Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-8449

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8449. மண்ணறைகளை அதிகமாக சந்திக்கச் செல்லும் பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«لَعَنَ زَوَّارَاتِ الْقُبُورِ»


Musnad-Ahmad-8452

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8452. மண்ணறைகளை அதிகமாக சந்திக்கச் செல்லும் பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«لَعَنَ زَوَّارَاتِ الْقُبُورِ»


Musnad-Ahmad-26958

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

26958. அஸ்மா (ரலி) அவர்களிடம், ஸரீத் (எனும் தக்கடி) உணவு கொண்டு வரப்பட்டால் அதன் ஆவி அடங்கும் வரை மூடி வைக்குமாறு உத்தரவிடுவார்கள். மேலும் அவர்கள், “இவ்வாறு உண்ணுவது அதிக பரகத்தைப் பெற்றுத் தரும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்)


أَنَّهَا كَانَتْ إِذَا ثَرَدَتْ، غَطَّتْهُ شَيْئًا حَتَّى يَذْهَبَ فَوْرُهُ، ثُمَّ تَقُولُ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّهُ أَعْظَمُ لِلْبَرَكَةِ»


Musnad-Ahmad-1895

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1895. எந்தத் தோல் பதனிடப்படுகின்றதோ அது தூய்மையடைந்து விடுகின்றது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


«أَيُّمَا إِهَابٍ دُبِغَ فَقَدْ طَهُرَ»


Musnad-Ahmad-16901

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

16901. தங்கத்தில் சிறிய அளவைத் தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தனர்…

அறிவிப்பவர் : முஆவியா (ரலி)


نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لُبْسِ الذَّهَبِ إِلَّا مُقَطَّعًا


Musnad-Ahmad-2961

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2961. …ஒரு சமுதாயத்தின் மீது ஒரு பொருளை உண்பதற்கு இறைவன் தடுத்து விட்டால் அதை வியாபாரம் செய்வதையும் தடுத்து விடுகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


«لَعَنَ اللَّهُ الْيَهُودَ، حُرِّمَ عَلَيْهِمِ الشُّحُومُ، فَبَاعُوهَا، فَأَكَلُوا أَثْمَانَهَا، وَإِنَّ اللَّهَ إِذَا حَرَّمَ عَلَى قَوْمٍ شَيْئًا، حَرَّمَ عَلَيْهِمْ ثَمَنَهُ»


Musnad-Ahmad-2678

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2678. …ஒரு சமுதாயத்தின் மீது ஒரு பொருளை உண்பதற்கு இறைவன் தடுத்து விட்டால் அதை வியாபாரம் செய்வதையும் தடுத்து விடுகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


«لَعَنَ اللَّهُ الْيَهُودَ، حُرِّمَتْ عَلَيْهِمِ الشُّحُومُ، فَبَاعُوهَا وَأَكَلُوا أَثْمَانَهَا، وَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ إِذَا حَرَّمَ أَكْلَ شَيْءٍ، حَرَّمَ ثَمَنَهُ»


Musnad-Ahmad-5716

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5716. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

  1. மது பானத்தையும்
  2. அதைப் பருகுபவரையும்
  3. பிறருக்கு பருகக் கொடுப்பவரையும்
  4. அதை (பிறருக்கு) தயார் செய்து கொடுப்பவரையும்
  5. (தானே) தயார் செய்து கொள்பவரையும்
  6. அதை விற்பவரையும்
  7. அதை வாங்குபவரையும்
  8. அதைச் சுமந்து செல்பவரையும்
  9. யாருக்காக அது சுமந்து செல்லப்படுகிறதோ அவரையும்
  10. அதன் கிரயத்தை உண்பவரையும் (அல்லாஹ் சபிக்கிறான்.)

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி).


«لَعَنَ اللَّهُ الْخَمْرَ، وَلَعَنَ شَارِبَهَا، وَسَاقِيَهَا، وَعَاصِرَهَا، وَمُعْتَصِرَهَا، وَبَائِعَهَا، وَمُبْتَاعَهَا، وَحَامِلَهَا، وَالْمَحْمُولَةَ إِلَيْهِ، وَآكِلَ ثَمَنِهَا»


Musnad-Ahmad-5390

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

5390. ….அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

  1. மது
  2. அதை பருகக்கூடியவன்
  3. அதைப் பரிமாறக்கூடியவன்
  4. அதை விற்பவன்
  5. வாங்குபவன்
  6. அதைத் தயாரிப்பவன்
  7. தயாரிக்குமாறு கோருபவன்
  8. அதைச் சுமந்து செல்பவன்
  9. யாரிடம் அது கொண்டுசெல்லப்படுமோ அவன்
  10. அதன் கிரயத்தை உண்பவன் போன்றோர் (அல்லாஹ்வால்) சபிக்கப்படுகின்றனர்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمِرْبَدِ فَخَرَجْتُ مَعَهُ، فَكُنْتُ عَنْ يَمِينِهِ، وَأَقْبَلَ أَبُو بَكْرٍ فَتَأَخَّرْتُ لَهُ، فَكَانَ عَنْ يَمِينِهِ وَكُنْتُ عَنْ يَسَارِهِ، ثُمَّ أَقْبَلَ عُمَرُ فَتَنَحَّيْتُ لَهُ فَكَانَ عَنْ يَسَارِهِ، فَأَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمِرْبَدَ، فَإِذَا بِأَزْقَاقٍ عَلَى الْمِرْبَدِ فِيهَا خَمْرٌ، قَالَ ابْنُ عُمَرَ: فَدَعَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمُدْيَةِ قَالَ: وَمَا عَرَفْتُ الْمُدْيَةَ إِلَّا يَوْمَئِذٍ، فَأَمَرَ بِالزِّقَاقِ فَشُقَّتْ، ثُمَّ قَالَ: «لُعِنَتِ الْخَمْرُ، وَشَارِبُهَا، وَسَاقِيهَا، وَبَائِعُهَا، وَمُبْتَاعُهَا، وَحَامِلُهَا، وَالْمَحْمُولَةُ إِلَيْهِ، وَعَاصِرُهَا، وَمُعْتَصِرُهَا، وَآكِلُ ثَمَنِهَا»


Musnad-Ahmad-4787

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4787. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மதுவுடன் சம்பந்தப்படும் பத்து வகையினர் சபிக்கப்படுகின்றனர்.

  1. மது பானத்தையும்
  2. அதைப் பருகுபவரையும்
  3. பிறருக்கு பருகக் கொடுப்பவரையும்
  4. அதை விற்பவரையும்
  5. அதை வாங்குபவரையும்
  6. அதை (பிறருக்கு) தயார் செய்து கொடுப்பவரையும்
  7. (தானே) தயார் செய்து கொள்பவரையும்
  8. அதைச் சுமந்து செல்பவரையும்
  9. யாருக்காக அது சுமந்து செல்லப்படுகிறதோ அவரையும்
  10. அதன் கிரயத்தை உண்பவரையும் (அல்லாஹ் சபிக்கிறான்.)

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி).


لُعِنَتِ الْخَمْرُ عَلَى عَشْرَةِ وُجُوهٍ: لُعِنَتِ الْخَمْرُ بِعَيْنِهَا، وَشَارِبُهَا، وَسَاقِيهَا، وَبَائِعُهَا، وَمُبْتَاعُهَا، وَعَاصِرُهَا، وَمُعْتَصِرُهَا، وَحَامِلُهَا، وَالْمَحْمُولَةُ إِلَيْهِ، وَآكِلُ ثَمَنِهَا


Next Page » « Previous Page