Category: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

Musannaf-Ibn-Abi-Shaybah

Musannaf-Ibn-Abi-Shaybah-12081

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

12081. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதனுக்கு மறுமையில் அந்தஸ்து உயர்த்தப்படும். உடனே அவன்  இது எதனால் என்று கேட்பான். அப்போது உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்கு இந்த அந்தஸ்து கிடைத்தது)” என்று கூறப்படும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


إِنَّ الرَّجُلَ لِيَرْقَى الدَّرَجَةَ، فَيَقُولُ: مَا هَذَا؟ فَيُقَالُ: بِاسْتِغْفَارِ وَلَدِكَ مِنْ بَعْدِكَ لَكَ


Musannaf-Ibn-Abi-Shaybah-9502

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

9502. ரிப்இய்யு பின் ஹிராஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ரமலானின் (ஆரம்பமாக இருக்குமோ இருக்காதோ என்ற) சந்தேகத்திற்குரிய நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களும், அவர்களுடன் வேறு சிலரும் இருக்கும் போது அவர்களுக்கு முன் பொறித்த ஆட்டுக்கறி கொண்டு வந்து வைக்கப்பட்டது.  அனைவரும் அதை சாப்பிடுவதற்கு ஒன்று கூடினர். ஒரு மனிதர் மட்டும் அவர்களை விட்டு விலகினார். அம்மார் (ரலி) அவர்கள், அவரிடம், வந்து சாப்பிடுங்கள்! என்று கூறினார்கள். அவர் நான் நோன்பாளி என்று கூறினார். அதற்கு அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள், நீ அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருந்தால் வந்து சாப்பிடு! என்று கூறினார்கள்.


أَنَّ عَمَّارَ بْنَ يَاسِرٍ، وَنَاسًا مَعَهُ أَتَوْهُمْ بِمَسْلُوخَةٍ مَشْوِيَّةٍ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ أَنَّهُ رَمَضَانُ، أَوْ لَيْسَ مِنْ رَمَضَانَ، فَاجْتَمَعُوا وَاعْتَزَلَهُمْ رَجُلٌ، فَقَالَ لَهُ عَمَّارٌ: «تَعَالَ فَكُلْ» قَالَ: فَإِنِّي صَائِمٌ، فَقَالَ لَهُ عَمَّارٌ: «إِنْ كُنْتَ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَتَعَالَ فَكُلْ»


Musannaf-Ibn-Abi-Shaybah-9503

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

9503. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

யார் (பிறை தெரியாத) சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்கிறாரோ அவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார்.

அறிவிப்பவர்: ஸிமாக் (ரஹ்)

 


«مَنْ صَامَ الْيَوْمَ الَّذِي يُشَكُّ فِيهِ، فَقَدْ عَصَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Musannaf-Ibn-Abi-Shaybah-9744

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

நோன்பாளி நோன்புத் துறக்கும் போது என்ன கூறவேண்டும்?

9744. நபி (ஸல்) அவர்கள் நோன்புத் துறக்கும் போது “அல்லாஹும்ம லக ஸும்து வ அலா ரிஸ்க்கிக அஃப்த்தர்து” (பொருள்: அல்லாஹ்வே! உனக்காக நோன்பு வைத்தேன். உனது உணவினால் நோன்புத் துறக்கின்றேன்) எனக் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

ரபீஉ பின் குஸைம் (ரஹ்) அவர்கள், “அல்ஹம்து லில்லாஹில்லதீ அஆனனீ ஃப ஸும்து, வ ரஸகனீ ஃப அஃப்த்தர்து (பொருள்: நான் நோன்பு வைக்கவும், நோன்புத் துறக்க உணவளித்தும் உதவி செய்த அல்லாஹ்விற்கே புகழனைத்தும்) என்று கூறுவார்கள்.

 


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَامَ ثُمَّ أَفْطَرَ، قَالَ: «اللَّهُمَّ لَكَ صُمْتُ، وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ»

قَالَ: وَكَانَ الرَّبِيعُ بْنُ خُثَيْمٍ يَقُولُ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَعَانَنِي فَصُمْتُ وَرَزَقَنِي فَأَفْطَرْتُ»


Musannaf-Ibn-Abi-Shaybah-19555

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

19555. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தாலோ, இறைவழியில் போரிடும் ஒருவருக்கு அல்லது ஹஜ் (புனித பயணம்)  செல்பவருக்கு பயண வசதி செய்து கொடுத்தாலோ, அல்லது அவர்களின் வீட்டாரின் நலனை பாதுகாத்தாலோ, அவர்களுக்கு கிடைக்கும் கூலியிலிருந்து எதுவும் குறையாமல் அவருக்கும் அது போன்ற கூலி கிடைக்கும்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)


مَنْ فَطَّرَ صَائِمًا أَوْ جَهَّزَ غَازِيًا أَوْ حَاجًّا أَوْ خَلَفَهُ فِي أَهْلِهِ كَانَ لَهُ مِثْلُ أُجُورِهِمْ مِنْ غَيْرِ أَنْ يُنْتَقَصَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا


Musannaf-Ibn-Abi-Shaybah-17138

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

17138. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

திருந்தும் வரை மூவரின் தொழுகைகள் அவர்களின் காதுகளைக் கூட கடந்து (உயரே) செல்லாது. (அவர்கள் யாரெனில்) ஓடிப்போன  அடிமை; கணவன் கோபமான நிலையில் இரவைக் கழிக்கும் பெண்; மக்கள் வெறுக்கும் தலைவன்.

அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)


ثَلَاثَةٌ لَا تُجَاوِزُ صَلَاتُهُمْ آذَانَهُمْ حَتَّى يَرْجِعُوا: الْعَبْدُ الْآبِقُ، وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ، وَإِمَامُ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُوَنَ


Musannaf-Ibn-Abi-Shaybah-4113

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4113. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

திருந்தும் வரை மூவரின் தொழுகைகள் அவர்களின் தலைகளைக் கூட கடந்து (உயரே) செல்லாது. (அவர்கள் யாரெனில்) ஓடிப்போன  அடிமை; கணவன் கோபமான நிலையில் இரவைக் கழிக்கும் பெண்; மக்கள் வெறுக்கும் தலைவன்.

அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)


ثَلَاثَةٌ لَا تُجَاوِزُ صَلَاتُهُمْ رُءُوسَهُمْ حَتَّى يَرْجِعُوا: الْعَبْدُ الْأَبِقُ، وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ، وَإِمَامُ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ


Musannaf-Ibn-Abi-Shaybah-17130

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

17130. அம்ர் பின் அல்ஹாரிஸ் பின் அல்முஸ்தலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்களில் இருவர் (மறுமை நாளில்) கடுமையாக வேதனை செய்யப்படுவர். (அவர்களில் ஒருவர்) கணவனுக்கு மாறு செய்த பெண். (மற்றொருவர்) ஒரு கூட்டத்தினர் வெறுத்தும் அவர்களின் தலைவராக இருப்பவர் என்று (எங்கள் காலத்தில்) சொல்லப்பட்டுவந்தது.


كَانَ يُقَالَ: ” أَشَدُّ النَّاسِ عَذَابًا اثْنَانِ: امْرَأَةٌ تَعْصِي زَوْجَهَا، وَإِمَامُ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُوَنَ


Musannaf-Ibn-Abi-Shaybah-4110

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4110. அம்ர் பின் அல்ஹாரிஸ் பின் அல்முஸ்தலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்களில் இருவர் (மறுமை நாளில்) கடுமையாக வேதனை செய்யப்படுவர். (அவர்களில் ஒருவர்) கணவனுக்கு மாறு செய்த பெண். (மற்றொருவர்) ஒரு கூட்டத்தினர் வெறுத்தும் அவர்களின் தலைவராக இருப்பவர் என்று (எங்கள் காலத்தில்) சொல்லப்பட்டுவந்தது.


كَانَ يُقَالُ: أَشَدُّ النَّاسِ عَذَابَا امْرَأَةٌ تُعْصِي زَوْجَهَا، وَإِمَامُ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ


Musannaf-Ibn-Abi-Shaybah-25895

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

25895. அறியாமைக் காலத்தில் என்னுடையத் தந்தையின் பெயர் அஸீஸ் (மிகைத்தவர்) என்று இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களுக்கு அப்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளனின் அடிமை) என்று (மாற்றி) பெயர் வைத்தார்கள் (என்று என் தந்தை கூறினார்)

அறிவிப்பவர் : கைஸமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்)


كَانَ اسْمُ أَبِي فِي الْجَاهِلِيَّةِ عَزِيزًا: «فَسَمَّاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدَ الرَّحْمَنِ»


Next Page » « Previous Page