ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம்: 8
இப்ராஹீமை அல்லாஹ், தன் உற்ற நண்பராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டான் என்னும் (4:125-வது) இறை வசனம்.
அல்லாஹ் கூறுகிறான்:
உண்மையில் இப்ராஹீம் ஒரு முழுச் சமுதாயமாகத் திகழ்ந்தார். அல்லாஹ்வுக்கு அடிபணிபவராக விளங்கினார். (16:120)
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
திண்ணமாக இப்ராஹீம் உள்ளச்சத்துடன் மன்றாடி முறையிடக் கூடியவராகவும் இறையச்சமும், சகிப்புத் தன்மையும் உடையவராகவும் இருந்தார். (9:114)
அபூ மைஸரா (ரஹ்) அவர்கள் மேற்கண்ட (9:114 ம்) இறை வசனத்தி(ன்மூலத்தி)ல் இடம் பெற்றுள்ள அவ்வாஹ் என்னும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் கருணையுள்ளமும் இரக்கமும், இளகிய மனமும் கொண்டவர் என்று பொருள் என்று கூறினார்கள்.
3349. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் (மறுமை நாளில் காலில்) செருப்பணியாதவர்களாகவும் நிர்வாணமானவர்களாகவும், ஆண் குறிகளின் நுனித்தோல் நீக்கப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள். பிறகு, ‘நாம் முதன் முதலாகப் படைத்ததைப் போன்றே அதை மீண்டும் படைப்போம். இது நம் மீது (பொறுப்பாகி விட்ட நம்முடைய) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்யவிருக்கிறோம்’ (திருக்குர்ஆன் 21:104) என்னும் இறைவசனத்தை ஓதினார்கள்.
மறுமை
إِنَّكُمْ مَحْشُورُونَ حُفَاةً عُرَاةً غُرْلًا، ثُمَّ قَرَأَ: {كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ} [الأنبياء: 104]، وَأَوَّلُ مَنْ يُكْسَى يَوْمَ القِيَامَةِ إِبْرَاهِيمُ، وَإِنَّ أُنَاسًا مِنْ أَصْحَابِي يُؤْخَذُ بِهِمْ ذَاتَ الشِّمَالِ، فَأَقُولُ أَصْحَابِي أَصْحَابِي، فَيَقُولُ: إِنَّهُمْ لَمْ يَزَالُوا مُرْتَدِّينَ عَلَى أَعْقَابِهِمْ مُنْذُ فَارَقْتَهُمْ، فَأَقُولُ كَمَا قَالَ العَبْدُ الصَّالِحُ “: {وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي} [المائدة: 117]- إِلَى قَوْلِهِ – {العَزِيزُ الحَكِيمُ} [البقرة: 129]
சமீப விமர்சனங்கள்