Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-1214

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1214. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹரையும் அஸ்ரையும் (சேர்த்து ஒரே நேரத்தில்) எட்டு ரக்அத்களும்,மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்து ஒரே நேரத்தில்) ஏழு ரக்அத்களும் எங்களுக்கு தொழுவித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸைத் (ரஹ்)

 

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

ஹம்மாத் பின் ஸைத் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் ஸுலைமான், முஸத்தத் போன்றோர் “பினா-எங்களுக்கு” என்ற வார்த்தையை கூறவில்லை.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸாலிஹ், “மழை இல்லாத நேரத்தில்” என்ற வார்த்தையை கூடுதலாக அறிவிக்கிறார். (இது பலவீனமானது. (பார்க்க: அஹ்மத்-3235 )

 


«صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ ثَمَانِيًا وَسَبْعًا، الظُّهْرَ وَالْعَصْرَ، وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ»،


Abu-Dawood-1211

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1211. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹரையும் அஸரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்; மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது அச்சமோ மழையோ இருக்கவில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அப்போது அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோக்கத்தில் இவ்வாறு செய்தார்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “தம் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கருதினார்கள்” என விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)


«جَمَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ، وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ بِالْمَدِينَةِ مِنْ غَيْرِ خَوْفٍ، وَلَا مَطَرٍ»، فَقِيلَ لِابْنِ عَبَّاسٍ: مَا أَرَادَ إِلَى ذَلِكَ؟ قَالَ: «أَرَادَ أَنْ لَا يُحْرِجَ أُمَّتَهُ»


Abu-Dawood-1210

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1210. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹரையும் அஸரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்; மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்; அப்போது (போர் அபாயம் மிகுந்த) அச்ச நிலையிலோ பயணத்திலோ அவர்கள் இருக்கவில்லை.

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மழைக் காலத்தில் இவ்வாறு செய்திருக்கலாம் என்று கருதுகிறேன் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்.

மேலும் கூறுகிறார்:

அபுஸ் ஸுபைரிடமிருந்து மாலிக் இமாம் அறிவித்ததைப்போன்றே ஹம்மாத் பின் ஸலமாவும் அறிவித்துள்ளார். என்றாலும் குர்ரத்து பின் காலித் “நாங்கள் தபூக் போருக்கு சென்ற பயணத்தில்” என்று அறிவித்துள்ளார்.


«صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا، وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ جَمِيعًا، فِي غَيْرِ خَوْفٍ، وَلَا سَفَرٍ»

قَالَ: قَالَ مَالِكٌ: «أَرَى ذَلِكَ كَانَ فِي مَطَرٍ»،


Abu-Dawood-506

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

506. அப்துர்ரஹ்மான் பின் யஸார்-இப்னு அபூலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

தொழுகை தொடர்பான சட்டங்கள் மூன்று நிலைகளில் மாற்றியமைக்கப்பட்டன.

எங்கள் தோழர்களான-நபித்தோழர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம்களின் அல்லது முஃமின்களின் தொழுகை ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். தொழுகை நேரம் வந்தவுடன் மக்களை அழைக்க ஆண்களை வீடுகளுக்கு அனுப்ப நான் எண்ணினேன். மேலும், தொழுகை நேரத்தை முஸ்லிம்களுக்கு அறிவிக்க உயரமான மேடைகளின் மீது நின்று அழைக்க ஆண்களுக்கு நான் கட்டளையிடவும் எண்ணினேன். மக்கள் சங்கு ஊதத் தொடங்கும் அளவிற்கு, அல்லது கிட்டத்தட்ட அத்தகைய நிலைக்கு வந்துவிட்டார்கள்.

அப்போது அன்ஸாரிகளில் ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் கவலையைப் பார்த்த நான், திரும்பி வந்ததும் ஒருவரைக் (கனவில்) கண்டேன். அவர் இரண்டு பச்சைநிற ஆடைகளை அணிந்திருந்தார். அவர் பள்ளிவாசலின் மீது நின்று (சில வார்த்தைகளைக் கூறி) தொழுகைக்கு அழைத்தார். பிறகு சற்றே அமர்ந்து, பின்னர் எழுந்து அதைப் போன்றே கூறினார். ஆனால், அப்போது அவர் “கத் காமத்திஸ் ஸலாஹ்-தொழுகை ஆரம்பித்துவிட்டது” என்று சொன்னார். மக்கள் இதை பொய் என்று சொல்லிவிடுவார்கள் என்ற பயம் மட்டும் எனக்கு இல்லாவிட்டால் நான் தூங்காமல்

أُحِيلَتِ الصَّلَاةُ ثَلَاثَةَ أَحْوَالٍ،

قَالَ: وَحَدَّثَنَا أَصْحَابُنَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَقَدْ أَعْجَبَنِي أَنْ تَكُونَ صَلَاةُ الْمُسْلِمِينَ – أَوْ قَالَ – الْمُؤْمِنِينَ، وَاحِدَةً، حَتَّى لَقَدْ هَمَمْتُ أَنْ أَبُثَّ رِجَالًا فِي الدُّورِ يُنَادُونَ النَّاسَ بِحِينِ الصَّلَاةِ، وَحَتَّى هَمَمْتُ أَنْ آمُرَ رِجَالًا يَقُومُونَ عَلَى الْآطَامِ يُنَادُونَ الْمُسْلِمِينَ بِحِينِ الصَّلَاةِ حَتَّى نَقَسُوا أَوْ كَادُوا أَنْ يَنْقُسُوا»، قَالَ: فَجَاءَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَمَّا رَجَعْتُ لِمَا رَأَيْتُ مِنَ اهْتِمَامِكَ رَأَيْتُ رَجُلًا كَأَنَّ عَلَيْهِ ثَوْبَيْنِ أَخْضَرَيْنِ، فَقَامَ عَلَى الْمَسْجِدِ فَأَذَّنَ، ثُمَّ قَعَدَ قَعْدَةً، ثُمَّ قَامَ فَقَالَ مِثْلَهَا، إِلَّا أَنَّهُ يَقُولُ: قَدْ قَامَتِ الصَّلَاةُ وَلَوْلَا أَنْ يَقُولَ النَّاسُ قَالَ ابْنُ الْمُثَنَّى: أَنْ تَقُولُوا – لَقُلْتُ إِنِّي كُنْتُ يَقْظَانَ غَيْرَ نَائِمٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: – وَقَالَ ابْنُ الْمُثَنَّى – «لَقَدْ أَرَاكَ اللَّهُ عَزَّ وَجَلَّ خَيْرًا»، – وَلَمْ يَقُلْ عَمْرٌو: «لَقَدْ أَرَاكَ اللَّهُ خَيْرًا» – فَمُر بِلَالًا فَلْيُؤَذِّنْ، قَالَ: فَقَالَ عُمَرُ: أَمَا إِنِّي قَدْ رَأَيْتُ مِثْلَ الَّذِي رَأَى، وَلَكِنِّي لَمَّا سُبِقْتُ اسْتَحْيَيْتُ،


قَالَ: وَحَدَّثَنَا أَصْحَابُنَا، قَالَ: وَكَانَ الرَّجُلُ إِذَا جَاءَ يَسْأَلُ فَيُخْبَرُ بِمَا سُبِقَ مِنْ صَلَاتِهِ وَإِنَّهُمْ قَامُوا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ بَيْنِ قَائِمٍ وَرَاكِعٍ وَقَاعِدٍ وَمُصَلٍّ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. قَالَ ابْنُ الْمُثَنَّى: قَالَ عَمْرٌو: وَحَدَّثَنِي بِهَا حُصَيْنٌ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى حَتَّى جَاءَ مُعَاذٌ، قَالَ شُعْبَةُ: وَقَدْ سَمِعْتُهَا مِنْ حُصَيْنٍ، فَقَالَ: لَا أَرَاهُ عَلَى حَالٍ إِلَى قَوْلِهِ كَذَلِكَ فَافْعَلُوا،

قَالَ أَبُو دَاوُدَ: ثُمَّ رَجَعْتُ إِلَى حَدِيثِ عَمْرِو بْنِ مَرْزُوقٍ، قَالَ: فَجَاءَ مُعَاذٌ، فَأَشَارُوا إِلَيْهِ، قَالَ شُعْبَةُ: وَهَذِهِ سَمِعْتُهَا مِن حُصَيْنٍ، قَالَ: فَقَالَ مُعَاذٌ: لَا أَرَاهُ عَلَى حَالٍ إِلَّا كُنْتُ عَلَيْهَا، قَالَ: فَقَالَ: إِنَّ مُعَاذًا، قَدْ سَنَّ لَكُمْ سُنَّةً، كَذَلِكَ فَافْعَلُوا “


قَالَ: وَحَدَّثَنَا أَصْحَابُنَا،


Abu-Dawood-684

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

684. ஹசன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூவு செய்து கொண்டிருந்த போது அபூபக்ரா (ரலி) அவர்கள் (பள்ளிக்கு) வந்தார்கள். தொழுகையின் வரிசையில் சேருவதற்கு முன்னே ருகூவு செய்து பிறகு நடந்து வந்து வரிசையில் சேர்ந்து கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த பிறகு உங்களில் யார் வரிசையில் இணைவதற்கு முன்பே ருகூவு செய்தவர்? என்று கேட்டார்கள். அபூபக்ரா (ரலி) அவர்கள், நான் தான் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப்படுத்துவானாக! இனிமேல் அப்படிச் செய்யாதீர்” என்று கூறினார்கள்.


أَنَّ أَبَا بَكْرَةَ جَاءَ وَرَسُولُ اللَّهِ رَاكِعٌ، فَرَكَعَ دُونَ الصَّفِّ ثُمَّ مَشَى إِلَى الصَّفِّ فَلَمَّا قَضَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ، قَالَ: «أَيُّكُمُ الَّذِي رَكَعَ دُونَ الصَّفِّ ثُمَّ مَشَى إِلَى الصَّفِّ؟» فَقَالَ أَبُو بَكْرَةَ: أَنَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «زَادَكَ اللَّهُ حِرْصًا وَلَا تَعُدْ»


Abu-Dawood-683

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

683. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூவு செய்து கொண்டிருந்த போது நான் (பள்ளிக்கு) வந்தேன். தொழுகையின் வரிசையில் சேருவதற்கு முன்னே ருகூவு செய்து (பிறகு நடந்து வந்து வரிசையில் சேர்ந்து) கொண்டேன்.

(தொழுகையை முடித்த பிறகு) நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப்படுத்துவானாக! இனிமேல் அப்படிச் செய்யாதீர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹஸன் (ரஹ்)


أَنَّ أَبَا بَكْرَةَ، حَدَّثَ أَنَّهُ دَخَلَ الْمَسْجِدَ وَنَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَاكِعٌ، قَالَ: فَرَكَعْتُ دُونَ الصَّفِّ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «زَادَكَ اللَّهُ حِرْصًا وَلَا تَعُدْ»


Abu-Dawood-633

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

633.


أَمَّنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ فِي قَمِيصٍ لَيْسَ عَلَيْهِ رِدَاءٌ، فَلَمَّا انْصَرَفَ، قَالَ: «إِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي قَمِيصٍ»


Abu-Dawood-485

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

485. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) பள்ளியிலிருக்கும் போது அவரிடம் நாங்கள் வந்தோம். அப்போது அவர் அறிவித்ததாவது, எங்களுடைய இந்த பள்ளிவாசலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வருகையுற்றார்கள். அப்போது அவர்களுடைய கையில் இப்னுதாப் என்ற ரகத்தைச் சார்ந்த பேரீத்த மரக் குச்சி இருந்தது. பள்ளியில் அவர்கள் நோட்டமிட்டபோது கிப்லா திசையில் காரலை கண்டார்கள். அந்தக் குச்சியைக் கொண்டு அதை தேய்த்து விட்டார்கள். பிறகு, உங்களில் யார் தன்னை விட்டும் அல்லாஹ் தனது முகத்தை திருப்பிக் கொள்ள விரும்புவார்? என்று கேட்டார்கள். பிறகு, உங்களில் ஒருவர் தொழ நிற்கும் போது அல்லாஹ் அவருக்கு முன்னால் இருக்கின்றான். எனவே அவர் தனது முகத்திற்கு, முன்னால் தனது வலது பக்கமாகவும் துப்ப வேண்டாம். அவர் தனது இடது பக்கமாக இடது காலுக்கு கீழ் துப்புவாராக! அவருக்கு சளி வேகமாக வந்து விட்டால் தனது ஆடையை இவ்வாறு செய்து கொள்வாராக! என்று கூறி ஆடையை தனது வாயில் வைத்து பிறகு தேய்த்துக் காட்டினார்கள். பிறகு (அபீர் என்ற) வாசனை பொருளை என்னிடம் தாருங்கள் என்று கேட்டார்கள். ஒரு கிளையைச் சார்ந்த இளைஞர் தனது வீட்டிற்கு விரைந்து சென்று தனது கையில் வாசனைப் பொருளைக் கொண்டு வந்தார். அதை

أَتَيْنَا جَابِرًا يَعْنِي ابْنَ عَبْدِ اللَّهِ، وَهُوَ فِي مَسْجِدِهِ، فَقَالَ: أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَسْجِدِنَا هَذَا، وَفِي يَدِهِ عُرْجُونُ ابْنِ طَابٍ فَنَظَرَ فَرَأَى فِي قِبْلَةِ الْمَسْجِدِ نُخَامَةً فَأَقْبَلَ عَلَيْهَا، فَحَتَّهَا بِالْعُرْجُونِ، ثُمَّ قَالَ: «أَيُّكُمْ يُحِبُّ أَنْ يُعْرِضَ اللَّهُ عَنْهُ بِوَجْهِهِ» ثُمَّ قَالَ: «إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ يُصَلِّي فَإِنَّ اللَّهَ قِبَلَ وَجْهِهِ، فَلَا يَبْصُقَنَّ قِبَلَ وَجْهِهِ، وَلَا عَنْ يَمِينِهِ، وَلْيَبْزُقْ عَنْ يَسَارِهِ تَحْتَ رِجْلِهِ الْيُسْرَى، فَإِنْ عَجِلَتْ بِهِ بَادِرَةٌ فَلْيَقُلْ بِثَوْبِهِ هَكَذَا» وَوَضَعَهُ عَلَى فِيهِ ثُمَّ دَلَكَهُ، ثُمَّ قَالَ: «أَرُونِي عَبِيرًا» فَقَامَ فَتًى مِنَ الْحَيِّ يَشْتَدُّ إِلَى أَهْلِهِ فَجَاءَ بِخَلُوقٍ فِي رَاحَتِهِ فَأَخَذَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلَهُ عَلَى رَأْسِ الْعُرْجُونِ ثُمَّ لَطَخَ بِهِ عَلَى أَثَرِ النُّخَامَةِ، قَالَ جَابِرٌ: فَمِنْ هُنَاكَ جَعَلْتُمُ الْخَلُوقَ فِي مَسَاجِدِكُمْ


Abu-Dawood-634

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ஆடை குறுகியதாக இருந்தால், அதை இடுப்பில் கட்டிக்கொள்வது.

634. உபாதா பின் வலீத் பின் உபாதா பின் ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம் சென்றோம்.

அவர்கள் கூறினார்கள்:

“நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தொழ நின்றார்கள். என்னிடம் ஒரு போர்வை இருந்தது. அதன் இரண்டு ஓரங்களையும் சேர்த்துப் போட முயன்றேன். ஆனால் அது எனக்குப் போதுமானதாக இல்லை. அதில் சில கிழிசல்கள் இருந்தன. அதனால் நான் அதைத் தலைகீழாகப் போட்டு, பிறகு அதன் இரண்டு ஓரங்களையும் சேர்த்துப் போட்டேன். அது விழாதவாறு அதன் மேல் சாய்ந்து கொண்டேன்.

பிறகு நான் வந்து நபி (ஸல்) அவர்களின் இடதுபுறம் நின்றேன். அப்போது அவர்கள் என் கையைப் பிடித்து, என்னைச் சுற்றி, தங்கள் வலதுபுறம் நிற்க வைத்தார்கள். இப்னு ஸக்ர் வந்து, அவர்களின் இடதுபுறம் நின்றார். அப்போது அவர்கள் எங்கள் இருவரின் கைகளையும் பிடித்து, எங்களை தங்களுக்குப் பின்னால் நிற்க வைத்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். நான் அதை உணரவில்லை. பிறகு நான் அதை உணர்ந்து கொண்டேன். அவர்கள் அதைக் கொண்டு இடுப்புக்குக் கட்டும்படி எனக்கு சைகை செய்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்தபோது, ‘ஜாபிரே!’

أَتَيْنَا جَابِرًا يَعْنِي ابْنَ عَبْدِ اللَّهِ، قَالَ: سِرْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةٍ، فَقَامَ يُصَلِّي، وَكَانَتْ عَلَيَّ بُرْدَةٌ ذَهَبْتُ أُخَالِفُ بَيْنَ طَرَفَيْهَا فَلَمْ تَبْلُغْ لِي، وَكَانَتْ لَهَا ذَبَاذِبُ فَنَكَّسْتُهَا، ثُمَّ خَالَفْتُ بَيْنَ طَرَفَيْهَا، ثُمَّ تَوَاقَصْتُ عَلَيْهَا لَا تَسْقُطُ، ثُمَّ جِئْتُ حَتَّى قُمْتُ عَنْ يَسَارِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخَذَ بِيَدِي فَأَدَارَنِي، حَتَّى أَقَامَنِي عَنْ يَمِينِهِ فَجَاءَ ابْنُ صَخْرٍ، حَتَّى قَامَ عَنْ يَسَارِهِ فَأَخَذَنَا بِيَدَيْهِ جَمِيعًا، حَتَّى أَقَامَنَا خَلْفَهُ، قَالَ: وَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْمُقُنِي وَأَنَا لَا أَشْعُرُ ثُمَّ فَطِنْتُ بِهِ فَأَشَارَ إِلَيَّ أَنْ أَتَّزِرَ بِهَا فَلَمَّا فَرَغَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «يَا جَابِرُ»، قَالَ: قُلْتُ: لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «إِذَا كَانَ وَاسِعًا فَخَالِفْ بَيْنَ طَرَفَيْهِ، وَإِذَا كَانَ ضَيِّقًا فَاشْدُدْهُ عَلَى حِقْوِكَ»


Abu-Dawood-101

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

உளூவின் போது பிஸ்மில்லாஹ் கூறுதல்.

101. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை. உளூச் செய்யும் போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால் என்று) கூறாதவருக்கு உளூ இல்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ، وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ تَعَالَى عَلَيْهِ»


Next Page » « Previous Page