4858.
وَلَمْ يَقُلْ: عَن ابنِ عَبَّاسٍ.
4857.
لَمْ يُرَ لِلْمُتَحَابَّيْنِ مِثْلُ التَّزْوِيجِ.
15915.
«لَمْ نَرَ لِلْمُتَحَابَّيْنِ مِثْلَ النِّكَاحِ»
10377.
«لَمْ أَرَ لِلْمُتَحَابَّيْنِ مِثْلَ النِّكَاحِ»
10319. இப்ராஹீம் பின் மைஸரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு வாலிபர் தன்னை விரும்பிய பெண்ணை, திருமணம் செய்துக்கொள்ள (அவளது உறவினர்களிடம்) பெண் பேசினார். அந்தப் பெண்ணை அவருக்கு திருமணம் செய்து கொடுக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.
நான் இது பற்றி தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள், “இருவரில் ஒருவரையொருவர் நேசித்துக் கொள்ளும் காரணங்களில் திருமணத்தைப் போன்று (வேறு எதுவும்) காணப்படவில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக குறிப்பிட்டுவிட்டு (அந்த பெண்ணை அவருக்கு) திருமணம் செய்துவைக்குமாறு எனக்கு கட்டளையிட்டார்கள்.
خَطَبَ رَجُلٌ شَابٌّ امْرَأَةً قَدْ أَحَبَّتْهُ، فَأَبَوْا أَنْ يُزَوِّجُوهَا إِيَّاهُ، فَسَأَلْتُ طَاوُسًا، فَقَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَمْ يُرَ لِلْمُتَحَابِّينَ مِثْلُ النِّكَاحِ»، وَأَمَرَنِي أَنْ أُزَوِّجَ
1847. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இருவரில் ஒருவரையொருவர் நேசித்துக் கொள்ளும் காரணங்களில் திருமணத்தைப் போன்று (வேறு எதையும்) நாம் பார்க்கவில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
«لَمْ نَرَ – يُرَ – لِلْمُتَحَابَّيْنِ مِثْلُ النِّكَاحِ»
பாடம்:
இஸ்லாமிய அரசின்கீழ் வாழும், (நோயுற்ற) பிறமதத்தவர்களை நலம் விசாரித்தல்.
3095. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி-ஸல்-அவர்களுக்குப் பணி விடை செய்து கொண்டிருந்த) ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே, அவனை நோய் விசாரிக்க நபி (ஸல்) அவர்கள் அவனிடம் வந்து, அவனுடைய தலை மாட்டில் அமர்ந்து, ‘இஸ்லாதை ஏற்றுக் கொள்!’ என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான்.
அப்போது அவர், ‘அபுல் காஸிம் (நபி-ஸல்) அவர்களின் கூற்றுக்குக் கட்டுப்படு’ என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றான். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே சகல புகழும்’ எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.
أَنَّ غُلَامًا، مِنَ الْيَهُودِ كَانَ مَرِضَ فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ فَقَعَدَ عِنْدَ رَأْسِهِ، فَقَالَ لَهُ: أَسْلِمْ فَنَظَرَ إِلَى أَبِيهِ، وَهُوَ عِنْدَ رَأْسِهِ، فَقَالَ لَهُ أَبُوهُ: أَطِعْ أَبَا الْقَاسِمِ فَأَسْلَمَ، فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ يَقُولُ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْقَذَهُ بِي مِنَ النَّارِ»
3973. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பயணத்தின் போது, நபி (ஸல்) அவர்களுடன் நான் இருந்தேன். ஒருநாள் அவர்களுக்கு நெருக்கமாக நான் இருந்த போது, “அல்லாஹ்வின் தூதரே! என்னை சொர்க்கத்தில் நுழையச் செய்து, நரகத்திலிருந்து தூரமாக்கும் நற்செயலை எனக்கு அறிவியுங்கள்!” என்று கேட்டேன்.
அதற்கவர்கள், “நீர் பெரிய விஷயத்தை பற்றி என்னிடம் கேட்டு விட்டீர்; அல்லாஹ் யாருக்கு அதனை இலகுவாக்கித் தருகிறானோ அவருக்கு அது இலகுவானது தான். (அவைகள்:)
அல்லாஹ்வை வணங்குவீராக! அவனுக்கு எதையும் இணை வைக்க வேண்டாம்! தொழுகையைப் பேணி, ஸகாத்தையும் வழங்குவீராக! ரமலானில் நோன்பு வைப்பீராக! கஅபா எனும் ஆலயத்திற்கு சென்று ஹஜ் செய்வீராக!” என்று கூறினார்கள்.
பிறகு அவர்கள், “நன்மைகளின் வாசல்களை உமக்கு கூறட்டுமா?” என்று கேட்டு விட்டு, நோன்பு பாவங்களை தடுக்கும் கேடயமாகும். தண்ணீர் நெருப்பை அணைப்பது போல் அது பாவத்தை போக்கி விடும். அத்துடன் ஒரு மனிதன் நடுஇரவில் தொழுவதும் (கேடயமும், பாவங்களைப் போக்குவதும்) ஆகும்” என்று கூறிவிட்டு,
அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்.
அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குப்
كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَأَصْبَحْتُ يَوْمًا قَرِيبًا مِنْهُ وَنَحْنُ نَسِيرُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الْجَنَّةَ، وَيُبَاعِدُنِي مِنَ النَّارِ، قَالَ: «لَقَدْ سَأَلْتَ عَظِيمًا، وَإِنَّهُ لَيَسِيرٌ عَلَى مَنْ يَسَّرَهُ اللَّهُ عَلَيْهِ، تَعْبُدُ اللَّهَ لَا تُشْرِكُ بِهِ شَيْئًا، وَتُقِيمُ الصَّلَاةَ، وَتُؤْتِي الزَّكَاةَ، وَتَصُومُ رَمَضَانَ، وَتَحُجَّ الْبَيْتَ»
ثُمَّ قَالَ: ” أَلَا أَدُلُّكَ عَلَى أَبْوَابِ الْخَيْرِ؟ الصَّوْمُ جُنَّةٌ، وَالصَّدَقَةُ تُطْفِئُ الْخَطِيئَةَ كَمَا يُطْفِئُ النَّارَ الْمَاءُ، وَصَلَاةُ الرَّجُلِ مِنْ جَوْفِ اللَّيْلِ، ثُمَّ قَرَأَ {تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ} [السجدة: 16] حَتَّى بَلَغَ {جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ} [السجدة: 17] “
ثُمَّ قَالَ: «أَلَا أُخْبِرُكَ بِرَأْسِ الْأَمْرِ، وَعَمُودِهِ، وَذُرْوَةِ سَنَامِهِ؟ الْجِهَادُ»
ثُمَّ قَالَ: «أَلَا أُخْبِرُكَ بِمِلَاكِ ذَلِكَ كُلِّهِ؟» قُلْتُ: بَلَى، فَأَخَذَ بِلِسَانِهِ، فَقَالَ: «تَكُفُّ عَلَيْكَ هَذَا» قُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ وَإِنَّا لَمُؤَاخَذُونَ بِمَا نَتَكَلَّمُ بِهِ؟ قَالَ: «ثَكِلَتْكَ أُمُّكَ يَا مُعَاذُ وَهَلْ يُكِبُّ النَّاسَ عَلَى وُجُوهِهِمْ فِي النَّارِ، إِلَّا حَصَائِدُ أَلْسِنَتِهِمْ؟»
2045. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக அல்லாஹ், என் சமுதாயத்தினரின் (வேண்டுமென்றே செய்யாத) தவறுகளையும், மறதியையும், அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுச் செய்ததையும் மன்னித்துவிட்டான்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
«إِنَّ اللَّهَ وَضَعَ عَنْ أُمَّتِي الْخَطَأَ، وَالنِّسْيَانَ، وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ»
பாடம்:
3540. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் கூறுகிறான்:
ஆதமின் மகனே! நீ எதுவரை என்மீது ஆதரவு வைத்து, என்னிடம் கோரிக்கை வைத்துக் கொண்டு இருப்பாயோ அதுவரை நீ எந்த நிலையில் இருந்தாலும் நான் உன்னை மன்னித்துக் கொண்டேயிருப்பேன். அதை நான் ஒரு பாரமாகக் கருதுவதில்லை.
ஆதமின் மகனே! உன்னுடைய பாவங்கள் வானத்தை எட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டாலும் பின்னரும், நீ என்னிடம் மீண்டு மன்னிப்புக் கேட்டால், நான் உன்னை மன்னிக்கவே செய்வேன். அதை நான் ஒரு பாரமாகக் கருதுவதில்லை.
ஆதமின் மகனே! நீ பூமியை நிரப்பும் அளவுக்கு பாவங்கள் செய்து விட்ட பிறகும் கூட, எனக்கு இணை வைக்காத நிலையில் என்னிடம் மீண்டுவந்தால் அப்போதும் உன்னுடைய அந்த அளவிற்கான பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கவே செய்வேன்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இந்தச் செய்தியை இந்த வகை அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே நாம் அறிகிறோம்.
قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: يَا ابْنَ آدَمَ إِنَّكَ مَا دَعَوْتَنِي وَرَجَوْتَنِي غَفَرْتُ لَكَ عَلَى مَا كَانَ فِيكَ وَلَا أُبَالِي، يَا ابْنَ آدَمَ لَوْ بَلَغَتْ ذُنُوبُكَ عَنَانَ السَّمَاءِ ثُمَّ اسْتَغْفَرْتَنِي غَفَرْتُ لَكَ، وَلَا أُبَالِي، يَا ابْنَ آدَمَ إِنَّكَ لَوْ أَتَيْتَنِي بِقُرَابِ الأَرْضِ خَطَايَا ثُمَّ لَقِيتَنِي لَا تُشْرِكُ بِي شَيْئًا لَأَتَيْتُكَ بِقُرَابِهَا مَغْفِرَةً
சமீப விமர்சனங்கள்