தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-366

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் (தொழும்போது) முதலிரண்டு ரக்அத்களின் முடிவில் சூடான கல்மீது அமர்ந்திருப்பதைப் போன்று (சிறிது நேரமே அத்தஹிய்யாத் இருப்பில்) அமர்ந்திருப்பார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

இதன் அறிவிப்பாளரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்: பிறகு (இதை அறிவித்த) ஸஃத் (ரஹ்) அவர்கள் தம் உதடுகளை ஏதோ ஒன்றைச் சொல்வதற்காக அசைத்தார்கள். அப்போது நான், “அவர்கள் உடனே எழுந்துவிடுவார்கள் தானே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம், அவர்கள் உடனே எழுந்துவிடுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ஹஸன் தரத்தில் அமைந்த செய்தியாகும். என்றாலும் அபூஉபைதா (ரஹ்) அவர்கள், தனது தந்தையான அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து, நேரடியாக எந்த ஹதீஸையும் செவியேற்கவில்லை.

மேற்கண்ட நபிமொழியின்படியே செயல்படவேண்டும் என்பது சில அறிஞர்களின் கருத்தாகும். (இரண்டு அத்தஹிய்யாத் அமர்வு இருக்கும் தொழுகைகளில்) முதல் அமர்வில் நீண்ட நேரம் அமரக்கூடாது; அத்தஹிய்யாத் துஆவை விட வேறெதையும் கூடுதலாக ஓதக்கூடாது என்பது இவர்களின் கருத்தாகும்.

ஒருவர் அத்தஹிய்யாத் துஆவை விட வேறெதையும் கூடுதலாக ஓதினால் அவர் மறதிக்கான இரு ஸஜ்தா செய்வது அவசியம் என்றும் இவர்கள் கூறுகின்றனர். ஷஅபீ (ரஹ்) அவர்களிடமிருந்தும், மற்றவர்களிடமிருந்தும் இவ்வாறே அறிவிக்கப்பட்டுள்ளது.

(திர்மிதி: 366)

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ هُوَ الطَّيَالِسِيُّ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: أَخْبَرَنَا سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: سَمِعْتُ أَبَا عُبَيْدَةَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، قَالَ

«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَلَسَ فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ كَأَنَّهُ عَلَى الرَّضْفِ»

قَالَ شُعْبَةُ: ثُمَّ حَرَّكَ سَعْدٌ شَفَتَيْهِ بِشَيْءٍ، فَأَقُولُ: حَتَّى يَقُومَ؟، فَيَقُولُ: حَتَّى يَقُومَ،

«هَذَا حَدِيثٌ حَسَنٌ، إِلَّا أَنَّ أَبَا عُبَيْدَةَ لَمْ يَسْمَعْ مِنْ أَبِيهِ»
وَالعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ العِلْمِ: يَخْتَارُونَ أَنْ لَا يُطِيلَ الرَّجُلُ القُعُودَ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ، وَلَا يَزِيدَ عَلَى التَّشَهُّدِ شَيْئًا فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ،
وَقَالُوا: إِنْ زَادَ عَلَى التَّشَهُّدِ فَعَلَيْهِ سَجْدَتَا السَّهْوِ، هَكَذَا رُوِيَ عَنِ الشَّعْبِيِّ وَغَيْرِهِ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-334.
Tirmidhi-Shamila-366.
Tirmidhi-Alamiah-334.
Tirmidhi-JawamiulKalim-334.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 

 


இந்தச் செய்தியைப் பதிவு செய்த திர்மிதீ இமாம் அவர்களே இது அறிவிப்பாளர்தொடர் இடைமுறிந்த செய்தி-முன்கதிஃ என்பதை இந்த ஹதீஸின் அடிக்குறிப்பில் கூறியுள்ளார்கள். காரணம் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து, அவர்களின் மகன் அபூஉபைதா (ரஹ்) அவர்கள் எந்த ஹதீஸையும் கேட்கவில்லை.

(நூல்: தஹ்தீபுல் கமால்-14/61)


شرح علل الترمذي (1/ 544):
قال يعقوب بن شيبة: إنما استجاز ‌أصحابنا ‌أن ‌يدخلوا ‌حديث ‌أبي ‌عبيدة عن أبيه في المسند، يعني في الحديث المتصل، لمعرفة أبي عبيدة بحديث أبيه وصحتها، وأنه لم يأت فيها بحديث منكر.

யஃகூப் பின் ஷைபா பிறப்பு ஹிஜ்ரி 182
இறப்பு ஹிஜ்ரி 262
வயது: 80
(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அபூஉபைதா (ரஹ்) அவர்கள் தம் தந்தை வழியாக அறிவிக்கும் செய்திகளை முஸ்னத் (எனும் அறிவிப்பாளர்தொடர் இடைமுறிவு ஏற்படாத செய்திகள்) வகையில் சேர்க்க நமது ஆசிரியர்கள் அனுமதி வழங்கியுள்ளனர். அபூஉபைதா (ரஹ்) அவர்கள் தம் தந்தையின் சரியான ஹதீஸ்களை அறிந்து வைத்திருந்தார். மேலும் அவர் ‘முன்கர் எனும் மறுக்கப்பட வேண்டிய செய்திகள்’ எதையும் அறிவிக்கவில்லை என்பதே இதற்கு காரணமாகும்.

فتح الباري لابن رجب (7/ 342):
‌وأبو ‌عبيدة، ‌وإن ‌لم ‌يسمع ‌من ‌أبيه، إلا أن أحاديثه عنه صحيحة، تلقاها عن أهل بيته الثقات العارفين بحديث أبيه -: قاله ابن المدني وغيره.

அபூஉபைதா (ரஹ்) அவர்கள் தம் தந்தை (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்-ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாக ஹதீஸ்களைச்) செவியுறவில்லை என்றாலும், அவர் தம் தந்தை வழியாக அறிவிக்கும் செய்திகள் சரியானவை ஆகும். காரணம், அவர் அவற்றை அச்செய்திகளை நன்கு அறிந்தவர்களும், நம்பகமானவர்களுமான தம் குடும்பத்தவர்களிடமிருந்து பெற்றுள்ளார். இதனை இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
(ரஹ்) அவர்களும் மற்றும் பலரும் கூறியுள்ளனர் என்று இப்னு ரஜப் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: ஷரஹ் இலலுத் திர்_மிதீ-1/544, ஃபத்ஹுல் பாரீ-7/342)

இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
யஃகூப் பின் ஷைபா பிறப்பு ஹிஜ்ரி 182
இறப்பு ஹிஜ்ரி 262
வயது: 80
போன்ற வேறு சில அறிஞர்கள் அபூஉபைதா (ரஹ்) அவர்கள் தம் தந்தை (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்-ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்றாலும் இந்த வகை அறிவிப்பாளர்தொடரை ஆதாரமாக ஏற்கின்றனர். இதன்படி இந்தச் செய்தியை திர்மிதீ இமாம் போன்ற வேறு சிலர் ஹஸன் தரம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.


 

 


1 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-3656, 4074, 4155, 4388, 4389, 4390, அபூதாவூத்-995, திர்மிதீ-366, குப்ரா நஸாயீ-, நஸாயீ-1176, முஸ்னத் அபீ யஃலா-, அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-, …


 


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-835,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.