Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-1197

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

சோதனைகளின் போது ஸஜ்தா செய்வது.

1197. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் (ஸஃபிய்யா-ரலி, அல்லது ஹஃப்ஸா-ரலி) மரணித்து விட்டார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சொல்லப்பட்டது. உடனே அவர்கள், ஸஜ்தாவில் விழுந்தார்கள். அப்போது அவர்களிடம் (மரண செய்தி கேட்டு) ஸஜ்தா செய்கிறீர்களே? என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர்கள், “ஏதேனும் ஒரு சோதனை -(துன்பத்தை) நீங்கள் கண்டால் (அல்லது கேட்டால்), ஸஜ்தா செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மனைவியர் இறப்பதைவிட பெரும் துன்பம் அளிக்கும் சோதனை வேறு எதுவாக இருக்க முடியும்? என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.


قِيلَ لِابْنِ عَبَّاسٍ: مَاتَتْ فُلَانَةُ – بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – فَخَرَّ سَاجِدًا، فَقِيلَ لَهُ: أَتَسْجُدُ هَذِهِ السَّاعَةَ؟ فَقَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا رَأَيْتُمْ آيَةً فَاسْجُدُوا»، وَأَيُّ آيَةٍ أَعْظَمُ مِنْ ذَهَابِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟


Abu-Dawood-1114

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்: 236

(கூட்டுத் தொழுகையில் இருக்கும் போது) உளூ முறிந்தவர், (தொழுகையிலிருந்து வெளியேற) இமாமிடம் எவ்வாறு அனுமதி பெறவேண்டும்?

1114. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இமாமுடன் தொழும் போது) உங்களில் ஒருவருக்கு உளூ முறிந்து விட்டால் அவர், மூக்கைப் பிடித்துக் கொண்டு தொழுகையிலிருந்து வெளியேறி விடட்டும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இந்த செய்தியை ஹிஷாம் பின் உர்வா அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹம்மாத் பின் ஸலமா அவர்களும், அபூஉஸாமா அவர்களும் உர்வாவிற்கும், நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் ஆயிஷா (ரலி) அவர்களைக் கூறவில்லை. (முர்ஸலாக அறிவித்துள்ளனர்)


«إِذَا أَحْدَثَ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلْيَأْخُذْ بِأَنْفِهِ، ثُمَّ لِيَنْصَرِفْ»

قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ حَمَّادُ بْنُ سَلَمَةَ، وَأَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَمْ يَذْكُرَا عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا


Abu-Dawood-4943

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4943. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், பெரியவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை அறியாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا، وَيَعْرِفْ حَقَّ كَبِيرِنَا فَلَيْسَ مِنَّا»


Abu-Dawood-5137

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

பெற்றோருக்கு உபகாரம் செய்தல்.

5137. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன்னுடைய தந்தை அடிமையாக இருப்பதைக் கண்டு அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்கின்ற (காரியத்தைத்) தவிர (வேறு எந்தக் காரியத்தைச்) செய்தாலும் மகன் தன் தந்தைக்கு (அவர் செய்த உபகாரத்திற்கு) ஈடு செய்தவராக ஆகமாட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا يَجْزِي وَلَدٌ وَالِدَهُ، إِلَّا أَنْ يَجِدَهُ مَمْلُوكًا فَيَشْتَرِيَهُ فَيُعْتِقَهُ»


Abu-Dawood-3582

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

3582.


بَعَثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْيَمَنِ قَاضِيًا، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ تُرْسِلُنِي وَأَنَا حَدِيثُ السِّنِّ، وَلَا عِلْمَ لِي بِالْقَضَاءِ، فَقَالَ: «إِنَّ اللَّهَ سَيَهْدِي قَلْبَكَ، وَيُثَبِّتُ لِسَانَكَ، فَإِذَا جَلَسَ بَيْنَ يَدَيْكَ الْخَصْمَانِ، فَلَا تَقْضِيَنَّ حَتَّى تَسْمَعَ مِنَ الْآخَرِ، كَمَا سَمِعْتَ مِنَ الْأَوَّلِ، فَإِنَّهُ أَحْرَى أَنْ يَتَبَيَّنَ لَكَ الْقَضَاءُ»، قَالَ: «فَمَا زِلْتُ قَاضِيًا، أَوْ مَا شَكَكْتُ فِي قَضَاءٍ بَعْدُ»


Abu-Dawood-788

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

788.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் இறங்கிய பின்பு தான் ஒரு அத்தியாயம் முடிந்து விட்டது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَا يَعْرِفُ فَصْلَ السُّورَةِ حَتَّى تَنَزَّلَ عَلَيْهِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ»،

وَهَذَا لَفْظُ ابْنِ السَّرْحِ


Abu-Dawood-4001

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4001.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஓதுதல் பற்றி உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று ஒவ்வொரு வசனமாக ஓதுவார்கள் என்று அவர்கள் பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)


أَنَّهَا ذَكَرَتْ أَوْ كَلِمَةً غَيْرَهَا ” قِرَاءَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: (بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ. الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ. الرَّحْمَنِ الرَّحِيمِ. مَلِكِ يَوْمِ الدِّينِ) يُقَطِّعُ قِرَاءَتَهُ آيَةً آيَةً ” قَالَ أَبُو دَاوُدَ: «سَمِعْتُ أَحْمَدَ يَقُولُ الْقِرَاءَةُ الْقَدِيمَةُ {مَالِكِ يَوْمِ الدِّينِ}»


Abu-Dawood-1400

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1400.

திருக்குர்ஆனின் 30 வசனங்கள் கொண்ட ஒரு அத்தியாயம் உள்ளது. அதை ஓதுபவர் மன்னிக்கப்படும் வரை அந்த அத்தியாயம் பரிந்துரை செய்து கொண்டே இருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, தபாரகல்லதீ பியதிஹில் முல்கு என்ற அத்தியாயமே அது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


سُورَةٌ مِنَ الْقُرْآنِ ثَلَاثُونَ آيَةً، تَشْفَعُ لِصَاحِبِهَا حَتَّى يُغْفَرَ لَهُ: تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ


Abu-Dawood-4212

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

(முடிக்கு) கருப்புச் சாயமிடுவது குறித்து வந்துள்ளவை.

4212. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறுதிக் காலத்தில் ஒரு கூட்டம் தோன்றுவார்கள். அவர்கள், சில புறாக்களின் நெஞ்சுப் பகுதியில் உள்ளதைப் போன்ற கருப்பு நிறத்தால் சாயமிட்டுக் கொள்வார்கள். அவர்கள் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி­)


«يَكُونُ قَوْمٌ يَخْضِبُونَ فِي آخِرِ الزَّمَانِ بِالسَّوَادِ، كَحَوَاصِلِ الْحَمَامِ، لَا يَرِيحُونَ رَائِحَةَ الْجَنَّةِ»


Abu-Dawood-994

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

994.


أَنَّهُ رَأَى رَجُلًا يَتَّكِئُ عَلَى يَدِهِ الْيُسْرَى وَهُوَ قَاعِدٌ فِي الصَّلَاةِ – قَالَ هَارُونُ بْنُ زَيْدٍ، سَاقِطًا عَلَى شِقِّهِ الْأَيْسَرِ، ثُمَّ اتَّفَقَا -، فَقَالَ لَهُ: «لَا تَجْلِسْ هَكَذَا، فَإِنَّ هَكَذَا يَجْلِسُ الَّذِينَ يُعَذَّبُونَ»


Next Page » « Previous Page