Author: Abdul Hakkim

Bazzar-7583

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7583. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், அல்லாஹ்விடம் மூன்று தடவை சொர்க்கத்தை கேட்டு பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக! என்று சொர்க்கம் கூறுகிறது.

ஒருவர், (அல்லாஹ்விடம்) மூன்று தடவை நரகத்தை விட்டும் காப்பாற்றும்படி பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை நரகை விட்டும் காப்பாற்றுவாயாக! என்று நரகம் கூறுகிறது.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


من سأل الجنة ثلاثًا قالت الجنة: اللهم أدخله الجنة، وَمَنْ استعاذ من النار ثلاثًا قالت النار: اللهم أعذه من النار.


Musannaf-Ibn-Abi-Shaybah-29808

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 127

ஒரு அடியார், அல்லாஹ்விடம் நரகத்தை விட்டு பாதுகாப்புக் கேட்டால், அல்லாஹ்வே! இவரை என்னை விட்டும் காப்பாற்றுவாயாக! என்று நரகம் கூறுகிறது. சொர்க்கத்தைக் கேட்டாலும் இவ்வாறே! (அல்லாஹ்வே! இவரை என்னுள் நுழையச் செய்வாயாக என்று சொர்க்கம் கூறுகிறது)

29808. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு அடியார், அல்லாஹ்விடம் மூன்று தடவை சொர்க்கத்தை கேட்டு பிரார்த்தித்தால், “அல்லாஹ்வே! இவரை என்னை விட்டும் காப்பாற்றுவாயாக! என்று நரகம் கூறுகிறது.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


مَا مِنْ عَبْدٍ يَسْأَلُ اللَّهَ الْجَنَّةَ ثَلَاثَ مَرَّاتٍ إِلَّا قَالَتِ النَّارُ: اللَّهُمَّ أَجِرْهُ مِنِّي


Bazzar-9681

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

9681. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு அடியார், (அல்லாஹ்விடம்) நரகத்தை விட்டு காப்பாற்றும்படி ஏழுதடவை பிரார்த்தித்தால், “அல்லாஹ்வே! இவரை என்னை விட்டு காப்பாற்றுவாயாக!” என நரகம் கூறுகிறது.

ஒரு அடியார், (அல்லாஹ்விடம்) ஏழுதடவை சொர்க்கத்தைக் கேட்டு பிரார்த்தித்தால், “அல்லாஹ்வே! இவரை என்னிடம் தங்கச் செய்துவிடுவாயாக!” என்று (அல்லது இது போன்ற வார்த்தையை) சொர்க்கம் கூறுகிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


مَا استعاذ عبد من النار سبعا إلا قالت النار اللهم أعذه مني ولا سأل الجنة سبعا إلا قالت الجنة اللهم أسكينه إياي أو كلمة نحوها.


Musnad-Ishaq-Ibn-Rahawayh-213

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

213. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு அடியார், (அல்லாஹ்விடம்) நரகத்தை விட்டு காப்பாற்றும்படி ஏழுதடவை பிரார்த்தித்தால், “என் இறைவா! உன்னுடைய இன்ன அடியார்  என்னை விட்டு காப்பாற்றும்படி உன்னிடம் கேட்கிறார். எனவே என்னை விட்டு அவரைக் காப்பாற்றுவாயாக!” என நரகம் கூறுகிறது.

ஒரு அடியார், அல்லாஹ்விடம் ஏழுதடவை சொர்க்கத்தைக் கேட்டு பிரார்த்தித்தால், “என் இறைவா! உன்னுடைய இன்ன அடியார்  என்னை உன்னிடம் கேட்டுள்ளார். எனவே அவரை என்னுள் நுழையச் செய்வாயாக!” என்று சொர்க்கம் கூறுகிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


مَا اسْتَجَارَ عَبْدٌ مِنَ النَّارِ سَبْعَ مَرَّاتٍ إِلَّا قَالَتِ النَّارُ: يَا رَبِّ إِنَّ عَبْدَكَ فُلَانًا اسْتَجَارَكَ مِنِي فَأَجِرْهُ، وَلَا يَسْأَلُ اللَّهَ الْجَنَّةَ سَبْعَ مَرَّاتٍ إِلَّا قَالَتِ الْجَنَّةُ: يَا رَبِّ إِنَّ عَبْدَكَ فُلَانًا سَأَلَنِي فَأَدْخِلْهُ


Abi-Yala-6192

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6192. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு அடியார், (அல்லாஹ்விடம்) நரகத்தை விட்டு காப்பாற்றும்படி ஏழுதடவை பிரார்த்தித்தால், “என் இறைவா! உன்னுடைய இன்ன அடியார்  என்னை விட்டு காப்பாற்றும்படி உன்னிடம் கேட்கிறார். எனவே என்னை விட்டு அவரைக் காப்பாற்றுவாயாக!” என நரகம் கூறுகிறது.

ஒரு அடியார், அல்லாஹ்விடம் ஏழுதடவை சொர்க்கத்தைக் கேட்டு பிரார்த்தித்தால், “என் இறைவா! உன்னுடைய இன்ன அடியார்  என்னை உன்னிடம் கேட்டுள்ளார். எனவே அவரை என்னுள் நுழையச் செய்வாயாக!” என்று சொர்க்கம் கூறுகிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


مَا اسْتَجَارَ عَبْدٌ مِنَ النَّارِ سَبْعَ مَرَّاتٍ فِي يَوْمٍ، إِلَّا قَالَتِ النَّارُ: يَا رَبِّ إِنَّ عَبْدَكَ فُلَانًا قَدِ اسْتَجَارَكَ مِنِّي فَأَجِرْهُ، وَلَا يَسْأَلُ اللَّهَ عَبْدٌ الْجَنَّةَ فِي يَوْمٍ سَبْعَ مَرَّاتٍ، إِلَّا قَالَتِ الْجَنَّةُ: يَا رَبِّ إِنَّ عَبْدَكَ فُلَانًا سَأَلَنِي فَأَدْخِلْهُ


Tayalisi-2702

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

2702. ஒருவர், “நான் அல்லாஹ்விடம் சொர்க்கத்தைக் கேட்கிறேன்” என்று ஏழு தடவை பிரார்த்தித்தால், “அல்லாஹ்வே! இவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக!” என்று சொர்க்கம் கூறுகிறது.

ஒருவர் (அல்லாஹ்விடம்) நரகத்தை விட்டும் காப்பாற்றும்படி பிரார்த்தித்தால், “அல்லாஹ்வே! இவரை நரகை விட்டும் காப்பாற்றுவாயாக!” என நரகம் கூறுகிறது என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்.

அறிவிப்பவர்: அபூஅல்கமா (ரஹ்)

இந்த செய்தி இரண்டு அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது.

(அபூஅல்கமாவிடமிருந்து அறிவிக்கும் யஃலா பின் அதாஃ அவர்கள் இதை அபூஹுரைரா (ரலி) அவர்களின் சொல்லாகவும், அபூஅல்கமாவிடமிருந்து அறிவிக்கும் யூனுஸ் பின் கப்பாப் என்பவர் இதை நபி (ஸல்) அவர்களின் சொல்லாகவும் அறிவித்துள்ளனர்)


مَنْ قَالَ: أَسْأَلُ اللَّهَ الْجَنَّةَ سَبْعًا، قَالَتِ الْجَنَّةُ: اللَّهُمَّ أَدْخِلْهُ الْجَنَّةَ وَمَنِ اسْتَعَاذَ مِنَ النَّارِ، قَالَتِ النَّارَ: اللَّهُمَّ أَعِذْهُ مِنَ النَّارِ


Next Page » « Previous Page