Category: இப்னுமாஜா

Ibn-Majah-790

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

790.


«صَلَاةُ الرَّجُلِ فِي جَمَاعَةٍ، تَزِيدُ عَلَى صَلَاةِ الرَّجُلِ وَحْدَهُ أَرْبَعًا وَعِشْرِينَ، أَوْ خَمْسًا وَعِشْرِينَ دَرَجَةً»


Ibn-Majah-3312

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

உலர்ந்த இறைச்சி.

3312. ஒரு மனிதர் முதன் முதலாக (மன்னர்) நபி (ஸல்) அவர்களை சந்திக்க வந்து பேச ஆரம்பித்தார். (பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் நடுநடுங்கிக் கொண்டு தான் மக்கள் நிற்பார்கள்) நபி (ஸல்) அவர்களையும் அது போல் கருதிக்கொண்டு உடல் நடுங்கினார்.

நபி (ஸல்) அவர்கள், ‘சாதாரணமாக இருப்பீராக! நான் அரசன் அல்ல. உலர்ந்த இறைச்சியைச் சாப்பிட்டு வந்த குரைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான்‘ என்று அவரிடம் கூறி அவரை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ மஸ்வூத் (ரலி)

இப்னு மாஜா கூறுகிறார்:

ஜஃபர் பின் அவ்ன் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் இஸ்மாயீல் பின் அஸத் தான் இந்த செய்தியை நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார். (ஆனால் இது தவறாகும்)


أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَكَلَّمَهُ، فَجَعَلَ تُرْعَدُ فَرَائِصُهُ، فَقَالَ لَهُ: «هَوِّنْ عَلَيْكَ، فَإِنِّي لَسْتُ بِمَلِكٍ، إِنَّمَا أَنَا ابْنُ امْرَأَةٍ تَأْكُلُ الْقَدِيدَ»

قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: إِسْمَاعِيلُ وَحْدَهُ، وَصَلَهُ


Ibn-Majah-1889

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1889.


جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ يَتَزَوَّجُهَا؟» ، فَقَالَ رَجُلٌ: أَنَا، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْطِهَا وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ» ، فَقَالَ: لَيْسَ مَعِي، قَالَ: «قَدْ زَوَّجْتُكَهَا عَلَى مَا مَعَكَ مِنَ الْقُرْآنِ»


Ibn-Majah-277

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

உளூவை வழமையாகச் செய்தல்.

277. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் (நேர்மையாகவும் உறுதியாகவும்) நிலைத்திருங்கள்; உங்களால் (அதன் நன்மைகளை முழுமையாக) கணக்கிட்டு விட முடியாது.

உங்கள் நற்செயல்களில் மிகச் சிறந்தது தொழுகை என்பதை அறிந்து கொள்ளுங்கள். மேலும், முஃமினை (முழுமையான இறைநம்பிக்கையாளரை)த் தவிர வேறு எவரும் உளூவை வழக்கமாக்கிக் கொள்வதில்லை.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)


«اسْتَقِيمُوا، وَلَنْ تُحْصُوا، وَاعْلَمُوا أَنَّ خَيْرَ أَعْمَالِكُمُ الصَّلَاةَ، وَلَا يُحَافِظُ عَلَى الْوُضُوءِ إِلَّا مُؤْمِنٌ»


Ibn-Majah-212

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

212. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதனைக் கற்பித்தவரே உங்களில் சிறந்தவர்.

அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி)


«أَفْضَلُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ»


Ibn-Majah-3937

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3937.

(மற்றவர்களின் பொருள்களை) அபகரிப்பவன் என்னைச் சார்ந்தவன் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)


«مَنِ انْتَهَبَ نُهْبَةً، فَلَيْسَ مِنَّا»


Ibn-Majah-199

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

199. நவ்வாஸ் பின் ஸம்ஆன் அல்கிலாபீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

எந்த ஒரு மனித உள்ளமாயினும் அது அளவிலா அருளாளனான அல்லாஹ்வின் இரண்டு விரல்களுக்கிடையே தான் உள்ளது. அவன் நாடினால் அதை நல்வழியில் நிலைப்படுத்துகிறான். அவன் நாடினால் அதை தீயவழியில் பிறழச் செய்துவிடுகிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யா முஸப்பிதல் குலூப் ஸப்பித் குலூபனா அலா தீனிக் உள்ளங்களை நிலைப்படுத்துபவனே எங்கள் உள்ளங்களை உன் மார்க்கத்தில் நிலைப்படுத்துவாயாக என்று பிரார்த்தித்து வந்தார்கள்.

தராசு அளவிலா அருளாளனாகிய அல்லாஹ்வின் கையிலே உள்ளது. மறுமை நாள் வரை அதன் மூலம் அவன் சிலரை உயர்த்திக் கொண்டும், சிலரை தாழ்த்திக் கொண்டும் இருக்கிறான் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«مَا مِنْ قَلْبٍ إِلَّا بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ، إِنْ شَاءَ أَقَامَهُ، وَإِنْ شَاءَ أَزَاغَهُ»

وَكانَ رَسُولُ اللَّهِ صلَّى اللَّهُ عليْهِ وسلَّمَ يَقُولُ: ” يَا مُثبِّتَ الْقُلُوبِ، ثبِّتْ قُلُوبَنَا عَلَى دِينِكَ. قَالَ: وَالْمِيزَانُ بِيَدِ الرَّحْمَنِ، يَرْفَعُ أقْوَامًا وَيَخْفِضُ آخَرِينَ، إِلَى يَوْمِ الْقِيَامَةِ


Ibn-Majah-3834

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3834. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உள்ளங்களைப் புரட்டக்கூடியவனே! என்னுடைய உள்ளத்தை உனது மார்க்கத்தில் நிலைத்திருக்கச் செய்வாயாக!” என அதிகம் பிரார்த்திப்பார்கள். எனவே ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களை நம்பிக்கை கொண்டு, நீங்கள் கொண்டுவந்ததையும் உண்மையாக ஏற்றுள்ளோம். இப்படியிருக்க எங்கள் மீது அச்சப்படுகிறீர்களா? எனக் கேட்க, அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம், நிச்சயமாக உள்ளங்கள் ரஹ்மான்-அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் விரல்களில் இரு விரல்களுக்கிடையில் உள்ளன. அவன் நாடிய பிரகாரம் அதனைப் புரட்டுகின்றான்” என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ أَنْ يَقُولَ: «اللَّهُمَّ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ» ، فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، تَخَافُ عَلَيْنَا وَقَدْ آمَنَّا بِكَ، وَصَدَّقْنَاكَ بِمَا جِئْتَ بِهِ، فَقَالَ: «إِنَّ الْقُلُوبَ بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ عَزَّ وَجَلَّ يُقَلِّبُهَا» وَأَشَارَ الْأَعْمَشُ بِإِصْبَعَيْهِ


Ibn-Majah-2412

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2412.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆணவம், மோசடி, கடன் ஆகிய மூன்றும் நீங்கிய நிலையில் ஒருவரது உடலிலிருந்து உயிர் பிரிந்தால் அவர் சொர்க்கம் செல்வார்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)


مَنْ فَارَقَ الرُّوحُ الْجَسَدَ وَهُوَ بَرِيءٌ مِنْ ثَلَاثٍ، دَخَلَ الْجَنَّةَ: مِنَ الْكَنْزِ، وَالْغُلُولِ، وَالدَّيْنِ


Next Page » « Previous Page