ஹதீஸின் தரம்: விபரம் கீழே
22963. அலி (ரலி) அவர்கள் கூறியதாவது:
நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் புகுவர்.
பின்பு நரகில் செல்லும் இருவரை கூறினார்கள்.
- (நீதியை அறிந்தும் அதன்படி தீர்ப்பளிக்காமல்) தீர்ப்பில் அநீதி செய்த மனிதர். இவர் நரகத்தில் புகுவார்.
- உண்மையை நாடியவர் தான் என்றாலும், நீதியில் தவறிழைத்தவர். இவரும் நரகத்தில் புகுவார்.
- உண்மையை நாடி சரியாக தீர்ப்பளித்தவர். இவர் சுவர்க்கத்தில் புகுவார்.
அறிவிப்பவர் : அபுல்ஆலியா (ரஹ்)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கதாதா (ரஹ்) அவர்கள், அலி (ரலி) அவர்களிடமிருந்து இச்செய்தியை அறிவிக்கும் அபுல்ஆலியாவிடம் , உண்மையை நாடி, நீதியில் தவறிழைத்தவர் என்ன பாவம் செய்தார்?என்று கேட்டார். அதற்கு அபுல்ஆலியா, அவர் தீர்ப்பின் சட்டங்களை அறியாமல் தீர்ப்பளிக்கும் நீதிபதி பொறுப்பிற்கு வந்திருக்கக்கூடாது என்று கூறினார்கள்.
الْقُضَاةُ ثَلَاثَةٌ: اثْنَانِ فِي النَّارِ، وَوَاحِدٌ فِي الْجَنَّةِ “، فَذَكَرَ اللَّذَيْنِ فِي النَّارِ، قَالَ: «رَجُلٌ جَارَ مُتَعَمِّدًا فَهُوَ فِي النَّارِ، وَرَجُلٌ أَرَادَ الْحَقَّ فَأَخْطَأَ فَهُوَ فِي النَّارِ، آخَرُ أَرَادَ الْحَقَّ فَأَصَابَ فَهُوَ فِي الْجَنَّةِ» قَالَ: فَقُلْتُ لِرُفَيْعٍ: أَرَأَيْتَ هَذَا الَّذِي أَرَادَ الْحَقَّ فَأَخْطَأَ؟ قَالَ: «كَانَ حَقُّهُ إِذَا لَمْ يَعْلَمِ الْقَضَاءَ لَا يَكُونُ قَاضِيًا»
சமீப விமர்சனங்கள்