தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1511

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம், மரணித்த போது அவருக்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்.

மேலும், “இவருக்குச் சொர்க்கத்தில் பாலூட்டும் அன்னை உண்டு .

இவர் உயிரோடு இருந்திருந்தால் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்திருப்பார்.

இவரின் கிப்தி கிளையைச் சேர்ந்த தாய்மாமன்கள் விடுதலையாகி இருப்பார்கள். அவர்களில் எவரும் அடிமையாக இருக்கமாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(இப்னுமாஜா: 1511)

حَدَّثَنَا عَبْدُ الْقُدُّوسِ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ شَبِيبٍ الْبَاهِلِيُّ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عُثْمَانَ قَالَ: حَدَّثَنَا الْحَكَمُ بْنُ عُتَيْبَةَ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:

لَمَّا مَاتَ إِبْرَاهِيمُ ابْنُ رَسُولِ اللَّهِ _ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ _ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ: «إِنَّ لَهُ مُرْضِعًا فِي الْجَنَّةِ، وَلَوْ عَاشَ لَكَانَ صِدِّيقًا نَبِيًّا، وَلَوْ عَاشَ لَعَتَقَتْ أَخْوَالُهُ الْقِبْطُ، وَمَا اسْتُرِقَّ قِبْطِيٌّ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1511.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1500.




إسناد شديد الضعف فيه إبراهيم بن عثمان السلمي وهو متروك الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் இப்ராஹீம் பின் உஸ்மான் மிக பலவீனமானவர்.

متروك الحديث
تقريب التهذيب: (1 / 112)

 இந்தக் கருத்தில் வரும் செய்தி பார்க்க : அபூதாவூத்-3188 .

  • நபி (ஸல்) அவர்கள் தனது மகன் இப்ராஹீம் அவர்களுக்கு தொழுகை நடத்தவில்லை என்று வரும் செய்திகளே சரியானவை.

பார்க்க : அபூதாவூத்-3187 .

  • இப்ராஹீம் அவர்களுக்கு சொர்க்கத்தில் பாலூட்டும் அன்னை உண்டு என்ற கருத்தில் சரியான ஹதீஸ்கள் உள்ளன.

பார்க்க : புகாரி-1382 .

  • இப்ராஹீம் உயிரோடு இருந்தால் நபியாக இருப்பார் என்ற கருத்தில் வரும் செய்திகள் அனஸ் (ரலி), இப்னு அபூ அவ்ஃபா (ரலி) போன்றோரின் சொல்லாகவே வந்துள்ளது.

பார்க்க : அனஸ் (ரலி) வழியாக – அஹ்மத்-12358 , 13985 ,

இப்னு அபீ அவ்ஃபா (ரலி) வழியாக – புகாரி-6194 ,

…..

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.