Author: Farook

Musnad-Ahmad-10045

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10045. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் தன் கணவருடன் படுக்கையை(ப் பகிர்ந்து கொள்வதை) வெறுத்து (தனியாக) இரவைக் கழித்தால், (கணவனின் படுக்கைக்கு) அவள் திரும்பும் வரை வானவர்கள் அவளைச் சபிக்கின்றனர்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


«إِذَا بَاتَتِ الْمَرْأَةُ هَاجِرَةً فِرَاشَ زَوْجِهَا، لَعَنَتْهَا الْمَلَائِكَةُ حَتَّى تَرْجِعَ»


Musnad-Ahmad-9013

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

9013. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் தன் கணவருடன் படுக்கையை(ப் பகிர்ந்து கொள்வதை) வெறுத்து (தனியாக) இரவைக் கழித்தால், (கணவனின் படுக்கைக்கு) அவள் திரும்பும் வரை வானவர்கள் அவளைச் சபிக்கின்றனர்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


«إِذَا بَاتَتِ الْمَرْأَةُ هَاجِرَةً فِرَاشَ زَوْجِهَا، لَعَنَتْهَا الْمَلَائِكَةُ حَتَّى تَرْجِعَ»


Musnad-Ahmad-8579

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

8579. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் தன் கணவருடன் படுக்கையை(ப் பகிர்ந்து கொள்வதை) வெறுத்தால் அல்லாஹ்வின் வானவர்கள் அவளைச் சபிக்கின்றனர்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


«لَا تَهْجُرُ امْرَأَةٌ فِرَاشَ زَوْجِهَا إِلَّا لَعَنَتْهَا مَلَائِكَةُ اللَّهِ عَزَّ وَجَلَّ»


Musnad-Ahmad-7471

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7471. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் தன் கணவருடன் படுக்கையை(ப் பகிர்ந்து கொள்வதை) வெறுத்து (தனியாக) இரவைக் கழித்தால், (கணவனின் படுக்கைக்கு) அவள் திரும்பும் வரை வானவர்கள் அவளைச் சபிக்கின்றனர்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

 

இப்னு ஜஃபரின் அறிவிப்பில் ‘அவள் திரும்பும் வரை’ என்று வந்துள்ளது.


«إِذَا بَاتَتِ الْمَرْأَةُ هَاجِرَةً فِرَاشَ زَوْجِهَا، بَاتَتْ تَلْعَنُهَا الْمَلَائِكَةُ – قَالَ ابْنُ جَعْفَرٍ – حَتَّى تَرْجِعَ»


Abu-Dawood-2141

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2141. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தம் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவரிடம் அவள் செல்லாமலிருக்க, அதை முன்னிட்டு அவள்மீது கோபம் கொண்ட நிலையில் அவர் இரவைக் கழிப்பாராயின், விடியும்வரை அவளை வானவர்கள் சபித்துக்கொண்டேயிருக்கின்றனர்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


«إِذَا دَعَا الرَّجُلُ امْرَأَتَهُ إِلَى فِرَاشِهِ فَأَبَتْ، فَلَمْ تَأْتِهِ فَبَاتَ غَضْبَانَ عَلَيْهَا، لَعَنَتْهَا الْمَلَائِكَةُ حَتَّى تُصْبِحَ»


Ibn-Khuzaymah-941

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

941. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அடிமை தன் எசமானர்களிடமிருந்து ஓடிப் போய்விட்டால் அவன் அவர்களிடம் திரும்பி வரும் வரை அவனுடைய எந்தத் தொழுகையும் ஏற்றுக் கொள்ளப்படாது. (தொழுகையின் நன்மை கிடைக்காது.)

அறிவிப்பவர் : ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«إِذَا أَبَقَ الْعَبْدُ لَمْ يُقْبَلْ لَهُ صَلَاةٌ حَتَّى يَرْجِعَ إِلَى مَوَالِيهِ»


Nasaayi-4050

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4050. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அடிமை (தன் எசமானர்களிடமிருந்து) ஓடிப் போய்விட்டால் அவனுடைய எந்தத் தொழுகையும் ஏற்றுக் கொள்ளப்படாது. (தொழுகையின் நன்மை கிடைக்காது.) அவன் அந்த நிலையில் மரணித்தால் இறைமறுப்பாளனாகவே மரணிப்பான்.

அறிவிப்பவர் : ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)

 

ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் ஒரு அடிமை ஓடிவிட்டான். அவர்கள் அவனைப் பிடித்து அவனின் கழுத்தைத் துண்டித்துவிட்டார்கள்.


إِذَا أَبَقَ الْعَبْدُ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ، وَإِنْ مَاتَ مَاتَ كَافِرًا،

وَأَبَقَ غُلَامٌ لِجَرِيرٍ فَأَخَذَهُ فَضَرَبَ عُنُقَهُ


Nasaayi-4049

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4049. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அடிமை தன் எசமானர்களிடமிருந்து ஓடிப் போய்விட்டால் அவன் அவர்களிடம் திரும்பி வரும் வரை அவனுடைய எந்தத் தொழுகையும் ஏற்றுக் கொள்ளப்படாது. (தொழுகையின் நன்மை கிடைக்காது.)

அறிவிப்பவர் : ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«إِذَا أَبَقَ الْعَبْدُ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ حَتَّى يَرْجِعَ إِلَى مَوَالِيهِ»


Kubra-Bayhaqi-1830

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1830. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூவரின் தொழுகைகள் (அல்லாஹ்வால்) ஏற்றுக்கொள்ளப்படாது. அவர்களின் நற்செயல்கள் வானத்திற்கு உயரவும் செய்யாது.  (அவர்கள் யாரெனில்) ஓடிப்போன  அடிமை; அவன் தனது எசமானர்களிடம் திரும்பி வந்து சரணடையும் வரை. கணவனின் கோபத்திற்கு ஆளான பெண்; அவன் அவளை பொறுந்திக்கொள்ளும் வரை. போதையுள்ளவன்; அவன் தெளிவடையும் வரை.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


ثَلَاثَةٌ لَا تُقْبَلُ لَهُمْ صَلَاةٌ وَلَا تَصْعَدُ لَهُمْ حَسَنَةٌ: الْعَبْدُ الْآبِقُ حَتَّى يَرْجِعَ إِلَى مَوَالِيهِ فَيَضَعَ يَدَهُ فِي أَيْدِيهِمْ، وَالْمَرْأَةُ السَّاخِطُ عَلَيْهَا زَوْجُهَا، وَالسَّكْرَانُ حَتَّى يَصْحُوَ


Almujam-Alawsat-9231

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

9231. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூவரின் தொழுகைகள் (அல்லாஹ்வால்) ஏற்றுக்கொள்ளப்படாது. அவர்களின் நற்செயல்கள் அல்லாஹ்விடம் உயரவும் செய்யாது.  (அவர்கள் யாரெனில்) போதையுள்ளவன்; அவன் தெளிவடையும் வரை. கணவனின் கோபத்திற்கு ஆளான பெண்; அவன் அவளை பொறுந்திக்கொள்ளும் வரை. ஓடிப்போன  அடிமை; அவன் தனது எசமானர்களிடம் திரும்பி வந்து சரணடையும் வரை.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«ثَلَاثَةٌ لَا تُقْبَلُ لَهُمْ صَلَاةٌ ، وَلَا يَصْعَدُ لَهُمْ إِلَى اللَّهِ حَسَنَةٌ: السَّكْرَانُ حَتَّى يَصْحُوَ، وَالْمَرْأَةُ السَّاخِطُ عَلَيْهَا زَوْجُهَا، وَالْعَبْدُ الْآبِقُ حَتَّى يَرْجِعَ فَيَضَعَ يَدَهُ فِي يَدِ مَوَالِيهِ»


Next Page » « Previous Page