Author: Abdul Hakkim

Kubra-Bayhaqi-7323

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7323.


لَيْسَ فِي مَالِ الْمُسْتَفِيدِ زَكَاةٌ حَتَّى يَحُولَ عَلَيْهِ الْحَوْلُ “

أَخْبَرَنَاهُ أَبُو بَكْرِ بْنُ الْحَارِثِ , أنبأ عَلِيُّ بْنُ عُمَرَ الْحَافِظُ , ثنا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ثنا عَبْدُ اللهِ بْنُ شَبِيبٍ , حَدَّثَنِي يَحْيَى بْنُ مُحَمَّدٍ الْجَارِيُّ , ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ فَذَكَرَهُ. 


Kubra-Bayhaqi-7316

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7316. “உங்களிடம் ஏற்கனவே இருக்கும், சொத்தில் இருந்து நீங்கள் லாபம் அடைந்திருந்தால் அதில் ஒரு வருடம் கடக்கும் வரை உங்கள்மீது ஸகாத் கடமையாகாது” என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆஸிம் பின் ளம்ரா (ரஹ்)


إِنْ كَانَ عِنْدَكَ مَالٌ اسْتَفَدْتَهُ فَلَيْسَ عَلَيْكَ زَكَاةٌ حَتَّى يَحُولَ عَلَيْهِ الْحَوْلُ


Kubra-Bayhaqi-7275

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7275.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று காரியங்களை யார் செய்கிறாரோ அவர் ஈமானின் ருசியைச் சுவைத்து விட்டார்.

1 . வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நம்பி அல்லாஹ்வை மட்டும் வணங்குதல்.
2 . ஒவ்வொரு வருடமும் தனது பொருளின் ஜகாத்தை மன விருப்பத்துடன் வழங்குதல்.
3 . கிழப் பருவம் அடைந்தது, சொறி பிடித்தது, நோயுற்றது, அற்பமானது ஆகியவற்றைக் கொடுக்காமல் நடுத்தரமானதை வழங்குதல்.

அல்லாஹ் உங்களிடம் (அவைகளில்) நல்லவற்றையே கேட்கிறான். கெட்டவற்றை (தருமாறு) அவன் கட்டளையிடவில்லை.


(தர்மம் செய்வதால் அடியான்) தன் உள்ளத்தை தூய்மைப்படுத்திக் கொள்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், உள்ளத்தை தூய்மைப்படுத்திக்கொள்வது என்றால் என்ன? எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒரு அடியார், நாம் எங்கிருந்தாலும் அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் என்று உறுதியாக அறிவதாகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முஆவியா அல்ஃகாளிரீ?


” ثَلَاثٌ مَنْ فَعَلَهُنَّ فَقَدْ طَعِمَ طَعْمَ الْإِيمَانِ: مَنْ عَبَدَ اللهَ وَحْدَهُ فَإِنَّهُ لَا إِلَهَ إِلَّا اللهُ , وَأَعْطَى زَكَاةَ مَالِهِ طَيِّبَةً بِهَا نَفْسُهُ رَافِدَةً عَلَيْهِ فِي كُلِّ عَامٍ , وَلَمْ يُعْطِ الْهَرِمَةَ وَلَا الدَّرِنَةَ وَلَا الشَّرَطَ اللَّائِمَةَ وَلَا الْمَرِيضَةَ وَلَكِنْ مِنَ أَوْسَطِ أَمْوَالِكُمْ , فَإِنَّ اللهَ عَزَّ وَجَلَّ لَمْ يَسْأَلْكُمْ خَيْرَهُ , وَلَمْ يَأْمُرْكُمْ بِشَرِّهِ , وَزَكَّى عَبْدٌ نَفْسَهُ ” فَقَالَ رَجُلٌ: مَا تَزْكِيَةُ الْمَرْءِ نَفْسَهُ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: ” يَعْلَمُ أَنَّ اللهَ مَعَهُ حَيْثُ مَا كَانَ “. وَقَالَ غَيْرُهُ: ” وَلَا الشَّرَطَ اللَّئِيمَةَ “


Almujam-Assaghir-555

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

555.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று காரியங்களை யார் செய்கிறாரோ அவர் ஈமானின் ருசியைச் சுவைத்து விட்டார்.

1 . வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நம்பி அல்லாஹ்வை மட்டும் வணங்குதல்.
2 . ஒவ்வொரு வருடமும் தனது பொருளின் ஜகாத்தை மன விருப்பத்துடன் வழங்குதல்.
3 . கிழப் பருவம் அடைந்தது, சொறி பிடித்தது, நோயுற்றது, அற்பமானது ஆகியவற்றைக் கொடுக்காமல் நடுத்தரமானதை வழங்குதல்.

அல்லாஹ் உங்களிடம் (அவைகளில்) சிறந்தவற்றைக் கேட்கவில்லை. கெட்டவற்றை (தருமாறு) அவன் கட்டளையிடவில்லை.


(தர்மம் செய்வதால் அடியான்) தன் உள்ளத்தை தூய்மைப்படுத்திக் கொள்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், உள்ளத்தை தூய்மைப்படுத்திக்கொள்வது என்றால் என்ன? எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒரு அடியார், நாம் எங்கிருந்தாலும் அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் என்று உறுதியாக அறிவதாகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முஆவியா அல்ஃகாளிரீ?


ثَلَاثٌ مَنْ فَعَلَهُنَّ فَقَدْ ذَاقَ طَعْمَ الْإِيمَانِ: مَنْ عَبَدَ اللَّهَ عَزَّ وَجَلَّ وَحْدَهُ بِأَنَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ، وَأَعْطَى زَكَاةَ مَالِهِ طَيِّبَةً بِهَا نَفْسُهُ فِي كُلِّ عَامٍ، وَلَمْ يُعْطِ الْهَرِمَةَ وَلَا الدَّرِنَةَ وَلَا الْمَرِيضَةَ وَلَكِنْ مِنْ أَوْسَطِ أَمْوَالِكُمْ؛ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَمْ يَسْأَلْكُمْ خَيْرَهَا وَلَمْ يَأْمُرْكُمْ بَشَّرِهَا، وَزَكَّى نَفْسَهُ ” , فَقَالَ رَجُلٌ: وَمَا تَزْكِيَةُ النَّفْسِ؟ فَقَالَ: «أَنْ يَعْلَمَ أَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ مَعَهُ حَيْثُ كَانَ»


Abu-Dawood-1581

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1581. முஸ்லிம் பின் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாஃபிஉ பின் அல்கமா (ரஹ்) அவர்கள், என் தந்தையை அவர்களின் கூட்டத்தினருக்கு நீதி நிர்வாக அதிகாரியாக நியமித்தார்கள். மேலும்
அவர்களை அவர்களின் சமுதாய மக்களிடம் ஸகாத் வசூலிப்பதற்கும் உத்தரவிட்டார்கள். அப்போது என் தந்தை அவர்கள், என்னை அவர்களில் ஒரு பிரிவினரிடம் ஸகாத் வாங்கி வருவதற்காக அனுப்பினார்கள்.

ஆகவே நான் ஸிஃர் பின் தைஸம் (ரலி) எனும் முதியவர் ஒருவரிடம் (சென்று, அவரிடம்,) “என் தந்தை, உங்களிடம் உங்கள் ஆடுகளுக்குரிய ஸகாத்தைப் பெறுவதற்காக என்னை அனுப்பியுள்ளார்கள்” என்று கூறினேன். அதற்கு அவர்கள், “என் சகோதரர் மகனே! நீங்கள் எந்த வகையான ஆடுகளை (ஸகாத்தாக) பெறுவீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “ஆடுகளின் பால்மடியை உள்ளங்கையால் அளந்து பார்த்து தேர்வு செய்வோம்” என்று கூறினேன்.

அதற்கு அவர்கள், “என் சகோதரர் மகனே! உனக்கு ஒரு செய்தி கூறுகிறேன்” என்று (பின்வருமாறு) கூறலானார்கள்:

“நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் இந்த மலைப் பாதைகளில் ஒன்றில் எனக்குரிய ஆடுகளுடன் இருந்தேன். அப்போது ஒட்டகத்தில் இருவர் என்னிடம் வந்தனர். அவர்கள், “நாங்கள் இறைத்தூதரின் தூதர்கள் ஆவோம். உங்களிடமுள்ள ஆடுகளுக்கு

اسْتَعْمَلَ نَافِعُ بْنُ عَلْقَمَةَ أَبِي عَلَى عِرَافَةِ قَوْمِهِ، فَأَمَرَهُ أَنْ يُصَدِّقَهُمْ، قَالَ: فَبَعَثَنِي أَبِي فِي طَائِفَةٍ مِنْهُمْ، فَأَتَيْتُ شَيْخًا كَبِيرًا يُقَالُ لَهُ: سِعْرُ بْنُ دَيْسَمٍ، فَقُلْتُ: إِنَّ أَبِي بَعَثَنِي إِلَيْكَ – يَعْنِي – لِأُصَدِّقَكَ، قَالَ: ابْنُ أَخِي، وَأَيَّ نَحْوٍ تَأْخُذُونَ؟ قُلْتُ: نَخْتَارُ، حَتَّى إِنَّا نَتَبَيَّنَ ضُرُوعَ الْغَنَمِ، قَالَ: ” ابْنُ أَخِي، فَإِنِّي أُحَدِّثُكَ أَنِّي كُنْتُ فِي شِعْبٍ مِنْ هَذِهِ الشِّعَابِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَنَمٍ لِي، فَجَاءَنِي رَجُلَانِ عَلَى بَعِيرٍ، فَقَالَا لِي: إِنَّا رَسُولَا رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْكَ لِتُؤَدِّيَ صَدَقَةَ غَنَمِكَ، فَقُلْتُ: مَا عَلَيَّ فِيهَا؟ فَقَالَا: شَاةٌ، فَأَعْمَدُ إِلَى شَاةٍ قَدْ عَرَفْتُ مَكَانَهَا مُمْتَلِئَةٍ مَحْضًا وَشَحْمًا، فَأَخْرَجْتُهَا إِلَيْهِمَا، فَقَالَا: هَذِهِ شَاةُ الشَّافِعِ، وَقَدْ نَهَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَأْخُذَ شَافِعًا، قُلْتُ: فَأَيَّ شَيْءٍ تَأْخُذَانِ؟ قَالَا: عَنَاقًا جَذَعَةً، أَوْ ثَنِيَّةً، قَالَ: فَأَعْمَدُ إِلَى عَنَاقٍ مُعْتَاطٍ، وَالْمُعْتَاطُ الَّتِي لَمْ تَلِدْ وَلَدًا، وَقَدْ حَانَ وِلَادُهَا، فَأَخْرَجْتُهَا إِلَيْهِمَا، فَقَالَا: نَاوِلْنَاهَا، فَجَعَلَاهَا مَعَهُمَا عَلَى بَعِيرِهِمَا، ثُمَّ انْطَلَقَا “،


Abu-Dawood-1349

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1349. ஹதீஸ் எண்-1346 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. என்றாலும் இது முழுமையான செய்தியாக இல்லை.

 


بِهَذَا الْحَدِيثِ، وَلَيْسَ فِي تَمَامِ حَدِيثِهِمْ


Abu-Dawood-1348

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1348. ஹதீஸ் எண்-1346 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

ஸுராரா பின் அவ்ஃபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (இரவு) தொழுகையைப் பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு இஷா தொழுவித்து விட்டுத் தம் குடும்பத்தினரிடம் வீட்டிற்குச் சென்று, நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். பிறகு (உறங்குவதற்காக) தம் விரிப்பின்
பக்கம் ஒதுங்குவார்கள்.

(என்று இந்தச் செய்தி முன்புபோல் தொடர்கிறது. ஆனால் இதில், “ஓதுவது, குனிவது, சிரம்பணிவது ஆகியவற்றைச் சமமான அளவில் செய்வார்கள். எங்களை (உறக்கத்திலிருந்து) விழிக்கச் செய்யும் அளவு குரல் உயர்த்தி ஸலாம் கொடுப்பார்கள்” போன்ற வாசகங்கள் இந்த அறிவிப்பில் இடம் பெறவில்லை.)


أَنَّهَا سُئِلَتْ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: كَانَ يُصَلِّي بِالنَّاسِ الْعِشَاءَ، ثُمَّ يَرْجِعُ إِلَى أَهْلِهِ، فَيُصَلِّي أَرْبَعًا، ثُمَّ يَأْوِي إِلَى فِرَاشِهِ، ثُمَّ سَاقَ الْحَدِيثَ بِطُولِهِ، وَلَمْ يَذْكُرْ يُسَوِّي بَيْنَهُنَّ فِي الْقِرَاءَةِ وَالرُّكُوعِ وَالسُّجُودِ، وَلَمْ يَذْكُرْ فِي التَّسْلِيمِ حَتَّى يُوقِظَنَا.


Abu-Dawood-1347

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1347. ஹதீஸ் எண்-1346 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. என்றாலும் இதில்,

“நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுதுவிட்டு, (உறங்குவதற்காக) தம் விரிப்பின் பக்கம் ஒதுங்குவார்கள் (என்றும் மட்டும் உள்ளது. நான்கு ரக்அத்துகள் தொழுகை குறித்து குறிப்பிடவில்லை. மற்றவை முன்புள்ள நபிமொழி போன்றே இடம்பெறுகிறது.)

நபி (ஸல்) அவர்கள் எட்டு ரக்அத்கள் தொழுவார்கள். கிராஅத் (ஓதுவது), குனிவது, சிரம்பணிவது ஆகியவற்றைச் சமமான அளவில் செய்வார்கள். இந்த எட்டு ரக்அத்துகளில் எதிலும் உட்காராமல் எட்டாவது ரக்அத்தில் மட்டும் (அத்தஹிய்யாத்திற்கு) அமர்வார்கள். எட்டாவது ரக்அத்தில் அமர்ந்து அத்தஹிய்யாத் ஓதிய பின் ஸலாம் கொடுக்காமல் எழுந்து ஒன்பதாவது ரக்அத் தொழுது தொழுகையை ஒற்றைப் படையாகத் தொழுவார்கள். எங்களை (தூக்கத்திலிருந்து) எழுப்பும் அளவுக்குக் குரல் உயர்த்தி ஸலாம் கொடுப்பார்கள்.

(என்று இந்த அறிவிப்பில் உள்ளது. மற்றவை முன்புள்ள அறிவிப்பாளர்தொடரில் இருப்பதைப் போன்றே உள்ளது.)


يُصَلِّي الْعِشَاءَ، ثُمَّ يَأْوِي إِلَى فِرَاشِهِ، لَمْ يَذْكُرِ الْأَرْبَعَ رَكَعَاتٍ، وَسَاقَ الْحَدِيثَ، وَقَالَ فِيهِ: فَيُصَلِّي ثَمَانِيَ رَكَعَاتٍ يُسَوِّي بَيْنَهُنَّ فِي الْقِرَاءَةِ وَالرُّكُوعِ وَالسُّجُودِ، وَلَا يَجْلِسُ فِي شَيْءٍ مِنْهُنَّ، إِلَّا فِي الثَّامِنَةِ، فَإِنَّهُ كَانَ يَجْلِسُ، ثُمَّ يَقُومُ، وَلَا يُسَلِّمُ فِيهِ، فَيُصَلِّي رَكْعَةً يُوتِرُ بِهَا، ثُمَّ يُسَلِّمُ تَسْلِيمَةً يَرْفَعُ بِهَا صَوْتَهُ حَتَّى يُوقِظَنَا، ثُمَّ سَاقَ مَعْنَاهُ.


Abu-Dawood-1346

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1346. ஸுராரா பின் அவ்ஃபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நள்ளிரவுத் தொழுகை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை கூட்டாக தொழுதுவிட்டு, அதன் பின் தம் குடும்பத்தாரிடம் வந்து, நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் பின் படுக்கைக்கு வந்து, தூங்கி விடுவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்ய அவர்களின் தலைக்கு அருகில் பல் துலக்கும் குச்சி, தண்ணீர் உள்ளிட்டவை மூடி வைக்கப்பட்டிருக்கும். அவர்களை அல்லாஹ் இரவில் எழுப்ப நாடும்போது எழுவார்கள். (எழுந்த பின்) பல் துலக்கி அங்கத் தூய்மையை நிறைவாகச் செய்வார்கள்.

பின்பு தொழும் இடத்திற்கு வந்து, எட்டு ரக்அத்கள் தொழுவார்கள். ‘அல்ஃபாத்திஹா’ எனும் அத்தியாயத்தையும், குர்ஆனிலிருந்து சில அத்தியாயங்களையும், அல்லாஹ் நாடிய அளவு ஓதுவார்கள். இவற்றில் எந்த ரக்அத்திலும் (அத்தஹியாத்திற்கு) உட்கார மாட்டார்கள்.  எட்டாவது ரக்அத்தில்தான் அமர்வார்கள். ஆனால், ஸலாம் கொடுக்க மாட்டார்கள்.
ஒன்பதாவது ரக்அத்திற்கு (எழுந்து) குர்ஆன் வசனங்களை ஓதிய பின்பு அமர்ந்து அல்லாஹ் நாடும் அளவு பிரார்த்திப்பார்கள். அல்லாஹ்விடம் தம் தேவைகளைக் கேட்பார்கள். அல்லாஹ்வின் பக்கம் முழு கவனத்தையும்

أَنَّ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا سُئِلَتْ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَوْفِ اللَّيْلِ، فَقَالَتْ: ” كَانَ يُصَلِّي الْعِشَاءَ فِي جَمَاعَةٍ، ثُمَّ يَرْجِعُ إِلَى أَهْلِهِ، فَيَرْكَعُ أَرْبَعَ رَكَعَاتٍ، ثُمَّ يَأْوِي إِلَى فِرَاشِهِ، وَيَنَامُ وَطَهُورُهُ مُغَطًّى عِنْدَ رَأْسِهِ، وَسِوَاكُهُ مَوْضُوعٌ، حَتَّى يَبْعَثَهُ اللَّهُ سَاعَتَهُ الَّتِي يَبْعَثُهُ مِنَ اللَّيْلِ، فَيَتَسَوَّكُ، وَيُسْبِغُ الْوُضُوءَ، ثُمَّ يَقُومُ إِلَى مُصَلَّاهُ، فَيُصَلِّي ثَمَانِيَ رَكَعَاتٍ، يَقْرَأُ فِيهِنَّ: بِأُمِّ الْكِتَابِ، وَسُورَةٍ مِنَ الْقُرْآنِ، وَمَا شَاءَ اللَّهُ، وَلَا يَقْعُدُ فِي شَيْءٍ مِنْهَا حَتَّى يَقْعُدَ فِي الثَّامِنَةِ، وَلَا يُسَلِّمُ، وَيَقْرَأُ فِي التَّاسِعَةِ، ثُمَّ يَقْعُدُ، فَيَدْعُو بِمَا شَاءَ اللَّهُ أَنْ يَدْعُوَهُ، وَيَسْأَلَهُ، وَيَرْغَبَ إِلَيْهِ، وَيُسَلِّمُ تَسْلِيمَةً وَاحِدَةً شَدِيدَةً يَكَادُ يُوقِظُ أَهْلَ الْبَيْتِ مِنْ شِدَّةِ تَسْلِيمِهِ، ثُمَّ يَقْرَأُ وَهُوَ قَاعِدٌ بِأُمِّ الْكِتَابِ، وَيَرْكَعُ وَهُوَ قَاعِدٌ، ثُمَّ يَقْرَأُ الثَّانِيَةَ، فَيَرْكَعُ وَيَسْجُدُ وَهُوَ قَاعِدٌ، ثُمَّ يَدْعُو مَا شَاءَ اللَّهُ أَنْ يَدْعُوَ، ثُمَّ يُسَلِّمُ وَيَنْصَرِفُ، فَلَمْ تَزَلْ تِلْكَ صَلَاةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَّنَ، فَنَقَّصَ مِنَ التِّسْعِ ثِنْتَيْنِ، فَجَعَلَهَا إِلَى السِّتِّ وَالسَّبْعِ، وَرَكْعَتَيْهِ وَهُوَ قَاعِدٌ، حَتَّى قُبِضَ عَلَى ذَلِكَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ “،


Abu-Dawood-1582

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

1582. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று காரியங்களை யார் செய்கிறாரோ அவர் ஈமானின் ருசியைச் சுவைத்து விட்டார்.

1 . வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நம்பி அல்லாஹ்வை மட்டும் வணங்குதல்.
2 . ஒவ்வொரு வருடமும் தனது பொருளின் ஜகாத்தை மன விருப்பத்துடன் வழங்குதல்.
3 . கிழப் பருவம் அடைந்தது, சொறி பிடித்தது, நோயுற்றது, அற்பமானது ஆகியவற்றைக் கொடுக்காமல் நடுத்தரமானதை வழங்குதல்.

அல்லாஹ் உங்களிடம் (அவைகளில்) சிறந்தவற்றைக் கேட்கவில்லை. கெட்டவற்றை (தருமாறு) அவன் கட்டளையிடவில்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முஆவியா அல்ஃகாளிரீ ?


ثَلَاثٌ مَنْ فَعَلَهُنَّ فَقَدْ طَعِمَ طَعْمَ الْإِيمَانِ: مَنْ عَبَدَ اللَّهَ وَحْدَهُ وَأَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَعْطَى زَكَاةَ مَالِهِ طَيِّبَةً بِهَا نَفْسُهُ، رَافِدَةً عَلَيْهِ كُلَّ عَامٍ، وَلَا يُعْطِي الْهَرِمَةَ، وَلَا الدَّرِنَةَ، وَلَا الْمَرِيضَةَ، وَلَا الشَّرَطَ اللَّئِيمَةَ، وَلَكِنْ مِنْ وَسَطِ أَمْوَالِكُمْ، فَإِنَّ اللَّهَ لَمْ يَسْأَلْكُمْ خَيْرَهُ، وَلَمْ يَأْمُرْكُمْ بِشَرِّهِ


Next Page » « Previous Page