Category: திர்மிதீ

Tirmidhi-1668

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

1668. அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) கூறினார்கள்:

உங்களில் ஒருவர் எறும்பு கடியின் காரணமாக அடையும் வேதனையை போன்றே, இறைவழியில் மரணத்தை அடைந்தவர் மரண வேதனையை அடைவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

 


«مَا يَجِدُ الشَّهِيدُ مِنْ مَسِّ القَتْلِ إِلَّا كَمَا يَجِدُ أَحَدُكُمْ مِنْ مَسِّ القَرْصَةِ»


Tirmidhi-2333

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்: 22

எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்வது தொடர்பாக வந்துள்ளவை.

2333. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் உடலின் ஒரு பகுதியை (தோளை)ப் பிடித்துக்கொண்டு, “உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு;

உன்னை மண்ணறைவாசிகளில் ஒருவனாகக் கருதிக்கொள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(இந்த ஹதீஸின் இரண்டாவது அறிவிப்பாளரான) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

என்னிடம் இப்னு உமர் (ரலி) அவர்கள், “நீ காலை நேரத்தை அடைந்தால், மாலை நேரத்தை அடைவாய் என எண்ணாதே! நீ மாலை நேரத்தை அடைந்தால், காலை நேரத்தை அடைவாய் என எண்ணாதே! நீ நோய்வாய்ப்படுவதற்குமுன் உன் உடல்நலத்தில் சிறிதளவையேனும் (நன்மைக்குப்) பயன்படுத்திக் கொள். உன் இறப்புக்கு முன் ஜீவியத்தில் சிறிதளைவையேனும் (நன்மைக்காக) எடுத்துக்கொள்! ஏனெனில், அல்லாஹ்வின் அடியானே! நாளைக்கு உனது பெயர் என்ன (இறந்தவனா, இருப்பவனா) என்பதை நீ அறிய மாட்டாய்” என்று கூறினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி இப்னு உமர் (ரலி) அவர்களின் வழியாக மேலும் இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَعْضِ جَسَدِي فَقَالَ: «كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ وَعُدَّ نَفْسَكَ فِي أَهْلِ القُبُورِ»

فَقَالَ لِي ابْنُ عُمَرَ: «إِذَا أَصْبَحْتَ فَلَا تُحَدِّثْ نَفْسَكَ بِالمَسَاءِ، وَإِذَا أَمْسَيْتَ فَلَا تُحَدِّثْ نَفْسَكَ بِالصَّبَاحِ، وَخُذْ مِنْ صِحَّتِكَ قَبْلَ سَقَمِكَ وَمِنْ حَيَاتِكَ قَبْلَ مَوْتِكَ فَإِنَّكَ لَا تَدْرِي يَا عَبْدَ اللَّهِ مَا اسْمُكَ غَدًا»


Tirmidhi-652

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஸகாத் பொருளை பெற யாருக்கு அனுமதியில்லை?

652. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

செல்வந்தனுக்கும், தெளிவான அறிவுள்ள; ஊனமில்லாத திடகாத்திரமானவனுக்கும் ஸகாத்தைப் பெற அனுமதியில்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«لَا تَحِلُّ الصَّدَقَةُ لِغَنِيٍّ، وَلَا لِذِي مِرَّةٍ سَوِيٍّ»


Tirmidhi-2675

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2675. அல்லாஹ்வின் தூதர் (ஸல்)) அவர்கள் கூறினார்கள்:

“ஒருவர் ஒரு நல்ல நடைமுறையை உருவாக்கி அது பிறரால் பின்பற்றப்பட்டால் அவருக்கு அதற்குரிய நன்மையும் கிடைக்கும். அவரைப் பின்பற்றுவோருக்குக் கிடைப்பதைப் போன்ற நன்மையும் கிடைக்கும். அதற்காக அ(வர்களைப் பின்தொடர்ந்த)வர்களின் நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. ஒருவர் ஒரு தீய நடைமுறையை உருவாக்கி அது பிறரால் பின்பற்றப்பட்டால் அவருக்கு அதற்குரிய பாவமும் உண்டு; அவரைப் பின்பற்றுவோருக்குக் கிடைப்பதைப் போன்ற பாவமும் உண்டு. அதற்காக அ(வர்களைப் பின்தொடர்ந்த)வர்களின் பாவத்தில் எதுவும் குறைந்துவிடாது.

இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ‘ஹஸன் ஸஹீஹ்’ தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும்.

இப்பாடப் பொருள் தொடர்பான நபிமொழி, ஹுதைஃபா (ரலி) வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கும் மேற்கண்ட நபிமொழி வேறு அறிவிப்பாளர்தொடர்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அறிவிக்கும் மேற்கண்ட நபிமொழி ஜரீர் (ரலி) அவர்களின் புதல்வர் முன்திர் பின் ஜரீர் (ரஹ்) வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே நபிமொழி ஜரீர் (ரலி) அவர்களிடமிருந்து

«مَنْ سَنَّ سُنَّةَ خَيْرٍ فَاتُّبِعَ عَلَيْهَا فَلَهُ أَجْرُهُ وَمِثْلُ أُجُورِ مَنْ اتَّبَعَهُ غَيْرَ مَنْقُوصٍ مِنْ أُجُورِهِمْ شَيْئًا، وَمَنْ سَنَّ سُنَّةَ شَرٍّ فَاتُّبِعَ عَلَيْهَا كَانَ عَلَيْهِ وِزْرُهُ وَمِثْلُ أَوْزَارِ مَنْ اتَّبَعَهُ غَيْرَ مَنْقُوصٍ مِنْ أَوْزَارِهِمْ شَيْئًا»


Tirmidhi-1158

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1158.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى امْرَأَةً، فَدَخَلَ عَلَى زَيْنَبَ، فَقَضَى حَاجَتَهُ، وَخَرَجَ، وَقَالَ: «إِنَّ المَرْأَةَ إِذَا أَقْبَلَتْ أَقْبَلَتْ فِي صُورَةِ شَيْطَانٍ، فَإِذَا رَأَى أَحَدُكُمْ امْرَأَةً فَأَعْجَبَتْهُ، فَلْيَأْتِ أَهْلَهُ فَإِنَّ مَعَهَا مِثْلَ الَّذِي مَعَهَا»


Tirmidhi-19

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 15

தண்ணீரால் துப்புரவு செய்வது பற்றி வந்துள்ளவை.

19. முஆதா பின்த் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் (எங்களிடம்), “உங்கள் கணவர்களிடம் தண்ணீரால் துப்புரவு செய்யச் சொல்லுங்கள். நான் அவர்களிடம் இதைக் கூற வெட்கப்படுகிறேன். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் (தண்ணீர் மூலமே துப்புரவு) செய்து வந்தார்கள்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், ஜரீர் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி), அனஸ் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ‘ஹஸன் ஸஹீஹ்’ எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.

இந்த ஹதீஸின் அடிப்படையிலேயே செயல்பட வேண்டுமென அறிஞர்கள் கருதுகின்றனர்; கற்களால் துப்புரவு செய்வது போதுமானதாக இருப்பினும், தண்ணீரால் துப்புரவு செய்வதையே அவர்கள் சிறந்ததாகவும் விருப்பமானதாகவும் கருதுகின்றனர். ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, அப்துல்லாஹ் பின் அல்முபாரக், ஷாஃபிஈ,
அஹ்மத் பின் ஹன்பல், இஸ்ஹாக் பின் ராஹவைஹி ஆகியோர் இவ்வாறே கூறியுள்ளனர்.


مُرْنَ أَزْوَاجَكُنَّ أَنْ يَسْتَطِيبُوا بِالمَاءِ، فَإِنِّي أَسْتَحْيِيهِمْ، «فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْعَلُهُ»


Tirmidhi-18

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 14

எதைக் கொண்டு துப்புரவு செய்யலாகாது என்பது குறித்து வந்துள்ளவை.

18. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மலஜலம் கழித்தபின்) கெட்டிச் சாணம், எலும்பு
ஆகியவற்றால் துப்புரவு செய்யாதீர்கள்.
ஏனெனில், அவை உங்கள் சகோதர (இனத்தா)ரான ஜின்களின் உணவாகும்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், அபூஹுரைரா (ரலி), ஸல்மான் அல்ஃபாரிஸீ (ரலி), ஜாபிர் (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “ஜின்கள் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்த இரவில் அவர்களுடன் யாரும் இருந்தார்களா?” என்று அல்கமா (ரஹ்) அவர்கள் கேட்டார்கள்…என்று தொடங்கும் நீண்ட ஹதீஸ், ஷஅபீ (ரஹ்) அவர்களிடமிருந்து இஸ்மாயீல் பின் இப்ராஹீம் வழியாக மற்றோர் அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

அதில், “நபி (ஸல்) அவர்கள் கெட்டிச் சாணம், எலும்பு ஆகியவற்றால் (மலஜலம் கழித்தபின்) துப்புரவு செய்யாதீர்கள். ஏனெனில் அவை, உங்கள் சகோதர (இனத்தா)ரான ஜின்களின் உணவாகும்” என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.

இவ்விரு அறிவிப்புகளில் இஸ்மாயீல் அவர்கள் வழியாக வந்துள்ள (இந்த) அறிவிப்பே,

«لَا تَسْتَنْجُوا بِالرَّوْثِ، وَلَا بِالْعِظَامِ، فَإِنَّهُ زَادُ إِخْوَانِكُمْ مِنَ الْجِنِّ»


Tirmidhi-17

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 13

இரண்டு கற்களால் துப்புரவு செய் வது தொடர்பாக வந்துள்ளவை.

17. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள். அப்போது “எனக்காக மூன்று கற்களை எடுத்துவாருங்கள்” என்று சொன்னார்கள். நான் இரண்டு கற்களையும் ஒரு கெட்டிச் சாணத்தையும் எடுத்து வந்தேன். அவர்கள் இரண்டு கற்களை (மட்டும்) எடுத்துக்கொண்டார்கள். கெட்டிச் சாணத்தை எறிந்துவிட்டார்கள். மேலும், “இது (சாணம்) அசுத்தமாகும்” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

1. கைஸ் பின் ரபீஉ, அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்தும்-அபூஇஸ்ஹாக், அபூஉபைதா அவர்களிடமிருந்தும் – அபூஉபைதா, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவித்துள்ளனர்.

2, 3. மஃமர், அம்மார் பின் ருஸைக் ஆகிய இருவரும் அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்தும்- அபூஇஸ்ஹாக், அல்கமாவிடமிருந்தும்-அல்கமா, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவித்துள்ளனர்.

4. ஸுஹைர், அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்தும்-அபூஇஸ்ஹாக்,
அப்துர்ரஹ்மான் பின் அல்அஸ்வதிடமிருந்தும்- அப்துர்ரஹ்மான் தம் தந்தை

خَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَاجَتِهِ، فَقَالَ: «الْتَمِسْ لِي ثَلَاثَةَ أَحْجَارٍ»، قَالَ: فَأَتَيْتُهُ بِحَجَرَيْنِ وَرَوْثَةٍ، فَأَخَذَ الْحَجَرَيْنِ، وَأَلْقَى الرَّوْثَةَ، وَقَالَ: «إِنَّهَا رِكْسٌ»

وَهَكَذَا رَوَى قَيْسُ بْنُ الرَّبِيعِ هَذَا الْحَدِيثَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ نَحْوَ حَدِيثِ إِسْرَائِيلَ، وَرَوَى مَعْمَرٌ، وَعَمَّارُ بْنُ رُزَيْقٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، وَرَوَى زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ، عَنْ أَبِيهِ الْأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ، وَرَوَى زَكَرِيَّا بْنُ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنِ الْأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ،


Tirmidhi-16

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 12

கற்களால் துப்புரவு செய்தல்.

16. அப்துர்ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஸல்மான் அல்ஃபாரிஸீ (ரலி) அவர்களிடம், “மலஜலம் கழிக்கும் முறை உட்பட அனைத்தையுமே உங்கள் இறைத்தூதர் உங்களுக்குக் கற்றுத்தந்துள்ளாராமே?” என்று (இணைவைப்பாளர்களால் பரிகாசத்துடன்) கேட்கப்பட்டது. அதற்கு ஸல்மான் (ரலி) அவர்கள், “ஆம் (உண்மைதான்); மலஜலம் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்க வேண்டாமென்றும், (மலஜலம் கழித்தபின்) வலக்கரத்தால் துப்புரவு செய்ய வேண்டாமென்றும், மூன்றைவிடக் குறைவான கற்களால் துப்புரவு செய்ய வேண்டாமென்றும், காய்ந்த கெட்டிச் சாணத்தாலோ எலும்பாலோ துப்புரவு செய்ய வேண்டாமென்றும் எங்களை (எங்கள் நபி) தடுத்தார்கள்” என்று கூறினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப்பொருள் தொடர்பான ஹதீஸ், ஆயிஷா (ரலி), குஸைமா பின் ஸாபித் (ரலி), ஜாபிர் (ரலி), கல்லாத் அவர்களின் தந்தை சாயிப் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், இது தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்களில் ஸல்மான் (ரலி) அவர்களின் அறிவிப்பே, ‘ஹஸன் ஸஹீஹ்’ எனும் தரத்தில்
அமைந்ததாகும். இந்த (நபிமொழியில் இடம்பெற்றுள்ள) செய்தியே
பெரும்பாலான நபித்தோழர்கள், அவர்களுக்குப் பின்வந்தவர்கள் ஆகியோரின் கருத்தாகும். “கற்களால் துப்புரவு செய்யும்போது

قِيلَ لِسَلْمَانَ: قَدْ عَلَّمَكُمْ نَبِيُّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلَّ شَيْءٍ، حَتَّى الْخِرَاءَةَ، فَقَالَ سَلْمَانُ: أَجَلْ «نَهَانَا أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ بِغَائِطٍ أَوْ ببَوْلٍ، أوْ أَنْ نَسْتَنْجِيَ بِالْيَمِينِ، أَوِ أنْ يَسْتَنْجِيَ أَحَدُنَا بِأَقَلَّ مِنْ ثَلَاثَةِ أَحْجَارٍ، أَوْ أنْ نَسْتَنْجِيَ بِرَجِيعٍ أَوْ بِعَظْمٍ»


Tirmidhi-15

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 11

(மலஜலம் கழித்தபின்) வலக் கரத்தால் துப்புரவு செய்வது அரு வருக்கத்தக்க செயலாகும் என்பது குறித்து வந்துள்ளவை.

15. அபூகத்தாதா அல்அன்ஸாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “ஒருவர் தமது வலக் கரத்தால் பிறவி உறுப்பைத் தொடக் கூடாது” எனத் தடைவிதித்தார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், ஆயிஷா (ரலி), ஸல்மான் அல்ஃபாரிஸீ (ரலி), அபூஹுரைரா (ரலி), ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) ஆகியோராலும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட ஹதீஸ் “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

அபூகத்தாதா அல்அன்ஸாரீ (ரலி) அவர்களின் இயற்பெயர் ஹாரிஸ் பின் ரிப்ஈ என்பதாகும். இந்த ஹதீஸின் அடிப்படையிலேயே செயல்பட வேண்டுமென பெரும்பாலான அறிஞர்கள் கருதுகின்றனர். மலம்ஜலம் கழித்தப்பின் வலக்கையால் துப்புரவு செய்வதை அருவருக்கத்தக்க (தடை செய்யப்பட்ட) செயல் என்று அவர்கள் கூறியுள்ளனர்.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يَمَسَّ الرَّجُلُ ذَكَرَهُ بِيَمِينِهِ»


Next Page » « Previous Page