Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-2484

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

அறப்போர் (மறுமை நாள் வரை) தொடர்ந்து நடைபெறும்.

2484. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது சமுதாயத்தில் ஒரு பிரிவினர் சத்தியத்திற்காக போராடிக் கொண்டே இருப்பார்கள்; தங்கள் எதிரிகளை வெல்பவர்களாக இருப்பார்கள்; அவர்களில் கடைசியில் வருவோர் மஸீஹுத் தஜ்ஜாலுடன் சண்டையிடுவார்கள்.


«لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي يُقَاتِلُونَ عَلَى الْحَقِّ ظَاهِرِينَ عَلَى مَنْ نَاوَأَهُمْ، حَتَّى يُقَاتِلَ آخِرُهُمُ الْمَسِيحَ الدَّجَّالَ»


Abu-Dawood-4165

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4165. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் (பைஅத் எனும்) உறுதிமொழி வாங்கிக் கொள்ளுங்கள்” என்று ஹிந்த் பின்த் உத்பா (ரலி) கூறினார். அதற்கு, “நீ உமது இரு கைகளையும் (மருதாணியால்) நிறம் மாற்றாத வரை உம்மிடம் உறுதிமொழி வாங்கமாட்டேன்; அவ்விரண்டும் விலங்கின் கரம் போன்று உள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


أَنَّ هِنْدَ بِنْتَ عُتْبَةَ، قَالَتْ: يَا نَبِيَّ اللَّهِ، بَايِعْنِي، قَالَ: «لَا أُبَايِعُكِ حَتَّى تُغَيِّرِي كَفَّيْكِ، كَأَنَّهُمَا كَفَّا سَبُعٍ»


Abu-Dawood-4166

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4166. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண் திரைக்குப் பின்னால் இருந்துக்கொண்டு, தனது கையை நபி (ஸல்) அவர்களிடம் நீட்டினார். அவரின் கையில் கடிதம் இருந்தது. அவரின் கையைப் பிடித்த நபி (ஸல்) அவர்கள், இது ஆணின் கரமா? அல்லது பெண்ணின் கரமா? என்று எனக்குத் தெரியவில்லையே! என்று கூறினார்கள். அதற்கு அந்தப்பெண், “பெண்ணின் கரம்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் பெண்ணாக இருந்தால் உங்கள் நகங்களை (மருதாணி போன்றதைக் கொண்டு) மாற்றியிருக்க வேண்டுமே! என்று கூறினார்கள்.


أَوْمَتْ امْرَأَةٌ مِنْ وَرَاءِ سِتْرٍ بِيَدِهَا، كِتَابٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَبَضَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ، فَقَالَ: «مَا أَدْرِي أَيَدُ رَجُلٍ، أَمْ يَدُ امْرَأَةٍ؟» قَالَتْ: بَلِ امْرَأَةٌ، قَالَ: «لَوْ كُنْتِ امْرَأَةً لَغَيَّرْتِ أَظْفَارَكِ» يَعْنِي بِالْحِنَّاءِ


Abu-Dawood-1300

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1300.

கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பனூ அப்தில் அஷ்ஹல் குலத்தாரின் பள்ளிவாசலில் ‘மஃக்ரிப்’ தொழுகையைத் தொழுதார்கள். பிறகு மக்கள் கூடுதலான (நஃபில்) தொழுகையைத் தொழ எழுந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்தத் தொழுகையை (உங்கள்) வீடுகளில் தொழுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இஸ்ஹாக் பின் கஅப் (ரஹ்)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى مَسْجِدَ بَنِي عَبْدِ الْأَشْهَلِ، فَصَلَّى فِيهِ الْمَغْرِبَ، فَلَمَّا قَضَوْا صَلَاتَهُمْ رَآهُمْ يُسَبِّحُونَ بَعْدَهَا، فَقَالَ: «هَذِهِ صَلَاةُ الْبُيُوت»


Abu-Dawood-1448

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1448. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுடைய இல்லங்களிலும் உங்கள் தொழுகைகளில் சிலவற்றைத் தொழுங்கள். இல்லங்களை (தொழுகை நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«اجْعَلُوا فِي بُيُوتِكُمْ مِنْ صَلَاتِكُمْ، وَلَا تَتَّخِذُوهَا قُبُورًا»


Abu-Dawood-1043

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ஒருவர் (கடமையல்லாத)  உபரியானத் தொழுகைகளை தனது வீட்டில் தொழுதல்.

1043. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுடைய இல்லங்களிலும் உங்கள் தொழுகைகளில் சிலவற்றைத் தொழுங்கள். இல்லங்களை (தொழுகை நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«اجْعَلُوا فِي بُيُوتِكُمْ مِنْ صَلَاتِكُمْ، وَلَا تَتَّخِذُوهَا قُبُورًا»


Abu-Dawood-2327

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2327.


«لَا تُقَدِّمُوا الشَّهْرَ بِصِيَامِ يَوْمٍ، وَلَا يَوْمَيْنِ إِلَّا أَنْ يَكُونَ شَيْءٌ يَصُومُهُ أَحَدُكُمْ، وَلَا تَصُومُوا حَتَّى تَرَوْهُ، ثُمَّ صُومُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ حَالَ دُونَهُ غَمَامَةٌ، فَأَتِمُّوا الْعِدَّةَ ثَلَاثِينَ، ثُمَّ أَفْطِرُوا وَالشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ»


Abu-Dawood-2350

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

ஒருவர் தனது கையில் உணவுத் தட்டு வைத்திருக்கும் போது தொழுகை அறிவிப்பை செவியுற்றால் (என்ன செய்வது?)

2350. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (நோன்பு வைக்க ஸஹர் உணவு உண்ணும் போது) தமது கையில் உணவுத் தட்டு வைத்திருக்கும் நிலையில் தொழுகை அறிவிப்பை செவியுற்றால் அதிலிருந்து தமது தேவைக்கேற்ப உண்டு முடிக்கும்வரை பாத்திரத்தை கீழே வைக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

 


«إِذَا سَمِعَ أَحَدُكُمُ النِّدَاءَ وَالْإِنَاءُ عَلَى يَدِهِ، فَلَا يَضَعْهُ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ مِنْهُ»


Abu-Dawood-938

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

938. நாங்கள் அபூஸுஹைர் அன்னுமைரீ (ரலி) அவர்கள் அருகே அமர்ந்திருந்தோம். அவர் நபித்தோழர்களில் ஒருவராவார். ஆதலால் மிக அழகான ஹதீஸ்களை அவர் அறிவிப்பார். எங்களில் ஒருவர் ஒரு பிரார்த்தனையை செய்தால் அதை ஆமீன் கூறி முடித்துக் கொள்க!. ஏனெனில் அது ஒரு ஏட்டின் மீதுள்ள முத்திரையை போன்றதாகும் என்று கூறுவார். மேலும் அபூஸுஹைர் (ரலி) அவர்கள், உங்களுக்கு இது தொடர்பாக ஹதீஸ் அறிவிக்கட்டுமா? என்று கேட்டு பின்வரும் ஹதீஸையும் அறிவிப்பார்.

அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஓர் இரவில் புறப்பட்டு ஒருவரிடம் சென்றோம். அவர் துஆ செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். எனவே நபி (ஸல்) அவர்கள் அவரின் பிரார்த்தனையை செவியுற்றவாறு நின்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவர் முத்திரையிட்டு விட்டால் (சுவனத்தை) உறுதி செய்தவராவார் என்று சொன்னார்கள். அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் எதைக் கொண்டு அவர் முத்திரையிடல் வேண்டும்? என்று கேட்டார். ஆமீன் என்பதைக் கொண்டு முத்திரையிட வேண்டும். ஏனெனில் ஆமீன் என்பதைக் கொண்டு அவர் முத்திரையிட்டு விட்டால் அவர் (தனக்கு) சுவனத்தை உறுதியாக்கிவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களிடம் (எதைக் கொண்டு முத்திரையிடுவது எனக்) கேட்டவர், (துஆவில் ஈடுபட்டுக் கொண்டிருந்த) மனிதரிடம்

كُنَّا نَجْلِسُ إِلَى أَبِي زُهَيْرٍ النُّمَيْرِيِّ، وَكَانَ مِنَ الصَّحَابَةِ، فَيَتَحَدَّثُ أَحْسَنَ الْحَدِيثِ، فَإِذَا دَعَا الرَّجُلُ مِنَّا بِدُعَاءٍ قَالَ: اخْتِمْهُ بِآمِينَ، فَإِنَّ آمِينَ مِثْلُ الطَّابَعِ عَلَى الصَّحِيفَةِ، قَالَ أَبُو زُهَيْرٍ: أُخْبِرُكُمْ عَنْ ذَلِكَ؟ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ، فَأَتَيْنَا عَلَى رَجُلٍ قَدْ أَلَحَّ فِي الْمَسْأَلَةِ، فَوَقَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَسْتَمِعُ مِنْهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوْجَبَ إِنْ خَتَمَ»، فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: بِأَيِّ شَيْءٍ يَخْتِمُ؟ قَالَ: «بِآمِينَ، فَإِنَّهُ إِنْ خَتَمَ بِآمِينَ فَقَدْ أَوْجَبَ»، فَانْصَرَفَ الرَّجُلُ الَّذِي سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَى الرَّجُلَ، فَقَالَ: اخْتِمْ يَا فُلَانُ بِآمِينَ، وَأَبْشِرْ،

وَهَذَا لَفْظٌ مَحْمُودٌ،


Abu-Dawood-1988

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1988.


كَانَ أَبُو مَعْقَلٍ حَاجًّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا قَدِمَ، قَالَتْ أُمُّ مَعْقَلٍ: قَدْ عَلِمْتَ أَنَّ عَلَيَّ حَجَّةً فَانْطَلَقَا يَمْشِيَانِ حَتَّى دَخَلَا عَلَيْهِ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ عَلَيَّ حَجَّةً وَإِنَّ لِأَبِي مَعْقَلٍ بَكْرًا، قَالَ أَبُو مَعْقَلٍ: صَدَقَتْ، جَعَلْتُهُ فِي سَبِيلِ اللَّهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْطِهَا فَلْتَحُجَّ عَلَيْهِ، فَإِنَّهُ فِي سَبِيلِ اللَّهِ» فَأَعْطَاهَا الْبَكْرَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي امْرَأَةٌ قَدْ كَبِرْتُ وَسَقِمْتُ فَهَلْ مِنْ عَمَلٍ يُجْزِئُ عَنِّي مِنْ حَجَّتِي، قَالَ: «عُمْرَةٌ فِي رَمَضَانَ تُجْزِئُ حَجَّةً»


Next Page » « Previous Page