Author: Farook

Musannaf-Ibn-Abi-Shaybah-29740

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

29740. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் நல்ல அடியானுக்கு சொர்க்கத்தில் அந்தஸ்தை உயர்த்துவான். அப்போது அந்த அடியான், “என் இறைவா இது எனக்கு எப்படிக் கிடைத்தது?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்கு இந்த அந்தஸ்து கிடைத்தது)” என்று கூறுவான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


إِنَّ الرَّجُلَ لَتُرْفَعُ لَهُ الدَّرَجَةُ فِي الْجَنَّةِ، فَيَقُولُ: يَا رَبِّ أَنَّى لِي هَذِهِ؟، فَيُقَالُ: بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ


Musannaf-Ibn-Abi-Shaybah-12081

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

12081. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதனுக்கு மறுமையில் அந்தஸ்து உயர்த்தப்படும். உடனே அவன்  இது எதனால் என்று கேட்பான். அப்போது உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்கு இந்த அந்தஸ்து கிடைத்தது)” என்று கூறப்படும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


إِنَّ الرَّجُلَ لِيَرْقَى الدَّرَجَةَ، فَيَقُولُ: مَا هَذَا؟ فَيُقَالُ: بِاسْتِغْفَارِ وَلَدِكَ مِنْ بَعْدِكَ لَكَ


Almujam-Alkabir-14727

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

14727. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் அல்குர்ஆனின் 10 வசனங்களை ஓதி நின்று வணங்குகிறாரோ அவர் அலட்சியவாதிகளின் பட்டியலில் சேர்க்கப்படமாட்டார். யார் அல்குர்ஆனின் 100 வசனங்களை ஓதி தொழுகிறாரோ அவர் இறைவனுக்கு கட்டுப்பட்டவர்களில் சேர்க்கப்படுவார். யார் அல்குர்ஆனின் 1000 வசனங்களை ஓதி தொழுகிறாரோ அவர் நன்றிசெலுத்துவோரில் சேர்க்கப்படுவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«مَنْ قَامَ بِعَشْرِ آيَاتٍ لَمْ يُكْتَبْ مِنَ الْغَافِلِينَ، وَمَنْ قَامَ بِمِئةِ آيَةٍ كُتِبَ مِنَ الْقَانِتِينَ، وَمَنْ قَامَ بِأَلْفِ آيَةٍ كُتِبَ مِنَ الشَّاكِرِينَ»


Ibn-Hibban-2572

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2572. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் அல்குர்ஆனின் 10 வசனங்களை ஓதி நின்று வணங்குகிறாரோ அவர் அலட்சியவாதிகளின் பட்டியலில் சேர்க்கப்படமாட்டார். யார் அல்குர்ஆனின் 100 வசனங்களை ஓதி தொழுகிறாரோ அவர் இறைவனுக்கு கட்டுப்பட்டவர்களில் சேர்க்கப்படுவார். யார் அல்குர்ஆனின் 1000 வசனங்களை ஓதி தொழுகிறாரோ அவர் பலமடங்கு நன்மைகள் செய்தவர்களில் சேர்க்கப்படுவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

அபூஹாத்திம்-இப்னு ஹிப்பான் கூறுகிறார்:

(இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும்) அபூஸுவைத் என்ற புனைப்பெயர் கொண்டவரின் இயற்பெயர் மிஸ்ரை சேர்ந்த ஹுமைத் பின் ஸுவைத் என்பவராகும். சிலர் அபூஸவிய்யா என்று கூறுவது தவறாகும்.


«مَنْ قَامَ بِعَشْرِ آيَاتٍ لَمْ يُكْتَبْ مِنَ الْغَافِلِينَ، وَمَنْ قَامَ بِمِائَةِ آيَةٍ كُتِبَ مِنَ الْقَانِتِينَ، وَمَنْ قَامَ بِأَلْفِ آيَةٍ كُتِبَ مِنَ الْمُقَنْطِرِينَ»

 


Ibn-Khuzaymah-1144

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

இரவில் ஆயிரம் வசனங்களை ஓதி தொழுவதின் சிறப்பு.

(இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூ ஸவிய்யா என்பவரின் நிறை, குறைகளைப் பற்றி எனக்கு தெரியவில்லை)

1144. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் அல்குர்ஆனின் 10 வசனங்களை ஓதி நின்று வணங்குகிறாரோ அவர் அலட்சியவாதிகளின் பட்டியலில் சேர்க்கப்படமாட்டார். யார் அல்குர்ஆனின் 100 வசனங்களை ஓதி தொழுகிறாரோ அவர் இறைவனுக்கு கட்டுப்பட்டவர்களில் சேர்க்கப்படுவார். யார் அல்குர்ஆனின் 1000 வசனங்களை ஓதி தொழுகிறாரோ அவர் பலமடங்கு நன்மைகள் செய்தவர்களில் சேர்க்கப்படுவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«مَنْ قَامَ بِعَشْرِ آيَاتٍ لَمْ يُكْتَبْ مِنَ الْغَافِلِينَ، وَمَنْ قَامَ بِمِائَةِ آيَةٍ كُتِبَ مِنَ الْقَانِتِينَ، وَمَنَ قَرَأَ بِأَلْفِ آيَةٍ كُتِبَ مِنَ الْمُقَنْطِرِينَ»


Abu-Dawood-1398

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

1398. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் அல்குர்ஆனின் 10 வசனங்களை ஓதி நின்று வணங்குகிறாரோ அவர் அலட்சியவாதிகளின் பட்டியலில் சேர்க்கப்படமாட்டார். யார் அல்குர்ஆனின் 100 வசனங்களை ஓதி தொழுகிறாரோ அவர் இறைவனுக்கு கட்டுப்பட்டவர்களில் சேர்க்கப்படுவார். யார் அல்குர்ஆனின் 1000 வசனங்களை ஓதி தொழுகிறாரோ அவர் பலமடங்கு நன்மைகள் செய்தவர்களில் சேர்க்கப்படுவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

சின்ன-இப்னு ஹுஜைரா என்பவரின் பெயர் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் ஹுஜைரா என்பதாகும்.


«مَنْ قَامَ بِعَشْرِ آيَاتٍ لَمْ يُكْتَبْ مِنَ الغَافِلِينَ، وَمَنْ قَامَ بِمِائَةِ آيَةٍ كُتِبَ مِنَ القَانِتِينَ، وَمَنْ قَامَ بِأَلْفِ آيَةٍ كُتِبَ مِنَ المُقَنْطِرِينَ»


Ibn-Majah-3660

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3660. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கின்தார் என்பது 12 ஆயிரம் ஊக்கியாவாகும். அதில் ஒவ்வொரு ஊக்கியாவும் வானம், பூமிக்கு இடைப்பட்டவைகளை விடவும் சிறந்ததாகும்.

மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதனுக்கு மறுமையில் அந்தஸ்து உயர்த்தப்படும். உடனே அவன்  இது எதனால் என்று கேட்பான். அப்போது உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்கு இந்த அந்தஸ்து கிடைத்தது)” என்று கூறப்படும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«الْقِنْطَارُ اثْنَا عَشَرَ أَلْفَ أُوقِيَّةٍ، كُلُّ أُوقِيَّةٍ خَيْرٌ مِمَّا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ»

وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ الرَّجُلَ لَتُرْفَعُ دَرَجَتُهُ فِي الْجَنَّةِ فَيَقُولُ: أَنَّى هَذَا؟ فَيُقَالُ: بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ


Tirmidhi-802

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

802. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோன்புப் பெருநாள் என மக்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என மக்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

நான் முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரீ அவர்களிடம், முஹம்மது பின் முன்கதிர் அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து (ஹதீஸ்களை) கேட்டுள்ளாரா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆம்! அவர் அறிவிக்கும் ஹதீஸ்களில் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து நான் செவியேற்றேன் என்று கூறுகிறார் என்று பதிலளித்தார்கள்.

இந்த அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ள, இந்த ஹதீஸ் “ஹஸன் ஃகரீப் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.


«الفِطْرُ يَوْمَ يُفْطِرُ النَّاسُ، وَالأَضْحَى يَوْمَ يُضَحِّي النَّاسُ»


Daraqutni-2446

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2446.


«فِطْرُكُمْ يَوْمَ تُفْطِرُونَ وَأَضْحَاكُمْ يَوْمَ تُضَحُّونَ».

لَفْظُ ابْنِ صَاعِدٍ


Next Page » « Previous Page