Category: திர்மிதீ

Tirmidhi-2431

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2431. அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்னால் எப்படி இன்புற்றிருக்க முடியும்?. எக்காளம் ஊதுகின்ற (வான)வர் எக்காளத்தின் முனைப் பகுதியை தமது வாயில் வைத்துக்கொண்டு, ஊதுமாறு எப்போது உத்தரவிடப்படும் என்று காது தாழ்த்தி காத்திருக்கிறாரே! என்று கூறினார்கள்.

இது நபித்தோழர்களுக்கு பாரமாக இருந்தது (போலும்).

அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் “ஹஸ்புனல்லாஹு, வ நிஃமல் வகீல்; அலல்லாஹி தவக்கல்னா. (பொருள்: அல்லாஹ் எங்களுக்கு போதுமானவன்; அவனே சிறந்த பாதுகாவலன்; அல்லாஹ்வையே நாங்கள் சார்ந்துள்ளோம்) எனக் கூறுங்கள் என்றார்கள்.


«كَيْفَ أَنْعَمُ وَصَاحِبُ القَرْنِ قَدِ التَقَمَ القَرْنَ وَاسْتَمَعَ الإِذْنَ مَتَى يُؤْمَرُ بِالنَّفْخِ فَيَنْفُخُ» فَكَأَنَّ ذَلِكَ ثَقُلَ عَلَى أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهُمْ: ” قُولُوا: حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الوَكِيلُ عَلَى اللَّهِ تَوَكَّلْنَا “


Tirmidhi-2863

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

தொழுகை, நோன்பு, தர்மம் ஆகியவற்றுக்குச் சொல்லப்பட்ட உவமை குறித்து வந்துள்ளவை.

2863. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் (தனது தூதர்) யஹ்யா பின் ஸகரிய்யா (அலை) அவர்களுக்கு,  ஐந்து கட்டளைகளை நிறைவேற்றுமாறும் அவற்றைச் செயல்படுத்தும்படி பனூஇஸ்ராயீல் சமுதாயத்தாருக்குக் கட்டளையிடும்படியும் உத்தரவிட்டான். ஆனால் அவற்றை பனூஇஸ்ராயீல் சமுதாயத்தாரிடம் கூறாமல் யஹ்யா (அலை) அவர்கள் காலதாமதம் செய்ய முற்பட்டார்கள். இந்நிலையில் (இறைத்தூதர்) ஈஸா (அலை) அவர்கள், (யஹ்யா (அலை) அவர்களிடம்), “அல்லாஹ் ஐந்து கட்டளைகளை நிறைவேற்றுமாறும் அவற்றைச் செயல்படுத்தும்படி பனூஇஸ்ராயீல் சமுதாயத்தாருக்குக் கட்டளையிடும்படியும் உமக்கு உத்தரவிட்டான். (அவற்றைச் செயல்படுத்தும்படி) அவர்களுக்கு நீங்கள் உத்தரவிடவேண்டும். அல்லது நான் உத்தரவிடவேண்டும். (இதை நீங்கள்செய்கிறீர்களா? அல்லது நான் செய்யட்டுமா?” என்று கேட்டார்கள். அதற்கு யஹ்யா (அலை) அவர்கள், ஈஸா (அலை) அவர்களிடம் “இவ்விசயத்தில் என்னை நீங்கள் முந்திக் கொண்டால் (காலம் தாழ்த்திய குற்றத்துக்காக) நான் பூமியில் புதையுண்டு விடுவோனோ, அல்லது வேறு தண்டனைக்கு நான் உள்ளாவேனோ என நான் அஞ்சுகிறேன்” என்று கூறினார்கள்.

பிறகு யஹ்யா (அலை) அவர்கள் ஜெரூசலத்தில் உள்ள பைத்துல்மக்திஸ்

إِنَّ اللَّهَ أَمَرَ يَحْيَى بْنَ زَكَرِيَّا بِخَمْسِ كَلِمَاتٍ أَنْ يَعْمَلَ بِهَا وَيَأْمُرَ بني إسرائيل أَنْ يَعْمَلُوا بِهَا، وَإِنَّهُ كَادَ أَنْ يُبْطِئَ بِهَا، فَقَالَ عِيسَى: إِنَّ اللَّهَ أَمَرَكَ بِخَمْسِ كَلِمَاتٍ لِتَعْمَلَ بِهَا وَتَأْمُرَ بني إسرائيل أَنْ يَعْمَلُوا بِهَا، فَإِمَّا أَنْ تَأْمُرَهُمْ، وَإِمَّا أَنَا آمُرُهُمْ، فَقَالَ يَحْيَى: أَخْشَى إِنْ سَبَقْتَنِي بِهَا أَنْ يُخْسَفَ بِي أَوْ أُعَذَّبَ، فَجَمَعَ النَّاسَ فِي بَيْتِ المَقْدِسِ، فَامْتَلَأَ المَسْجِدُ وَقَعَدُوا عَلَى الشُّرَفِ، فَقَالَ: إِنَّ اللَّهَ أَمَرَنِي بِخَمْسِ كَلِمَاتٍ أَنْ أَعْمَلَ بِهِنَّ، وَآمُرَكُمْ أَنْ تَعْمَلُوا بِهِنَّ: أَوَّلُهُنَّ أَنْ تَعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا، وَإِنَّ مَثَلَ مَنْ أَشْرَكَ بِاللَّهِ كَمَثَلِ رَجُلٍ اشْتَرَى عَبْدًا مِنْ خَالِصِ مَالِهِ بِذَهَبٍ أَوْ وَرِقٍ، فَقَالَ: هَذِهِ دَارِي وَهَذَا عَمَلِي فَاعْمَلْ وَأَدِّ إِلَيَّ، فَكَانَ يَعْمَلُ وَيُؤَدِّي إِلَى غَيْرِ سَيِّدِهِ، فَأَيُّكُمْ يَرْضَى أَنْ يَكُونَ عَبْدُهُ كَذَلِكَ؟ وَإِنَّ اللَّهَ أَمَرَكُمْ بِالصَّلَاةِ، فَإِذَا صَلَّيْتُمْ فَلَا تَلْتَفِتُوا فَإِنَّ اللَّهَ يَنْصِبُ وَجْهَهُ لِوَجْهِ عَبْدِهِ فِي صَلَاتِهِ مَا لَمْ يَلْتَفِتْ، وَآمُرُكُمْ بِالصِّيَامِ، فَإِنَّ مَثَلَ ذَلِكَ كَمَثَلِ رَجُلٍ فِي عِصَابَةٍ مَعَهُ صُرَّةٌ فِيهَا مِسْكٌ، فَكُلُّهُمْ يَعْجَبُ أَوْ يُعْجِبُهُ رِيحُهَا، وَإِنَّ رِيحَ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ المِسْكِ، وَآمُرُكُمْ بِالصَّدَقَةِ فَإِنَّ مَثَلَ ذَلِكَ كَمَثَلِ رَجُلٍ أَسَرَهُ العَدُوُّ، فَأَوْثَقُوا يَدَهُ إِلَى عُنُقِهِ وَقَدَّمُوهُ لِيَضْرِبُوا عُنُقَهُ، فَقَالَ: أَنَا أَفْدِيهِ مِنْكُمْ بِالقَلِيلِ وَالكَثِيرِ، فَفَدَى نَفْسَهُ مِنْهُمْ، وَآمُرُكُمْ أَنْ تَذْكُرُوا اللَّهَ فَإِنَّ مَثَلَ ذَلِكَ كَمَثَلِ رَجُلٍ خَرَجَ العَدُوُّ فِي أَثَرِهِ سِرَاعًا حَتَّى إِذَا أَتَى عَلَى حِصْنٍ حَصِينٍ فَأَحْرَزَ نَفْسَهُ مِنْهُمْ، كَذَلِكَ العَبْدُ لَا يُحْرِزُ نَفْسَهُ مِنَ الشَّيْطَانِ إِلَّا بِذِكْرِ اللَّهِ “، قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَأَنَا آمُرُكُمْ بِخَمْسٍ اللَّهُ أَمَرَنِي بِهِنَّ، السَّمْعُ وَالطَّاعَةُ وَالجِهَادُ وَالهِجْرَةُ وَالجَمَاعَةُ، فَإِنَّهُ مَنْ فَارَقَ الجَمَاعَةَ قِيدَ شِبْرٍ فَقَدْ خَلَعَ رِبْقَةَ الإِسْلَامِ مِنْ عُنُقِهِ إِلَّا أَنْ يَرْجِعَ، وَمَنْ ادَّعَى دَعْوَى الجَاهِلِيَّةِ فَإِنَّهُ مِنْ جُثَا جَهَنَّمَ»، فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ وَإِنْ صَلَّى وَصَامَ؟ قَالَ: «وَإِنْ صَلَّى وَصَامَ، فَادْعُوا بِدَعْوَى اللَّهِ الَّذِي سَمَّاكُمُ المُسْلِمِينَ المُؤْمِنِينَ، عِبَادَ اللَّهِ»


Tirmidhi-1002

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

இறந்தவருக்காக (ஒப்பாரி வைத்து) அழுவது வெறுப்புக்குரியது என்பது குறித்து வந்துள்ளவை.

1002. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறந்தவரின் குடும்பத்தினர்கள், அவருக்காக (ஒப்பாரி வைத்து) அழுவதன் காரணமாக அவர் வேதனை செய்யப்படுகிறார்.

அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள், இப்னு உமர் (ரலி), இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன. உமர் (ரலி) அவர்களின் மேற்கண்ட ஹதீஸ் “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

இறந்தவருக்காக அழுவதை அறிஞர்களில் சிலர் மக்ரூஹ்-வெறுப்புக்குரிய செயல் என்று கருதுகிறார்கள். இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு, “இறந்தவருக்காக, அவருடைய வீட்டார்கள் அழுவதின் காரணமாக அவர் வேதனை செய்யப்படுகிறார்” என்று கூறுகிறார்கள்.

இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்கள், “இறந்தவர் தனது வாழ்நாளில் (தமக்காக அழக் கூடாது என்று) அவர்களைத் தடுத்திருந்தால், அதனால் அவருக்கு எந்த வேதனையும் இருக்காது” என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்கள்.


«المَيِّتُ يُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ»


Tirmidhi-76

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

76. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவருக்கு (ஹதஸ் எனும்) சிறுதுடக்கு ஏற்பட்டால் அவர் (உளூ) அங்கத் தூய்மை செய்து கொள்ளாத வரை அவரது தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழியாகும்.


«إِنَّ اللَّهَ لَا يَقْبَلُ صَلَاةَ أَحَدِكُمْ إِذَا أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ»


Tirmidhi-2350

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

ஏழ்மையின் சிறப்பு பற்றி வந்துள்ளவை.

2350. அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து), “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களை நான் நேசிக்கிறேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை யோசித்து சொல்லுங்கள்” என்று கூறினார்கள். அந்த மனிதர், “அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களை நான் நேசிக்கிறேன்” என்று கூறினார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை யோசித்து சொல்லுங்கள்!” என்று கூறினார்கள். அந்த மனிதர், “அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களை நான் நேசிக்கிறேன்” என்று கூறினார். இவ்வாறு மூன்று முறை நடந்தது.

பிறகு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் (உண்மையிலேயே) என்னை நேசிப்பீர்களானால் வறுமையை எதிர்கொள்ள தக்க முன்னேற்பாட்டுடன் தயாராகிக் கொள்ளுங்கள்!. ஏனெனில், பள்ளத்தை நோக்கிச் செல்லும் வெள்ளத்தைக் காட்டிலும் என்னை நேசிப்பவரை நோக்கி வறுமை விரைவாக வந்துசேரும்” என்று கூறினார்கள்.

இந்த செய்தி இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ஹஸன் ஃகரீப் என்ற தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.

இந்த செய்தியில் இடம்பெறும் அபுல்வாஸிஉ அர்ராஸிபீ என்பவரின்

قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ. فَقَالَ لَهُ: «انْظُرْ مَاذَا تَقُولُ»، قَالَ: وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ، ثَلَاثَ مَرَّاتٍ، فَقَالَ: «إِنْ كُنْتَ تُحِبُّنِي فَأَعِدَّ لِلْفَقْرِ تِجْفَافًا، فَإِنَّ الفَقْرَ أَسْرَعُ إِلَى مَنْ يُحِبُّنِي مِنَ السَّيْلِ إِلَى مُنْتَهَاهُ»

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ شَدَّادٍ أَبِي طَلْحَةَ، نَحْوَهُ بِمَعْنَاهُ،


Tirmidhi-6

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6. நபி (ஸல்) அவர்கள் கழிவறைக்குள் நுழையும் போது “அல்லாஹும்ம இன்னீ அஊதுபி(க்)க மினல் குபுஸி வல்கபாயிஸ்” (பொருள்: இறைவா! அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியவற்றைத் தூண்டும் ஆண், பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்) என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا دَخَلَ الْخَلَاءَ، قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ»


Tirmidhi-5

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

கழிப்பிடத்திற்குள் நுழையும் போது சொல்ல வேண்டியவை.

5. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழையும்போது, “அல்லாஹும்ம இன்னீ அஊதுபி(க்)க மினல் குபுஸி வல்கபாயிஸ்” (இறைவா! அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியவற்றைத் தூண்டும் ஆண், பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்) என்று கூறுவார்கள்.

அப்துல்அஸீஸ் அவர்கள் ஒரு தடவை இந்த பிரார்த்தனையை, “அல்லாஹும்ம இன்னீ அஊதுபி(க்)க மினல் குப்ஸி வல்கபீஸ் அல்லது மினல் குபுஸி வல்கபாஇஸ்” என்றும், மற்றொரு தடவை, “அஊது பில்லாஹி மினல் குப்ஸி வல்கபீஸ் அல்லது மினல் குபுஸி வல்கபாஇஸ்”  என்றும் கூறியதாக ஷுஅபா அவர்கள் கூறினார்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:


كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْخَلَاءَ، قَالَ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ ” قَالَ شُعْبَةُ: وَقَدْ قَالَ مَرَّةً أُخْرَى: «أَعُوذُ بِاللَّهِ مِنَ الْخُبْثِ وَالْخَبِيثِ – أَوِ الْخُبُثِ وَالْخَبَائِثِ -»


Tirmidhi-2573

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய நரகத்தின் நிலைகளைப் பற்றிய பாடங்கள்.

பாடம்:

நரகத்தைப் பற்றிய வர்ணனை.

2573. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமைநாளில்) நரகம் எழுபதாயிரம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்படும். ஒவ்வொரு சங்கிலியுடனும் எழுபதாயிரம் வானவர்கள் இருந்து, அதை இழுத்து வருவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

(அல்அலாஉ பின் காலித் அல்காஹிலீ அவர்களிடமிருந்து அறிவிக்கும்) ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள், இந்த செய்தியை நபியின் கூற்றாக அறிவிக்கவில்லை என்று (எனது ஆசிரியர்) அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் கூறினார்.

இவ்வாறே (எனது ஆசிரியர்) அப்து பின் ஹுமைத் என்பவரும் ஸவ்ரீ வழியாக (நபித்தோழரின் கூற்றாக அறிவித்தார்). நபியின் கூற்றாக அறிவிக்கவில்லை.


«يُؤْتَى بِجَهَنَّمَ يَوْمَئِذٍ لَهَا سَبْعُونَ أَلْفَ زِمَامٍ، مَعَ كُلِّ زِمَامٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ يَجُرُّونَهَا»

قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ: «وَالثَّوْرِيُّ لَا يَرْفَعُهُ»

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ المَلِكِ بْنُ عَمْرٍو أَبُو عَامِرٍ العَقَدِيُّ، عَنْ سُفْيَانَ، عَنِ العَلَاءِ بْنِ خَالِدٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ «وَلَمْ يَرْفَعْهُ»


Next Page » « Previous Page