Author: Farook

Bukhari-5991

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15

பதிலுக்கு பதில் உறவு கொண்டாடுபவர் உறவைப் பேணுகின்றவர் அல்லர்.

5991. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார்.19

என அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அறிவித்தார்.

இதன் அறிவிப்பாளர்களில் சிலர் இதை அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களின் பொன்மொழி என்றும், வேறு சிலர் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழி என்றும் கூறுகிறார்கள்.

Book : 78


«لَيْسَ الوَاصِلُ بِالْمُكَافِئِ، وَلَكِنِ الوَاصِلُ الَّذِي إِذَا قُطِعَتْ رَحِمُهُ وَصَلَهَا»


Bukhari-5990

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 14

உறவைப் பசுமையாக்க வேண்டும்.

5990. அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அறிவித்தார்:

இன்னாரின் தந்தையின் குடும்பத்தார் என் நேசர்கள் அல்லர்; என் நேசர்கள் யாரெனில், அல்லாஹ்வும், நல்ல இறை நம்பிக்கையாளர்களும்தாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் ஒளிவு மறைவின்றி பகிரங்கமாகவே கூறினார்கள்.

‘முஹம்மத் இப்னு ஜஅஃபர் (ரஹ்) அவர்களின் (மூல நூல்) பிரதியொன்றில் ‘இன்னார்’ எனும் (சொல் உள்ள) இடம் (நிரப்பப்படாமல்) வெற்றிடமாக உள்ளது’ என அறிவிப்பாளர் அம்ர் இப்னு அப்பாஸ் (ரஹ்) கூறினார்.

அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்களின் வழியாக வரும் அன்பஸா இப்னு அப்தில் வாஹித் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், நபி (ஸல்) அவர்கள், ‘ஆயினும் அவர்களுடன் எனக்கு இரத்த உறவு உண்டு. அதை நான் (காய்ந்து போகவிடாமல்) பசுமையாக்குவேன்‘ என்று கூறினார்கள் என அதிகபட்சமாக இடம்பெற்றுள்ளது. அதாவது, ‘அவர்களின் உறவைப் பேணி நடந்துகொள்வேன்’ என்றார்கள்.

سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جِهَارًا غَيْرَ سِرٍّ يَقُولُ: ” إِنَّ آلَ أَبِي – قَالَ عَمْرٌو: فِي كِتَابِ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ بَيَاضٌ – لَيْسُوا بِأَوْلِيَائِي، إِنَّمَا وَلِيِّيَ اللَّهُ وَصَالِحُ المُؤْمِنِينَ “

زَادَ عَنْبَسَةُ بْنُ عَبْدِ الوَاحِدِ، عَنْ بَيَانٍ، عَنْ قَيْسٍ، عَنْ عَمْرِو بْنِ العَاصِ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَلَكِنْ لَهُمْ رَحِمٌ أَبُلُّهَا بِبَلاَهَا» يَعْنِي أَصِلُهَا بِصِلَتِهَا