Category: தப்ரானி – அல்முஃஜமுல் அவ்சத்

Al-Mu’jam al-Awsat

Almujam-Alawsat-7035

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7035. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தஹ்பீஹ் செய்யும் போது (அல்லாஹ்வைத் துதிக்கும் போது அதை கை விரல்களால்) எண்ணி செய்வதை பார்த்தேன்.


«رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْقِدُ التَّسْبِيحَ»


Almujam-Alawsat-8568

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

8568. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தஹ்பீஹ் செய்யும் போது (அல்லாஹ்வைத் துதிக்கும் போது அதை கை விரல்களால்) எண்ணுவதை பார்த்தேன்.


«رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْقِدُ التَّسْبِيحَ»


Almujam-Alawsat-7296

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7296. தனது குழந்தைக்கு நெருப்பால் ஆன இரு காப்பை அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன காப்பை அதற்கு அணிவிக்கட்டும். எனவே வெள்ளியை உபயோகித்து அதன் மூலம் (ஆபரணங்களை செய்து) விளையாடுங்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)


«مَنْ أَحَبَّ أَنْ يُسَوَّرَ وَلَدُهُ بِسِوَارٍ مِنْ نَارٍ فَلْيُسَوِّرْهُ بِسِوَارٍ مِنْ ذَهَبٍ، وَلَكِنِ الْفِضَّةُ اعْمَلُوا بِهَا كَيْفَ شِئْتُمْ»


Almujam-Alawsat-3450

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3450. முஆவியா பின் ஹைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இரகசியமாக தர்மம் செய்வது இறைவனின் கோபத்தை தணித்துவிடும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«إِنَّ صَدَقَةَ السِّرِّ تُطْفِئُ غَضَبَ الرَّبِّ تَبَارَكَ وَتَعَالَى»


Almujam-Alawsat-943

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

943. முஆவியா பின் ஹைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“இரகசியமாக தர்மம் செய்வது, இறைவனின் கோபத்தை தணித்துவிடும்.

நன்மைகள், தீமைகளை வீழ்த்திவிடும்.

உறவை பேணி நடப்பது, ஆயுளை அதிகரிக்க செய்யும். வறுமையை நீக்கும்.

லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்பதை அதிகமாக கூறுங்கள். ஏனெனில், அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்.

மேலும் அதில் தொண்ணூற்று ஒன்பது வகையான நோய்களுக்கு மருந்துள்ளது. அவற்றில் மிகச் சிறியது கவலையாகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«إِنَّ صَدَقَةَ السِّرِّ تُطْفِئُ غَضَبَ الرَّبِّ، وَإِنَّ صَنَائِعَ الْمَعْرُوفِ تَقِي مَصَارِعَ السَّوْءِ، وَإِنَّ صِلَةَ الرَّحِمِ تَزِيدُ فِي الْعُمُرِ، وَتَقِي الْفَقْرَ. وَأَكْثِرُوا مِنْ قَوْلِ: لَا حَوْلَ وَلَا وَقُوَّةَ إِلَّا بِاللَّهِ، فَإِنَّهَا كَنْزٌ مِنْ كُنُوزِ الْجَنَّةِ، وَإِنَّ فِيهَا شِفَاءً مِنْ تِسْعَةٍ وَتِسْعِينَ دَاءً، أَدْنَاهَا الْهَمُّ»


Almujam-Alawsat-5028

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5028. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்ற வார்த்தை தொண்ணூற்று ஒன்பது வகையான நோய்களுக்கும் மருந்தாகும்.

அதில் குறைந்த பட்சம் கவலை என்னும் நோயிக்கு மருந்தாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، دَوَاءٌ مِنْ تِسْعَةٍ وَتِسْعِينَ دَاءً أَيْسَرُهَا الْهَمُّ»


Almujam-Alawsat-3541

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3541. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்  (லுஹ்ர் தொழுகைக்கு வரும் நேரத்தில்) கடுமையான வெயிலை தாங்கமுடியவில்லை என்று முறையிட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேறு பதிலை அளிக்காமல், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் (பொருள் : அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ (நல்லறங்கள்) புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் முடியாது) என்பதை அதிகமாக கூறுங்கள்.

இந்த பிரார்த்தனை தொண்ணூற்று ஒன்பது வகையான கஷ்டங்களை நீக்கும். அவற்றில் குறைந்த பட்சம்  கவலை என்னும் கஷ்டமாகும்.

 


شَكَوْنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّمْضَاءَ فَلَمْ يُشْكِنَا وَقَالَ: «أَكْثِرُوا مِنْ قَوْلِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، فَإِنَّهَا تَدْفَعُ تِسْعَةً وَتِسْعِينَ بَابًا مِنَ الضُّرِّ، أَدْنَاهَا الْهَمُّ»


Almujam-Alawsat-6767

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6767. ஒரு இடையனின் குழலோசை இப்னு உமர் (ரலி) அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள் தமது இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாதையை விட்டுவிட்டு வாகனத்தைத் திருப்பினார்கள். உனக்குக் கேட்கிறதா? என்று வினவினார்கள். அதற்கு நான் ஆம் என்றேன்.

அவர்கள் (சிறிது தூரம்) சென்ற பிறகு எனக்குக் கேட்கவில்லை என்று நான் கூறினேன். கைகளை (காதிலிருந்து) எடுத்து விட்டு மறுபடியும் அதே பாதைக்கு வாகனத்தைத் திருப்பினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு இடையனின் குழலோசையைக் கேட்ட போது அவர்கள் இதைப் போன்று செய்வதை நான் பார்த்தேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : நாஃபிஃ (ரஹ்)


كُنْتُ رِدْفَ ابْنِ عُمَرَ، إِذْ «مَرَّ رَاعٍ يُزَمِّرُ، فَضَرَبَ وَجْهَ النَّاقَةِ، وَصَرَفَها عَنِ الطَّرِيقِ، ثُمَّ جَعَلَ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ» ، وَقَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُ»


Almujam-Alawsat-1173

ஹதீஸின் தரம்: Pending

1173. ஒரு இடையனின் குழலோசை இப்னு உமர் (ரலி) அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள் தமது இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாதையை விட்டுவிட்டு வாகனத்தைத் திருப்பினார்கள். உனக்குக் கேட்கிறதா? என்று வினவினார்கள். அதற்கு நான் ஆம் என்றேன்.

அவர்கள் (சிறிது தூரம்) சென்ற பிறகு எனக்குக் கேட்கவில்லை என்று நான் கூறினேன். கைகளை (காதிலிருந்து) எடுத்து விட்டு மறுபடியும் அதே பாதைக்கு வாகனத்தைத் திருப்பினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு இடையனின் குழலோசையைக் கேட்ட போது அவர்கள் இதைப் போன்று செய்வதை நான் பார்த்தேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : நாஃபிஃ (ரஹ்)


كَانَ ابْنُ عُمَرَ فِي سَفَرٍ، فَسَمِعَ صَوْتَ، زَامِرٍ فَوَضَعَ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ، وَعَدَلَ عَنِ الطَّرِيقِ، فَقَالَ: يَا نَافِعُ، أَتَسْمَعُ؟ قُلْتُ: لَا، فَرَاجَعَ الطَّرِيقَ، ثُمَّ قَالَ: «هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ»


Almujam-Alawsat-3828

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3828. அம்ர் பின் தீனார் கூறியதாவது:

உஸ்மான் (ரலி) அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களிடம், மக்களுக்கு தீர்ப்பளிக்கும் நீதிபதி பதவியை (பொறுப்பை) ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறி(வற்புறுத்தி)னார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் அதை மறுத்து, “நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். ஒருவர் தப்பித்துவிடுவார். இருவர் நரகத்தில் நுழைவர். மனோஇச்சைப்படி தீர்ப்பளிப்பவரும், அநியாயமாக தீர்ப்பளிப்பவரும் அழிந்து நாசமாகிவிடுவர். நீதமாக தீர்ப்பளிப்பவர் தப்பித்துவிடுவார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.


أَرَادَهُ عُثْمَانُ عَلَى الْقَضَاءِ فَأَبَى، وَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الْقُضَاةُ ثَلَاثَةٌ، وَاحِدٌ نَاجٍ، وَاثْنَانِ فِي النَّارِ: مَنْ قَضَى بِالْجَوْرِ أَوْ بِالْهَوَى هَلَكَ، وَمَنْ قَضَى بِالْحَقِّ نَجَا»


Next Page » « Previous Page