Category: திர்மிதீ

Tirmidhi-2

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 2

தூய்மையின் சிறப்பு குறித்து வந்துள்ளவை.

2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘முஸ்லிமான’ அல்லது ‘முஃமினான’ (இறைநம்பிக்கை கொண்ட) அடியார் அங்கத்தூய்மை (உளூ) செய்யும் போது தமது முகத்தைக் கழுவினால், கண்களால் நிகழ்ந்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) ‘நீருடன்’ அல்லது ‘நீரின் கடைசித் துளியுடன் அல்லது இது போன்ற (வேறொரு வார்த்தையில் கூறினார்கள். அ)தனுடன் முகத்திலிருந்து வெளியேறி விடுகின்றன.

அவர் கைகளைக் கழுவும்போது கைகளால் செய்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) ‘நீருடன்’ அல்லது ‘நீரின் கடைசித் துளியுடன்’ வெளியேறிவிடுகின்றன. இறுதியில் அவர் (கால்களைக் கழுவி முடிக்கும்போது) பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராக (அங்கிருந்து) செல்கிறார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள், ஸுஹைல் பின் அபூஸாலிஹ் (ரஹ்) அவர்கள் வழியாக அறிவிக்கும் இந்த ஹதீஸ், ‘ஹஸன் ஸஹீஹ்’ எனும் தரத்தில் அமைந்ததாகும்.

அறிவிப்பாளர் ஸுஹைல் அவர்களின் தந்தை அபூஸாலிஹ் அஸ்ஸம்மான் ஆவார். இவருடைய இயற்பெயர் ‘தக்வான்’ என்பதாகும்.

அபூஹுரைரா (ரலி) அவர்களின் இயற்பெயர் விஷயத்தில் கருத்து வேறுபாடு

«إِذَا تَوَضَّأَ الْعَبْدُ الْمُسْلِمُ، أَوِ الْمُؤْمِنُ، فَغَسَلَ وَجْهَهُ خَرَجَتْ مِنْ وَجْهِهِ كُلُّ خَطِيئَةٍ نَظَرَ إِلَيْهَا بِعَيْنَيْهِ مَعَ الْمَاءِ – أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ، أَوْ نَحْوَ هَذَا – وَإِذَا غَسَلَ يَدَيْهِ خَرَجَتْ مِنْ يَدَيْهِ كُلُّ خَطِيئَةٍ بَطَشَتْهَا يَدَاهُ مَعَ الْمَاءِ – أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ – حَتَّى يَخْرُجَ نَقِيًّا مِنَ الذُّنُوبِ»


Tirmidhi-2878

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2878.


«لِكُلِّ شَيْءٍ سَنَامٌ، وَإِنَّ سَنَامَ القُرْآنِ سُورَةُ البَقَرَةِ وَفِيهَا آيَةٌ هِيَ سَيِّدَةُ آيِ القُرْآنِ، هِيَ آيَةُ الكُرْسِيِّ»


Tirmidhi-2147

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2147. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு (குறிப்பிட்ட) இடத்தில் ஓர் அடியார் இறப்பார் என அல்லாஹ் தீர்மானித்துவிட்டால், ‘அந்த இடத்தில்’ அல்லது ‘அங்கு’ அவருக்கு ஒரு தேவையை அவன் ஏற்படுத்திவிடுவான்.

அறிவிப்பவர்: அபூஅஸ்ஸா (ரலி)

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ‘ஸஹீஹ்’ எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.

(இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான) அபூஅஸ்ஸா (ரலி) அவர்கள் நபித்தோழர் ஆவார். அன்னாரின் இயற்பெயர், யஸார் பின் அப்த் ஆகும். (மேற்கண்ட ஹதீஸின் இரண்டாம் அறிவிப்பாளரான) அபுல்மலீஹ் அவர்களின் இயற்பெயர், ஆமிர் பின் உஸாமா பின் உமைர் அல்ஹுதலீ ஆகும். இவரை ஸைத் பின் உஸாமா என்றும் கூறப்படுகிறது.


إِذَا قَضَى اللَّهُ لِعَبْدٍ أَنْ يَمُوتَ بِأَرْضٍ جَعَلَ لَهُ إِلَيْهَا حَاجَةً، أَوْ قَالَ: بِهَا حَاجَةً


Tirmidhi-2146

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 11

எந்த உயிரும் தனக்கென எழுதப்பட்டுள்ள இடத்தில்தான் மரணிக்கும் என்பது தொடர்பாக வந்துள்ளவை.

2146.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு (குறிப்பிட்ட) இடத்தில் ஓர் அடியார் இறப்பார் என அல்லாஹ் தீர்மானித்துவிட்டால், அந்த இடத்தில் அவருக்கு ஒரு தேவையை அவன் ஏற்படுத்திவிடுவான்.

அறிவிப்பவர்: மத்தர் பின் உகாமிஸ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், அபூஅஸ்ஸா (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்தர் பின் உக்காமிஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ், ‘ஹஸன் ஃகரீப்’ எனும் தரத்தில் அமைந்ததாகும்.

மத்தர் பின் உக்காமிஸ் (ரலி) அவர்கள் இந்த நபிமொழியைத் தவிர வேறெதுவும் அறிவித்திருப்பதாக அறியப்படவில்லை.

இந்த ஹதீஸ் மத்தர் பின் உக்காமிஸ் (ரலி) அவர்கள் வழியாக மேலும் இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


«إِذَا قَضَى اللَّهُ لِعَبْدٍ أَنْ يَمُوتَ بِأَرْضٍ جَعَلَ لَهُ إِلَيْهَا حَاجَةً»

وَفِي البَابِ عَنْ أَبِي عَزَّةَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ، وَلَا يُعْرَفُ لِمَطَرِ بْنِ عُكَامِسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرُ هَذَا الحَدِيثِ

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا مُؤَمَّلٌ، وَأَبُو دَاوُدَ الحَفَرِيُّ، عَنْ سُفْيَانَ، نَحْوَهُ


Tirmidhi-2914

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2914. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனுடன் (அதை உணர்ந்து) வாழ்ந்தவரிடம் (அவர் சொர்க்கத்திற்குச் செல்லும்போது) “ஓதுக; (சொர்க்கப் படிநிலைகளில்) உயருக; உலகில் நீர் நிறுத்தி நிதானமாக ஓதிக்கொண்டிருந்ததைப் போன்று (இங்கும்) ஓதுக! ஏனெனில், நீர் ஓதி முடிக்கும் இறுதி வசனத்திற்கு அருகில்தான் நீர் தங்கப் போகுமிடம் அமைந்துள்ளது” என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ‘ஹஸன் ஸஹீஹ்’ எனும் தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.

இந்தச் செய்தியை புன்தார்-முஹம்மது பின் பஷ்ஷார் அவர்கள், அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ —> ஸுஃப்யான் ஸவ்ரீ —> ஆஸிம் … என்ற அறிவிப்பாளர்தொடரில் எங்களுக்கு அறிவித்தார்.


يُقَالُ – يَعْنِي لِصَاحِبِ الْقُرْآنِ -: اقْرَأْ وَارْتَقِ وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا، فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَأُ بِهَا

«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

حَدَّثَنَا بُنْدَارٌ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ عَاصِمٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ


Tirmidhi-2507

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2507. மக்களைச் சந்திக்காமலும் அவர்களிடமிருந்து ஏற்படும் தீங்குகளைச் சகித்துக் கொள்ள முடியாமலும் இருக்கின்ற ஒரு முஸ்லிமை விட, மக்களோடு வாழ்ந்து அவர்களிடமிருந்து வரும் தீங்குகளைச் சகித்துக் கொள்ளும் முஸ்லிம் சிறந்தவன்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: நபித்தோழர்களில் ஒருவர்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு அபூஅதீ (முஹம்மது பின் இப்ராஹீம்) அவர்கள், “இதில் பெயர் குறிப்பிடப்படாத நபித்தோழர் இப்னு உமர் (ரலி) ஆவார் என்று ஷுஅபா கருதுகிறார்” என்று கூறினார்.


«المُسْلِمُ إِذَا كَانَ يُخَالِطُ النَّاسَ وَيَصْبِرُ عَلَى أَذَاهُمْ خَيْرٌ مِنَ المُسْلِمِ الَّذِي لَا يُخَالِطُ النَّاسَ وَلَا يَصْبِرُ عَلَى أَذَاهُمْ»


Tirmidhi-3671

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3671.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى أَبَا بَكْرٍ وَعُمَرَ فَقَالَ: «هَذَانِ السَّمْعُ وَالبَصَرُ»


Tirmidhi-846

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

846.


«صَيْدُ البَرِّ لَكُمْ حَلَالٌ وَأَنْتُمْ حُرُمٌ، مَا لَمْ تَصِيدُوهُ أَوْ يُصَدْ لَكُمْ»


Tirmidhi-1520

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1520. நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். பிறகு இறங்கி இரண்டு ஆடுகளை வரவழைத்து அவ்விரண்டையும் அறுத்துப் பலியிட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ، ثُمَّ نَزَلَ فَدَعَا بِكَبْشَيْنِ فَذَبَحَهُمَا»


Tirmidhi-1521

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

1521. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் திடலில் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் தமது உரையை முடித்தவுடன் மிம்பரிலிருந்து இறங்கினார்கள்.

ஒரு ஆடு கொண்டு வரப்பட்டது. அதனை நபி (ஸல்) அவர்கள் தம்முடைய கையினால் அறுக்கும்போது, “பிஸ்மில்லாஹி, வல்லாஹு அக்பர் (அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹ்வே மிகப் பெரியவன்); இது என் சார்பாகவும், என்னுடைய உம்மத்தில் உள்ஹிய்யா கொடுக்காதவர்கள் சார்பாகவும் ஆகும்” எனக் கூறினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இதன் அறிவிப்பாளர்தொடர் “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

ஒருவர் (பிராணியை) அறுக்கும்போது, “பிஸ்மில்லாஹி, வல்லாஹு அக்பர்” என்று கூறவேண்டும் என்பது நபித்தோழர்கள், இன்னபிற கல்வியாளர்களின் (கருத்தும்) செயலுமாகும். இப்னுல் முபாரக் அவர்களும் இந்தக் கருத்தையே கூறியுள்ளார்.

(இதன் அறிவிப்பாளர்தொடரில் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும்) அல்முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் ஹன்த்தப் அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடம் (ஹதீஸ்களை) செவியேற்கவில்லை என்று கூறப்படுகிறது.


شَهِدْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الأَضْحَى بِالمُصَلَّى، فَلَمَّا قَضَى خُطْبَتَهُ نَزَلَ عَنْ مِنْبَرِهِ، فَأُتِيَ بِكَبْشٍ، فَذَبَحَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ، وَقَالَ: «بِسْمِ اللَّهِ، وَاللَّهُ أَكْبَرُ، هَذَا عَنِّي وَعَمَّنْ لَمْ يُضَحِّ مِنْ أُمَّتِي»


Next Page » « Previous Page