Category: திர்மிதீ

Tirmidhi-2311

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

அல்லாஹ்வின் அச்சத்தால் அழுவதின் சிறப்பு பற்றி வந்துள்ளவை.

2311. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கறந்த பால் எப்படி திரும்ப மடுவுக்குள் புகாதோ, அதுபோன்று அல்லாஹ்வின் அச்சத்தால் அழுத எந்த மனிதரும் நரகத்தில் நுழைய மாட்டார்.

அல்லாஹ்வின் பாதையில் (போரில்) படும் புழுதியும், நரகத்தின் புகையும் (ஒரு முஸ்லிமின் உடலில்) ஒன்று சேராது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி, அபூரைஹானா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அபூஹுரைரா (ரலி) வழியாக வரும் இந்தச் செய்தி “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களின் குடும்பத்தாரின் அடிமையாவார். மேலும் இவர் மதீனாவைச் சேர்ந்தவரும், பலமானவரும் ஆவார். இவரிடமிருந்து ஷுஅபா (ரஹ்), ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்) ஆகியோர் (ஹதீஸ்களை) அறிவித்துள்ளனர்.


«لَا يَلِجُ النَّارَ رَجُلٌ بَكَى مِنْ خَشْيَةِ اللَّهِ حَتَّى يَعُودَ اللَّبَنُ فِي الضَّرْعِ، وَلَا يَجْتَمِعُ غُبَارٌ فِي سَبِيلِ اللَّهِ وَدُخَانُ جَهَنَّمَ»


Tirmidhi-1633

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

அல்லாஹ்வின் பாதையில் (போரில்) படும் புழுதியின் சிறப்பு பற்றி வந்துள்ளவை.

1633. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கறந்த பால் எப்படி திரும்ப மடுவுக்குள் புகாதோ, அதுபோன்று அல்லாஹ்வின் அச்சத்தால் அழுத எந்த மனிதரும் நரகத்தில் நுழைய மாட்டார்.

அல்லாஹ்வின் பாதையில் (போரில்) படும் புழுதியும், நரகத்தின் புகையும் (ஒரு முஸ்லிமின் உடலில்) ஒன்று சேராது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களின் (குடும்பத்தாரின்) அடிமையாவார். மேலும் இவர் மதீனாவைச் சேர்ந்தவர் ஆவார்.


«لَا يَلِجُ النَّارَ رَجُلٌ بَكَى مِنْ خَشْيَةِ اللَّهِ حَتَّى يَعُودَ اللَّبَنُ فِي الضَّرْعِ، وَلَا يَجْتَمِعُ غُبَارٌ فِي سَبِيلِ اللَّهِ وَدُخَانُ جَهَنَّمَ»


Tirmidhi-1669

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

1669. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரு துளிகளையும், இரு அடையாளங்களையும் விட அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானவை வேறு எதுவும் இல்லை. (அவ்விரு துளிகள்:)

1 . அல்லாஹ்வின் அச்சத்தினால் அழுத கண்ணீர்த் துளி.

2 . அல்லாஹ்வின் பாதையில் ஓட்டப்பட்ட இரத்தத் துளி.

அவ்விரு அடையாளங்கள்:

1 . அல்லாஹ்வின் பாதையில் ஏற்படும் அடையாளம்.

2 . அல்லாஹ்வின் கடமைகளில் ஏதேனும் ஒரு கடமையை நிறைவேற்றும்போது ஏற்படும் அடையாளம்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

 


لَيْسَ شَيْءٌ أَحَبَّ إِلَى اللَّهِ مِنْ قَطْرَتَيْنِ وَأَثَرَيْنِ، قَطْرَةٌ مِنْ دُمُوعٍ فِي خَشْيَةِ اللَّهِ، وَقَطْرَةُ دَمٍ تُهَرَاقُ فِي سَبِيلِ اللَّهِ، وَأَمَّا الأَثَرَانِ: فَأَثَرٌ فِي سَبِيلِ اللَّهِ، وَأَثَرٌ فِي فَرِيضَةٍ مِنْ فَرَائِضِ اللَّهِ


Tirmidhi-604

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்: 72

மஃக்ரிப் தொழுகைக்குப்பின் தொழும் (கூடுதல்) தொழுகையை வீட்டில் தொழுவதே சிறந்தது என்பது தொடர்பாகக் கூறப்பட்டுள்ளவை.

604. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பனூ அப்தில் அஷ்ஹல் குலத்தாரின் பள்ளிவாசலில் ‘மஃக்ரிப்’ தொழுகையைத் தொழுதார்கள். பிறகு மக்கள் கூடுதலான (நஃபில்) தொழுகையைத் தொழ எழுந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்தத் தொழுகையை (உங்கள்) வீடுகளில் தொழுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இஸ்ஹாக் பின் கஅப்

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்களிடமிருந்து இந்த அறிவிப்பாளர்தொடரில் தவிர வேறு தொடர்களில் வந்திருப்பதாக நாம் அறியவில்லை. எனவே இது ‘ஃகரீப்’ வகை ஹதீஸ் ஆகும்.

நபி (ஸல்) அவர்கள் ‘மஃக்ரிப்’ தொழுகைக்குப்பின் தமது வீட்டில் இரண்டு ரக்அத்கள் தொழுதுவந்தார்கள்” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸே ஆதாரபூர்வமானதாகும்.

நபி (ஸல்) அவர்கள் ‘மஃக்ரிப்’ தொழுகையைத் தொழுதுவிட்டு இஷா தொழுகைவரை பள்ளிவாசலில் தொழுதுகொண்டேயிருந்தார்கள்”
என ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள், ‘மஃக்ரிப்’ தொழுகைக்குப் பின் பள்ளிவாசலில் இரண்டு

صَلَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَسْجِدِ بَنِي عَبْدِ الأَشْهَلِ المَغْرِبَ، فَقَامَ نَاسٌ يَتَنَفَّلُونَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَيْكُمْ بِهَذِهِ الصَّلَاةِ فِي البُيُوتِ»


Tirmidhi-451

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

451. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் இல்லங்களிலும் (சில தொழுகைகளைத்) தொழுங்கள்!; அவற்றை அடக்கத்தலங்களாக ஆக்கி விடாதீர்கள்!

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் உள்ள செய்தியாகும்.


«صَلُّوا فِي بُيُوتِكُمْ وَلَا تَتَّخِذُوهَا قُبُورًا»


Tirmidhi-2877

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2877.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள்.

“அல்பகரா” எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஒதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடிவிடுகிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ مَقَابِرَ، وَإِنَّ البَيْتَ الَّذِي تُقْرَأُ فِيهِ البَقَرَةُ لَا يَدْخُلُهُ الشَّيْطَانُ»


Tirmidhi-688

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

688.


«لَا تَصُومُوا قَبْلَ رَمَضَانَ، صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ حَالَتْ دُونَهُ غَيَايَةٌ، فَأَكْمِلُوا ثَلَاثِينَ يَوْمًا»


Tirmidhi-357

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 149

இமாமாக நின்று தொழுவிப்பவர் தமக்கு மட்டும் (நலன் வேண்டி) பிரார்த்திப்பது விரும்பத்தக்கதன்று என்பது குறித்து வந்துள்ளவை.

357 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் இல்லத்திற்குள் -அவரது அனுமதியின்றி- பார்ப்பது கூடாது. அவ்வாறு பார்த்துவிட்டால், (அனுமதியின்றி) நுழைந்துவிட்டவர் ஆகிவிடுவார். ஒரு கூட்டத்தாருக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பவர் (பிரார்த்திக்கும்போது) அனைவருக்கும் சேர்த்து பிரார்த்திக்காமல் தமக்கு மட்டும் பிரார்த்திக்கலாகாது. அவ்வாறு அவர் செய்தால், அவர்களுக்கு அவர் துரோகமிழைத்தவர் ஆவார். மேலும், சிறுநீரை அடக்கிக் கொண்டு (யாரும்) தொழுகையில் ஈடுபட வேண்டாம்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், அபூஹுரைரா (ரலி), அபூஉமாமா (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ், ஹஸன்’ தரத்தில் அமைந்ததாகும்.

மேற்கண்ட ஹதீஸ் அபூஉமாமா (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் வழியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் யஸீத் பின் ஷுரைஹ், ஸவ்பான் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரே சிறந்ததாகவும், பிரபலமானதாகவும் தெரிகிறது.


«لَا يَحِلُّ لِامْرِئٍ أَنْ يَنْظُرَ فِي جَوْفِ بَيْتِ امْرِئٍ حَتَّى يَسْتَأْذِنَ، فَإِنْ نَظَرَ فَقَدْ دَخَلَ، وَلَا يَؤُمَّ قَوْمًا فَيَخُصَّ نَفْسَهُ بِدَعْوَةٍ دُونَهُمْ، فَإِنْ فَعَلَ فَقَدْ خَانَهُمْ، وَلَا يَقُومُ إِلَى الصَّلَاةِ وَهُوَ حَقِنٌ»


Tirmidhi-3243

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

3243.


«كَيْفَ أَنْعَمُ وَقَدِ التَقَمَ صَاحِبُ القَرْنِ القَرْنَ وَحَنَى جَبْهَتَهُ وَأَصْغَى سَمْعَهُ يَنْتَظِرُ أَنْ يُؤْمَرَ أَنْ يَنْفُخَ فَيَنْفُخَ» قَالَ المُسْلِمُونَ: فَكَيْفَ نَقُولُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «قُولُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الوَكِيلُ تَوَكَّلْنَا عَلَى اللَّهِ رَبِّنَا»

وَرُبَّمَا قَالَ سُفْيَانُ: عَلَى اللَّهِ تَوَكَّلْنَا.


Next Page » « Previous Page