Category: ஸுனன் குப்ரா-பைஹகீ

Sunan al-Kubra lil Behaqi
Al-Sunan al-Kabir

Kubra-Bayhaqi-3235

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3235. உங்கள் குழந்தைகள் ஏழு வயதினராக இருக்கும் போது அவர்களை தொழுகையை நிறைவேற்ற கட்டளையிடுங்கள். பத்து வயதினராக இருக்கும் போது (அவர்கள் தொழாவிட்டால்) அவர்களை அதற்காக அடியுங்கள். மேலும் படுக்கையிலிருந்து பிரித்து வையுங்கள்.…

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)


مُرُوا صِبْيَانَكُمْ بِالصَّلَاةِ فِي سَبْعِ سِنِينَ وَاضْرِبُوهُمْ عَلَيْهَا فِي عَشْرٍ، وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ، وَإِذَا زَوَّجَ أَحَدُكُمْ خَادِمَهُ مِنْ عَبْدِهِ أَوْ أَجِيرِهِ فَلَا يَنْظُرَنَّ إِلَى شَيْءٍ مِنْ عَوْرَتِهِ فَإِنَّ كُلَّ شَيْءٍ أَسْفَلَ مِنْ سُرَّتِهِ إِلَى رُكْبَتِهِ مِنْ عَوْرَتِهِ


Kubra-Bayhaqi-3234

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3234. உங்கள் குழந்தைகள் ஏழு வயதினராக இருக்கும் போது அவர்களை தொழுகையை நிறைவேற்ற கட்டளையிடுங்கள். பத்து வயதினராக இருக்கும் போது (அவர்கள் தொழாவிட்டால்) அவர்களை அதற்காக அடியுங்கள். மேலும் படுக்கையிலிருந்து பிரித்து வையுங்கள்.…

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)


مُرُوا صِبْيَانَكُمْ بِالصَّلَاةِ لِسَبْعٍ، وَاضْرِبُوهُمْ عَلَيْهَا لِعَشْرٍ، وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ، وَإِذَا زَوَّجَ أَحَدُكُمْ عَبْدَهُ أَوْ أَمَتَهُ أَوْ أَجِيرَهُ فَلَا تَنْظُرُ الْأَمَةُ إِلَى شَيْءٍ مِنْ عَوْرَتِهِ، فَإِنَّ مَا تَحْتَ السُّرَّةِ إِلَى رُكْبَتِهِ مِنَ الْعَوْرَةِ


Kubra-Bayhaqi-3233

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3233. உங்கள் குழந்தைகள் ஏழு வயதினராக இருக்கும் போது அவர்களை தொழுகையை நிறைவேற்ற கட்டளையிடுங்கள். பத்து வயதினராக இருக்கும் போது (அவர்கள் தொழாவிட்டால்) அவர்களை அதற்காக அடியுங்கள். மேலும் படுக்கையிலிருந்து பிரித்து வையுங்கள்.…

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)


مُرُوا صِبْيَانَكُمْ بِالصَّلَاةِ فِي سَبْعِ سِنِينَ، وَاضْرِبُوهُمْ عَلَيْهَا فِي عَشْرٍ، وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ، وَإِذَا زَوَّجَ الرَّجُلُ مِنْكُمْ عَبْدَهُ أَوْ أَجِيرَهُ فَلَا يَرَيْنَ مَا بَيْنَ سُرَّتِهِ وَرُكْبَتِهِ، فَإِنَّ مَا بَيْنَ سُرَّتِهِ وَرُكْبَتِهِ مِنْ عَوْرَتِهِ


Kubra-Bayhaqi-3706

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3706. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அபுத்தர்தா (ரலி) 11 ஸஜ்தாக்கள் செய்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தில் வரும் அறிவிப்பாளர் தொடர் ஏற்கத்தக்கதல்ல என அபூதாவூத் அவர்கள் கூறினார்கள்.

அபுத்தர்தா (ரலி) ஹஜ் அத்தியாயத்தின் இரண்டு ஸஜ்தா வசனங்களை ஓதிய போது ஸஜ்தா செய்தார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என அபூதாவூத் அவர்கள் கூறினார்கள்.


إِحْدَى عَشْرَةَ سَجْدَةً

وَإِسْنَادُهُ وَاهٍ

قَالَ الشَّيْخُ وَرُوِّينَاهُ عَنْ أَبِي الدَّرْدَاءِ أَنَّهُ سَجَدَ فِي الْحَجِّ سَجْدَتَيْنِ


Kubra-Bayhaqi-3705

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3705. நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் 11 (வசனங்களில் ஓதலுக்கான) ஸஜ்தாக்கள் செய்துள்ளேன். அவற்றில் நஜ்ம் (எனும்) அத்தியாயத்தில் உள்ள (அல்குர்ஆன்: 53:62) வசனமும் அடங்கும்.

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)

பைஹகீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி மேலும் இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(பார்க்க: திர்மிதீ-568 , 569)


أَنَّهُ سَجَدَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِحْدَى عَشْرَةَ سَجْدَةً مِنْهُنَّ النَّجْمُ


Kubra-Bayhaqi-3704

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3704. நான் நபி (ஸல்) அவர்களுடன் 11 (வசனங்களில் ஓதலுக்கான) ஸஜ்தாக்கள் செய்துள்ளேன். ஆனால் முஃபஸ்ஸலான (நடுத்தர) அத்தியாயங்களி­ருந்து எதுவும் அவற்றில் இடம் பெறவில்லை.

அல்அஃராஃப் (7), ரஃது (13), நஹ்ல் (16), பனீ இஸ்ராயீல் (17), மர்யம் (19), ஹஜ் (22), ஃபுர்கான் (25), ஸுலைமான் அலை அவர்களின் வரலாறு இடம்பெறும் நம்ல் (27), ஸஜ்தா (32), ஸாத் (38), ஹாமீம் (41) ஆகியவையே ஸஜ்தாவுக்குரிய அந்த அத்தியாயங்களாகும்

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)


سَجَدْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِحْدَى عَشْرَةَ سَجْدَةً لَيْسَ فِيهَا مِنَ الْمُفَصَّلِ شَيْءٌ: الْأَعْرَافَ، وَالرَّعْدَ، وَالنَّحْلَ، وَبَنِي إِسْرَائِيلَ، وَمَرْيَمَ، وَالْحَجَّ سَجْدَةً، وَالْفُرْقَانَ، وَسُلَيْمَانَ بِسُورَةِ النَّمْلِ، وَالسَّجْدَةَ، وَص، وَسَجْدَةَ الْحَوَامِيمِ


Kubra-Bayhaqi-3728

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3728. ஹஜ் அத்தியாயத்தில் இரண்டு ஸஜ்தாக்கள் உள்ளதால் அது சிறப்பிக்கப்பட்டுள்ளதா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ”ஆம்! யார் அவ்விரு வசனங்களின் போதும் ஸஜ்தாச் செய்ய மாட்டாரோ அவர் அவ்விரு வசனங்களையும் ஓத வேண்டாம்” என்று கூறினார்கள்…

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ர­லி)


قُلْتُ: يَا رَسُولَ اللهِ، فِي سُورَةِ الْحَجِّ سَجْدَتَانِ؟ قَالَ: ” نَعَمْ، وَمَنْ لَمْ يَسْجُدْهُمَا فَلَا يَقْرَأْهُمَا


Kubra-Bayhaqi-3727

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3727. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (குர்ஆனின்) 15 ஸஜ்தா வசனங்களை என்னிடம் ஓதிக்காட்ட சொன்னார்கள். அவற்றில் (காஃப் எனும் 50 வது அத்தியாயத்தி­லிருந்து குர்ஆனின் கடைசி அத்தியாயம் வரையிலான) முஃபஸ்ஸலான அத்தியாயங்களில் இடம்பெறும் மூன்று வசனங்களும், சூரத்துல் ஹஜ் (எனும்) 22 வது அத்தியாயத்தில் இடம் பெறும் இரண்டு வசனங்களும் (அல்குர்ஆன்: 22:18 , 22:77) அடங்கும்.

அறிவிப்பவர்: அம்ர் பின் ஆஸ் (ரலி­)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْرَأَهُ خَمْسَ عَشْرَةَ سَجْدَةً فِي الْقُرْآنِ مِنْهَا ثَلَاثٌ فِي الْمُفَصَّلِ وَفِي سُورَةِ الْحَجِّ سَجْدَتَيْنِ


Kubra-Bayhaqi-3708

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3708. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (குர்ஆனின்) 15 ஸஜ்தா வசனங்களை என்னிடம் ஓதிக்காட்ட சொன்னார்கள். அவற்றில் (காஃப் எனும் 50 வது அத்தியாயத்தி­லிருந்து குர்ஆனின் கடைசி அத்தியாயம் வரையிலான) முஃபஸ்ஸலான அத்தியாயங்களில் இடம்பெறும் மூன்று வசனங்களும், சூரத்துல் ஹஜ் (எனும்) 22 வது அத்தியாயத்தில் இடம் பெறும் இரண்டு வசனங்களும் (அல்குர்ஆன்: 22:18 , 22:77) அடங்கும்.

அறிவிப்பவர்: அம்ர் பின் ஆஸ் (ரலி­)


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْرَأَهُ خَمْسَ عَشْرَةَ سَجْدَةً فِي الْقُرْآنِ مِنْهَا ثَلَاثٌ فِي الْمُفَصَّلِ، وَسُورَةُ الْحَجِّ سَجْدَتَيْنِ


Kubra-Bayhaqi-8517

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8517. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம், ரமளான் மாத நோன்புக்கு அடுத்து மிகச் சிறந்த நோன்பு எது? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “ரமளானை கண்ணியப்படுத்த (வைக்கப்படும்) ஷஅபான் மாத நோன்பு” என்று பதிலளித்தார்கள்.

(பிறகு) எது மிகச் சிறந்த தர்மம்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “ரமளான் மாதத்தில் வழங்கப்படும் தர்மம் (மிகச் சிறந்தது)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


قِيلَ: يَا رَسُولَ اللهِ أِيُّ الصَّوْمِ أَفْضَلُ؟ قَالَ: ” صَوْمُ شَعْبَانَ تَعْظِيمًا لِرَمَضَانَ ” قَالَ: فَأِيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: ” صَدَقَةٌ فِي رَمَضَانَ


Next Page » « Previous Page