ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம்: 13
இரண்டு கற்களால் துப்புரவு செய் வது தொடர்பாக வந்துள்ளவை.
17. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள். அப்போது “எனக்காக மூன்று கற்களை எடுத்துவாருங்கள்” என்று சொன்னார்கள். நான் இரண்டு கற்களையும் ஒரு கெட்டிச் சாணத்தையும் எடுத்து வந்தேன். அவர்கள் இரண்டு கற்களை (மட்டும்) எடுத்துக்கொண்டார்கள். கெட்டிச் சாணத்தை எறிந்துவிட்டார்கள். மேலும், “இது (சாணம்) அசுத்தமாகும்” என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
1. கைஸ் பின் ரபீஉ, அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்தும்-அபூஇஸ்ஹாக், அபூஉபைதா அவர்களிடமிருந்தும் – அபூஉபைதா, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவித்துள்ளனர்.
2, 3. மஃமர், அம்மார் பின் ருஸைக் ஆகிய இருவரும் அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்தும்- அபூஇஸ்ஹாக், அல்கமாவிடமிருந்தும்-அல்கமா, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவித்துள்ளனர்.
4. ஸுஹைர், அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்தும்-அபூஇஸ்ஹாக்,
அப்துர்ரஹ்மான் பின் அல்அஸ்வதிடமிருந்தும்- அப்துர்ரஹ்மான் தம் தந்தை
خَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَاجَتِهِ، فَقَالَ: «الْتَمِسْ لِي ثَلَاثَةَ أَحْجَارٍ»، قَالَ: فَأَتَيْتُهُ بِحَجَرَيْنِ وَرَوْثَةٍ، فَأَخَذَ الْحَجَرَيْنِ، وَأَلْقَى الرَّوْثَةَ، وَقَالَ: «إِنَّهَا رِكْسٌ»
وَهَكَذَا رَوَى قَيْسُ بْنُ الرَّبِيعِ هَذَا الْحَدِيثَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ نَحْوَ حَدِيثِ إِسْرَائِيلَ، وَرَوَى مَعْمَرٌ، وَعَمَّارُ بْنُ رُزَيْقٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، وَرَوَى زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ، عَنْ أَبِيهِ الْأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ، وَرَوَى زَكَرِيَّا بْنُ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنِ الْأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ،
சமீப விமர்சனங்கள்