Category: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

Musannaf-Ibn-Abi-Shaybah

Musannaf-Ibn-Abi-Shaybah-29264

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

29264. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“இரண்டு நற்செயல்களை வழமையாக கடைப்பிடித்து வரும் மனிதர் கண்டிப்பாக சுவர்க்கத்தில் நுழைவார். அவ்விரண்டு நற்செயல்களும் (கடைப்பிடித்துவர ) எளிமையானவை தான். ஆனால் அதன்படி செயல்படுபவர்கள் குறைவானவர்களே! என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! அவ்விரண்டு நற்செயல்களும் எவைகள்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முதல் நற்செயல்)  ஒரு மனிதர் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் ஸுப்ஹானல்லாஹ் 10-பத்து தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 10-பத்து தடவையும், அல்லாஹு அக்பர் 10-பத்து தடவையும் கூறுவதாகும்.

இவைகள் (ஐந்து நேர தொழுகையின் மொத்த எண்ணிக்கை, நாவில் மொழிவதின்படி 150-நூற்றி ஐம்பது ஆகும். (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் (ஒரு நன்மைக்கு பத்து என்ற கணக்கின்படி ) 1500-ஆயிரத்தி ஐநூறு நன்மைகளாகும்.

(இதை அறிவித்த அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரவில் படுக்கையில் ஸுப்ஹானல்லாஹ் 33-தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 33-தடவையும், அல்லாஹு அக்பர் 34-தடவையும் கைவிரல்களால் எண்ணி செய்வதை பார்த்தேன் என்று கூறினார்கள்)

(இரண்டாவது  நற்செயல்) ஒரு மனிதர் படுக்கையில் ஸுப்ஹானல்லாஹ்,

«خُلُقَانِ لَا يُحَافِظُ عَلَيْهِمَا رَجُلٌ إِلَّا دَخَلَ الْجَنَّةَ، هُمَا يَسِيرٌ، وَمَنْ يَفْعَلُهُمَا قَلِيلٌ»، قِيلَ: مَا هُمَا يَا رَسُولَ اللَّهِ؟، قَالَ: «الصَّلَوَاتُ الْخَمْسُ، يُسَبِّحُ الرَّجُلُ فِي دُبُرِ كُلِّ صَلَاتِهِ عَشْرًا، وَيَحْمَدُ عَشْرًا، وَيُكَبِّرُ عَشْرًا، فَذَلِكَ خَمْسُونَ وَمِائَةٌ عَلَى اللِّسَانِ، وَأَلْفٌ وَخَمْسُمِائَةٍ فِي الْمِيزَانِ»، قَالَ: وَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُدُّهُنَّ فِي يَدِهِ وَيُسَبِّحُ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَيَحْمَدُ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَيُكَبِّرُ أَرْبَعًا وَثَلَاثِينَ عِنْدَ مَضْجَعِهِ مِنَ اللَّيْلِ، وَإِذَا أَوَى إِلَى فِرَاشِهِ سَبَّحَ وَحَمِدَ وَكَبَّرَ مِائَةً، فَتِلْكَ مِائَةٌ عَلَى اللِّسَانِ، وَأَلْفٌ فِي الْمِيزَانِ، فَأَيُّكُمْ يُذْنِبُ فِي اللَّيْلَةِ أَلْفَيْنِ وَخَمْسَمِائَةٍ


Musannaf-Ibn-Abi-Shaybah-3942

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3942. ஹஜ்ஜாஜ் பின் ஹஸ்ஸான் கூறியதாவது:

நான் அபூமிஜ்லஸ் (ரஹ்) அவர்களிடம் தொழுகையில் கையை எவ்வாறு வைக்கவேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர்கள், வலது கையை இடது கையின் மேல் வைத்து தொப்புளுக்கு கீழே வைக்கவேண்டும் என்று கூறினார்கள்.


قُلْتُ: كَيْفَ يَصْنَعُ؟ قَالَ: «يَضَعُ بَاطِنَ كَفِّ يَمِينِهِ عَلَى ظَاهِرِ كَفِّ شِمَالِهِ وَيَجْعَلُهَا أَسْفَلَ مِنَ السُّرَّةِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-3939

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3939. இப்ராஹீம் நகயீ அவர்கள்  தொழுகையில் தனது வலது கரத்தை இடது கரத்தின் மீது வைத்து தொப்புளுக்குக் கீழே கட்டினார்.

அறிவிப்பவர் : அபூ மஃஷர்


«يَضَعُ يَمِينَهُ عَلَى شِمَالِهِ فِي الصَّلَاةِ تَحْتَ السُّرَّةِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-3938

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3938. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) தமது வலது கையை இடது கையின் மேல் வைத்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)


«رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَضَعَ يَمِينَهُ عَلَى شِمَالِهِ فِي الصَّلَاةِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-3945

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3945. தொழுகையில் (இடது) முன் கை மீது (வலது) முன் கையை வைத்து இரண்டையும் தொப்புளுக்குக் கீழே வைப்பது நபிவழியாகும் என அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஜுஹைஃபா (ரலி)


«مِنْ سُنَّةِ الصَّلَاةِ وَضْعُ الْأَيْدِي عَلَى الْأَيْدِي تَحْتَ السُّرَرِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-12383

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

12383. அதா கூறியதாவது:

தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என இப்னு அப்பாஸ் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ஒரு தீனார் தர்மம் செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.


قُلْتُ لِابْنِ عَبَّاسٍ: الرَّجُلُ يَقَعُ عَلَى امْرَأَتِهِ وَهِيَ حَائِضٌ، قَالَ: «يَتَصَدَّقُ بِدِينَارٍ»


Musannaf-Ibn-Abi-Shaybah-12375

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

12375. தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.


فِي الرَّجُلِ يَقَعُ عَلَى امْرَأَتِهِ وَهِيَ حَائِضٌ قَالَ: «يَتَصَدَّقُ بِدِينَارٍ أَوْ نِصْفِ دِينَارٍ»


Musannaf-Ibn-Abi-Shaybah-12373

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12373.  இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«يُتَصَدَّقُ بِدِينَارٍ أَوْ نِصْفِ دِينَارٍ»


Musannaf-Ibn-Abi-Shaybah-12372

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

12372. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் தான் உடலுறவு கொண்டுவிட்டேன் என்று கூறிய மனிதருக்கு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரை தீனார் தர்மம் செய் என்று கூறினார்கள்.


«يَتَصَدَّقُ بِنِصْفِ دِينَارٍ»


Musannaf-Ibn-Abi-Shaybah-12371

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

12371. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து , என் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டுவிட்டேன் அதற்கு பரிகாரம் என்ன என்று கேட்டார்.

அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரை தீனார் தர்மம் செய் என்று கூறினார்கள்.


أَتَاهُ رَجُلٌ فَقَالَ: إِنِّي وَقَعْتُ عَلَى امْرَأَتِي وَهِيَ حَائِضٌ قَالَ: «تَصَدَّقْ بِنِصْفِ دِينَارٍ»


Next Page » « Previous Page