அஸ்மா (ரலி) அவர்களிடம், ஸரீத் (எனும் தக்கடி) உணவு கொண்டு வரப்பட்டால் அதன் ஆவி அடங்கும் வரை மூடி வைக்குமாறு உத்தரவிடுவார்கள். மேலும் அவர்கள், “இவ்வாறு உண்ணுவது அதிக பரகத்தைப் பெற்றுத் தரும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்)
(முஸ்னது அஹ்மத்: 26958)حَدَّثَنَا حَسَنٌ، قَالَ: حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، قَالَ: حَدَّثَنَا عُقَيْلُ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ،
أَنَّهَا كَانَتْ إِذَا ثَرَدَتْ، غَطَّتْهُ شَيْئًا حَتَّى يَذْهَبَ فَوْرُهُ، ثُمَّ تَقُولُ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّهُ أَعْظَمُ لِلْبَرَكَةِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-25720.
Musnad-Ahmad-Shamila-26958.
Musnad-Ahmad-Alamiah-25720.
Musnad-Ahmad-JawamiulKalim-26335.
ஆய்வின் சுருக்கம்:
இந்தச் செய்தியை இப்னு லஹீஆ அவர்களிடமிருந்து ஆரம்பத்தில் செவியேற்ற அப்துல்லாஹ் பின் முபாரக் அவர்களும், இப்னு லஹீஆவின் செய்திகளை சரிபார்த்து எழுதிக் கொள்ளும் குதைபா பின் ஸயீத் அவர்களும் அறிவித்திருப்பதால் இது ஹஸன் தர செய்தியாகும்.
பார்க்க: அஹ்மத்-26959.
அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
நூலின் சில பிரதிகளில் தான் ஸுஹ்ரீ அவர்களுக்கும் அஸ்மா பின்த் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் இடையில் உர்வா பின் ஸுபைர் கூறப்படாமல் விடப்பட்டுள்ளது. வேறு பிரதிகளில் இருவருக்கும் இடையில் உர்வா பின் ஸுபைர் கூறப்பட்டுள்ளார். இது தான் சரியானது என்று ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
(எனவே விடுபட்டதை காரணமாக வைத்து முஸ்தஃபா அல்அதவீ போன்றவர்கள் இந்தச் செய்தியை பலவீனமானது என்று கூறியிருப்பது சரியானதல்ல)
விரிவான தகவல்:
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்
2 . ஹஸன் பின் மூஸா
3 . இப்னு லஹீஆ
4 . உகைல் பின் காலித்
5 . இப்னு ஷிஹாப்-ஸுஹ்ரீ
6 . உர்வா பின் ஸுபைர்
7 . அஸ்மா பின்த் அபூபக்ர் (ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25382-இப்னு லஹீஆ அவர்களிடமிருந்து ஆரம்பத்தில் செவியேற்றவர்களான இப்னு வஹ்ப், இப்னுல் முபாராக், முக்ரீ ஆகியோர் அறிவிக்கும் செய்திகள் சரியானவை என்று சில ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்,இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும். பாகம்: 5, பக்கம்: 330)
இவரைப் பற்றி விரிவான தகவல்: இப்னு லஹீஆ.
இந்த செய்தியை அஹ்மத்-26959 எண்ணில் இப்னு லஹீஆ அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அறிவித்திருப்பதால் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இதை சரியானது என்று கூறியுள்ளார். ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
அவர்கள் ஹஸன் தரம் என்று கூறியுள்ளார்.
(நூல்கள்: அஸ்ஸஹீஹா-392, 659, தஃலீக் அஹ்_மத்-26958, 26959)
1 . இந்தக் கருத்தில் அஸ்மா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஹஸன் பின் மூஸா, குதைபா பின் ஸயீத், அப்துல்லாஹ் பின் முபாரக் —> இப்னு லஹீஆ —> உகைல் பின் காலித் —> ஸுஹ்ரீ —> உர்வா —> அஸ்மா (ரலி)
பார்க்க: அஹ்மத்-26958, 26959,
- இப்னு வஹ்ப் —> குர்ரத் பின் அப்துர்ரஹ்மான் —> ஸுஹ்ரீ —> உர்வா —> அஸ்மா (ரலி)
பார்க்க: தாரிமீ-2091, இப்னு ஹிப்பான்-5207, அல்முஃஜமுல் கபீர்-226, ஸுனன் குப்ரா பைஹகீ-14629,
- இப்னு வஹ்ப் —> யூனுஸ் பின் யஸீத் —> ஸுஹ்ரீ —> உர்வா —> அஸ்மா (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-227,
2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுஸ் ஸகீர்-934.
3 . ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ஹாகிம்-7125.
4 . ஸுஹைப் பின் ஸினான் வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ஷுஅபுல் ஈமான்-5516.
5 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களின் சொல்லாக வந்துள்ள செய்திகள்:
பார்க்க: குப்ரா பைஹகீ-14631.
முடிவு:
இந்தச் செய்தி வேறு சரியான அறிவிப்பாளர்தொடரில் வந்திருப்பதால் கருத்து சரியானதாகும். (பார்க்க: அஹ்மத்-26959)
ஆவி பறக்கும் நிலையில் உள்ள சூடான உணவை சாப்பிடக்கூடாது என்று கூறப்படுவதால் அதிக சூடான உணவு என்று பொருள் கொள்ளலாம். ஆறிப்போன உணவு என்று பொருள் கொள்ளத் தேவையில்லை.
இது ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம். ஒருவருக்கு குறைந்த சூடாக தெரிவது மற்றவருக்கு அதிக சூடாக இருக்கலாம்.
எனவே யாராக இருந்தாலும் தன்னால் தாங்கமுடியாத சூடான உணவை உண்ணக்கூடாது என்று இந்த செய்தியிலிருந்து புரிந்துக் கொள்ளலாம்.
இது போன்று, உலக விசயங்களில் கூறப்படும் சட்டங்கள் நல்லது என்ற வகையில் கூறப்பட்டதாகும். இதையே ஃபிக்ஹ் துறையில் முஸ்தஹப் என்று கூறுவர்.
சமீப விமர்சனங்கள்