Category: முஅத்தா மாலிக்

Muwatta-Malik-535

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

535. குர்ஆன், ஒரு மரப்பலகையிலோ, ஒரு தலையணையிலோ வைத்து சுத்தமான ஒரு நபரைத் தவிர வேறுயாரும் சுமக்கக் கூடாது. இது சரி என்றால், அவரின் சுத்தமின்மை நிலையிலே அது சுமக்கப்பட்டதாக ஆகிவிடும். குர்ஆனை அசுத்தமாக்கும் ஏதேனும் அதை சுமக்கும் ஒருவரின் கையில் உள்ளது என்பதற்காக இது வெறுக்கப்படவில்லை. எனினும் குர்ஆனின் கண்ணியம், அதன் கவுரவம் ஆகியவற்றை பேணுவதற்காகவே சுத்தமில்லாதவன் அதை சுமப்பது வெறுக்கப்படுகிறது என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


قَالَ مَالِكٌ: وَلاَ يَحْمِلُ أَحَدٌ الْمُصْحَفَ بِعِلاَقَتِهِ، وَلاَ عَلَى وِسَادَةٍ، إِلاَّ وَهُوَ طَاهِرٌ، وَلَوْ جَازَ ذَلِكَ لَحُمِلَ فِي خَبِيئَتِهِ، وَلَمْ يُكْرَهْ ذَلِكَ، لأَنْ يَكُونَ فِي يَدَيِ الَّذِي يَحْمِلُهُ شَيْءٌ يُدَنِّسُ بِهِ الْمُصْحَفَ، وَلَكِنْ إِنَّمَا كُرِهَ ذَلِكَ لِمَنْ يَحْمِلُهُ وَهُوَ غَيْرُ طَاهِرٍ، إِكْرَامًا لِلْقُرْآنِ وَتَعْظِيمًا لَهُ.


Muwatta-Malik-536

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

536. சுத்தமானவர்களே தவிர அதை தொட மாட்டார்கள் என்ற வசனத்தின் விஷயமாக நான் கேள்விப்பட்டதில் மிக அழகானது, இந்த வசனம் அபஸா வதவல்லா என்ற 80வது அத்தியாயத்தில் உள்ள வசனத்தின் அந்தஸ்தில் உள்ளதாகும்.

அந்த அத்தியாயத்தில் அல்லாஹ் கூறுவது:-

அவ்வாறல்ல! ஏனெனில் (இக்குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும். எனவே, எவர் விரும்புகிறாரோ அவர்அதை நினைவு கொள்வார். (அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது. உயர்வாக்கப்பட்டது. பாரிசுத்தமாக்கப்பட்டது. (வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால், (லவ்ஹுல் மஹ்ஃபூழ் லிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கைமிக்கவர்கள், நல்லவர்களாவார்கள். (அல்குர்ஆன் 80:12-16).

இவ்வாறு மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.


قَالَ مَالِكٌ: أَحْسَنُ مَا سَمِعْتُ فِي هَذِهِ الآيَةِ: {لاَ يَمَسُّهُ إِلاَّ الْمُطَهَّرُونَ} إِنَّمَا هِيَ بِمَنْزِلَةِ هَذِهِ الآيَةِ، الَّتِي فِي: {عَبَسَ وَتَوَلَّى}، قَوْلُ اللهِ تَبَارَكَ وَتَعَالَى: {كَلاَّ إِنَّهَا تَذْكِرَةٌ فَمَنْ شَاءَ ذَكَرَهُ فِي صُحُفٍ مُكَرَّمَةٍ مَرْفُوعَةٍ مُطَهَّرَةٍ بِأَيْدِي سَفَرَةٍ كِرَامٍ بَرَرَةٍ}.


Muwatta-Malik-552

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

552. ‘ஒரு இமாம் ஸஜ்தா வசனத்தை ஓதி மிம்பரில் இருந்து இறங்கி ஸஜ்தா செய்வது கட்டாயமில்லை” என இமாம் மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


قَالَ مَالِكٌ: لَيْسَ الْعَمَلُ عَلَى أَنْ يَنْزِلَ الإِمَامُ إِذَا قَرَأَ السَّجْدَةَ عَلَى الْمِنْبَرِ، فَيَسْجُدَ.


Muwatta-Malik-553

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

553. ஸஜ்தா வசனங்களில் பதினொன்று எதுவும் முஃபஸ்ஸல் வசனங்களில் இல்லை. இது நம்மிடம் உள்ள சட்டமாகும் என இமாம் மாலிக் (ரலி) கூறுகின்றார்கள்.


قَالَ مَالِكٌ: الأَمْرُ عِنْدَنَا أَنَّ عَزَائِمَ سُجُودِ الْقُرْآنِ إِحْدَى عَشْرَةَ سَجْدَةً، لَيْسَ فِي الْمُفَصَّلِ مِنْهَا شَيْءٌ.


Muwatta-Malik-554

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

554. …சுப்ஹுத் தொழுகைக்குப் பின்னும், அஸருக்குப் பின்பும் குர்ஆனில் உள்ள ஸஜ்தா வசனங்களை ஓதிட ஒருவருக்கு அனுமதியில்லை. ஏனெனில் நபி(ஸல்) அவாகள் சுப்ஹுக்குப் பின் சூரியன் உதயமாகும் வரை தொழவும், அஸருக்குப் பின் சூரியன் மறையும் வரை தொழவும் தடை செய்துள்ளனர். ஸஜ்தாவும், தொழுகை போல் தான். எனவே இந்த இரண்டு நேரங்களிலும் ஸஜ்தா வசனங்களை ஓதிட ஒருவருக்கு அனுமதியில்லை…


قَالَ مَالِكٌ: لاَ يَنْبَغِي لأَحَدٍ يَقْرَأُ مِنْ سُجُودِ الْقُرْآنِ شَيْئًا بَعْدَ صَلاَةِ الصُّبْحِ، وَلاَ بَعْدَ صَلاَةِ الْعَصْرِ، وَذَلِكَ أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ نَهَى عَنِ الصَّلاَةِ بَعْدَ الصُّبْحِ، حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَعَنِ الصَّلاَةِ بَعْدَ الْعَصْرِ، حَتَّى تَغْرُبَ الشَّمْسُ، وَالسَّجْدَةُ مِنَ الصَّلاَةِ، فَلاَ يَنْبَغِي لأَحَدٍ أَنْ يَقْرَأَ سَجْدَةً فِي تَيْنِكَ السَّاعَتَيْنِ.


Muwatta-Malik-555

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

555. …ஆண், பெண் இருவரும் சுத்தமாக இருந்தாலே தவிர ஸஜ்தா செய்யக் கூடாது”” என்று மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்…


سُئِلَ مَالِكٌ: عَمَّنْ قَرَأَ سَجْدَةً وَامْرَأَةٌ حَائِضٌ تَسْمَعُ، هَلْ لَهَا أَنْ تَسْجُدَ؟ قَالَ مَالِكٌ: لاَ يَسْجُدُ الرَّجُلُ، وَلاَ الْمَرْأَةُ، إِلاَّ وَهُمَا طَاهِرَانِ.


Muwatta-Malik-556

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

556. ஸஜ்தா வசனத்தை ஒரு பெண் ஓதுகிறார். அதை ஒருவர் கேட்கிறார். இதற்காக இவரும் ஸஜ்தா செய்ய வேண்டுமா? என்று கேட்கப்பட்டதற்கு, ”ஸஜ்தா செய்ய இவருக்கு அவசியமில்லை. ஸஜ்தா ஒரு கூட்டத்தார் மீது கடமை என்பது, அவர்கள் இவருடன் உள்ளனர். அவரை இமாமாக பின் தொடர்கின்றனர். ஸஜ்தா வசனத்தை அவர் ஓதினால் அவருடன் சேர்ந்து இவர்களும் ஸஜ்தா செய்ய வேண்டும். இமாமாக இல்லாத நிலையில் ஒருவர் தனிப்பட்டவனாக ஸஜ்தா வசனத்தை ஓதிட ஒருவர் கேட்டால் அவருக்கு ஸஜ்தா செய்வது கடடாயமில்லை”” என்று மாலிக் (ரஹ்) பதில் கூறினார்கள்.


وسُئِلَ مَالِكٌ عَنِ امْرَأَةٍ قَرَأَتْ سَجْدَةً، وَرَجُلٌ مَعَهَا يَسْمَعُ، أَعَلَيْهِ أَنْ يَسْجُدَ مَعَهَا؟ قَالَ مَالِكٌ: لَيْسَ عَلَيْهِ أَنْ يَسْجُدَ مَعَهَا، إِنَّمَا تَجِبُ السَّجْدَةُ عَلَى الْقَوْمِ يَكُونُونَ مَعَ الرَّجُلِ يَأْتَمُّونَ بِهِ، فَيَقْرَأُ سَجْدَةً، فَيَسْجُدُونَ مَعَهُ، وَلَيْسَ عَلَى مَنْ سَمِعَ سَجْدَةً مِنْ إِنْسَانٍ يَقْرَؤُهَا، لَيْسَ لَهُ بِإِمَامٍ أَنْ يَسْجُدَ تِلْكَ السَّجْدَةَ.


Muwatta-Malik-43

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

43. மூக்கில் இரத்தம் வருவதினாலோ, புண்ணிலிருந்து வெளி வரும் சீல்களினாலோ, இரத்தத்தினாலோ ஒளுச் செய்யத் தேவையில்லை. முன் பின் துவாரங்களிலிருந்து வெளிப்படும் அசுத்தம் மற்றும் தூக்கம் காரணமாகவே தவிர ஒளுச் செய்யத் தேவையில்லை என்பதே நம்மிடம் சட்டமாகும் என மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.


قَالَ مالِكٌ: الأَمْرُ عِنْدَنَا أَنَّهُ لاَ يَتَوَضَّأُ مِنْ رُعَافٍ وَلاَ مِنْ دَمٍ وَلاَ مِنْ قَيْحٍ يَسِيلُ مِنَ الْجَسَدِ، وَلاَ يَتَوَضَّأُ إِلاَّ مِنْ حَدَثٍ يَخْرُجُ مِنْ ذَكَرٍ أَوْ دُبُرٍ أَوْ نَوْمٍ.


Muwatta-Malik-39

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

39. ஒருவர் வாய் கொப்பளிக்க அல்லது மூக்கை சுத்தம் செய்ய மறந்து விட்டு தொழுதும் வருகிறார். (இவர் தொழுகை கூடுமா?) என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. தான் தொழுத தொகையை மீண்டும் செய்ய அவர் மீது கடமை இல்லை. ஆனால் இனி விரும்பினால் அவர் வாய் கொப்பளிக்கட்டும் அல்லது மூக்கை சுத்தம் செய்யட்டும்”” என்று பதில் கூறினார்கள் என யஹ்யா கூறுகிறார்கள்.


وَسُئِلَ مَالِكٌ عَن رَجُلٍ نَسِيَ أَنْ يَتَمَضْمَضَ وَيَسْتَنْثِرَ حَتَّى صَلَّى، قَالَ: لَيْسَ عَلَيْهِ أَنْ يُعِيدَ صَلاَتَهُ، وَلْيُمَضْمِضْ وَيَسْتَنْثِرْ مَا يَسْتَقْبِلُ إِنْ كَانَ يُرِيدُ أَنْ يُصَلِّيَ.


Muwatta-Malik-37

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

37. உமர் (ரலி) அவர்கள் தன் வேட்டியின் கீழ் உள்ளதை (மலம் கழித்தப்பின்) தண்ணீரால் கழுவினார்கள் என தன் தந்தை அப்துர் ரஹ்மான் (ரலி) கூறியதாக உஸ்மான் கூறுகின்றார்கள்.


أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَتَوَضَّأُ بِالْمَاءِ وُضُوءً لِمَا تَحْتَ إِزَارِهِ.


Next Page » « Previous Page