Category: திர்மிதீ

Tirmidhi-2685

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2685. அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் ( ஸல்) அவர்களிடம் இரு மனிதர்களைப் பற்றி கூறப்பட்டது. இருவரில் ஒருவர் வணக்கசாலி மற்றொருவர் கல்வியாளர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வணக்கசாலியைப் பார்க்கிலும் கல்வியாளரின் சிறப்பாகிறது உங்களில் கடைநிலையில் உள்ள ஒருவரைவிட (இறைத்தூதராகிய) எனக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்” என்றார்கள்.

அதன் பின்னர் “அல்லாஹ்வும், அவனுடைய வானவர்களும், விண்ணிலும் மண்ணிலும் வசிப்போரும் புற்றுகளில் வாழும் எறும்புகள் (தண்ணீரில் வாழும்) மீன்கள் உட்பட யாவுமே மக்களுக்கு நல்லதைக் கற்பிப்பவருக்காக அருள் வேண்டிப் பிரார்த்திக்கின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழியாகும்.

“கற்றபடி செயல்பட்டு பிறருக்கு அதைக் கற்பிக்கவும் செய்கின்ற அறிஞர் ஒருவர் வானுலகில் மாமனிதர் என அழைக்கப்படுகிறார்” என்று புளைல் பின் இயாள் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என அபூஅம்மார்-ஹுஸைன் பின் ஹுரைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் (என திர்மிதீ இமாம் கூறுகிறார்.)


ذُكِرَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلَانِ أَحَدُهُمَا عَابِدٌ وَالآخَرُ عَالِمٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَضْلُ العَالِمِ عَلَى العَابِدِ كَفَضْلِي عَلَى أَدْنَاكُمْ»

ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ وَأَهْلَ السَّمَوَاتِ وَالأَرَضِينَ حَتَّى النَّمْلَةَ فِي جُحْرِهَا وَحَتَّى الحُوتَ لَيُصَلُّونَ عَلَى مُعَلِّمِ النَّاسِ الخَيْرَ»


Tirmidhi-2682

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2682. கைஸ் பின் கஸீர் கூறியதாவது:

ஒரு மனிதர் மதீனாவிலிருந்து, திமிஷ்கி (டமாஸ்கஸி)லிருந்த அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் வந்தார். அபுத்தர்தா (ரலி) அவர்கள், “சகோதரரே! நீங்கள் (என்னிடம்) வந்ததற்கு என்ன காரணம்?” என்று கேட்டார். அதற்கு அவர், நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஒரு நபிமொழியே இங்கு வரச்செய்தது” என்று கூறினார். அதற்கு அபுத்தர்தா (ரலி) அவர்கள், வேறு எந்தத் தேவைக்காகவும் நீர் வரவில்லையா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை” என்றார்.

அபுத்தர்தா (ரலி) அவர்கள், “ஏதேனும் வணிக நோக்கத்துடன் நீர் வரவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “இல்லை” என்றார்.

அபுத்தர்தா (ரலி) அவர்கள் இந்த நபிமொழியைத் தேடித்தான் நீர் வந்தீரா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒருவர் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடந்தால் சொர்க்கம் செல்லும் பாதையில் அவரை அல்லாஹ் நடத்துகின்றான்.

வானவர்கள் கல்வியைத் தேடும் (மாணவர்) ஒருவரை உவந்து கொண்டதைக் காட்டும் முகமாக தம் இறக்கைகளை கீழே வைக்கின்றனர்.

கற்றறிந்த அறிஞர் ஒருவருக்கே வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் தண்ணீரில் வாழும் மீன்கள் உட்பட யாவும் பாவமன்னிப்புக் கோருகின்றன.

பக்தியாளரைவிட கல்வியாளருக்குள்ள சிறப்பு மற்ற நட்சத்திரங்களைவிட

قَدِمَ رَجُلٌ مِنَ المَدِينَةِ عَلَى أَبِي الدَّرْدَاءِ، وَهُوَ بِدِمَشْقَ فَقَالَ: مَا أَقْدَمَكَ يَا أَخِي؟ فَقَالَ: حَدِيثٌ بَلَغَنِي أَنَّكَ تُحَدِّثُهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: أَمَا جِئْتَ لِحَاجَةٍ؟ قَالَ: لَا، قَالَ: أَمَا قَدِمْتَ لِتِجَارَةٍ؟ قَالَ: لَا، قَالَ: مَا جِئْتُ إِلَّا فِي طَلَبِ هَذَا الحَدِيثِ؟ قَالَ: فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ سَلَكَ طَرِيقًا يَبْتَغِي فِيهِ عِلْمًا سَلَكَ اللَّهُ بِهِ طَرِيقًا إِلَى الجَنَّةِ،

وَإِنَّ المَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضَاءً لِطَالِبِ العِلْمِ،

وَإِنَّ العَالِمَ لَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَوَاتِ وَمَنْ فِي الأَرْضِ حَتَّى الحِيتَانُ فِي المَاءِ،

وَفَضْلُ العَالِمِ عَلَى العَابِدِ، كَفَضْلِ القَمَرِ عَلَى سَائِرِ الكَوَاكِبِ،

إِنَّ العُلَمَاءَ وَرَثَةُ الأَنْبِيَاءِ، إِنَّ الأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا إِنَّمَا وَرَّثُوا العِلْمَ، فَمَنْ أَخَذَ بِهِ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ»


Tirmidhi-1021

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

துன்பம் நேரும்போது நன்மையை எதிர்பார்(த்து பொறுமை கா)ப்பதன் சிறப்பு.

1021. ஈஸா பின் ஸினான் அவர்கள் கூறியதாவது:

நான் (என் புதல்வர்) ஸினான் என்பாரை அடக்கம் செய்தேன். அப்போது அபூதல்ஹா அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் அந்தக் குழியின் ஓரத்தில் அமர்ந்திருந்தார். நான் (அடக்கி முடித்துவிட்டு அங்கிருந்து) புறப்பட முற்பட்டபோது, அபூதல்ஹா (ரஹ்) அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு, “அபூஸினானே! நான் உமக்கு ஒரு நற்செய்தியைச் சொல்லட்டுமா?” என்று கேட்டார்கள். நான், “சரி (கூறுங்கள்)” என்றேன்.

அப்போது அபூதல்ஹா அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள், “அடியார் ஒருவரின் பிள்ளை இறந்துவிட்டால்அல்லாஹ் தன் வானவர்களிடம், ‘என் அடியாரின் பிள்ளையின் உயிரைக் கைப்பற்றி விட்டீர்களா?’ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ‘ஆம்’ என்பார்கள். அப்போது அல்லாஹ், “அவரது இதயக்கனியையா நீங்கள் கைப்பற்றினீர்கள்?” என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ‘ஆம்’ என்பர்.

(அப்போது) என் அடியார் என்ன சொன்னார்?” என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு வானவர்கள், “அவர் உன்னைப் புகழ்ந்து, இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே நாங்கள் திரும்பிச் செல்லக்கூடியவர்கள்) என்று கூறினார்”

دَفَنْتُ ابْنِي سِنَانًا، وَأَبُو طَلْحَةَ الخَوْلَانِيُّ جَالِسٌ عَلَى شَفِيرِ القَبْرِ، فَلَمَّا أَرَدْتُ الخُرُوجَ أَخَذَ بِيَدِي، فَقَالَ: أَلَا أُبَشِّرُكَ يَا أَبَا سِنَانٍ؟ قُلْتُ: بَلَى، فَقَالَ: حَدَّثَنِي الضَّحَّاكُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَرْزَبٍ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” إِذَا مَاتَ وَلَدُ العَبْدِ قَالَ اللَّهُ لِمَلَائِكَتِهِ: قَبَضْتُمْ وَلَدَ عَبْدِي، فَيَقُولُونَ: نَعَمْ، فَيَقُولُ: قَبَضْتُمْ ثَمَرَةَ فُؤَادِهِ، فَيَقُولُونَ: نَعَمْ، فَيَقُولُ: مَاذَا قَالَ عَبْدِي؟ فَيَقُولُونَ: حَمِدَكَ وَاسْتَرْجَعَ، فَيَقُولُ اللَّهُ: ابْنُوا لِعَبْدِي بَيْتًا فِي الجَنَّةِ، وَسَمُّوهُ بَيْتَ الحَمْدِ


Tirmidhi-2395

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்: 48

இறைநம்பிக்கையாளருடன் நட்பு கொள்வது தொடர்பாக வந்துள்ளவை.

2395. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளருடன் தவிர (வேறு யாரிடமும்) நீர் (நெருக்கமான) நட்பு கொள்ளாதீர்! உனது உணவை, இறையச்சம் உடையவர் தவிர வெறெவரும் உண்ண வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

இந்த ஹதீஸ் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்து இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன்” தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.

இந்த ஹதீஸ் இந்த அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே வந்திருப்பதாக நாம் அறிகிறோம்.


«لَا تُصَاحِبْ إِلَّا مُؤْمِنًا، وَلَا يَأْكُلْ طَعَامَكَ إِلَّا تَقِيٌّ»


Tirmidhi-2952

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2952. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:

யார் குர்ஆனில் (அதனுடைய வசனங்களில், கருத்துகளில் தன் அறிவில் தோன்றியதை) சுயமாக பேசுகிறாரோ அவரின் கூற்று (எதார்த்தமாக) சரியாகவே இருந்தாலும் (மார்க்கத்தின் பார்வையில்) அவர் தவறிழைத்தவராவார்.

அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த நபிமொழி “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

இதில் இடம்பெறும் (ஹஸ்ம் அல்குதயீ என்பவரின் சகோதரர்)-ஸுஹைல் பின் அப்துல்லாஹ்-இப்னு அபூஹஸ்ம் என்பவரைப் பற்றி நபிமொழி ஆய்வாளர்கள் விமர்சித்துள்ளனர்.

மேலும் இவ்வாறே நபி (ஸல்) அவர்களின் தோழர்கள், அவர்களுக்குப் பின் வந்த அறிஞர் பெருமக்களில் சிலர், குர்ஆனுக்கு அதன் ஞானமின்றி சுய விளக்கம் தரக்கூடாது என்பதில் கடினமாக நடந்துகொண்டார்கள்.

தெரிந்துகொள்ளுங்கள்: முஜாஹித் (ரஹ்), கதாதா (ரஹ்) இவர்களைப் போன்ற மற்றுமுள்ள அறிஞர்கள் குர்ஆனுக்கு விளக்கமளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்களில் எவரும் குர்ஆனுக்கு அதன் ஞானமின்றி, சுய விளக்கமளித்ததாகக் கருதவேண்டியதில்லை.

அவர்கள் அவ்வாறு குர்ஆனுக்கு

«مَنْ قَالَ فِي القُرْآنِ بِرَأْيِهِ فَأَصَابَ فَقَدْ أَخْطَأَ»

«هَذَا حَدِيثٌ غَرِيبٌ، وَقَدْ تَكَلَّمَ بَعْضُ أَهْلِ الحَدِيثِ فِي سُهَيْلِ بْنِ أَبِي حَزْمٍ، وَهَكَذَا رُوِيَ عَنْ بَعْضِ أَهْلِ العِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَغَيْرِهِمْ، أَنَّهُمْ شَدَّدُوا فِي هَذَا فِي أَنْ يُفَسَّرَ القُرْآنُ بِغَيْرِ عِلْمٍ وَأَمَّا الَّذِي رُوِيَ عَنْ مُجَاهِدٍ وَقَتَادَةَ وَغَيْرِهِمَا مِنْ أَهْلِ العِلْمِ أَنَّهُمْ فَسَّرُوا القُرْآنَ، فَلَيْسَ الظَّنُّ بِهِمْ أَنَّهُمْ قَالُوا فِي القُرْآنِ أَوْ فَسَّرُوهُ بِغَيْرِ عِلْمٍ أَوْ مِنْ قِبَلِ أَنْفُسِهِمْ. وَقَدْ رُوِيَ عَنْهُمْ مَا يَدُلُّ عَلَى مَا قُلْنَا، أَنَّهُمْ لَمْ يَقُولُوا مِنْ قِبَلِ أَنْفُسِهِمْ بِغَيْرِ عِلْمٍ»

حَدَّثَنَا الحُسَيْنُ بْنُ مَهْدِيٍّ البَصْرِيُّ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ قَتَادَةَ، قَالَ: «مَا فِي القُرْآنِ آيَةٌ إِلَّا وَقَدْ سَمِعْتُ فِيهَا شَيْئًا»

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الأَعْمَشِ، قَالَ: قَالَ مُجَاهِدٌ: «لَوْ كُنْتُ قَرَأْتُ قِرَاءَةَ ابْنِ مَسْعُودٍ لَمْ أَحْتَجْ أَنْ أَسْأَلَ ابْنَ عَبَّاسٍ عَنْ كَثِيرٍ مِنَ القُرْآنِ مِمَّا سَأَلْتُ»


Tirmidhi-2951

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2951. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னிடமிருந்து ஹதீஸ் அறிவிப்பதை பயந்து கொள்ளுங்கள்; உங்களுக்கு உறுதியாக தெரிந்ததைத் தவிர!

என்மீது யார் வேண்டுமென்றே (இட்டுக்கட்டி) பொய் சொல்வாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்.

யார் குர்ஆனுக்கு சுயவிளக்கம் கூறுகிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன்” தரத்தில் அமைந்த செய்தியாகும்.


«اتَّقُوا الحَدِيثَ عَنِّي إِلَّا مَا عَلِمْتُمْ،

فَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ،

وَمَنْ قَالَ فِي القُرْآنِ بِرَأْيِهِ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»


Tirmidhi-2950

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

அல்குர்ஆனுக்கு (அதன் ஞானமின்றி) சுயவிளக்கம் அளிப்பவனுக்குரிய தண்டனை குறித்து வந்துள்ளவை.

2950. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:

யார் குர்ஆனில் (அதன் வசனங்கள் குறித்த) ஞானமின்றி (அதற்கு) சுயவிளக்கமளிக்கிறாரோ அவர் நரகத்தில் தமது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«مَنْ قَالَ فِي القُرْآنِ بِغَيْرِ عِلْمٍ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»


Tirmidhi-2378

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

2378. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதன் தன் நண்பனின் வழியிலேயே இருக்கிறான். ஆகவே, உங்களில் ஒருவர், தாம் யாருடன் நட்பு கொள்கிறோம் என்பதைக் கவனிக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ‘ஹஸன் ஃகரீப்’ எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.


«الرَّجُلُ عَلَى دِينِ خَلِيلِهِ، فَلْيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُخَالِلُ»


Tirmidhi-2311

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

அல்லாஹ்வின் அச்சத்தால் அழுவதின் சிறப்பு பற்றி வந்துள்ளவை.

2311. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கறந்த பால் எப்படி திரும்ப மடுவுக்குள் புகாதோ, அதுபோன்று அல்லாஹ்வின் அச்சத்தால் அழுத எந்த மனிதரும் நரகத்தில் நுழைய மாட்டார்.

அல்லாஹ்வின் பாதையில் (போரில்) படும் புழுதியும், நரகத்தின் புகையும் (ஒரு முஸ்லிமின் உடலில்) ஒன்று சேராது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி, அபூரைஹானா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அபூஹுரைரா (ரலி) வழியாக வரும் இந்தச் செய்தி “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களின் குடும்பத்தாரின் அடிமையாவார். மேலும் இவர் மதீனாவைச் சேர்ந்தவரும், பலமானவரும் ஆவார். இவரிடமிருந்து ஷுஅபா (ரஹ்), ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்) ஆகியோர் (ஹதீஸ்களை) அறிவித்துள்ளனர்.


«لَا يَلِجُ النَّارَ رَجُلٌ بَكَى مِنْ خَشْيَةِ اللَّهِ حَتَّى يَعُودَ اللَّبَنُ فِي الضَّرْعِ، وَلَا يَجْتَمِعُ غُبَارٌ فِي سَبِيلِ اللَّهِ وَدُخَانُ جَهَنَّمَ»


Tirmidhi-1633

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

அல்லாஹ்வின் பாதையில் (போரில்) படும் புழுதியின் சிறப்பு பற்றி வந்துள்ளவை.

1633. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கறந்த பால் எப்படி திரும்ப மடுவுக்குள் புகாதோ, அதுபோன்று அல்லாஹ்வின் அச்சத்தால் அழுத எந்த மனிதரும் நரகத்தில் நுழைய மாட்டார்.

அல்லாஹ்வின் பாதையில் (போரில்) படும் புழுதியும், நரகத்தின் புகையும் (ஒரு முஸ்லிமின் உடலில்) ஒன்று சேராது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களின் (குடும்பத்தாரின்) அடிமையாவார். மேலும் இவர் மதீனாவைச் சேர்ந்தவர் ஆவார்.


«لَا يَلِجُ النَّارَ رَجُلٌ بَكَى مِنْ خَشْيَةِ اللَّهِ حَتَّى يَعُودَ اللَّبَنُ فِي الضَّرْعِ، وَلَا يَجْتَمِعُ غُبَارٌ فِي سَبِيلِ اللَّهِ وَدُخَانُ جَهَنَّمَ»


Next Page » « Previous Page