அத்தியாயம்: 81
நெகிழ்வூட்டும் அறவுரைகள்.
பாடம்: 1
ஆரோக்கியம் மற்றும் ஓய்வு குறித்தும்; மறுமையின் வாழ்வைத் தவிர வேறு (நிலையான) வாழ்வில்லை என்பது குறித்தும் வந்துள்ளவை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்.
1 . ஆரோக்கியம்.
2 . ஓய்வு.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம்: 81
(புகாரி: 6412)81 – كِتَابُ الرِّقَاقِ
بَابٌ: لاَ عَيْشَ إِلَّا عَيْشُ الآخِرَةِ
حَدَّثَنَا المَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ هُوَ ابْنُ أَبِي هِنْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ: الصِّحَّةُ وَالفَرَاغُ ” قَالَ عَبَّاسٌ العَنْبَرِيُّ: حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عِيسَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ أَبِيهِ، سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
Bukhari-Tamil-6412.
Bukhari-TamilMisc-6412.
Bukhari-Shamila-6412.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
பாகத்தை சிவப்பு நிறத்திலும் ,அறிவிப்பாளர் வரிசைகளை பச்சை நிறத்திலும், ஹதீஸை கருப்பு நிறத்திலும் கொடுத்திருப்பது மிகச்சிறப்பு…அல்ஹம்துலில்லாஹ்….I love it…அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்
துஆ செய்யுங்கள். செய்ய வேண்டியது ஏராளம் உள்ளது.