இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இப்னு மஸ்ஊதே!” என்று அழைத்தார்கள். நான், “இதோ வந்துவிட்டேன், கட்டுப்பட்டேன் என்று மூன்று தடவை கூறினேன். அப்போது அவர்கள், “ஈமானின் (இறைநம்பிக்கையின்) கயிறுகளில் மிகவும் பலமானது எது என்று நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்” என்றேன். அதற்கவர்கள், “அல்லாஹ்விற்காக நேசம் கொள்வதும், அல்லாஹ்விற்காகவே பகைமை கொள்வதும், அல்லாஹ்விற்காகவே நட்பு பாராட்டுவதும் ஆகும்” என்று கூறினார்கள்.
மீண்டும் அவர்கள், “இப்னு மஸ்ஊதே!” என்று அழைத்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! இதோ வந்துவிட்டேன், கட்டுப்பட்டேன் என்று கூறினேன். அவர்கள், “முஃமின்களில் (இறைநம்பிக்கையாளர்களில்) சிறந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்” என்றேன். அதற்கவர்கள், “தங்கள் மார்க்கத்தைப் புரிந்து கொண்டு, அதில் அழகிய முறையில் செயல்படுபவர்களே சிறந்தவர்கள்” என்று கூறினார்கள்.
பிறகு அவர்கள், “இப்னு மஸ்ஊதே! இறைநம்பிக்கையாளர்களில் மிகுந்த அறிவுடையவர் யார் என்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்” என்றேன். அதற்கவர்கள், “(மக்களிடையே) கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது -அப்போது நபி (ஸல்) அவர்கள் தங்கள் விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள்- எவர் சத்தியத்தை (உண்மையை) மிகச் சரியாகப் புரிந்து கொள்கிறாரோ அவரே அறிவுடையவர். அவரின் நற்செயல்களில் குறைவு இருந்தாலும், அவர் (அமல்செய்வதில்) தவழ்ந்து ஊர்ந்து செல்பவராக இருந்தாலும் சரியே” என்று கூறினார்கள்.
தொடர்ந்து அவர்கள் கூறினார்கள்: “இப்னு மஸ்ஊதே! பனூ இஸ்ராயீலர்கள் எழுபத்திரண்டு பிரிவுகளாகப் பிரிந்தனர் என்பதை நீர் அறிவீரா? அவற்றில் மூன்று பிரிவினரைத் தவிர மற்றவர்கள் வெற்றி பெறவில்லை.
முதல் பிரிவினர்: அரசர்களிடமும் கொடுங்கோலர்களிடமும் ஈஸா (அலை) அவர்களின் மார்க்கத்திற்கு அழைப்பு விடுத்தார்கள். அதனால் அவர்கள் பிடிக்கப்பட்டு, மரம் அறுக்கும் ரம்பங்களால் அறுக்கப்பட்டார்கள்; நெருப்பில் எரிக்கப்பட்டார்கள். இருப்பினும் அவர்கள் அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை (மரணம் வரை) பொறுமையுடன் இருந்தார்கள்.
இரண்டாம் பிரிவினர்: அவர்களுக்கு அநீதியை எதிர்க்கும் வலிமை இருக்கவில்லை. எனவே அவர்கள் மலைகளுக்குச் சென்று வணங்கி, துறவறம் மேற்கொண்டார்கள்.
இவர்களைப் பற்றித்தான் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்: “அவர்கள், தாமாகவே துறவறத்தை உருவாக்கிக் கொண்டனர். எனவே அதைக் கூட பேண வேண்டிய விதத்தில் பேணவில்லை. அல்லாஹ்வின் திருப்தியைத் தேடுவதைத் தவிர (வேறெதையும்) அவர்கள் மீது நாம் விதியாக்கவில்லை. அவர்களில் நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களின் கூலியைக் கொடுத்தோம். அவர்களில் அதிகமானோர் குற்றவாளிகள். (அல்குர்ஆன்: 57:27)
மூன்றாம் பிரிவினர்: அவர்கள் (ஈஸா-அலை- அவர்களுக்குப் பின்) என் மீது நம்பிக்கை கொண்டு என்னை உண்மைப்படுத்தினார்கள். அவர்கள் அந்த மார்க்கத்தை முறையாகப் பேணினார்கள்.
ஆனால் அவர்களில் அதிகமானோர் பாவிகளாகி விட்டனர். எவர்கள் என் மீது நம்பிக்கை கொள்ளாமல், என்னைப் பொய்ப்பித்து, இந்த மார்க்கத்தை முறையாகப் பேணவில்லையோ அவர்களையே அல்லாஹ் பாவிகள் என்று கூறுகிறான்.
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 10357)حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ أَبِي حَسَّانَ الْأَنْمَاطِيُّ، ثنا هِشَامُ بْنُ عَمَّارٍ، ثنا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنِي بُكَيْرُ بْنُ مَعْرُوفٍ، عَنْ مُقَاتِلِ بْنِ حَيَّانَ، عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«يَا ابْنَ مَسْعُودٍ» ، قُلْتُ: لَبَّيْكَ ثَلَاثًا، قَالَ: «هَلْ تَدْرُونَ أَيُّ عُرَى الْإِيمَانِ أَوْثَقُ؟» قُلْتُ: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «الْوَلَايَةُ فِي اللهِ، وَالْحُبُّ فِي اللهِ، وَالْبُغْضُ فِي اللهِ»
قَالَ: «يَا ابْنَ مَسْعُودٍ» ، قُلْتُ: لَبَّيْكَ يَا رَسُولَ اللهِ، قَالَ: «أَيُّ الْمُؤْمِنِينَ أَفْضَلُ؟» قُلْتُ: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «إِذا عَرَفُوا دِينَهُمْ أَحْسَنُهُمْ عَمَلًا»
ثُمَّ قَالَ: «يَا ابْنَ مَسْعُودٍ، هَلْ تَدْرِي أَيُّ الْمُؤْمِنِينَ أَعْلَمُ؟» قُلْتُ: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «إِذَا اخْتَلَفُوا – وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ – أَبْصَرُهُمْ بِالْحَقِّ، وَإِنْ كَانَ فِي عَمَلِهِ تَقْصِيرٌ، وَإِنْ كَانَ يَزْحَفُ زَحْفًا»
ثُمَّ قَالَ: ” يَا ابْنَ مَسْعُودٍ، هَلْ عَلِمْتَ أَنَّ بَنِي إِسْرَائِيلَ افْتَرَقُوا عَلَى اثْنَتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً، لَمْ يَنْجُ مِنْهَا إِلَّا ثَلَاثُ فِرَقٍ، فِرْقَةٌ أَقَامَتْ فِي الْمُلُوكِ وَالْجَبَابِرَةِ، فَدَعَتْ إِلَى دِينِ عِيسَى، فَأُخِذَتْ فَقُتِلَتْ بِالْمَنَاشِيرِ، وَحُرِّقَتْ بِالنِّيرَانِ، فَصَبَرَتْ حَتَّى لَحِقَتْ بِاللهِ، ثُمَّ قَامَتْ طَائِفَةٌ أُخْرَى لَمْ تَكُنْ لَهُمْ قُوَّةٌ، وَلَمْ تُطِقِ الْقِيَامَ بِالْقِسْطَ، فَلَحِقَتْ بِالْجِبَالِ، فَتَعَبَّدَتْ وَتَرَهَّبَتْ، وَهُمُ الَّذِينَ ذَكَرَهُمُ اللهُ فَقَالَ {وَرَهْبَانِيَّةً ابْتَدَعُوهَا مَا كَتَبْنَاهَا عَلَيْهِمْ إِلَّا ابْتِغَاءَ رِضْوَانَ اللهِ} [الحديد: 27] إِلَى {وَكَثِيرٌ مِنْهُمْ فَاسِقُونَ} [الحديد: 16] ، وَفِرْقَةٌ مِنْهُمْ آمَنَتْ، فَهُمُ الَّذِينَ آمَنُوا وَصَدَّقُونِي، وَهُمُ الَّذِينَ رَعَوْهَا حَقَّ رِعَايَتِهَا، وَكَثِيرٌ مِنْهُمْ فَاسِقُونَ، وَهُمُ الَّذِينَ لَمْ يُؤْمِنُوا بِي وَلَمْ يُصَدِّقُونِي، وَلَمْ يَرْعَوْهَا حَقَّ رِعَايَتِهَا، وَهُمُ الَّذِينَ فَسَّقَهُمُ اللهُ “
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-10357.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-10207,
10208,
10209,
10210.
இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . தப்ரானீ இமாம்-ஸுலைமான் பின் அஹ்மத்
2 . இஸ்ஹாக் பின் இப்ராஹீம்-அல்அன்மாதீ
3 . ஹிஷாம் பின் அம்மார்
4 . வலீத் பின் முஸ்லிம்-அபுல்அப்பாஸ்
5 . புகைர் பின் மஃரூஃப்
6 . முகாதில் பின் ஹய்யான்
7 . காஸிம் பின் அப்துர்ரஹ்மான்-அல்ஹுதலீ
8 . அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்
9 . அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)-இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி)
الكامل في ضعفاء الرجال (2/ 204):
قَالَ الشَّيْخُ: وَبُكَيْرُ بْنُ مَعْرُوفٍ لَيْسَ بِكَثِيرِ الرِّوَايَةِ، ولَا أَعْلَمُ يَرْوِي عَنْهُ غَيْرَ الْوَلِيدِ بْنِ مسلم ومن أهل خراسان من يروي عنه غير مُحَمد بن مُزَاحِمٍ وَغَيْرُهُ، وَهو قَلِيلُ الرِّوَايَاتِ وَأَرْجُو أَنَّهُ لا بَأْسَ بِهِ وليس حديثه بالمنكر جدا.
இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகளில் புகைர் பின் மஃரூப் அறிவிக்கும் செய்தி பரவாயில்லை என இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள் கூறியுள்ளார்.
- புகைர் குறைந்த ஹதீஸ்களை அறிவித்துள்ளார். அவைகள் மிகவும் முன்கரானவை அல்ல. அவர் விசயத்தில் பிரச்சனை இல்லை (நூல்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-2/203, 204)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-47280-ஹிஷாம் பின் அம்மார், ராவீ-9535-புகைர் பின் மஃரூஃப், ராவீ-45196-முகாதில் பின் ஹய்யான் ஆகியோர் நடுத்தரமானவர்கள் என்பதால் இது ஹஸன் தர செய்தியாகும்.
(நூல்: தக்ரீபு தக்ரீபுத் தஹ்தீப்-7303, 768, 6867)
تقريب تقريب التهذيب (3/ 272):
[6867] مقاتل بن حيان النبطي بفتح النون والموحدة أبو بسطام البلخي الخزاز بمعجمة وزاءين منقوطتين صدوق فاضل أخطأ الأزدي في زعمه أن وكيعا كذبه وانما كذب الذي بعده من السادسة مات قبيل الخمسين بأرض الهند م 4
قلت: ذكره ابن حبان في مشاهير علماء الأمصار (1566) وقال أبو داود: قلت لأحمد: مقاتل بن حيان؟ قال ما أعلم” (سؤلات أبي داود لأحمد بن حنبل: صفحة 358) والذهبي “صدوق” ورمز له ب “صح” (ميزان الاعتدال (8739) ولم يذكر ذلك صاحب التهذيب. وأما نقل أبو الفتح الأزدي أن ابن معين ضعفه فلم أقف عليه وقد وثقه ابن معين في أكثر من رواية. وأما قول الأزدي “كان أحمد بن حنبل لا يعبأ بمقاتل بن سليمان ولا بمقاتل بن حيان” فبلا مستند وقد صرح أحمد بأنه لا يعلم حاله.
முகாதில் பின் ஹய்யான் அன்னபத்தீ, அபூபிஸ்தாம் அல்பல்கீ அல்கஸ்ஸாஸ். இவர் ‘ஸதூக்’ (உண்மையாளர்-நடுத்தரமானவர்) மற்றும் சிறந்த அறிஞருமாவார். வகீஃ அவர்கள் இவரைப் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். எனக் குறிப்பிட்டதாக அஸ்தீ கூறியிருப்பது தவறாகும்.
வகீஃ (ரஹ்) அவர்கள் இவருக்கு அடுத்து வரக்கூடிய முகாதில் பின் ஸுலைமான் எனும் நபரைத்தான் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். எனக் குறிப்பிட்டார்கள்.
இவர் ஆறாவது தலைமுறை-காலகட்டத்தைச் சேர்ந்தவர். ஹிஜ்ரி 150-க்கு முன்னதாக இந்திய மண்ணில் மரணமடைந்தார்.
இவரை பற்றிய குறிப்பை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் ‘மஷாஹீர் உலமாஇல் அம்ஸார்’ (நூல்: 1566) எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்கள் கூறுகிறார்கள்: நான் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஹன்பல் அவர்களிடம் “முகாதில் பின் ஹய்யான் பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அவரைப் பற்றி நான் அறிந்திருக்கவில்லை” என்று பதிலளித்தார்கள். (நூல்: ஸுஆலாத் அபூ_தாவூத்-1/358)
தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
வர்கள் இவரை ‘ஸதூக்’ என்று குறிப்பிட்டு, இவருடைய செய்திகள் ஆதாரப்பூர்வமானவை எனும் பொருளில் ‘ஸஹ்’ (صح) எனும் குறியீட்டை வழங்கியுள்ளார்கள். (நூல்: மீஸானுல் இஃதிதால்-8739). இத்தகவலை ‘தஹ்தீப்’ நூலின் ஆசிரியரான இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் குறிப்பிடவில்லை.
இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறியதாக அபுல் ஃபத்ஹ் அல்அஸ்தீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 374
அவர்கள் கூறியுள்ள தகவல் எனக்குக் கிடைக்கவில்லை. மாறாக, இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் இவரை பலமானவர் என்று கூறியதாகவே பல அறிவிப்புகள் உள்ளன.
அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், முகாதில் பின் ஸுலைமானையும், முகாதில் பின் ஹய்யானையும் ஒரு பொருட்டாகக் கருதமாட்டார்கள்” என்று அஸ்தீ கூறிய கூற்றுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஏனெனில் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்களே முகாதில் பின் ஹய்யான் பற்றி தனக்குத் தெரியாது என்று மிகத் தெளிவாகக் கூறிவிட்டார்கள்.
(நூல்: தக்ரீபு தக்ரீபுத் தஹ்தீப்-6867)
அபுல்ஃபத்ஹ் அஸ்தீ அவர்களே விமர்சிக்கப்பட்டவர் என்பதால் அவரின் தகவலை அறிஞர்கள் ஏற்பதில்லை.
سلسلة الأحاديث الصحيحة وشيء من فقهها وفوائدها (2/ 700):
… وهذا إسناد حسن في الشواهد والمتابعات، ورجاله ثقات، وفي بعضهم
كلام لا يضر فيها.
- அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள், இதில் இடம்பெறும் சிலரைப் பற்றி சிறிது விமர்சனம் இருந்தாலும் அது அவர்களின் தரத்தை பாதிக்கக்கூடிய விமர்சனம் அல்ல என்றும், இது ஹஸன் தர செய்தி என்றும் கூறியுள்ளார்.
(நூல்: அஸ்ஸஹீஹா-998)
மற்ற அறிவிப்பாளர்தொடர்களில் விமர்சனம் உள்ளது.
1 . இந்த செய்தியின் முதல் பகுதியின் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- புகைர் பின் மஃரூப் ….. —> இப்னு மஸ்வூத் (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-10357,
- ஸஅக் பின் ஹஸ்ன் …. —> இப்னு மஸ்வூத் (ரலி)
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-376, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-30443, அல்முஃஜமுல் கபீர்-10531, அல்முஃஜமுல் அவ்ஸத்-4479, அல்முஃஜமுஸ் ஸகீர்-624, ஹாகிம்-3790, குப்ரா பைஹகீ-21069,
2 . பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-18524.
3 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-11537.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-3992,
சமீப விமர்சனங்கள்