Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-8666

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8666. நபி (ஸல்) அவர்கள் (கீழே விழும் நிலையிலுள்ள) ஒரு சாய்ந்த சுவரைக் கடந்து சென்றபோது விரைந்துச் சென்றார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டபோது, “திடீரென இறப்பதை நான் வெறுக்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் (பதில்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَرَّ بِجِدَارٍ أَوْ حَائِطٍ مَائِلٍ، فَأَسْرَعَ الْمَشْيَ، فَقِيلَ لَهُ: فَقَالَ: «إِنِّي أَكْرَهُ مَوْتَ الْفَوَاتِ»


Musnad-Ahmad-17818

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

17818. அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், திடீர் மரணத்தை விட்டும், பாம்பு கடித்து இறப்பதை விட்டும், வனவிலங்குகள் தாக்கி இறப்பதை விட்டும், தீயினால் கருகி இறப்பதை விட்டும், நீரில் மூழ்கி இறப்பதை விட்டும், ஏதேனும் ஒன்றின்மேல் விழுந்து இறப்பதை விட்டும், தன் மீது ஏதெனும் விழுந்து இறப்பதை விட்டும், யுத்தக்களத்தில் (தன் படையினரிடம்) பின்னோக்கிசெல்லும் போது கொல்லப்பட்டு இறப்பதை விட்டும் போன்ற இந்த ஏழு மரணங்களை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவார்கள்.

-அறிவிப்பாளர் மாலிக் பின் அப்துல்லாஹ் , வேறுஇடத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) யிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்.


أَنَّهُ اسْتَعَاذَ مِنْ سَبْعِ مَوْتَاتٍ، مَوْتِ الْفُجَاءَةِ، وَمِنْ لَدْغِ الْحَيَّةِ، وَمِنَ السَّبُعِ، وَمِنَ الْغَرَقِ، وَمِنَ الْحَرْقِ، وَمِنْ أَنْ يَخِرَّ عَلَى شَيْءٍ أَوْ يَخِرَّ عَلَيْهِ شَيْءٌ، وَمِنَ الْقَتْلِ عِنْدَ فِرَارِ الزَّحْفِ


Musnad-Ahmad-6594

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6594. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், திடீர் மரணத்தை விட்டும், பாம்பு கடித்து இறப்பதை விட்டும், வனவிலங்குகள் தாக்கி இறப்பதை விட்டும், தீயினால் கருகி இறப்பதை விட்டும், நீரில் மூழ்கி இறப்பதை விட்டும், ஏதேனும் ஒன்றின்மேல் விழுந்து இறப்பதை விட்டும், தன் மீது ஏதெனும் விழுந்து இறப்பதை விட்டும், யுத்தக்களத்தில் (தன் படையினரிடம்) பின்னோக்கிசெல்லும் போது கொல்லப்பட்டு இறப்பதை விட்டும் போன்ற இந்த ஏழு மரணங்களை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَعَاذَ مِنْ سَبْعِ مَوْتَاتٍ: مَوْتِ الْفُجَاءَةِ، وَمِنْ لَدْغِ الْحَيَّةِ، وَمِنَ السَّبُعِ، وَمِنَ الْحَرَقِ، وَمِنَ الْغَرَقِ، وَمِنْ أَنْ يَخِرَّ عَلَى شَيْءٍ، أَوْ يَخِرَّ عَلَيْهِ شَيْءٌ، وَمِنَ الْقَتْلِ عِنْدَ فِرَارِ الزَّحْفِ


Musnad-Ahmad-25042

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

25042. நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், திடீர் மரணத்தை பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், அது இறைநம்பிக்கையாளருக்கு நிம்மதியாகும். பாவிக்கு (இறைகோபத்தின்) தண்டனையாகும் என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ مَوْتِ الْفَجْأَةِ؟ فَقَالَ: «رَاحَةٌ لِلْمُؤْمِنِ، وَأَخْذَةُ أَسَفٍ لِلْفَاجِرِ»


Musnad-Ahmad-17925

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

17925. திடீர் மரணம் இறைகோபத்தின் வெளிப்பாடாகும் என்று உபைத் பின் காலித் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: தமீம் பின் ஸலமா (ரஹ்)

(இந்த செய்தியை தமீம் பின் ஸலமா ஒரு தடவை உபைத் பின் காலித் (ரலி) அவர்களின் சொல்லாகவும், ஒரு தடவை நபி (ஸல்) அவர்களின் சொல்லாகவும் அறிவித்துள்ளார்)


«فِي مَوْتِ الْفُجَاءَةِ أَخْذَةُ أَسَفٍ»


Musnad-Ahmad-17924

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

17924. திடீர் மரணம் இறைகோபத்தின் வெளிப்பாடாகும் என்று உபைத் பின் காலித் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: தமீம் பின் ஸலமா (ரஹ்) அல்லது ஸஃது பின் உபைதா (ரஹ்)

இந்த செய்தியை தமீம் பின் ஸலமா ஒரு தடவை உபைத் பின் காலித் (ரலி) அவர்களின் சொல்லாகவும், ஒரு தடவை நபி (ஸல்) அவர்களின் சொல்லாகவும் அறிவித்துள்ளார்.


«مَوْتُ الْفُجَاءَةِ أَخْذَةُ أَسَفٍ»

وَحَدَّثَ بِهِ مَرَّةً عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Musnad-Ahmad-15497

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

15497. திடீர் மரணம் இறைகோபத்தின் வெளிப்பாடாகும் என்று உபைத் பின் காலித் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: தமீம் பின் ஸலமா (ரஹ்)

(இந்த செய்தியை தமீம் பின் ஸலமா ஒரு தடவை உபைத் பின் காலித் (ரலி) அவர்களின் சொல்லாகவும், ஒரு தடவை நபி (ஸல்) அவர்களின் சொல்லாகவும் அறிவித்துள்ளார்)


أَنَّهُ قَالَ فِي مَوْتِ الْفَجْأَةِ: «أَخْذَةُ أَسَفٍ»


Musnad-Ahmad-15496

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

15496. திடீர் மரணம் இறைகோபத்தின் வெளிப்பாடாகும் என்று உபைத் பின் காலித் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: தமீம் பின் ஸலமா (ரஹ்)

இந்த செய்தியை தமீம் பின் ஸலமா ஒரு தடவை உபைத் பின் காலித் (ரலி) அவர்களின் சொல்லாகவும், ஒரு தடவை நபி (ஸல்) அவர்களின் சொல்லாகவும் அறிவித்துள்ளார்.


«مَوْتُ الْفَجْأَةِ أَخْذَةُ أَسَفٍ» ،

وَحَدَّثَ بِهِ مَرَّةً عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Musnad-Ahmad-5585

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5585. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் தொழும்போது, உங்களுக்கு முன்னால் யாரையும் நடக்க விடாதீர்கள்! மீறினால் அவருடன் சண்டையிடுங்கள்! (தடுங்கள்). ஏனெனில் அவருடன் கூட்டாளி (ஷைத்தான்) இருக்கிறான்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


«إِذَا كَانَ أَحَدُكُمْ يُصَلِّي فَلَا يَدَعْ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ، فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ، فَإِنَّ مَعَهُ الْقَرِينَ»


Musnad-Ahmad-1237

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1237.


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ زِيَارَةِ الْقُبُورِ» فَذَكَرَ مَعْنَاهُ إِلا أَنَّهُ قَالَ: «وَإِيَّاكُمْ وَكُلَّ مُسْكِرٍ»


Next Page » « Previous Page