377. பெண் குழந்தையின் சிறுநீர் கழுவப்பட வேண்டும். உணவு சாப்பிடாத வரை ஆண் குழந்தையின் சிறு நீருக்கு தண்ணீர் தெளிக்கப் பட வேண்டும்.
அறிவிப்பவர் : அலீ (ரலி).
«يُغْسَلُ مِنْ بَوْلِ الْجَارِيَةِ، وَيُنْضَحُ مِنْ بَوْلِ الْغُلَامِ مَا لَمْ يَطْعَمْ»
377. பெண் குழந்தையின் சிறுநீர் கழுவப்பட வேண்டும். உணவு சாப்பிடாத வரை ஆண் குழந்தையின் சிறு நீருக்கு தண்ணீர் தெளிக்கப் பட வேண்டும்.
அறிவிப்பவர் : அலீ (ரலி).
«يُغْسَلُ مِنْ بَوْلِ الْجَارِيَةِ، وَيُنْضَحُ مِنْ بَوْلِ الْغُلَامِ مَا لَمْ يَطْعَمْ»
كُنْتُ أَخْدِمُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَانَ إِذَا أَرَادَ أَنْ يَغْتَسِلَ قَالَ: «وَلِّنِي قَفَاكَ». فَأُوَلِّيهِ قَفَايَ فَأَسْتُرُهُ بِهِ، فَأُتِيَ بِحَسَنٍ، أَوْ حُسَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَبَالَ عَلَى صَدْرِهِ فَجِئْتُ أَغْسِلُهُ فَقَالَ: «يُغْسَلُ مِنْ بَوْلِ الْجَارِيَةِ، وَيُرَشُّ مِنْ بَوْلِ الْغُلَامِ» قَالَ عَبَّاسٌ: حَدَّثَنَا يَحْيَى بْنُ الْوَلِيدِ
375. அலீ (ரலி) அவர்களின் மகனார் ஹுசைன் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மடியில் இருக்கும் போது அவர்கள் மடி மீது சிறுநீர் கழித்து விட்டார்கள். வேறு ஆடையை அணிந்து கொண்டு உங்களின் இடுப்பாடையை கழுவுவதற்கு என்னிடம் கொடுங்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். பெண் குழந்தையின் சிறுநீருக்காக மட்டுமே கழுவப் பட வேண்டும். ஆண்குழந்தையின் சிறுநீருக்காக தண்ணீர் தெளிக்கப் படவேண்டும் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : லுபாபா பின்த் அல்ஹர்ஸ்.
كَانَ الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ فِي حِجْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَالَ عَلَيْهِ فَقُلْتُ: الْبَسْ ثَوْبًا وَأَعْطِنِي إِزَارَكَ حَتَّى أَغْسِلَهُ. قَالَ: «إِنَّمَا يُغْسَلُ مِنْ بَوْلِ الْأُنْثَى وَيُنْضَحُ مِنْ بَوْلِ الذَّكَرِ»
பாடம் : 137
குழந்தையின் சிறுநீர் பட்ட ஆடையை எவ்வாறு கழுவுவது ?
374. உம்மு கைஸ் பின்த் பிஹ்சன் அவர்கள் உணவு உட்கொள்ளாத தனது சிறு குழந்தையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த குழந்தையை தனது மடியில் உட்கார வைத்தார்கள். அப்போது குழந்தை அவர்களது ஆடையில் சிறுநீர் கழித்து விட்டது. நபி (ஸல்) அவர்கள் உடனே தண்ணீர் கொண்டு வரச் சொல்லி அதை கழுவாமல் அதில் தண்ணீர் தெளித்தார்கள்.
அறிவிப்பவர் : உம்மு கைஸ் பின்த் மிஹ்சன்.
أَنَّهَا، «أَتَتْ بَابُنٍ لَهَا صَغِيرٍ لَمْ يَأْكُلِ الطَّعَامَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَجْلَسَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حِجْرِهِ فَبَالَ عَلَى ثَوْبِهِ، فَدَعَا بِمَاءٍ فَنَضَحَهُ وَلَمْ يَغْسِلْهُ»
373. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் இருந்து இந்திரியத்தை தான் அடிக்கடி கழுவுவதாக கூற நான் செவியுற்றிருக்கின்றேன். (அவ்வாறு கழுவிய பின்பு) கரையை அல்லது கரைகளை நான் காண்பேன் என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸுலைமான் பின் யஸார்.
«إِنَّهَا كَانَتْ تَغْسِلُ الْمَنِيَّ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» قَالَتْ: «ثُمَّ أَرَى فِيهِ بُقْعَةً أَوْ بُقَعًا»
372. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையிலிருந்து இந்திரியத்தை நான் அடிக்கடி சுரண்டிக் கொண்டிருப்பேன். அந்த ஆடையிலேயே அவர்கள் தொழுவார்கள்.
அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரலி)
(குறிப்பு : முஸ்லிம், நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றிருக்கின்றது.)
அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :
முகீரா, அபூமுஃஷா, வாஸில் ஆகியோர் இந்த அறிவிப்புக்கு ஒத்ததாக அறிவிக்கின்றார்கள்.
«كُنْتُ أَفْرُكُ الْمَنِيَّ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيُصَلِّي فِيهِ»
பாடம் : 136
விந்துபட்ட ஆடை பற்றிய சட்டம்.
371. ஹம்மாம் பின் ஹாரிஸ் ஆயிஷா (ரலி) அன்ஹா அவர்களிடம் தங்கியிருந்தார்கள். அப்போது அவர் (தூங்கும் போது) ஸ்கலிதமாகி விட்டார். தன் ஆடையில் பட்ட இந்திரியத்தின் கரையையோ அல்லது ஆடையையோ கழுவும் போது அன்னையாரின் அடிமைப் பெண் பார்த்து விட்டு அன்னையாரிடம் தெரியப்படுத்தி விடுகின்றார். உடனே ஆயிஷா (ரலி) அவர்கள், நிச்சயமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையிலிருந்து இந்திரியக் கரையை நானே சுரண்டியிருக்கிறேன். (அதனால் கரையை நீக்குவதற்காக ரொம்ப நீ அலட்டிக் கொள்ளத் தேவையில்லை) என்று சொன்னார்கள் என்று ஹம்மாம் பின் அல் ஹாரிஸ் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இந்த ஹதீஸை ஹகம் அவர்கள் அறிவிப்பது போன்று அஃமஷ் அவர்களும் அறிவிக்கின்றார்.
أَنَّهُ كَانَ عِنْدَ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا فَاحْتَلَمَ، فَأَبْصَرَتْهُ جَارِيَةٌ لِعَائِشَةَ وَهُوَ يَغْسِلُ أَثَرَ الْجَنَابَةِ مِنْ ثَوْبِهِ، أَوْ يَغْسِلُ ثَوْبَهُ، فَ أَخْبَرَتْ عَائِشَةَ فَقَالَتْ: «لَقَدْ رَأَيْتُنِي وَأَنَا أَفْرُكُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
370. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் தொழுவார்கள். மாத விலக்கான நிலையில் நான் அவர்களுக்கு அருகில் (படுத்து) இருப்பேன். எனக்குள்ள மேலாடை என் மீதும், அதன் ஒரு பகுதி அவர்கள் மீதும் கிடக்கும் என்று அன்னை ஆயிஷா (ரலி) அன்ஹா அவர்கள் கூறினார்கள்.
«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِاللَّيْلِ وَأَنَا إِلَى جَنْبِهِ، وَأَنَا حَائِضٌ وَعَلَيَّ مِرْطٌ لِي وَعَلَيْهِ بَعْضُهُ»
பாடம் : 135
பெண்ணின் ஆடையை அணிந்து தொழ அனுமதி.
369. நபி (ஸல்) அவர்கள் தன் மீது ஒரு மேலாடை கிடக்கும் நிலையிலும், அதன் ஒரு பகுதி மாதவிலக்கான தனது மனைவியரில் ஒருவர் மீது கிடக்கும் நிலையிலும் தொழுதார்கள் என்று மைமூன் (ரலி) அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى وَعَلَيْهِ مِرْطٌ وَعَلَى بَعْضِ أَزْوَاجِهِ مِنْهُ وَهِيَ حَائِضٌ، وَهُوَ يُصَلِّي وَهُوَ عَلَيْهِ»
368. நபி (ஸல்) அவர்கள் நாங்கள் எங்களுடைய உடல்களை மூடிக் கொள்ளும் ஆடைகளில் தொழமாட்டார்கள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அன்ஹா அவர்கள் கூறினார்கள்.
இதை இப்னு சிரீன் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஹம்மாத் கூறுகின்றார் :
நான் முஹம்மத் பின் சீரின் அவர்களிடம் இந்த ஹதீஸ் பற்றி கேட்டபோது அவர் இந்த ஹதீஸ் (யாரிடமிருந்து கேட்டேன் என்று) அறிவிக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு முன்பு இதை நான் செவியுற்றேன். மேலும் இதை யாரிடமிருந்து நான் செவியுற்றேன் என்று எனக்கு தெரியவில்லை. சரியான ஆளிடம் கேட்டேனா? இல்லையா? என்றும் தெரியவில்லை. எனவே இந்த ஹதீஸ் பற்றி மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். என்று சயீத் பின் அபீ சதாகா கூற நான் செவிமடுத்தேன்.
முகீரா, அபூமஃஷர், வாஸில் ஆகியோர் ஹம்மாத் என்பாரின் அறிவிப்பில் ஒன்று படுகின்றனர்.
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يُصَلِّي فِي مَلَاحِفِنَا»
சமீப விமர்சனங்கள்