Author: Abdul Hakkim

Tirmidhi-1633

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

அல்லாஹ்வின் பாதையில் (போரில்) படும் புழுதியின் சிறப்பு பற்றி வந்துள்ளவை.

1633. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கறந்த பால் எப்படி திரும்ப மடுவுக்குள் புகாதோ, அதுபோன்று அல்லாஹ்வின் அச்சத்தால் அழுத எந்த மனிதரும் நரகத்தில் நுழைய மாட்டார்.

அல்லாஹ்வின் பாதையில் (போரில்) படும் புழுதியும், நரகத்தின் புகையும் (ஒரு முஸ்லிமின் உடலில்) ஒன்று சேராது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களின் (குடும்பத்தாரின்) அடிமையாவார். மேலும் இவர் மதீனாவைச் சேர்ந்தவர் ஆவார்.


«لَا يَلِجُ النَّارَ رَجُلٌ بَكَى مِنْ خَشْيَةِ اللَّهِ حَتَّى يَعُودَ اللَّبَنُ فِي الضَّرْعِ، وَلَا يَجْتَمِعُ غُبَارٌ فِي سَبِيلِ اللَّهِ وَدُخَانُ جَهَنَّمَ»


Almujam-Alkabir-7918

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7918. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரு துளிகளையும், இரு அடையாளங்களையும் விட அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானவை வேறு எதுவும் இல்லை. (அவ்விரு துளிகள்:)

1 . அல்லாஹ்வின் அச்சத்தினால் அழுத கண்ணீர்த் துளி.

2 . அல்லாஹ்வின் பாதையில் ஓட்டப்பட்ட இரத்தத் துளி.

அவ்விரு அடையாளங்கள்:

1 . அல்லாஹ்வின் பாதையில் ஏற்படும் அடையாளம்.

2 . அல்லாஹ்வின் கடமைகளில் ஏதேனும் ஒரு கடமையை நிறைவேற்றும்போது ஏற்படும் அடையாளம்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)


لَيْسَ شَيْءٌ أَحَبَّ إِلَى اللهِ مِنْ قَطْرَتَيْنِ وَأَثَرَيْنِ: قَطْرَةُ دُمُوعٍ مِنْ خَشْيَةِ اللهِ، وَقَطْرَةُ دَمٍ تُهْرَاقُ فِي سَبِيلِ اللهِ. وَأَمَّا الْأَثَرَانِ: فَأَثَرٌ فِي سَبِيلِ اللهِ، وَأَثَرٌ فِي فَرِيضَةٍ مِنْ فَرَائِضِ اللهِ


Tirmidhi-1669

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

1669. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரு துளிகளையும், இரு அடையாளங்களையும் விட அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானவை வேறு எதுவும் இல்லை. (அவ்விரு துளிகள்:)

1 . அல்லாஹ்வின் அச்சத்தினால் அழுத கண்ணீர்த் துளி.

2 . அல்லாஹ்வின் பாதையில் ஓட்டப்பட்ட இரத்தத் துளி.

அவ்விரு அடையாளங்கள்:

1 . அல்லாஹ்வின் பாதையில் ஏற்படும் அடையாளம்.

2 . அல்லாஹ்வின் கடமைகளில் ஏதேனும் ஒரு கடமையை நிறைவேற்றும்போது ஏற்படும் அடையாளம்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

 


لَيْسَ شَيْءٌ أَحَبَّ إِلَى اللَّهِ مِنْ قَطْرَتَيْنِ وَأَثَرَيْنِ، قَطْرَةٌ مِنْ دُمُوعٍ فِي خَشْيَةِ اللَّهِ، وَقَطْرَةُ دَمٍ تُهَرَاقُ فِي سَبِيلِ اللَّهِ، وَأَمَّا الأَثَرَانِ: فَأَثَرٌ فِي سَبِيلِ اللَّهِ، وَأَثَرٌ فِي فَرِيضَةٍ مِنْ فَرَائِضِ اللَّهِ


Ibn-Majah-1801

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

1801.


جَاءَنَا مُصَدِّقُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخَذْتُ بِيَدِهِ وَقَرَأْتُ فِي عَهْدِهِ: ” لَا يُجْمَعُ بَيْنَ مُتَفَرِّقٍ، وَلَا يُفَرَّقُ بَيْنَ مُجْتَمِعٍ، خَشْيَةَ الصَّدَقَةِ، فَأَتَاهُ رَجُلٌ بِنَاقَةٍ عَظِيمَةٍ مُلَمْلَمَةٍ، فَأَبَى أَنْ يَأْخُذَهَا، فَأَتَاهُ بِأُخْرَى دُونَهَا، فَأَخَذَهَا، وَقَالَ: أَيُّ أَرْضٍ تُقِلُّنِي، وَأَيُّ سَمَاءٍ تُظِلُّنِي، إِذَا أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ أَخَذْتُ خِيَارَ إِبِلِ رَجُلٍ مُسْلِمٍ


Bazzar-257

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

257.


أنه لما نزل عذرها قبل أبو بكر رأسها فقالت: ألا عذرتني؟ فقال: أي سماء تظلني أو أي أرض تقلني إن قلت ما لا أعلم.


Musannaf-Ibn-Abi-Shaybah-30103

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

30103. ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு மஸ்ஊத் (ரலி), அலீ (ரலி) ஆகியோரின் மாணவர்களை நான் சந்தித்துள்ளேன். அவர்களில் யாருக்கும் (குர்ஆன் விரிவுரை பற்றி) கல்வி ஞானம் இல்லை. எனவே அவர்களிடமிருந்து குர்ஆனின் விரிவுரையை (கேட்பதை) நான் வெறுக்கிறேன்.

அல்லாஹ்வின் வேதத்தில் (உள்ள ஒன்றுக்கு), நான் அறியாத ஒன்றை (விளக்கமாக) கூறினால் எந்த வானம் எனக்கு நிழல் தரும்? எந்த பூமி என்னை சுமந்து கொள்ளும்? என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள் (என்பது தான் இதற்கான காரணம்).


أَدْرَكْتُ أَصْحَابَ عَبْدِ اللَّهِ، وَأَصْحَابَ عَلِيٍّ وَلَيْسَ هُمْ لِشَيْءٍ مِنَ الْعِلْمِ أَكْرَهُ مِنْهُمْ لِتَفْسِيرِ الْقُرْآنِ، قَالَ: وَكَانَ أَبُو بَكْرٍ يَقُولُ: «أَيُّ سَمَاءٍ تُظِلُّنِي، وَأَيُّ أَرْضٍ تُقِلُّنِي إِذَا قُلْتُ فِي كِتَابِ اللَّهِ مَا لَا أَعْلَمُ»


Musannaf-Ibn-Abi-Shaybah-30107

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

30107. இப்ராஹீம் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

கனிகளையும், தீவனங்களையும் அதில் முளைக்கச் செய்தோம். (அல்குர்ஆன் 80:31) எனும் வசனத்தின் விளக்கம் பற்றி அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “அல்லாஹ்வின் வேதத்தில் தெரியாத ஒன்றை நான் (விளக்கமாக) கூறினால் எந்த வானம் எனக்கு நிழல் தரும்? எந்த பூமி என்னை சுமந்து கொள்ளும்? என்று பதிலளித்தார்கள்.


أَنَّ أَبَا بَكْرٍ سُئِلَ عَنْ {فَاكِهَةً وَأَبًّا} [عبس: 31]، فَقَالَ: «أَيُّ سَمَاءٍ تُظِلُّنِي، وَأَيُّ أَرْضٍ تُقِلُّنِي إِذَا قُلْتُ فِي كِتَابِ اللَّهِ مَا لَا أَعْلَمُ»


Shuabul-Iman-2082

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2082. காஸிம் பின் முஹம்மது (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் வேதத்திற்கு (என்னுடைய) சுயஅறிவைக்கொண்டு நான் (விளக்கமாக) கூறிவிட்டால், எந்த வானம் எனக்கு நிழல் தரும்? எந்த பூமி என்னை சுமந்து கொள்ளும்? என்று அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பைஹகீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை இப்னு அபூமுலைகா (ரஹ்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார். அதில், “அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஒரு வசனத்திற்கு தூயோனும் உயர்ந்தோனுமான; அல்லாஹ் நாடாத ஒன்றை நான் (விளக்கமாக) கூறிவிட்டால்” என்று இடம்பெற்றுள்ளது.

இதுவும் (மேற்கண்டசெய்தி) போன்றே முர்ஸலாகும். (அதாவது முன்கதிஃ ஆகும்)


أَيُّ سَمَاءٍ تُظِلُّنِي، وَأَيُّ أَرْضٍ تُقِلُّنِي إِذَا قُلْتُ فِي كِتَابِ اللهِ بِرَأْيٍ “

وَرَوَاهُ ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ أَبِي بَكْرٍ، كَذَلِكَ مُرْسَلًا، وَقَالَ فِي مَتْنِهِ: ” إِذَا أَنَا قُلْتُ فِي آيَةٍ مِنْ كِتَابِ اللهِ بِغَيْرِ مَا أَرَادَ اللهُ سُبْحَانَهُ وَتَعَالَى بِهَا “


Almujam-Alkabir-7113

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7113. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கத்னா எனும்) விருத்தசேதனம் செய்வது ஆண்களுக்கு சுன்னதாகும். பெண்களுக்கு அது சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)


«الْخِتَانُ سُنَّةٌ لِلرِّجَالِ، وَمَكْرَمَةٌ لِلنِّسَاءِ»


Almujam-Alkabir-7112

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

7112. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கத்னா எனும்) விருத்தசேதனம் செய்வது ஆண்களுக்கு சுன்னதாகும். பெண்களுக்கு அது சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)


«الْخِتَانُ سُنَّةٌ لِلرِّجَالِ وَمَكْرَمَةٌ لِلنِّسَاءِ»


Next Page » « Previous Page