Category: நஸாயி

Nasaayi-778

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

அநியாயக்கார தலைவர்களுடன் சேர்ந்து தொழுதல்.

778. அபுல்ஆலியா அல்பர்ராஃ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை பஸராவின் ஆளுநராக இருந்த) ஸியாத், தொழுகையை (உரிய நேரத்தில்) தொழாமல் தாமதப்படுத்தினார். அப்போது அப்துல்லாஹ் பின் ஸாமித் (ரஹ்) அவர்கள் என்னிடம் வந்தார். (அவரை வரவேற்று) அவருக்காக நாற்காலியை போட அதில் அவர்கள் அமர்ந்தார். அப்போது நான் அவர்களிடம், ஸியாத் செய்தது பற்றி கேட்டேன். அப்போது அவர்கள் (கோபத்துடன்) தமது உதட்டைக் கடித்துக்கொண்டு என் தொடையில் ஓர் அடி அடித்து விட்டு கூறியதாவது: அபுல்ஆலியாவே! நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்று நான் (என் தந்தையின் உடன்பிறந்த சகோதரர்) அபூதர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், நான் உமது தொடையில் அடித்ததைப் போன்றே என் தொடையில் அடித்து விட்டு, அப்துல்லாஹ் பின் ஸாமித் அவர்களே! நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு, நான் உமது தொடையில் அடித்ததைப் போன்று என் தொடையில் நபி (ஸல்) அவர்கள் அடித்து விட்டு, “தொழுகையை அதன் உரிய நேரத்தில் (தனியாக) தொழுதுக் கொள்ளுங்கள். பிறகு (தாமதப்படுத்தும்) அவர்களுடன் நீங்கள் தொழுகையை அடைந்துக் கொண்டால் அப்போதும் அவர்களுடன் இணைந்து தொழுதுக் கொள்ளுங்கள். (ஆனால் அந்த நேரத்தில்) நான் தொழுது

أَخَّرَ زِيَادٌ الصَّلَاةَ فَأَتَانِي ابْنُ صَامِتٍ فَأَلْقَيْتُ لَهُ كُرْسِيًّا فَجَلَسَ عَلَيْهِ، فَذَكَرْتُ لَهُ صُنْعَ زِيَادٍ فَعَضَّ عَلَى شَفَتَيْهِ وَضَرَبَ عَلَى فَخِذِي وَقَالَ: إِنِّي سَأَلْتُ أَبَا ذَرٍّ كَمَا سَأَلْتَنِي فَضَرَبَ فَخِذِي كَمَا ضَرَبْتُ فَخِذَكَ وَقَالَ: إِنِّي سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا سَأَلْتَنِي فَضَرَبَ فَخِذِي كَمَا ضَرَبْتُ فَخِذَكَ فَقَالَ عَلَيْهِ الصَّلَاة وَالسَّلَامُ: ” صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا، فَإِنْ أَدْرَكْتَ مَعَهُمْ فَصَلِّ وَلَا تَقُلْ: إِنِّي صَلَّيْتُ فَلَا أُصَلِّي


Nasaayi-779

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

779.


«لَعَلَّكُمْ سَتُدْرِكُونَ أَقْوَامًا يُصَلُّونَ الصَّلَاةَ لِغَيْرِ وَقْتِهَا، فَإِنْ أَدْرَكْتُمُوهُمْ فَصَلُّوا الصَّلَاةَ لِوَقْتِهَا، وَصَلُّوا مَعَهُمْ وَاجْعَلُوهَا سُبْحَةً»


Nasaayi-4114

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

மௌட்டீகத்தின் (அறியாமையின்) கொடிக்குக் கீழே நின்று போரிடக்கூடியவர் விசயத்தில் வந்துள்ள கண்டனம்.

4114. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ஆட்சித் தலைமைக்குக்) கட்டுப்படாமல், (ஓர் ஆட்சித் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, அதே நிலையில் ஒருவர் இறந்துவிட்டால், அறியாமைக் கால மரணத்தையே அவர் சந்திப்பார்.

யார் என் சமுதாயத்தாருக்கெதிராகப் புறப்பட்டு, அவர்களில் இறைநம்பிக்கையாளர்களைப் பொருட்படுத்தாமல் அவர்களில் நல்லவர்களையும் கெட்டவர்களையும் கொன்று, ஒப்பந்தம் செய்துள்ளவர்களின் ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தவறுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவரில்லை.

ஒருவர் (கொள்கையோ இலக்கோ இல்லாத) மௌட்டீகம் என்னும் அறியாமையின் கொடிக்குக் கீழே நின்று போரிடுகிறார்; இனவெறியில் கோபப்படுகிறார். அல்லது இனவெறிக்கு அழைப்பு விடுக்கிறார். அல்லது இன வெறிக்கு உதவி செய்கிறார். இந்நிலையில் அவர் கொல்லப்பட்டுவிட்டால், அவரது மரணம் அறியாமைக் கால மரணமே ஆகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ خَرَجَ مِنَ الطَّاعَةِ، وَفَارَقَ الْجَمَاعَةَ فَمَاتَ مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً، وَمَنْ خَرَجَ عَلَى أُمَّتِي يَضْرِبُ بَرَّهَا، وَفَاجِرَهَا لَا يَتَحَاشَى مِنْ مُؤْمِنِهَا، وَلَا يَفِي لِذِي عَهْدِهَا فَلَيْسَ مِنِّي، وَمَنْ قَاتَلَ تَحْتَ رَايَةٍ عُمِّيَّةٍ، يَدْعُو إِلَى عَصَبِيَّةٍ، أَوْ يَغْضَبُ لِعَصَبِيَّةٍ فَقُتِلَ فَقِتْلَةٌ جَاهِلِيَّةٌ»


Nasaayi-503

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

503. கோடைக் காலத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் லுஹர் தொழுகையின் (நேர) அளவு, ஒருவரின் நிழல் அவரது மூன்று பாதங்கள் அளவிற்கு வந்ததிலிருந்து ஐந்து பாதங்கள் வரும் வரை இருக்கும். குளிர் காலத்தில் ஐந்து பாதங்கள் முதல் ஏழு பாதங்கள் அளவிற்கு வரும் வரை இருக்கும்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


«كَانَ قَدْرُ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ فِي الصَّيْفِ ثَلَاثَةَ أَقْدَامٍ إِلَى خَمْسَةِ أَقْدَامٍ، وَفِي الشِّتَاءِ خَمْسَةَ أَقْدَامٍ إِلَى سَبْعَةِ أَقْدَامٍ»


Nasaayi-5493

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

பைத்தியமாகுவதை விட்டு (அல்லாஹ்விடம்) பாதுகாப்பு தேடுதல்.

5493. நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் பரஸி, வல்ஜுனூனி, வல்ஜுதாமி, வமின் ஸய்யிஇல் அஸ்காம்” என்று பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள்.

(துஆவின் பொருள்: அல்லாஹ்வே! வெண்குஷ்டம், பைத்தியம், உடலுறுப்புகள் அழுகிவிழும் நோய் மற்றும் பிற தீயநோய்கள் அனைத்தையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்)

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُنُونِ، وَالْجُذَامِ، وَالْبَرَصِ، وَسَيِّئِ الْأَسْقَامِ»


Nasaayi-151

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

151.

ஒரு முஸ்லிம் அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து,உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை


«مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ يُقْبِلُ عَلَيْهِمَا بِقَلْبِهِ وَوَجْهِهِ وَجَبَتْ لَهُ الْجَنَّةُ»


Nasaayi-148

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

148.


«مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ قَالَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، فُتِّحَتْ لَهُ ثَمَانِيَةُ أَبْوَابِ الْجَنَّةِ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ»


Nasaayi-2664

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2664.


أَنَّهُ خَرَجَ حَاجًّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَجَّةَ الْوَدَاعِ، وَمَعَهُ امْرَأَتُهُ أَسْمَاءُ بِنْتُ عُمَيْسٍ الْخَثْعَمِيَّةُ، فَلَمَّا كَانُوا بِذِي الْحُلَيْفَةِ، وَلَدَتْ أَسْمَاءُ مُحَمَّدَ بْنَ أَبِي بَكْرٍ، فَأَتَى أَبُو بَكْرٍ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ، «فَأَمَرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَأْمُرَهَا، أَنْ تَغْتَسِلَ ثُمَّ تُهِلَّ بِالْحَجِّ، وَتَصْنَعَ مَا يَصْنَعُ النَّاسُ، إِلَّا أَنَّهَا لَا تَطُوفُ بِالْبَيْتِ»


Nasaayi-1610

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1610. ஒருவர் இரவில் எழுந்து தான் தொழுதுவிட்டு தன் மனைவியையும் எழுப்ப அவள் எழுந்து தொழுகிறாள். அவள் எழ மறுத்தால் அவளது முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்புகிறார். இம்மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

ஒரு பெண் இரவில் எழுந்து தான் தொழுதுவிட்டு தன் கணவனையும் எழுப்ப அவன் எழுந்து தொழுகிறான். அவன் எழ மறுத்தால் அவனது முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்புகிறார். இப்பெண்ணுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«رَحِمَ اللَّهُ رَجُلًا قَامَ مِنَ اللَّيْلِ فَصَلَّى، ثُمَّ أَيْقَظَ امْرَأَتَهُ فَصَلَّتْ، فَإِنْ أَبَتْ نَضَحَ فِي وَجْهِهَا الْمَاءَ، وَرَحِمَ اللَّهُ امْرَأَةً قَامَتْ مِنَ اللَّيْلِ فَصَلَّتْ، ثُمَّ أَيْقَظَتْ زَوْجَهَا فَصَلَّى، فَإِنْ أَبَى نَضَحَتْ فِي وَجْهِهِ الْمَاءَ»


Nasaayi-3710

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3710. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உம்ரா, ருக்பா என்ற) ஆயுட்கால அன்பளிப்பாக வழங்கப்பட்ட பொருள், எவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதோ அவருக்கே உரியதாகும்.

தன் அன்பளிப்புப் பொருளைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன், தன் வாந்தியைத் தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«الْعُمْرَى جَائِزَةٌ لِمَنْ أُعْمِرَهَا، وَالرُّقْبَى جَائِزَةٌ لِمَنْ أُرْقِبَهَا، وَالْعَائِدُ فِي هِبَتِهِ كَالْعَائِدِ فِي قَيْئِهِ»


Next Page » « Previous Page