11583. சிறுவர்களுக்கும் ஜனாஸா தொழுகை நடத்தப்படும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி)
«الطِّفْلُ يُصَلَّى عَلَيْهِ»
Musannaf-Ibn-Abi-Shaybah
11583. சிறுவர்களுக்கும் ஜனாஸா தொழுகை நடத்தப்படும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி)
«الطِّفْلُ يُصَلَّى عَلَيْهِ»
11368. வாகனத்தில் செல்பவர் ஜனாஸாவின் பின்னால் செல்ல வேண்டும்; நடந்து செல்பவர் விரும்பியவாறு செல்லலாம். சிறுவர்களுக்கும் ஜனாஸா தொழுகை நடத்தப்படும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி)
«الرَّاكِبُ يَسِيرُ خَلْفَ الْجِنَازَةِ، وَالْمَاشِي حَيْثُ شَاءَ مِنْهَا، وَالطِّفْلُ يُصَلَّى عَلَيْهِ»
12076. இறந்த மனிதருக்கு கஃபன் ஆடை அணிவிப்பவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தின் ஸுன்துஸ் எனும் பச்சைப் பட்டாடைகளை அணிவிக்கிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்)
«مَنْ كَفَّنَ مَيِّتًا كَسَاهُ اللَّهُ مِنْ سُنْدُسِ الْجَنَّةِ وَحَرِيرِهَا»
11384. நான் மரணித்துவிட்டால் என்னை (அடக்கம் செய்ய) விரைவாக கொண்டு சென்றுவிடுங்கள் என அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்)
إذَا أَنَا مِتُّ فَأَسْرِعُوا بِي الْمَشْيَ
11210. நான் இறந்தவிட்டால் என் இறப்புச் செய்தியை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம். ஏனெனில் அறியாமைக்காலத்தில் இருந்த நடைமுறைகளில் இந்த மரண அறிவிப்புச் செய்வதும் சேருமோ என்று நான் பயப்படுகிறேன் என அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் வஸிய்யத் செய்தார்கள்.
அறிவிப்பவர் : இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்)
أَنَّهُ «أَوْصَى أَنْ لَا تُؤْذِنُوا أَحَدًا، فَإِنِّي أَخَافُ أَنْ يَكُونَ النَّعْيُ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ»
11205. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரண செய்தியை அறிவிப்புச் செய்வதற்கு தடை விதித்தார்கள்.
அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி)
«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ النَّعْيِ»
11206. அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள், மரண அறிவிப்புச் செய்வது அறியாமைக் கால வழக்கமாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அல்கமா பின் கைஸ் (ரஹ்)
«النَّعْيُ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ»
25540. அவ்ன் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் மற்றொரு மனிதரைப் பற்றி புறம் பேச ஆரம்பித்தார். உடனே மற்றொரு மனிதர் அதைத் தடுத்தார்.
அப்போது உம்முத்தர்தா (ரலி) அவர்கள், (புறம் பேசுவதைத் தடுத்த மனிதரைப் பார்த்து) நீ அவரைத் தடுத்து நல்ல காரியம் செய்தாய்…
யார் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை காக்கிறாரோ அவரை நரகத்தின் அனல் காற்றை விட்டு அல்லாஹ் காப்பாற்றுகிறான் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் மிஸ்அர் அவர்கள், “நரகத்தின் அனல்காற்றை” விட்டு அல்லாஹ் காப்பாற்றுவான் என்று அறிவிக்கின்றார்.
وَقَعَ رَجُلٌ فِي رَجُلٍ فَرَدَّ عَلَيْهِ آخَرُ، فَقَالَتْ أُمُّ الدَّرْدَاءِ «لَقَدْ غَبَطْتُكَ، إِنَّهُ مَنْ ذَبَّ عَنْ عِرْضِ أَخِيهِ، وَقَاهُ اللَّهُ
25539. எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை காக்கிறாரோ அவருக்கு, அது மறுமையில் நரக நெருப்பை விட்டு காக்கும் திரையாக இருக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)
«مَنْ ذَبَّ عَنْ عِرْضِ أَخِيهِ كَانَ لَهُ حِجَابًا مِنَ النَّارِ»
7444. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பள்ளிகளை கட்ட வேண்டும் என்றும் பள்ளிகள் துப்புரவு செய்யப்பட்டு நறுமணம் நிறைந்ததாக வைத்திருக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள்…
அறிவிப்பவர் : உர்வா பின் ஸுபைர் (ரஹ்)
«أَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبِنَاءِ الْمَسَاجِدِ فِي الدُّورِ، وَأَمَرَ أَنْ تُطَهَّرَ وَتُطَيَّبَ»
يَعْنِي الْقَبَائِلَ
சமீப விமர்சனங்கள்