பாடம்: 69
பூனை (வாய்வைத்து) எச்சில்படுத்திய தண்ணீர் குறித்து வந்துள்ளவை.
92. அப்துல்லாஹ் பின் அபூகத்தாதா (ரஹ்) அவர்களின் துணைவியார் கப்ஷா பின்த் கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் (மாமனார்) அபூகத்தாதா (ரலி) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்வதற்கு நான் தண்ணீர் கொண்டுவந்து (ஒரு பாத்திரத்தில்) ஊற்றினேன். அப்போது பூனை ஒன்று வந்து, அந்தத் தண்ணீரைக் குடிக்கலாயிற்று. உடனே அபூகத்தாதா (ரலி) அவர்கள், அந்தப் பூனை குடித்து முடிக்கும்வரை அந்தப் பாத்திரத்தைச் சரித்துப் பிடித்தார்கள்.
நான் அதை (வியப்புடன்) உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்ட அபூகத்தாதா (ரலி) அவர்கள், “என் சகோதரர் மகளே! (உளூச் செய்யும் தண்ணீரைப் பூனை குடிப்பதைக் கண்டு) நீ ஆச்சரியப்படுகிறாயா?” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். நான் ‘ஆம்’ என்றேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘பூனைகள் அசுத்தமான பிராணிகள் அல்ல. அவையெல்லாம் உங்களையே சுற்றிச் சுற்றி வரக்கூடியவை ஆகும்’ என்று கூறினார்கள்” என்றார்கள்.
أَنَّ أَبَا قَتَادَةَ دَخَلَ عَلَيْهَا، قَالَتْ: فَسَكَبْتُ لَهُ وَضُوءًا، قَالَتْ: فَجَاءَتْ هِرَّةٌ تَشْرَبُ، فَأَصْغَى لَهَا الإِنَاءَ حَتَّى شَرِبَتْ، قَالَتْ كَبْشَةُ: فَرَآنِي أَنْظُرُ إِلَيْهِ، فَقَالَ: أَتَعْجَبِينَ يَا بِنْتَ أَخِي؟ فَقُلْتُ: نَعَمْ، فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ، إِنَّمَا هِيَ مِنَ الطَّوَّافِينَ عَلَيْكُمْ، أَوِ الطَّوَّافَاتِ»
சமீப விமர்சனங்கள்