7461.
يقطع الصلاة الكلب والحمار والمرأة.
7461.
يقطع الصلاة الكلب والحمار والمرأة.
2239. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 21 அறப்போர்களில் கலந்துக் கொண்டார்கள்.
«غَزَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِحْدَى وَعِشْرِينَ غَزْوَةً»
2240. ஹதீஸ் எண்-2239 இல் வரும் அறிவிப்பாளர்தொடரில் இந்தச் செய்தியும் வந்துள்ளது.
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(இரண்டாவது) அகபா உடன்படிக்கை நடைப்பெற்ற சமயத்தில் நான் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தேன்.
அறிவிப்பவர்: அபுஸ்ஸுபைர் (ரஹ்)
«شَهِدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْعَقَبَةِ»
1377. இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“ஒருவர் ஒரே துணியை அணிந்தும் தொழலாம்; அது விசாலமான அளவுள்ளதாக இருந்தால் அதைத் தன் உடலில் போர்த்திக் கொள்ளலாம். இருப்பினும், கீழாடையுடன் மேலாடையையும் சேர்த்து அணிந்து தொழுவதே எனக்கு மிகவும் விருப்பமானது” என்று அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டார்.
பின்னர் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தொடர்பான ஒரு செய்தியை நமக்கு அறிவித்தார். – ஜாபிர் (ரலி) அவர்கள் தான் (அகபா உடன்படிக்கையில் கலந்துக் கொண்ட) நபித்தோழர்களில் இறுதியாக மரணித்தவர் ஆவார். –
அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்) அவர்களுக்கு முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் பனூஸலமா கிளையில் இருந்த ஜாபிர் (ரலி) அவர்களின் இல்லத்திற்குச் செல்வோம். ஒருமுறை நாங்கள் ஒரு குழுவாக இருந்தபோது, அவர்கள் தங்கள் இல்லத்திலேயே எங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவித்தார்கள். அப்போது அவர்களின் மேலாடை அங்கிருந்த ஆடைமாட்டும் குச்சியில் தொங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் ஒரேயொரு துணியை மட்டும் உடலில் போர்த்தியவாறு நின்றார்கள். அத்துணியோ அவர்களின் இரு தோள்களையும் முழுமையாக மறைக்கவில்லை. (அத்துணி நெசவு செய்யப்பட்ட ஒரு வகை ஆடை என்று முஹம்மத் பின் அலீ (ரஹ்) குறிப்பிடுகிறார்.) “ஒரே ஆடை அணிந்து தொழுவதில்
يُصَلِّي الْمَرْءُ فِي الثَّوْبِ، وَإِنْ كَانَ ذَا سَعَةٍ وَلَكِنْ لِيَتَوَشَّحْ بِهِ، وَأَحَبُ إِلَيَّ أَنْ يُصَلِّيَ فِي الرِّدَاءِ مَعَ الْإِزَارِ “.
ثُمَّ أَخْبَرَنَا خَبَرًا أَخْبَرَهُ إِيَّاهُ مُحَمَّدُ بْنُ عَلِيٍّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، وَكَانَ مِنْ آخِرِ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَوْتًا قَالَ: فَكُنَّا نَأْتِيهِ فِي بَيْتِهِ فَأَمَّنَا فِي بَيْتِهِ فِي بَنِي سَلَمَةَ وَنَحْنُ نَفَرٌ، فَقَامَ فَأَمَّنَا، وَإِنَّ مِشْجَبَهُ لَمَوْضُوعٌ عَلَيْهِ رِدَاؤُهُ قَالَ: فَتَوَشَّحَ ثَوْبًا قَالَ: مَا تَطْلُعُ عَلَى مَنْكِبَيْهِ، قَالَ مُحَمَّدٌ: حَسِبْتُ أَنَّهُ قَالَ: «نِسَاجَةً» قَالَ: فَمَا رَأَيْتُهُ إِلَّا يُرِينَا أَنَّ ذَلِكَ لَا بَأْسَ بِهِ.
قَالَ ابْنُ جُرَيْجٍ، قَالَ عَطَاءٌ: قَالَ جَابِرٌ: ” أَنَا وَأَبِي وَخَالِي مِنْ أَصْحَابِ الْعَقَبَةِ
16797. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெண், நாய், கழுதை ஆகியவை (குறுக்கே செல்வது கவனச் சிதறலால்) தொழுகையை முறித்துவிடும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி)
«يَقْطَعُ الصَّلَاةَ الْمَرْأَةُ وَالْكَلْبُ وَالْحِمَارُ»
24546. “கழுதை, இறைமறுப்பாளர், நாய், பெண் ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் ஒரு முஸ்லிமின் தொழுகையை (கவனச் சிதறலால்) முறிப்பதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களை தீய விலங்குகளுடன் (சமமாக) ஆக்கிவிட்டீர்களே!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ராஷித் பின் ஸஃத் (ரஹ்)
«لَا يَقْطَعُ صَلَاةَ الْمُسْلِمِ شَيْءٌ إِلَّا الْحِمَارُ، وَالْكَافِرُ، وَالْكَلْبُ، وَالْمَرْأَةُ» ، فَقَالَتْ عَائِشَةُ: يَا رَسُولَ اللَّهِ، لَقَدْ قُرِنَّا بِدَوَابِّ سُوءٍ
2209. இப்னு அபூஹாதிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:
நான் எனது தந்தை அபூஹாதிம் அவர்களிடம், ஸுஃப்யான் —> இப்னு தாவூஸ் —> தாவூஸ் —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் யஃலா பின் உபைத் அவர்கள் அறிவிக்கும் (கீழ்க்கண்ட) செய்தி குறித்துக் கேட்டேன்.
“(ஹம்மாம் என்று கூறப்படும்) பொதுக் குளியலறையை விட்டு நீங்கள் தவிர்ந்துக் கொள்ளுங்கள்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! அங்கு குளிப்பது அழுக்குகளைப் போக்குகிறதே!’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் அங்கு உங்கள் மறைவிடங்களை மறைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
அதற்கு எனது தந்தை அபூஹாதிம் அவர்கள், இந்தச் செய்தியை யஃலா பின் உபைத் அல்லாத மற்றவர்கள் தாவூஸ் (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் ‘முர்ஸலாக-நபித்தோழரைக் குறிப்பிடாமல்’ அறிவித்துள்ளனர் என்று கூறினார்.
احذَرُوا بَيتًا يُقالُ لَهُ : الحَمّامُ قالُوا : يا رَسُولَ اللهِ ، إِنَّهُ يُذهِبُ الدَّرَنَ وَيُنَقِّي الوَسَخَ ، قالَ : فاستَتِرُوا.
قالَ أَبِي : إِنَّما يَروُونَهُ عَن طاوُسٍ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ، مُرسَلاً.
4888. “(ஹம்மாம் என்று கூறப்படும்) பொதுக் குளியலறையை விட்டு நீங்கள் தவிர்ந்துக் கொள்ளுங்கள்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! அங்கு குளிப்பது அழுக்குகளைப் போக்குகிறதே!’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் அங்கு உங்கள் மறைவிடங்களை மறைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியை மற்றவர்கள் இப்னு தாவூஸ் —> தாவூஸ் (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் ‘முர்ஸலாக-நபித்தோழரைக் குறிப்பிடாமல்’ அறிவித்துள்ளனர்.
யஃலா பின் உபைத் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் யூஸுஃப் பின் மூஸா அவர்கள் மட்டுமே யஃலா பின் உபைத் —> ஸுஃப்யான் ஸவ்ரீ —> இப்னு தாவூஸ் —> தாவூஸ் (ரஹ்) —> இப்னு அப்பாஸ் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார் என்றே நாம் அறிகிறோம்.
யூஸுஃப் பின் மூஸா அல்லாத மற்றவர்கள் யஃலா பின் உபைத் —> ஸுஃப்யான் ஸவ்ரீ —> இப்னு தாவூஸ் —> தாவூஸ் (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் ‘முர்ஸலாக-நபித்தோழரைக் குறிப்பிடாமல்’ அறிவித்துள்ளனர்.
احْذَرُوا بَيْتًا يُقَالُ لَهُ: الْحَمَّامُ قَالُوا: يَا رَسولَ اللهِ يُنَقِّي الْوَسَخَ قَالَ: فَاسْتَتِرُوا.
சமீப விமர்சனங்கள்