Author: Abdul Hakkim

Ibn-Majah-3989

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3989. உமர் (ரலி) அவர்கள், ஒரு நாள் மஸ்ஜிதுன் நபவீ பள்ளிவாசலுக்கு சென்றார்கள். அப்போது முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் மண்ணறைக்கருகில் அமர்ந்து அழுதுக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள், “உம்மை இவ்வாறு அழ வைத்தது எது? (என்னக் காரணம்) என்று கேட்டார்கள். அதற்கு முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள், “குறைந்த அளவான முகஸ்துதியும் இணைவைத்தலாகும். அல்லாஹ்வின் நேசரை பகைத்துக் கொள்பவர் அல்லாஹ்விடம் போர்ப் பிரகடனம் செய்தவர் ஆவார். அல்லாஹ், நல்லோர்களான; இறையச்சமுடையோர்களான; (மக்களை விட்டு) விலகி வாழ்கின்றோர்களை நேசிக்கிறான். ஒரு இடத்தில் அவர்கள் இல்லாவிட்டால் அவர்களை யாரும் தேடமாட்டார்கள். ஒரு இடத்தில் அவர்கள் இருந்தாலும் அவர்கள் யாராலும் அழைக்கப்பட மாட்டார்கள். யாராலும் அறியப்பட மாட்டார்கள். அவர்களின் உள்ளம் நேர்வழியின் விளக்காகும். இருள்நிறைந்த (பாவம் என்னும்) தூசிகளிலிருந்து அவர்கள் நீங்கியவர்களாக இருப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியேற்ற இந்த செய்தி தான் என்னை அழவைத்துவிட்டது என்று கூறினார்கள்.


أَنَّهُ خَرَجَ يَوْمًا إِلَى مَسْجِدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَجَدَ مُعَاذَ بْنَ جَبَلٍ قَاعِدًا عِنْدَ قَبْرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْكِي؟ فَقَالَ: مَا يُبْكِيكَ؟ قَالَ: يُبْكِينِي شَيْءٌ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّ يَسِيرَ الرِّيَاءِ شِرْكٌ، وَإِنَّ مَنْ عَادَى لِلَّهِ وَلِيًّا، فَقَدْ بَارَزَ اللَّهَ بِالْمُحَارَبَةِ، إِنَّ اللَّهَ يُحِبُّ الْأَبْرَارَ الْأَتْقِيَاءَ الْأَخْفِيَاءَ، الَّذِينَ إِذَا غَابُوا لَمْ يُفْتَقَدُوا، وَإِنْ حَضَرُوا لَمْ يُدْعَوْا، وَلَمْ يُعْرَفُوا قُلُوبُهُمْ مَصَابِيحُ الْهُدَى، يَخْرُجُونَ مِنْ كُلِّ غَبْرَاءَ مُظْلِمَةٍ»


Nasaayi-5067

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

தாடியில் முடிச்சுப் போடுவது.

5067. ருவைஃபிஉ பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ருவைபிஃஉவே! எனக்கு பின் உன் வாழ்நாள் நீடிக்கலாம்! அப்போது நீர் மக்களிடம், “யார் ‎தனது தாடிக்கு முடிச்சுப் போட்டு கொள்கின்றாரோ அல்லது யார் கயிற்றை கழுத்தில் (தாயத் போன்று) மாலையாக போட்டுக் கொள்கிறாரோ அல்லது யார் மிருகங்களின் விட்டை அல்லது எலும்பைக் கொண்டு (மலம் கழித்தப் பின்) சுத்தம் செய்கின்றாரோ நிச்சயமாக அவரிடமிருந்து முஹம்மத் (ஸல்) அவர்கள் விலகி ‎விட்டார்கள் என்று அறிவித்துவிடுக!‎ என்று கூறினார்கள்.


«يَا رُوَيْفِعُ، لَعَلَّ الْحَيَاةَ سَتَطُولُ بِكَ بَعْدِي، فَأَخْبِرِ النَّاسَ أَنَّهُ مَنْ عَقَدَ لِحْيَتَهُ، أَوْ تَقَلَّدَ وَتَرًا، أَوْ اسْتَنْجَى بِرَجِيعِ دَابَّةٍ أَوْ عَظْمٍ، فَإِنَّ مُحَمَّدًا بَرِيءٌ مِنْهُ»


Kubra-Bayhaqi-19611

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

19611. யார் தாயத் (போன்ற)தை தொங்க விடுகின்றாரோ அவர் அதன்பால் சாட்டப்படுவார். (அவருக்கு அல்லாஹ் பொருப்பாளனாக ஆக மாட்டான்) என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உஸைர் பின் ஜாபிர் (ரஹ்)


مَنْ تَعَلَّقَ شَيْئًا وُكِلَ إِلَيْهِ

قَالَ: وَحَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ , عَنْ جَرِيرِ بْنِ حَازِمٍ قَالَ: سَمِعْتُ الْحَسَنَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ تَعَلَّقَ شَيْئًا وُكِلَ إِلَيْهِ.

قَالَ: وَحَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ , عَنْ شُعْبَةَ , عَنِ الْحَجَّاجِ , عَنْ فُضَيْلٍ , أَنَّ سَعِيدَ بْنَ جُبَيْرٍ كَانَ يَكْتُبُ لِابْنِهِ الْمُعَاذَةَ. قَالَ: وَسَأَلْتُ عَطَاءً فَقَالَ: مَا كُنَّا نَكْرَهُهَا إِلَّا شَيْئًا جَاءَنَا مِنْ قِبَلِكُمْ


Musannaf-Ibn-Abi-Shaybah-23474

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

23474. யார் தாயத் (போன்ற)தை தொங்க விடுகின்றாரோ அவர் அதன்பால் சாட்டப்படுவார். (அவருக்கு அல்லாஹ் பொருப்பாளனாக ஆக மாட்டான்) என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: வாகிஃ பின் ஸஹ்பான்…


قَالَ عَبْدُ اللَّهِ: «مَنْ تَعَلَّقَ شَيْئًا وُكِلَ إِلَيْهِ»


Alilal-Ibn-Abi-Hatim-13

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

13.


فأمّا سعِيد بن أبِي عرُوبة ، فإنه يقُولُ : عن قتادة ، عن القاسم بن عوف ، عن زيدٍ ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم.

وشعبة ، يقُولُ : عن قتادة ، عن النضر بن أنسٍ ، عن زيدِ بنِ أرقم ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم.

وحديث عَبد العزِيزِ بن صُهَيب ، عن أنس : أشبه عِندِي.

قلتُ : فحديثُ إسماعيل بن مُسلِمٍ ، يزيد فِيهِ : الرِّجسُ النجسُ ؟

قال : وإسماعيل ضعيفٌ ، فأرى أن يُقال : الرجسُ النجسُ الخبيثُ المخبّثُ الشيطانُ الرجيم ، فإنّ هذا دعاءٌ.


Almujam-Alkabir-7849

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7849. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் கழிப்பிடத்திற்குள் நுழையும் போது, “அல்லாஹும்ம இன்னீ அஊதுபி(க்)க மினர் ரிஜ்ஸின் நஜிஸில் கபீஸில் முக்பிஸிஷ் ஷைத்தானிர் ரஜீம்” (பொருள்: அருவருக்கத்தக்கவனும், அசுத்தமானவனும் தீயவனும், தீமையைத் தூண்டுபவனுமான விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு அல்லாஹ்வே உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்) என்று கூறமுடியாதவராக ஆகிவிட வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)


لَا يَعْجِزَنَّ أَحَدَكُمْ إِذَا دَخَلَ مِرْفَقَهُ أَنْ يَقُولَ: اللهُمَّ، إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الرِّجْسِ النَّجِسِ الْخَبِيثِ الْمُخْبِثِ الشَّيْطَانِ الرَّجِيمِ


Ibn-Majah-299

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

299. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் கழிப்பிடத்திற்குள் நுழையும் போது, “அல்லாஹும்ம இன்னீ அஊதுபி(க்)க மினர் ரிஜ்ஸின் நஜிஸில் கபீஸில் முக்பிஸிஷ் ஷைத்தானிர் ரஜீம்” (பொருள்: அருவருக்கத்தக்கவனும், அசுத்தமானவனும் தீயவனும், தீமையைத் தூண்டுபவனுமான விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு அல்லாஹ்வே உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்) என்று கூறமுடியாதவராக ஆகிவிட வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

அபுல்ஹஸன் அல்கத்தான் அவர்கள் கூறினார்கள்:

இந்த செய்தியை அபூஹாதிம் அவர்கள், இப்னு அபூமர்யம் வழியாக எங்களுக்கு அறிவித்தார்கள். அதில் “மினர் ரிஜ்ஸின் நஜிஸ்’ எனும் வாசகத்தை கூறவில்லை. (மாறாக) “மினல் கபீஸில் முக்பிஸிஷ் ஷைத்தானிர் ரஜீம்” எனும் வாசகத்தை மட்டுமே கூறினார்.


لَا يَعْجِزْ أَحَدُكُمْ إِذَا دَخَلَ مِرْفَقَهُ أَنْ يَقُولَ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الرِّجْسِ النَّجِسِ، الْخَبِيثِ الْمُخْبِثِ، الشَّيْطَانِ الرَّجِيمِ

قَالَ أَبُو الْحَسَنِ: وَحَدَّثَنَا أَبُو حَاتِمٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، فَذَكَرَ نَحْوَهُ، وَلَمْ يَقُلْ فِي حَدِيثِهِ: ” مِنَ الرِّجْسِ النَّجِسِ، إِنَّمَا قَالَ: مِنَ الْخَبِيثِ الْمُخْبِثِ، الشَّيْطَانِ الرَّجِيمِ


Musnad-Ahmad-19331

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

19331. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த கழிப்பிடங்கள் (ஷைத்தான்கள்) வருகை தரும் இடமாக உள்ளது. ஆகவே உங்களில் ஒருவர் கழிப்பிடத்திற்குள் நுழைய முற்படும்போது, “அல்லாஹும்ம இன்னீ அஊதுபி(க்)க மினல் கபீஸி வல்கபாயிஸ்” (இறைவா! அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியவற்றைத் தூண்டும் ஆண், பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்)” என்று கூறிக்கொள்ளட்டும்.

அறிவிப்பவர்: ஸைத் பின் அர்கம் (ரலி)

ஸயீத் பின் அபூஅரூபாவிடமிருந்து அறிவிக்கும் அப்துல்வஹ்ஹாப் அவர்கள், “மினல் குபுஸி வல்கபாஇஸ்” என்று அறிவித்துள்ளார்.


إِنَّ هَذِهِ الْحُشُوشَ مُحْتَضَرَةٌ، فَإِذَا أَرَادَ أَحَدُكُمْ أَنْ يَدْخُلَ فَلْيَقُلْ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخَبِيثِ وَالْخَبَائِثِ “

قَالَ عَبْدُ الْوَهَّابِ: «الْخُبُثُ وَالْخَبَائِثُ»


Musnad-Ahmad-19332

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

19332. இந்த கழிப்பிடங்கள் (ஷைத்தான்கள்) வருகை தரும் இடமாக உள்ளது. ஆகவே உங்களில் ஒருவர் கழிப்பிடத்திற்குள் நுழைய முற்படும்போது, “இறைவா! (அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியற்றைத் தூண்டும்) ஆண் பெண் ஷைத்தானி(ன் தீங்கிலி)ருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறிக்கொள்ளட்டும்.

அறிவிப்பவர்: ஸைத் பின் அர்கம் (ரலி)


إِنَّ هَذِهِ الْحُشُوشَ مُحْتَضَرَةٌ، فَإِذَا دَخَلَ أَحَدُكُمُ الْخَلَاءَ فَلْيَقُلْ: أَعُوذُ بِاللَّهِ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ


Musnad-Ahmad-19286

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

19286. இந்த கழிப்பிடங்கள் (ஷைத்தான்கள்) வருகை தரும் இடமாக உள்ளது. ஆகவே உங்களில் ஒருவர் கழிப்பிடத்திற்குள் நுழைய முற்படும்போது, “இறைவா! (அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியற்றைத் தூண்டும்) ஆண் பெண் ஷைத்தானி(ன் தீங்கிலி)ருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறிக்கொள்ளட்டும்.

அறிவிப்பவர்: ஸைத் பின் அர்கம் (ரலி)


إِنَّ هَذِهِ الْحُشُوشَ مُحْتَضَرَةٌ، فَإِذَا دَخَلَ أَحَدُكُمْ فَلْيَقُلْ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ


Next Page » « Previous Page