Category: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

Musannaf-Ibn-Abi-Shaybah

Musannaf-Ibn-Abi-Shaybah-25895

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

25895. அறியாமைக் காலத்தில் என்னுடையத் தந்தையின் பெயர் அஸீஸ் (மிகைத்தவர்) என்று இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களுக்கு அப்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளனின் அடிமை) என்று (மாற்றி) பெயர் வைத்தார்கள் (என்று என் தந்தை கூறினார்)

அறிவிப்பவர் : கைஸமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்)


كَانَ اسْمُ أَبِي فِي الْجَاهِلِيَّةِ عَزِيزًا: «فَسَمَّاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدَ الرَّحْمَنِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-24234

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

24234.


عَقَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْحَسَنِ بِشَاةٍ فَقَالَ: «يَا فَاطِمَةُ، احْلِقِي رَأْسَهُ وَتَصَدَّقِي بِزِنَةِ شَعْرِهِ فِضَّةً»، فَوَزَنُوهُ فَكَانَ وَزْنُهُ دِرْهَمًا أَوْ بَعْضَ دِرْهَمٍ


Musannaf-Ibn-Abi-Shaybah-10853

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

10853. உங்களில் மரண வேளை நெருங்கியவர்களுக்கு யாஸீன் (36-வது) அத்தியாயத்தை ஓதுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மஃகில் பின் யஸார் (ரலி)


«اقْرَءُوهَا عِنْدَ مَوْتَاكُمْ»، يَعْنِي يس


Musannaf-Ibn-Abi-Shaybah-1895

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1895.


لَوْ كَانَ الدِّينُ بِالرَّأْيِ، كَانَ بَاطِنُ الْقَدَمَيْنِ أَوْلَى وَأَحَقَّ بِالْمَسْحِ مِنْ ظَاهِرَهُمَا، وَلَكِنِّي «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَسَحَ ظَاهِرَهُمَا»


Musannaf-Ibn-Abi-Shaybah-11402

ஹதீஸின் தரம்: More Info

11402. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஜனாஸாத் தொழுகையில் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர் : ஸைத் பின் தல்ஹா (ரஹ்)


أَنَّهُ «قَرَأَ عَلَيْهَا بِفَاتِحَةِ الْكِتَابِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-11443

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11443. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபித்தோழர்கள் ஜனாஸாத் தொழுகையில் வெவ்வேறு எண்ணிக்கையில் தக்பீர் கூறி வந்தனர். பிறகு, நமக்கு பின் வருபவர்கள் கடைபிடிப்பதற்கு ஏற்றவாறு ஒரு எண்ணிக்கையில் ஒன்றுப்பட வேண்டும் என்பதற்காக நான்கு தக்பீர் கூறினர்.

அறிவிப்பவர் : அம்ர் பின் முர்ரா (ரஹ்)


«كُلٌّ قَدْ فَعَلَ» فَقَالُوا: نَجْتَمِعُ عَلَى أَمْرٍ يَأْخُذُ بِهِ مَنْ بَعْدَنَا فَكَبَّرُوا عَلَى الْجِنَازَةِ أَرْبَعًا


Musannaf-Ibn-Abi-Shaybah-11254

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11254. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவில் இருந்த போது வாகனம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏறவில்லை. (அடக்கம் செய்து) திரும்பிய போது வாகனம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏறிக் கொண்டார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுபைரா


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِدَابَّةٍ وَهُوَ فِي جِنَازَةٍ فَلَمْ يَرْكَبْ ، فَلَمَّا انْصَرَفَ رَكِبَ.


Musannaf-Ibn-Abi-Shaybah-11589

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

11589. ‘விழு கட்டிகளுக்கும் தொழுகை நடத்தப்பட்டு, அதன் பெற்றோர்களின் பாவமன்னிப்புக்காகவும், அல்லாஹ்வின் அருளுக்காகவும் துஆச் செய்ய வேண்டும்’ என்று முகீரா பின் ஷுஃபா (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜுபைர் பின் ஹய்யா (ரஹ்)

 

ஸியாதின் மற்ற மாணவர்கள் இந்த செய்தியை நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவிக்கிறார்கள். நான் அவ்வாறு மனனமிடவில்லை என அறிவிப்பாளர் யூனுஸ் கூறுகிறார்.


«السِّقْطُ يُصَلَّى عَلَيْهِ، ثُمَّ يُدْعَى لِأَبَوَيْهِ بِالْمَغْفِرَةِ وَالرَّحْمَةِ»

قَالَ يُونُسُ: وَأَهْلُ زِيَادٍ يَرْفَعُونَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَا لَا أَحْفَظُهُ


Next Page » « Previous Page