ»؟ قُلْتُ: بَلَى يَا نَبِيَّ اللَّهِ، فَأَخَذَ بِلِسَانِهِ قَالَ: «كُفَّ عَلَيْكَ هَذَا»، فَقُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ، وَإِنَّا لَمُؤَاخَذُونَ بِمَا نَتَكَلَّمُ بِهِ؟ فَقَالَ: «ثَكِلَتْكَ أُمُّكَ يَا مُعَاذُ، وَهَلْ يَكُبُّ النَّاسَ فِي النَّارِ عَلَى وُجُوهِهِمْ أَوْ عَلَى مَنَاخِرِهِمْ إِلَّا حَصَائِدُ أَلْسِنَتِهِمْ»


Tirmidhi-3221

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3221.


أَنَّ مُوسَى عَلَيْهِ السَّلَامُ كَانَ رَجُلًا حَيِيًّا سَتِيرًا مَا يُرَى مِنْ جِلْدِهِ شَيْءٌ اسْتِحْيَاءً مِنْهُ فَآذَاهُ مَنْ آذَاهُ مِنْ بني إسرائيل فَقَالُوا: مَا يَسْتَتِرُ هَذَا التَّسَتُّرَ إِلَّا مِنْ عَيْبٍ بِجِلْدِهِ إِمَّا بَرَصٌ وَإِمَّا أُدْرَةٌ وَإِمَّا آفَةٌ، وَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ أَرَادَ أَنْ يُبَرِّئَهُ مِمَّا قَالُوا، وَإِنَّ مُوسَى خَلَا يَوْمًا وَحْدَهُ فَوَضَعَ ثِيَابَهُ عَلَى حَجَرٍ ثُمَّ اغْتَسَلَ فَلَمَّا فَرَغَ أَقْبَلَ إِلَى ثِيَابِهِ لِيَأْخُذَهَا وَإِنَّ الحَجَرَ عَدَا بِثَوْبِهِ فَأَخَذَ مُوسَى عَصَاهُ فَطَلَبَ الحَجَرَ فَجَعَلَ يَقُولُ: ثَوْبِي حَجَرُ ثَوْبِي حَجَرُ، حَتَّى انْتَهَى إِلَى مَلَإٍ مِنْ بني إسرائيل فَرَأَوْهُ عُرْيَانًا أَحْسَنَ النَّاسِ خَلْقًا، وَأَبْرَأَهُ مِمَّا كَانُوا يَقُولُونَ ” قَالَ: «وَقَامَ الحَجَرُ فَأَخَذَ ثَوْبَهُ وَلَبِسَهُ وَطَفِقَ بِالحَجَرِ ضَرْبًا بِعَصَاهُ، فَوَاللَّهِ إِنَّ بِالحَجَرِ لَنَدَبًا مِنْ أَثَرِ عَصَاهُ ثَلَاثًا أَوْ أَرْبَعًا أَوْ خَمْسًا»، فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى فَبَرَّأَهُ اللَّهُ مِمَّا قَالُوا وَكَانَ عِنْدَ اللَّهِ وَجِيهًا} [الأحزاب: 69]


Tirmidhi-3643

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


ذَهَبَتْ بِي خَالَتِي إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ ابْنَ أُخْتِي وَجِعٌ، «فَمَسَحَ بِرَأْسِي وَدَعَا لِي بِالبَرَكَةِ وَتَوَضَّأَ فَشَرِبْتُ مِنْ وَضُوئِهِ، فَقُمْتُ خَلْفَ ظَهْرِهِ فَنَظَرْتُ إِلَى الخَاتَمِ بَيْنَ كَتِفَيْهِ فَإِذَا هُوَ مِثْلُ زِرِّ الحَجَلَةِ»


Tirmidhi-3644

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

3644. நபி (ஸல்) அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் இருந்த நபித்துவ முத்திரை, புறா முட்டை அளவில் (அவர்களது உடலின் நிறத்திலேயே) சிவந்த கட்டியாக இருந்தது.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.


كَانَ خَاتَمُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: – يَعْنِي الَّذِي بَيْنَ كَتِفَيْهِ – غُدَّةً حَمْرَاءَ مِثْلَ بَيْضَةِ الحَمَامَةِ


Tirmidhi-2012

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2012. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிதானமாக செயல்படுவது அல்லாஹ்வின் பண்பாகும். அவசரமாக செயல்படுவது ஷைத்தானின் பண்பாகும்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் அப்துல்முஹைமின் பின் அப்பாஸ் பின் ஸஹ்ல் என்பவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்ற காரணத்தால் சில அறிஞர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

இதற்கு முன்புள்ள செய்தியில் இடம்பெறும் அஷஜ் அப்துல்கைஸ் (ரலி) அவர்களின் இயற்பெயர் முன்திர் பின் ஆஇத் (ரலி) என்பதாகும்.


«الأَنَاةُ مِنَ اللَّهِ وَالعَجَلَةُ مِنَ الشَّيْطَانِ»


Tirmidhi-2226

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

2226. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது சமுதாயத்தில் (எனது வழியில் நடைபெறும்) கிலாஃபத் எனும் ஆட்சி முப்பது வருடங்கள் இருக்கும். அதற்குப் பிறகு மன்னராட்சி நடைபெறும்.

அறிவிப்பவர்: அபூஅப்துரஹ்மான்-ஸஃபீனா (ரலி)

ஸஃபீனா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸயீத் பின் ஜும்ஹான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பிறகு ஸஃபீனா (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் பின் கத்தாப் (ரலி), உஸ்மான் பின் அஃப்பான் (ரலி), அலீ பின் அபூதாலிப் (ரலி) ஆகியோரின் கிலாஃபத் (வருடத்)தை கணக்கிட்டுக் கொள்! என்று என்னிடம் கூறினார்கள். கணக்கிட்டுப் பார்க்கும்போது அது முப்பது வருடங்கள் வந்தன.

அப்போது நான், இந்த பனூ உமைய்யாக்கள் தங்களை கிலாஃபத் ஆட்சியாளர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்களே! என்று கூறினேன். அதற்கவர்கள், “ஸர்கா எனும் பெண்ணின் வமிசத்தில் வந்துள்ள இந்த பனூ உமைய்யாக்கள் பொய் சொல்கின்றனர். இவர்கள் தீய மன்னர்கள் ஆவார்கள்” என்று கூறினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

“நபி (ஸல்) அவர்கள் (தனக்குப் பிறகு) யார் கிலாஃபத் ஆட்சிக்கு வரவேண்டும் என்பது குறித்து எதுவும் மரண சாசனம் செய்யவில்லை” என்று உமர் (ரலி), அலீ (ரலி) ஆகியோர் கூறினார்கள் என்று இப்பாடப்பொருள் தொடர்பாக ஒரு செய்தி வந்துள்ளது.

ஸஃபீனா

«الخِلَافَةُ فِي أُمَّتِي ثَلَاثُونَ سَنَةً، ثُمَّ مُلْكٌ بَعْدَ ذَلِكَ»

ثُمَّ قَالَ لِي سَفِينَةُ: أَمْسِكْ خِلَافَةَ أَبِي بَكْرٍ، وَخِلَافَةَ عُمَرَ، وَخِلَافَةَ عُثْمَانَ، ثُمَّ قَالَ لِي: أَمْسِكْ خِلَافَةَ عَلِيٍّ قَالَ: فَوَجَدْنَاهَا ثَلَاثِينَ سَنَةً، قَالَ سَعِيدٌ: فَقُلْتُ لَهُ: إِنَّ بَنِي أُمَيَّةَ يَزْعُمُونَ أَنَّ الخِلَافَةَ فِيهِمْ؟ قَالَ: كَذَبُوا بَنُو الزَّرْقَاءِ بَلْ هُمْ مُلُوكٌ مِنْ شَرِّ المُلُوكِ،


Tirmidhi-2865

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2865.


«مَثَلُ المُؤْمِنِ الَّذِي يَقْرَأُ القُرْآنَ كَمَثَلِ الْأُتْرُجَّةِ رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا طَيِّبٌ، وَمَثَلُ المُؤْمِنِ الَّذِي لَا يَقْرَأُ القُرْآنَ كَمَثَلِ التَّمْرَةِ لَا رِيحَ لَهَا وَطَعْمُهَا حُلْوٌ، وَمَثَلُ المُنَافِقِ الَّذِي يَقْرَأُ القُرْآنَ كَمَثَلِ الرَّيْحَانَةِ رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ، وَمَثَلُ المُنَافِقِ الَّذِي لَا يَقْرَأُ القُرْآنَ كَمَثَلِ الحَنْظَلَةِ رِيحُهَا مُرٌّ وَطَعْمُهَا مُرٌّ»


Next Page » « Previous Page