Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-1990

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1990.


أَرَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَجَّ فَقَالَتْ: امْرَأَةٌ لِزَوْجِهَا أَحِجَّنِي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى جَمَلِكَ، فَقَالَ: مَا عِنْدِي مَا أُحِجُّكِ عَلَيْهِ، قَالَتْ: أَحِجَّنِي عَلَى جَمَلِكَ فُلَانٍ، قَالَ: ذَاكَ حَبِيسٌ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ، فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّ امْرَأَتِي تَقْرَأُ عَلَيْكَ السَّلَامَ وَرَحْمَةَ اللَّهِ، وَإِنَّهَا سَأَلَتْنِي الْحَجَّ مَعَكَ، قَالَتْ: أَحِجَّنِي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: مَا عِنْدِي مَا أُحِجُّكِ عَلَيْهِ، فَقَالَتْ أَحِجَّنِي عَلَى جَمَلِكَ فُلَانٍ، فَقُلْتُ: ذَاكَ حَبِيسٌ فِي سَبِيلِ اللَّهِ، فَقَالَ: «أَمَا إِنَّكَ لَوْ أَحْجَجْتَهَا عَلَيْهِ كَانَ فِي سَبِيلِ اللَّهِ؟» قَالَ: وَإِنَّهَا أَمَرَتْنِي أَنْ أَسْأَلَكَ مَا يَعْدِلُ حَجَّةً مَعَكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَقْرِئْهَا السَّلَامَ وَرَحْمَةَ اللَّهِ وَبَرَكَاتِهِ، وَأَخْبِرْهَا أَنَّهَا تَعْدِلُ حَجَّةً مَعِي» – يَعْنِي عُمْرَةً فِي رَمَضَانَ –


Abu-Dawood-2858

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

வேட்டைப் பிராணியிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட ஒரு பகுதி.

2858. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உயிருடன் உள்ள பிராணியிடமிருந்து வெட்டி எடுக்கப்பட்ட பகுதி தாமாகச் செத்தவை போன்றதாகும்.

அறிவிப்பவர்: ஹாரிஸ் பின் அவ்ஃப் (அபூவாகித்-ரலி)


«مَا قُطِعَ مِنَ الْبَهِيمَةِ وَهِيَ حَيَّةٌ فَهِيَ مَيْتَةٌ»


Abu-Dawood-2106

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2106. அபுல்அஜ்ஃபாஉ அஸ்ஸுலமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு தடவை கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் பின்வருமாறு எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்:

அறிந்துகொள்ளுங்கள்! பெண்களுக்கு வழங்கும் திருமணக்கொடை (மஹர்)களில் (அளவு கடந்து கொடுப்பதன் மூலம்) வரம்பு மீறாதீர்கள். இவ்வுலகில் அது மதிப்புமிக்க செயலாகவோ அல்லாஹ்விடம் இறையச்சத்திற்குரிய செயலாகவோ இருக்குமானால் அவ்வாறு வழங்குவதற்கு உங்களையெல்லாம்விட மிகத் தகுதி வாய்ந்தவர்கள், நபி (ஸல்) அவர்கள்தாம்.

(ஆனால்) நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியருள் யாருக்கும் பன்னிரண்டு ஊக்கியாக்களைவிடக் கூடுதலாக திருமணக்கொடை வழங்கவில்லை. அவர்களுடைய புதல்வியருள் யாருக்கும் பன்னிரண்டு ஊக்கியாக்களைவிடக் கூடுதலாக மணக்கொடை பெற்றதுமில்லை.


خَطَبَنَا عُمَرُ رَحِمَهُ اللَّهُ، فَقَالَ: «أَلَا لَا تُغَالُوا بِصُدُقِ النِّسَاءِ، فَإِنَّهَا لَوْ كَانَتْ مَكْرُمَةً فِي الدُّنْيَا، أَوْ تَقْوَى عِنْدَ اللَّهِ لَكَانَ أَوْلَاكُمْ بِهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا أَصْدَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ امْرَأَةً مِنْ نِسَائِهِ، وَلَا أُصْدِقَتْ امْرَأَةٌ مِنْ بَنَاتِهِ أَكْثَرَ مِنْ ثِنْتَيْ عَشْرَةَ أُوقِيَّةً»


Abu-Dawood-5094

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

ஒருவர் வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது கூறவேண்டியவை.

5094. உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, வானத்தை நோக்கி பார்த்துவிட்டு, “அல்லாஹும்ம அவூது பி(க்)க அன் அழில்ல அவ் உழல்ல அவ் அஸில்ல அவ் உஸல்ல அவ் அள்ளிம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய” என்று கூறாமல் செல்லமாட்டார்கள்.

(பொருள்: அல்லாஹ்வே! நான் பிறரை வழிக்கெடுக்காமலும், பிறரால் வழிக்கெடாமலும்; நான் சறுகி விடாமலும், வழி தவறிவிடாமலும்; அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும்; மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்).


مَا خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ بَيْتِي قَطُّ إِلَّا رَفَعَ طَرْفَهُ إِلَى السَّمَاءِ فَقَالَ: «اللَّهُمَّ أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ، أَوْ أُضَلَّ، أَوْ أَزِلَّ، أَوْ أُزَلَّ، أَوْ أَظْلِمَ، أَوْ أُظْلَمَ، أَوْ أَجْهَلَ، أَوْ يُجْهَلَ عَلَيَّ»


Abu-Dawood-1048

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்: 208

வெள்ளிக்கிழமையன்று பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் எது?

1048. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளிக்கிழமையன்று பன்னிரண்டு நாழிகைகள் உள்ளன. (அவற்றில் ஒரு நாழிகையில்) எந்த முஸ்லிம் அல்லாஹ்விடம் எதைக் கேட்கிறாரோ அதை அவருக்கு மாண்பும் வல்லமையுமிக்க அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை. அஸருக்குப்பின் கடைசி நேரத்தில் அதைத் தேடிக்கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«يَوْمُ الْجُمُعَةِ ثِنْتَا عَشْرَةَ – يُرِيدُ – سَاعَةً، لَا يُوجَدُ مُسْلِمٌ يَسْأَلُ اللَّهَ عَزَّ وَجَلَّ شَيْئًا، إِلَّا أَتَاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ، فَالْتَمِسُوهَا آخِرَ سَاعَةٍ بَعْدَ الْعَصْرِ»


Abu-Dawood-2775

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2775.


خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَكَّةَ نُرِيدُ الْمَدِينَةَ، فَلَمَّا كُنَّا قَرِيبًا مِنْ عَزْوَرَا نَزَلَ، ثُمَّ رَفَعَ يَدَيْهِ فَدَعَا اللَّهَ سَاعَةً، ثُمَّ خَرَّ سَاجِدًا فَمَكَثَ طَوِيلًا، ثُمَّ قَامَ فَرَفَعَ يَدَيْهِ فَدَعَا اللَّهَ سَاعَةً، ثُمَّ خَرَّ سَاجِدًا فَمَكَثَ طَوِيلًا، ثُمَّ قَامَ فَرَفَعَ يَدَيْهِ سَاعَةً، ثُمَّ خَرَّ سَاجِدًا – ذَكَرَهُ أَحْمَدُ ثَلَاثًا – قَالَ: «إِنِّي سَأَلْتُ رَبِّي وَشَفَعْتُ لِأُمَّتِي، فَأَعْطَانِي ثُلُثَ أُمَّتِي فَخَرَرْتُ سَاجِدًا شُكْرًا لِرَبِّي، ثُمَّ رَفَعْتُ رَأْسِي فَسَأَلْتُ رَبِّي لِأُمَّتِي فَأَعْطَانِي ثُلُثَ أُمَّتِي فَخَرَرْتُ سَاجِدًا لِرَبِّي شُكْرًا، ثُمَّ رَفَعْتُ رَأْسِي، فَسَأَلْتُ رَبِّي لِأُمَّتِي فَأَعْطَانِي الثُّلُثَ الْآخِرَ فَخَرَرْتُ سَاجِدًا لِرَبِّي»


Abu-Dawood-2774

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

(அல்லாஹ்விற்கு) நன்றி தெரிவிக்க ஸஜ்தா செய்வது.

2774. நபி (ஸல்) அவர்களுக்கு ஏதேனும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி வந்தாலோ அல்லது அது குறித்து நற்செய்தி கூறப்பெற்றாலோ உடனே அல்லாஹ்விற்கு நன்றி தெரிவிக்க ஸஜ்தாவில் விழுவார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)

 


أَنَّهُ كَانَ «إِذَا جَاءَهُ أَمْرُ سُرُورٍ أَوْ بُشِّرَ بِهِ خَرَّ سَاجِدًا شَاكِرًا لِلَّهِ»


Abu-Dawood-1197

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

சோதனைகளின் போது ஸஜ்தா செய்வது.

1197. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் (ஸஃபிய்யா-ரலி, அல்லது ஹஃப்ஸா-ரலி) மரணித்து விட்டார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சொல்லப்பட்டது. உடனே அவர்கள், ஸஜ்தாவில் விழுந்தார்கள். அப்போது அவர்களிடம் (மரண செய்தி கேட்டு) ஸஜ்தா செய்கிறீர்களே? என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர்கள், “ஏதேனும் ஒரு சோதனை -(துன்பத்தை) நீங்கள் கண்டால் (அல்லது கேட்டால்), ஸஜ்தா செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மனைவியர் இறப்பதைவிட பெரும் துன்பம் அளிக்கும் சோதனை வேறு எதுவாக இருக்க முடியும்? என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.


قِيلَ لِابْنِ عَبَّاسٍ: مَاتَتْ فُلَانَةُ – بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – فَخَرَّ سَاجِدًا، فَقِيلَ لَهُ: أَتَسْجُدُ هَذِهِ السَّاعَةَ؟ فَقَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا رَأَيْتُمْ آيَةً فَاسْجُدُوا»، وَأَيُّ آيَةٍ أَعْظَمُ مِنْ ذَهَابِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟


Abu-Dawood-1114

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்: 236

(கூட்டுத் தொழுகையில் இருக்கும் போது) உளூ முறிந்தவர், (தொழுகையிலிருந்து வெளியேற) இமாமிடம் எவ்வாறு அனுமதி பெறவேண்டும்?

1114. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இமாமுடன் தொழும் போது) உங்களில் ஒருவருக்கு உளூ முறிந்து விட்டால் அவர், மூக்கைப் பிடித்துக் கொண்டு தொழுகையிலிருந்து வெளியேறி விடட்டும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இந்த செய்தியை ஹிஷாம் பின் உர்வா அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹம்மாத் பின் ஸலமா அவர்களும், அபூஉஸாமா அவர்களும் உர்வாவிற்கும், நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் ஆயிஷா (ரலி) அவர்களைக் கூறவில்லை. (முர்ஸலாக அறிவித்துள்ளனர்)


«إِذَا أَحْدَثَ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلْيَأْخُذْ بِأَنْفِهِ، ثُمَّ لِيَنْصَرِفْ»

قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ حَمَّادُ بْنُ سَلَمَةَ، وَأَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَمْ يَذْكُرَا عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا


Next Page » « Previous Page