அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (மது சேகரித்து வைக்கப்படும்) சுரைக்காய்க் குடுவையையும், மண்சாடியையும், (போதைத்தரும்) பார்லி, கோதுமை பானத்தையும், (ஆண்கள்) தங்க மோதிரங்கள், சாதாரணப் பட்டு (ஹரீர்) ஆகியவற்றை அணிவதையும், சிகப்பு நிற மென்பட்டுத் திண்டுகளை (மீஸரா- பயன்படுத்துவதை) விட்டும் எங்களைத் தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
(நஸாயி: 5171)
أَخْبَرَنَا قَتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، عَنْ إِسْمَعِيلَ بْنِ سُمَيْعٍ، عَنْ مَالِكِ بْنِ عُمَيْرٍ، قَالَ:
قَالَ صَعْصَعَةُ بْنُ صُوحَانَ لِعَلِيٍّ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، انْهَنَا عَمَّا نَهَاكَ عَنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «نَهَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الدُّبَّاءِ، وَالْحَنْتَمِ، وَالْجِعَةِ، وَعَنْ حِلَقِ الذَّهَبِ، وَلُبْسِ الْحَرِيرِ، وَعَنِ الْمِيثَرَةِ الْحَمْرَاءِ»
قَالَ: أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «حَدِيثُ مَرْوَانَ وَعَبْدِ الْوَاحِدِ أَوْلَى بِالصَّوَابِ مِنْ حَدِيثِ إِسْرَائِيلَ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-5171.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-.
ஒரு தடவை அனஸ் (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ல் அவர்களை நோக்கி, “ஏன் நாம் கோதுமையை மாவாக்கி ரொட்டி சுட்டு உண்ணு கிறோம்? அப்படியே உண்டால் என்ன தவறு?” என்று வினவியபொழுது. “மனிதனையும் மிருகத்தையும் பாகுபடுத்தி அறிந்து கொள்வதற்காக அவ்விதம் செய்யப்பட்டுள்ளது.” என்று அவர்கள் விடையளித்தனர்.
“இந்த ஹதீஸை ஒரு வரலாற்று நூலில் காண முடிந்தது.கிதாபுகளில் தேடி பார்த்தும் இந்த ஹதீஸ் காணகிடைக்க வில்லை.உலமாக்களிடம் வினவிய போது இது பலகீனமான ஹதீஸ் என்று சொன்னார்கள்.இந்த ஹதீஸை பதிவு செய்யவும்”
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஒரு வரலாற்று நூலில் காண முடிந்தது என்று கூறியுள்ளீர்கள். அது எந்த நூல் என்று கூறினால் பார்த்து பதிவு செய்கிறோம் இன்ஷா அல்லாஹ்.