Author: Abdul Hakkim

Ibn-Hibban-6532

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6532. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் கைகளில் பேரீச்சம்பழங்களை சேகரித்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இதில் பரக்கத் உண்டாகும்படி எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினேன். அப்போது அவர்கள் எனக்காக பரக்கத் உண்டாகும்படி பிரார்த்தித்தார்கள். மேலும், “நீ ஏதாவது எடுக்க விரும்பினால், உன் கையை உள்ளே விட்டு எடுத்துக்கொள்; அதைச் சிதறவிடாதே” என்று கூறினார்கள்.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: “அந்த பேரீச்சம்பழங்களிலிருந்து நான் அல்லாஹ்வுடைய பாதையில் இத்தனை இத்தனை வஸ்க் அளவு (சுமார் 120 கிலோ) பயன்படுத்தியிருக்கிறேன். நாங்கள் அதிலிருந்து உண்போம்; (பிறருக்கும்) உணவளிப்போம். அது உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சி கால இரவுகளில் என்னிடமிருந்து துண்டிக்கப்படும்வரை என் இடுப்பில் (பையில்) இருந்தது.


أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمَرَاتٍ قَدْ صَفَفْتُهُنَّ فِي يَدَيَّ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ ادْعُ لِي فِيهِنَّ بِالْبَرَكَةِ، فَدَعَا لِي فِيهِنَّ بِالْبَرَكَةِ، وَقَالَ: «إِذَا أَرَدْتَ أَنْ تَأْخُذَ شَيْئًا فَأَدْخِلْ يَدَكَ، وَلَا تَنْثُرْهُ نَثْرًا»، قَالَ أَبُو هُرَيْرَةَ: «فَحَمَلْتُ مِنْ ذَلِكَ التَّمْرِ كَذَا وَكَذَا وَسْقًا فِي سَبِيلِ اللَّهِ، وَكُنَّا نَطْعَمُ مِنْهُ وَنُطْعِمُ، وَكَانَ فِي حِقْوِي حَتَّى انْقَطَعَ مِنِّي لَيَالِيَ عُثْمَانَ»


Musnad-Ahmad-8628

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8628. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருநாள் நான் சில பேரீச்சம்பழங்களை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து, “இவற்றில் பரக்கத் உண்டாகும்படி எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினேன். அப்போது அவர்கள் அந்தப் பழங்களை தம் முன் ஒழுங்குபடுத்தி வைத்தார்கள். பிறகு பிரார்த்தனை செய்தார்கள். பின்னர் என்னிடம், “இவற்றை ஒரு பையில் வைத்துக்கொள். அதில் உன் கையை உள்ளே விட்டு எடுத்துக்கொள். அவற்றைச் சிதறவிடாதே” என்று கூறினார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: “நான் அதிலிருந்து அல்லாஹ்வுடைய பாதையில் இத்தனை இத்தனை வஸ்க் அளவு (சுமார் 120 கிலோ) பயன்படுத்தியிருக்கிறேன். நாங்கள் சாப்பிடுவோம், (பிறருக்கும்) உணவளிப்போம். அது என் இடுப்பை விட்டுப் பிரியாமல் இருந்தது. உஸ்மான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது, அது என் இடுப்பிலிருந்து துண்டிக்கப்பட்டு கீழே விழுந்துவிட்டது.


أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا بِتَمَرَاتٍ، فَقُلْتُ: ادْعُ اللَّهَ لِي فِيهِنَّ بِالْبَرَكَةِ، قَالَ: فَصَفَّهُنَّ بَيْنَ يَدَيْهِ، قَالَ: ثُمَّ دَعَا، فَقَالَ لِي: «اجْعَلْهُنَّ فِي مِزْوَدٍ، فَأَدْخِلْ يَدَكَ، وَلَا تَنْثُرْهُ» قَالَ: «فَحَمَلْتُ مِنْهُ كَذَا وَكَذَا وَسْقًا فِي سَبِيلِ اللَّهِ، وَنَأْكُلُ، وَنُطْعِمُ، وَكَانَ لَا يُفَارِقُ حَقْوِي، فَلَمَّا قُتِلَ عُثْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُ، انْقَطَعَ عَنْ حَقْوِي، فَسَقَطَ»


Musnad-Ishaq-Ibn-Rahawayh-3

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் கைகளில் பேரீச்சம்பழங்களை சேகரித்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! இதில் பரக்கத் உண்டாகும்படி அல்லாஹ்விடம் எனக்காக பிரார்த்தியுங்கள்” என்று கூறினேன். அப்போது அவர்கள் எனக்காக பரக்கத் உண்டாகும்படி பிரார்த்தித்தார்கள். பிறகு, “நீ ஏதாவது எடுக்க விரும்பினால், உன் கையை உள்ளே விட்டு எடுத்துக்கொள்; அதை சிதறவிடாதே” என்று கூறினார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: “அந்த பேரீச்சம்பழங்களிலிருந்து நான் அல்லாஹ்வுடைய பாதையில் இத்தனை இத்தனை வஸ்க் அளவு (சுமார் 120 கிலோ) சுமைகளை (பயன்படுத்தியிருக்கிறேன்). நாங்கள் அதிலிருந்து உண்போம்; மற்றவர்களுக்கும் உணவளிப்போம். அது உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சி கால இரவுகளில் என்னிடமிருந்து துண்டிக்கப்படும்வரை என் இடுப்பில் இருந்தது.


أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمَرَاتٍ قَدْ صَفَّيْتُهُنَّ فِي يَدِي، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، ادْعُ اللَّهَ لِي فِيهِنَّ بِالْبَرَكَةِ، فَدَعَا لِي فِيهِنَّ بِالْبَرَكَةِ، فَقَالَ: «إِذَا أَرَدْتَ أَنْ تَأْخُذَ شَيْئًا فَأَدْخِلْ يَدَكَ وَلَا تَنْثُرْهُ نَثْرًا» ، قَالَ: أَبُو هُرَيْرَةَ: فَحَمَلْتُ مِنْ ذَلِكَ التَّمْرِ كَذَا وَكَذَا وَسْقًا فِي سَبِيلِ اللَّهِ، قَالَ: فَكُنَّا نَأْكُلُ مِنْهُ وَنُطْعِمُ، وَكَانَ فِي حِقْوِي حَتَّى انْقَطَعَ مِنِّي لَيَالِيَ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ


Nasaayi-879

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

(தொழுகையின் ஆரம்பத்தில்) காதுகளுக்கு நேராக கைகளை உயர்த்துதல்.

879. வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதேன். அவர்கள் தொழுகையை ஆரம்பித்தபோது, அல்லாஹு அக்பர் என தக்பீர் கூறி, தம் கைகளை தம் காதுகளுக்கு நேராக உயர்த்தினார்கள். பிறகு, அல்குர்ஆனின் முதல் அத்தியாயத்தை ஓதி முடித்ததும், “ஆமீன்” என்று தம் சத்தத்தை உயர்த்திச் சொன்னார்கள்.


صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا افْتَتَحَ الصَّلَاةَ كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا أُذُنَيْهِ، ثُمَّ يَقْرَأُ بِفَاتِحَةِ الْكِتَابِ فَلَمَّا فَرَغَ مِنْهَا قَالَ: «آمِينَ» يَرْفَعُ بِهَا صَوْتَهُ


Musannaf-Abdur-Razzaq-21583

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

21583. இப்னு ஸீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்களை பஹ்ரைனுக்கு ஆளுநராக நியமித்தார்கள். (அங்கிருந்து திரும்பிய) அபூஹுரைரா (ரலி) அவர்கள் பத்தாயிரம் (திர்ஹம்களை) கொண்டு வந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “ஓ அல்லாஹ்வின் பகைவரே! அவனது வேதத்தின் பகைவரே! இந்த அல்லாஹ்வின் செல்வங்களை நீர் மோசடியாக எடுத்துக்கொண்டீரா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அபூஹுரைரா (ரலி), “நான் அல்லாஹ்வின் பகைவனும் அல்ல; அவனது வேதத்தின் பகைவனும் அல்ல. மாறாக, அவ்விருவருக்கும் பகைமை பாராட்டுபவர்களுக்கே நான் பகைவன்” என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி), “இந்த செல்வம் உமக்கு எங்கிருந்து கிடைத்தது?” என்று வினவினார்கள். அபூ ஹுரைரா (ரலி), “எனது குதிரைகள் குட்டிகள் போட்டன. எனது அடிமைகளின் வருமானம், எனக்குத் தொடர்ந்து கிடைத்த அன்பளிப்புகள் ஆகியவற்றிலிருந்துதான் கிடைத்தது” என்று கூறினார்கள். அதை உமர் (ரலி) விசாரித்துப் பார்த்தபோது, அபூ ஹுரைரா (ரலி) சொன்னது போலவே இருந்தது.

அதற்குப் பிறகு, உமர் (ரலி) அவர்கள் அபூ ஹுரைரா (ரலி) அவர்களை மீண்டும் ஒரு பதவிக்கு அழைக்க, அவர்கள் மறுத்துவிட்டார்கள். உமர் (ரலி), “வேலை செய்வதை நீர் வெறுக்கிறீரா? உம்மை விட சிறந்தவரான யூசுப் (அலை) அவர்கள் பதவியைக் கேட்டுப் பெற்றாரே!” என்று

أَنَّ عُمَرَ بن الْخَطَّابِ اسْتَعْمَلَ أَبَا هُرَيرَةَ عَلَى الْبَحْرَيْنِ، فَقَدِمَ بَعَشَرَةِ آلاَفٍ، فَقَالَ لَهُ عُمَرُ: اسْتَأْثَرْتَ بِهَذِهِ الأَمْوَالِ يَا عَدُوَّ اللهِ، وَعَدُوَّ كِتَابِهِ، قَالَ أَبو هُرَيرَةَ: لَسْتُ عَدُوَّ اللهِ، وَلاَ عَدُوَّ كِتَابِهِ، وَلَكِنِّي عَدُوُّ مَنْ عَادَاهُمَا، قَالَ: فَمِنْ أَيْنَ هِيَ لَكَ؟ قَالَ: خَيْلٌ لِي تَنَاتَجَتْ، وَغَلَّةُ رَقِيقٍ لِي، وَأُعْطِيَةٌ تَتَابَعَتْ عَلَيَّ، فَنَظَرُوهُ، فَوَجَدُوهُ كَمَا قَالَ، قَالَ: فَلَمَّا كَانَ بَعْدَ ذَلِكَ، دَعَاهُ عُمَرُ لِيَسْتَعْمِلَهُ، فَأَبَى أَنْ يَعْمَلَ لَهُ، فَقَالَ: أتَكْرَهُ الْعَمَلَ، وَقَدْ طَلَبَ الْعَمَلَ مَنْ كَانَ خَيْرًا مِنْكَ يُوسُفُ؟ قَالَ: إِنَّ يُوسُفَ نَبِيٌّ ابْنُ نَبِيٍّ ابْنِ نَبِيٍّ، وَأَنَا أَبو هُرَيرَةَ ابْنُ أُمَيَّةَ، أَخْشَى ثَلاَثًا وَاثْنَيْنِ، قَالَ لَهُ عُمَرُ: أَفَلاَ قُلْتَ: خَمْسًا؟ قَالَ: لاَ، أَخْشَى أَنْ أَقُولَ بِغَيْرِ عِلْمٍ، وَأَقْضِيَ بِغَيْرِ حُكْمٍ، وَيُضْرَبَ ظَهْرِي، وَيُنْتَزَعَ مَالِي، وَيُشْتَمَ عِرْضِي.


Tirmidhi-2367

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

2367. முஹம்மத் பின் ஸீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் சிவப்புக் களிமண் சாயம் இடப்பட்ட இரண்டு சணல் ஆடைகளை அணிந்திருந்தார்கள். அப்போது அவர்கள் அதில் ஒரு ஆடையினால் மூக்குச் சிந்திவிட்டு “அடடா! அபூஹுரைரா! சணல் துணியிலேயே மூக்குச் சிந்துகிறாயே! (ஒரு காலத்தில்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது சொற்பொழிவு மேடை(மிம்பரு)க்கும் ஆயிஷா (ரலி) அவர்களது அறைக்குமிடையே (பசியால்) மயக்கமடைந்து விழுந்துக் கிடப்பேன்.

அங்கு வருபவர் எவரேனும் வந்து நான் பைத்தியக்காரன் என்று நினைத்து என் கழுத்தின் மீது கால் வைப்பார். ஆனால், எனக்குப் பசிதான் (மேலிட்டு) இருக்கும்; பைத்தியம் எதுவும் இருக்காது (அந்த அளவுக்கு வறுமையில் இருந்தேன்.)” என்று சொன்னார்கள்.


كُنَّا عِنْدَ أَبِي هُرَيْرَةَ، وَعَلَيْهِ ثَوْبَانِ مُمَشَّقَانِ مِنْ كَتَّانٍ فَتَمَخَّطَ فِي أَحَدِهِمَا ثُمَّ قَالَ: «بَخٍ بَخٍ يَتَمَخَّطُ أَبُو هُرَيْرَةَ فِي الكَتَّانِ، لَقَدْ رَأَيْتُنِي وَإِنِّي لَأَخِرُّ فِيمَا بَيْنَ مِنْبَرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحُجْرَةِ عَائِشَةَ مِنَ الجُوعِ مَغْشِيًّا عَلَيَّ، فَيَجِيءُ الجَائِي فَيَضَعُ رِجْلَهُ عَلَى عُنُقِي يَرَى أَنَّ بِيَ الجُنُونَ، وَمَا بِي جُنُونٌ وَمَا هُوَ إِلَّا الجُوعُ»


Al-Adabul-Mufrad-1283

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம்:

ஆடையில் மூக்குச் சிந்துதல்.

1283. அபூஹுரைரா (ரலி) அவர்கள், தன்னுடைய ஆடையை எடுத்து அதில் மூக்கைச் சிந்திவிட்டு, “ஆஹா! அபூஹுரைரா, பருத்தி ஆடை கொண்டு மூக்கைச் சிந்தும் நிலைக்கு வந்துவிட்டாரே!” என்று கூறினார்.
மேலும், “நான் ஆயிஷா (ரலி) அவர்களின் அறைக்கும் மிம்பருக்கும் (உரைமேடைக்கும்) இடையே மயங்கி விழுந்து கிடப்பேன். அப்போது மக்கள், ‘இவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது’ என்பார்கள். ஆனால், எனக்கு இருந்தது பசி மட்டுமே” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஹம்மத் பின் ஸீரீன் (ரஹ்)


أَنَّهُ تَمَخَّطَ فِي ثَوْبِهِ ثُمَّ قَالَ: بَخٍ بَخٍ، أَبُو هُرَيْرَةَ يَتَمَخَّطُ فِي الْكَتَّانِ، رَأَيْتُنِي أُصْرَعُ بَيْنَ حُجْرَةِ عَائِشَةَ وَالْمِنْبَرِ، يَقُولُ النَّاسُ: مَجْنُونٌ، وَمَا بِي إِلَّا الْجُوعُ


Musannaf-Abdur-Razzaq-14941

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

14941. முஹம்மத் பின் ஸீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் சிவப்புக் களிமண் சாயம் இடப்பட்ட இரண்டு சணல் ஆடைகளை அணிந்திருந்தார்கள்.

அவர்கள் அப்போது மூக்குச் சிந்திவிட்டு “அல்ஹம்து லில்லாஹ்-அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். இந்த அபூஹுரைரா! சணல் துணியிலேயே மூக்குச் சிந்துகிறார்! (ஒரு காலத்தில்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது சொற்பொழிவு மேடை(மிம்பரு)க்கும் ஆயிஷா (ரலி) அவர்களது அறைக்குமிடையே (பசியால்) மயக்கமடைந்து விழுந்துக் கிடப்பேன். அங்கு வருபவர் எவரேனும் வந்து என் மார்பின் மீது அமர்வார். (அவர் என்னை ஒரு வியாதி பிடித்தவர் என்று நினைத்து சிகிச்சையளிப்பார்). நான் அவரிடம், ‘அது வியாதியால் அல்ல, பசியால் ஏற்பட்டதுதான்’ என்று கூறுவேன். (அந்த அளவுக்கு வறுமையில் இருந்தேன்.)” என்று சொன்னார்கள்.

மேலும் அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்:

நான் ஒரு காலத்தில் இப்னு அஃப்ஃபான், கஸ்வானின் மகள் ஆகியோரிடம் கூலித் தொழிலாளியாக வேலை செய்தேன். என் வேலை, அவர்களின் பயணவாகனத்தை கால்நடையாக ஓட்டிச் செல்வதும், எனக்கு வயிறு நிறைய உணவு பெறுவதும் மட்டும்தான். அவர்கள் ஒரு இடத்தில் தங்கியிருக்கும்போது அவர்களுக்கு சேவை செய்வேன். அவர்கள் பயணத்தைத் தொடங்கும் போது, அவர்களின்

كُنَّا عِنْدَهُ وَعَلَيْهِ ثَوْبَانِ مُمَشَّقَانِ، فَتَمَخَّطَ ثُمَّ مَسَحَ أَنْفَهُ بِثَوبِهِ قَالَ: «الْحَمْدُ للَّهِ يَمْتَخِطُ أَبُو هُرَيْرَةَ فِي الْكِتَّانِ، لَقَدْ رَأَيْتُنِي وَإِنِّي لَأَخِرُّ فِيمَا بَيْنَ مِنْبَرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحُجْرَةِ عَائِشَةَ مَغْشِيًّا عَلَيَّ مِنَ الْجُوعِ، فَيَجِيءُ الرَّجُلُ فَيَقْعُدُ عَلَى صَدْرِي، فَأَقُولُ لَيْسَ بِي ذَلِكَ إِنَّمَا هُوَ مِنَ الْجُوعِ» قَالَ: وَقَالَ: ” إِنِّي كُنْتُ أَجِيرًا لِابْنِ عَفَّانَ، وَابْنَةِ غَزْوَانَ عَلَى عُقْبَةِ رِجْلِي وَشَبَعِ بَطْنِي – أَوْ قَالَ: بِطَعَامِ بَطْنِي – أَخْدِمُهُمْ إِذَا نَزَلُوا، وَأَسُوقُ بِهِمْ إِذَا ارْتَحَلُوا ” قَالَ: ” فَقَالَتْ يَوْمًا: لَتَرْكَبَنَّهُ قَائِمًا، وَلَتَرِدَنَّهُ حَافِيًا قَالَ: فَزَوَّجَنِيهَا اللَّهُ تَعَالَى، فَقُلْتُ: لَتَرِدِنَّهُ حَافِيَةً، وَلَتَرْكَبِنَّهُ وَهُوَ قَائِمٌ ” قَالَ: وَكَانَتْ فِيهِ مُزَاحَةٌ، يَعْنِي أَبَا هُرَيْرَةَ


Ibn-Majah-2445

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2445. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அநாதையாக வளர்ந்தேன்; ஏழையாக ஹிஜ்ரத் செய்தேன். ஃகஸ்வான் அவர்களின் மகளிடம், கூலித் தொழிலாளியாக வேலை செய்தேன். என் வேலை, அவர்களின் பயணவாகனத்தை கால்நடையாக ஓட்டிச் செல்வதும், எனக்கு வயிறு நிறைய உணவு பெறுவதும் மட்டும்தான். அவர்கள் வாகனத்திலிருந்து இறங்கி தங்கியபோது அவர்களுக்காக விறகு சேகரித்தேன்; அவர்கள் பயணமான போது (வாகனங்களுக்கு முன் நடந்து) வழிகாட்டினேன். அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனே இந்த இஸ்லாமிய மார்க்கத்தை உறுதிப்படுத்தினான்; அபூஹுரைராவை (ஒரு) தலைவராக ஆக்கினான்.


«نَشَأْتُ يَتِيمًا، وَهَاجَرْتُ مِسْكِينًا، وَكُنْتُ أَجِيرًا لِابْنَةِ غَزْوَانَ بِطَعَامِ بَطْنِي، وَعُقْبَةِ رِجْلِي، أَحْطِبُ لَهُمْ إِذَا نَزَلُوا، وَأَحْدُو لَهُمْ إِذَا رَكِبُوا، فَالْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ الدِّينَ قِوَامًا، وَجَعَلَ أَبَا هُرَيْرَةَ إِمَامًا»


Nasaayi-3215

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3215. அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்:

நான் (ஒருமுறை) ‘இறைத்தூதர் அவர்களே! நான் ஓர் இளைஞன்; பெண்களை மணந்துகொள்ளத் தேவையான பொருள் ஏதும் என்னிடம் இல்லை. (இந்நிலையில்) நான் தவறான வழிக்குச் சென்றுவிடுவேனோ என என்னைப் பற்றி நானே அஞ்சுகிறேன். (நான் காயடித்துக்கொள்ளலாமா?)” என்று கேட்டேன்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள் (பதிலளிக்காமல்) மெளனமாக இருந்தார்கள். மீண்டும் நான் முன் போன்றே கேட்டேன். அப்போதும் மெளனமாகவே இருந்தார்கள். பிறகும், நான் முன் போன்றே கேட்டேன். அப்போதும் மெளனமாகவே இருந்தார்கள். பிறகு (நான்காது முறையாக) முன்போன்றே நான் கேட்டபோது, ‘அபூஹுரைரா! நீங்கள் (வாழ்க்கையில்) சந்திக்கவிருக்கிற அனைத்தையும் (ஏற்கெனவே எழுதியாயிற்று அவற்றை) எழுதிய எழுதுகோலும் கூட காய்ந்துவிட்டது. எனவே, நீங்கள் காயடித்துக் கொள்ளுங்கள்; அல்லது சும்மா இருங்கள். (எல்லாம் ஒன்று தான்)” என்று கூறினார்கள்.


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي رَجُلٌ شَابٌّ، قَدْ خَشِيتُ عَلَى نَفْسِيَ الْعَنَتَ، وَلَا أَجِدُ طَوْلًا أَتَزَوَّجُ النِّسَاءَ، أَفَأَخْتَصِي؟ فَأَعْرَضَ عَنْهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى قَالَ ثَلَاثًا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا هُرَيْرَةَ، جَفَّ الْقَلَمُ بِمَا أَنْتَ لَاقٍ، فَاخْتَصِ عَلَى ذَلِكَ، أَوْ دَعْ»


Next Page » « Previous Page