Author: Abdul Hakkim

Hakim-2001

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

2001.


مَنْ قَالَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَفَانِي وَآوَانِي، الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعِمْنِي وَسَقَانِي، الْحَمْدُ لِلَّهِ الَّذِي مَنَّ عَلَيَّ فَأَفْضَلَ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِعِزَّتِكَ أَنْ تُنَجِّيَنِي مِنَ النَّارِ، فَقَدْ حَمِدَ اللَّهَ بِجَمِيعِ مَحَامِدِ الْخَلْقِ كُلِّهِمْ


Tirmidhi-3396

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3396. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது “அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்அமனா வ ஸகானா வ கஃபானா வ ஆவானா. ஃபகம் மிம்மன் லா காஃபிய லஹூ, வலா முஃவிய” என்று கூறுவார்கள்.

(பொருள்: அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே நமக்கு உணவளித்தான்; குடிநீர் வழங்கினான்; (நம் தேவைகளை நிறைவேற்றி) போதுமான அளவுக்குக் கொடுத்தான்; (தங்க இடமளித்து) தஞ்சமளித்தான். ஆனால்,போதுமாக்கிவைப்பதற்கோ தஞ்சமளிப்பதற்கோ ஆளில்லாமல் எத்தனையோ பேர் இருக்கின்றனர்.)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ قَالَ: «الحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَكَفَانَا وَآوَانَا، فَكَمْ مِمَّنْ لَا كَافِيَ لَهُ وَلَا مُؤْوِيَ»


Abu-Dawood-5053

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5053. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது “அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்அமனா வ ஸகானா வ கஃபானா வ ஆவானா. ஃபகம் மிம்மன் லா காஃபிய லஹூ, வலா முஃவிய” என்று கூறுவார்கள்.

(பொருள்: அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே நமக்கு உணவளித்தான்; குடிநீர் வழங்கினான்; (நம் தேவைகளை நிறைவேற்றி) போதுமான அளவுக்குக் கொடுத்தான்; (தங்க இடமளித்து) தஞ்சமளித்தான். ஆனால்,போதுமாக்கிவைப்பதற்கோ தஞ்சமளிப்பதற்கோ ஆளில்லாமல் எத்தனையோ பேர் இருக்கின்றனர்.)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ قَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا، وَسَقَانَا، وَكَفَانَا، وَآوَانَا، فَكَمْ مِمَّنْ لَا كَافِيَ لَهُ، وَلَا مُؤْوِيَ»


Daraqutni-3986

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3986.


«مَا أَحَلَّ اللَّهُ شَيْئًا أَبْغَضَ إِلَيْهِ مِنَ الطَّلَاقِ فَمَنْ طَلَّقَ وَاسْتَثْنَى فَلَهُ ثُنْيَاهُ»


Musannaf-Abdur-Razzaq-13270

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

13270. விவாகரத்தைப்போன்று அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பான வேறு எதையும் அல்லாஹ் அனுமதிக்கவில்லை.

மேலும் உயர்ந்தோன் அல்லாஹ், ஆண்கள் மீது அறப்போர் செய்வதையும், பெண்கள் மீது ரோஷம் கொள்வதையும் எழுதிவிட்டான். எனவே பொறுமைகொள்ளும் பெண்களுக்கு அறப்போர் செய்தவரின் கூலி போன்றது கிடைக்கும் என்று அபூஉபைதா பின் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரஹ்) கூறினார்.

அறிவிப்பவர்: லைஸ் பின் அபூஸுலைம்

அபூஉபைதா அவர்கள், இதை நபியின் கூற்றாக கூறினாரா? அல்லது இல்லையா? என்று எனக்குத் தெரியாது என்று லைஸ் பின் அபூஸுலைம் கூறினார்.


«مَا أَحَلَّ اللَّهُ حَلَالًا أَكَرْهَ إِلَيْهِ مِنَ الطَّلَاقِ، وَإِنَّ اللَّهَ تَعَالَى كَتَبَ الْجِهَادَ عَلَى الرِّجَالِ، وَالْغَيْرَةَ عَلَى النِّسَاءِ، فَمَنْ صَبَرَ مِنْهُنَّ كَانَ لَهَا مِثْلُ أَجْرِ الْمُجَاهِدِ»


Kubra-Bayhaqi-19923

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

19923.


يَا مُعَاذُ بْنَ جَبَلٍ إِذَا قَالَ الرَّجُلُ لِامْرَأَتِهِ: أَنْتِ طَالِقٌ , إِنْ شَاءَ اللهُ , لَمْ تُطَلَّقْ، وَإِذَا قَالَ لِعَبْدِهِ: أَنْتَ حُرٌّ إِنْ شَاءَ اللهُ , فَإِنَّهُ حُرٌّ


Kubra-Bayhaqi-15122

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

15122. ஹதீஸ் எண்-15121 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

ஹுமைத் பின் அர்ரபீஃ கூறியதாவது:

ஹுமைத் பின் மாலிக் அல்லக்மீ அறியப்பட்டவர் என்பதற்கு என்ன செய்தி இருக்கிறது? என்று என்னிடம் யஸீத் பின் ஹாரூன் கேட்டார். நான் அவர் என்னுடைய பாட்டனார் என்று கூறினேன். உடனே யஸீத் அவர்கள், என்னை மகிழ்ச்சியடைச் செய்தாய்! என்னை மகிழ்ச்சியடைச் செய்தாய்! இப்போது தான் இந்த செய்தி ஹதீஸாக மாறிவிட்டது என்று கூறினார்.

பைஹகீ இமாம் கூறுகிறார்:

இதில் ஒன்றும் பெரிதாக மகிழச்சிக் கிடையாது. ஹுமைத் பின் அர்ரபீஃ பின் ஹுமைத் பின் மாலிக் அல்கூஃபீ, அல்கஸ்ஸாஸ் மிகவும் பலவீனமானவர் ஆவார். யஹ்யா பின் மயீனும், மற்றவர்களும் இவரை பொய்யர் என்று கூறியுள்ளனர். மேலும் ஹுமைத் பின் மாலிக் அறியப்படாதவர் ஆவார்.

மேலும் மக்ஹூல், முஆத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பது முன்கதிஃ-அறிவிப்பாளர்தொடர் இடைமுறிவு ஏற்பட்ட செய்தியாகும்.

ஹுமைத் —> மக்ஹூல் —> காலித் பின் மஃதான் —> முஆத் (ரலி) என்றும், ஹுமைத் —> மக்ஹூல் —> மாலிக் பின் யுகாமிர் —> முஆத் (ரலி) என்றும் கூறப்படும் அறிவிப்பாளர்தொடர்கள் (மஹ்ஃபூல்) முன்னுரிமை பெற்ற செய்திகள் அல்ல. அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

இந்தக் கருத்தில் (வேறு) ஒரு பலவீனமான

قَالَ حُمَيْدٌ: قَالَ لِي يَزِيدُ بْنُ هَارُونَ: وَأِيُّ حَدِيثٍ لَوْ كَانَ حُمَيْدُ بْنُ مَالِكٍ اللَّخْمِيُّ مَعْرُوفًا؟ قُلْتُ: هُوَ جَدُّ أَبِي، قَالَ يَزِيدُ: سَرَرْتَنِي الْآنَ، صَارَ حَدِيثًا ,

قَالَ الشَّيْخُ: لَيْسَ فِيهِ كَبِيرُ سُرُورٍ فَحُمَيْدُ بْنُ رَبِيعِ بْنِ حُمَيْدِ بْنِ مَالِكٍ الْكُوفِيُّ الْخَزَّازُ ضَعِيفٌ جِدًّا، نَسَبَهُ يَحْيَى بْنُ مَعِينٍ وَغَيْرُهُ إِلَى الْكَذِبِ , وَحُمَيْدُ بْنُ مَالِكٍ مَجْهُولٌ ,

وَمَكْحُولٌ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ مُنْقَطِعٌ , وَقَدْ قِيلَ عَنْ حُمَيْدٍ عَنْ مَكْحُولٍ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللهُ عَنْهُ , وَقِيلَ عَنْهُ عَنْ مَكْحُولٍ عَنْ مَالِكِ بْنِ يَخَامِرَ عَنْ مُعَاذٍ وَلَيْسَ بِمَحْفُوظٍ وَاللهُ أَعْلَمُ , وَقَدْ رُوِيَ فِي مُقَابَلَتِهِ حَدِيثٌ ضَعِيفٌ لَا يَجُوزُ الِاحْتِجَاجُ بِمِثْلِهِ


Kubra-Bayhaqi-15121

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

15121. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் தனது மனைவியிடம், அல்லாஹ் நாடினால்! நீ தலாக் விடப்பட்டுவிட்டாய்” என்று கூறினால் (அதன் சட்டம் என்ன?) என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், அவருக்கு அதில் விதிவிலக்கு செய்ய உரிமை உண்டு கூறினார்கள்.

அப்போது ஒருவர், அல்லாஹ்வின் துதரே! ஒருவர், தனது அடிமையிடம்,”அல்லாஹ் நாடினால்! நீ சுதந்திரமானவன் (விடுதலைபெற்றுவிட்டாய்)” என்று கூறினால் (அதன் சட்டம் என்ன?) என்று கேட்டார். அதற்கவர்கள், “அவர் விடுதலைப் பெற்றுவிடுவார். ஏனெனில் அல்லாஹ், அடிமையை உரிமைவிடுவதை விரும்புகிறான். தலாக் விடப்படுவதை விரும்பமாட்டான்” என்று கூறினார்கள்.


سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ رَجُلٍ قَالَ لِامْرَأَتِهِ: أَنْتِ طَالِقٌ إِنْ شَاءَ اللهُ قَالَ: ” لَهُ اسْتِثْنَاؤُهُ ” قَالَ: فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ وَإِنْ قَالَ لِغُلَامِهِ أَنْتَ حُرٌّ إِنْ شَاءَ اللهُ؟ فَقَالَ: ” يَعْتِقُ لِأَنَّ اللهَ يَشَاءُ الْعِتْقَ وَلَا يَشَاءُ الطَّلَاقَ


Kubra-Bayhaqi-15120

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

15120. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஆதே! விவாகரத்தைப்போன்று அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பான வேறு (செயல்) எதையும் அல்லாஹ் இந்த பூமியில் படைக்கவில்லை. அடிமையை உரிமைவிடுவது போன்று அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமான வேறு (செயல்) எதையும் அல்லாஹ் இந்த பூமியில் படைக்கவில்லை.

ஒருவர், தனது அடிமையிடம்,”அல்லாஹ் நாடினால்! நீ சுதந்திரமானவன் (விடுதலைபெற்றுவிட்டாய்)” என்று கூறினால் அவர் சுதந்திரமானவரே! அவருக்கு அதில் விதிவிலக்கு செய்ய உரிமை இல்லை.

ஒருவர் தனது மனைவியிடம், அல்லாஹ் நாடினால்! நீ தலாக் விடப்பட்டுவிட்டாய்” என்று கூறினால் அவருக்கு அதில் விதிவிலக்கு செய்ய உரிமை உண்டு. அவர் தலாக் கூறியவராக ஆகமாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மக்ஹூல் (ரஹ்)


قَالَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” يَا مُعَاذُ مَا خَلَقَ اللهُ شَيْئًا عَلَى وَجْهِ الْأَرْضِ أَبْغَضَ إِلَيْهِ مِنَ الطَّلَاقِ، وَمَا خَلَقَ اللهُ شَيْئًا عَلَى وَجْهِ الْأَرْضِ أَحَبَّ إِلَيْهِ مِنَ الْعَتَاقِ , فَإِذَا قَالَ الرَّجُلُ لِمَمْلُوكِهِ أَنْتَ حُرٌّ إِنْ شَاءَ اللهُ فَهُوَ حُرٌّ وَلَا اسْتِثْنَاءَ لَهُ , وَإِذَا قَالَ لِامْرَأَتِهِ أَنْتِ طَالِقٌ إِنْ شَاءَ اللهُ فَلَهُ الِاسْتِثْنَاءُ وَلَا طَلَاقَ عَلَيْهِ


Musannaf-Ibn-Abi-Shaybah-18329

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

18329. ஒருவர் தனது மனைவியிடம், அல்லாஹ் நாடினால்! நீ தலாக் விடப்பட்டுவிட்டாய்” என்று கூறினால் அவள் தலாக் கூறப்பட்டவளாக ஆகமாட்டாள்.

ஒருவர், தனது அடிமையிடம்,”அல்லாஹ் நாடினால்! நீ சுதந்திரமானவன் (விடுதலைபெற்றுவிட்டாய்)” என்று கூறினால் அவர் சுதந்திரமானவரே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)


إِذَا قَالَ الرَّجُلُ لاِمْرَأَتِهِ : أَنْتِ طَالِقٌ إِنْ شَاءَ اللَّهُ ، فَلَيْسَتْ بِطَالِقٍ ، وَإِذا قَالَ لِعَبْدِهِ : أَنْتَ حُرٌّ إِنْ شَاءَ اللَّهُ ، فَهُوَ حُرٌّ


Next Page » « Previous Page