Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-10121

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10121. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது, உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதைவிட இருபத்தைந்து பங்கு அதிகச் சிறப்புடையதாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் ஸயீத் அவர்கள் இன்ஷா அல்லாஹ்! (இருபத்தைந்து பங்கு அதிகச் சிறப்புடையது) என்று கூறினார்.


«فَضْلُ صَلَاةِ الْجَمَاعَةِ عَلَى صَلَاةِ الرَّجُلِ وَحْدَهُ خَمْسَةٌ وَعِشْرُونَ جُزْءًا» ،

قَالَ يَحْيَى : إِنْ شَاءَ اللَّهُ


Musnad-Ahmad-9150

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

9150. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது, உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதைவிட இருபத்தைந்து பங்கு அதிகச் சிறப்புடையதாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«فَضْلُ صَلَاةِ الْجَمَاعَةِ عَلَى صَلَاةِ أَحَدِكُمْ وَحْدَهُ خَمْسَةٌ وَعِشْرُونَ جُزْءًا»


Musnad-Ahmad-7584

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7584. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது, உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதைவிட இருபத்தைந்து பங்கு அதிகச் சிறப்புடையதாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

இப்னு ஷிஹாப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் இப்ராஹீம் பின் ஸஃத் அவர்கள், இதை நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என்று அபூஹுரைரா (ரலி) கூறியதாக அறிகிறேன் என்று அறிவிக்கிறார்.

ஆனால் இப்னு ஷிஹாப் அவர்களிடமிருந்து அறிவிக்கும்  யஃகூப் பின் இப்ராஹீம் அவர்கள், இந்த சந்தேகம் இல்லாமல் அறிவிக்கிறார் என அஹ்மத் இமாம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அஹ்மத் கூறுகிறார்.

 


«فَضْلُ صَلَاةِ الْجَمَاعَةِ عَلَى صَلَاةِ أَحَدِكُمْ وَحْدَهُ خَمْسَةً وَعِشْرِينَ جُزْءًا»


Musnad-Ahmad-7185

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7185. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தனியாகத் தொழுவதைவிடக் கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறப்புடையதாகும். ஸுப்ஹுத் தொழுகையின்போது பகல் நேர வானவர்களும் இரவு நேர வானவர்களும் ஒன்று சேருகிறார்கள்.

இதை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு, நீங்கள் விரும்பினால் ‘நிச்சயமாக ஸுப்ஹு நேரத்தில் ஓதப்படும் குர்ஆன், சாட்சி கூறக்கூடியதாக இருக்கிறது’ என்ற (திருக்குர்ஆன் 17:78) வது வசனத்தை ஓதுங்கள் என்று கூறினார்.


«تَفْضُلُ الصَّلَاةُ فِي الْجَمِيعِ عَلَى صَلَاةِ الرَّجُلِ وَحْدَهُ خَمْسًا وَعِشْرِينَ، وَتَجْتَمِعُ مَلَائِكَةُ اللَّيْلِ وَمَلَائِكَةُ النَّهَارِ فِي صَلَاةِ الْفَجْرِ»

ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ: ” اقْرَءُوا إِنْ شِئْتُمْ: {وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا} [الإسراء: 78]


Musnad-Ahmad-10742

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10742. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது, தனியாகத் தொழுவதைவிட இருபத்தைந்து பங்கு அதிகச் சிறப்புடையதாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«صَلَاةُ الْجَمْعِ تَفْضُلُ صَلَاةَ الْفَذَّ خَمْسًا وَعِشْرِينَ دَرَجَةً»


Musnad-Ahmad-7430

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7430. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தமது வீட்டில் தொழுவதைவிடவும், தமது கடைத்தெருவில் தொழுவதைவிடவும் அவர் ஜமாஅத்துடன் தொழுவது இருபதுக்கும் மேற்பட்ட மடங்கு அதிகச் சிறப்புடையதாகும். ஏனெனில், உங்களில் ஒருவர் அங்கத் தூய்மை (உளூ) செய்து, அதைச் செம்மையாகவும் செய்து, தொழ வேண்டும் என்ற ஆர்வத்தில், தொழுகின்ற ஒரே நோக்கத்துடன் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர் பள்ளிவாசலுக்குள் நுழையும்வரை அவர் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும் ஒரு தகுதி அவருக்கு உயர்த்தப்படுகிறது; ஒரு தவறு அவருக்காக மன்னிக்கப்படுகிறது. அவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்துவிட்டால், தொழுகையை எதிர்பார்த்து அவர் தம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கும்வரை அவர் தொழுதுகொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார். உங்களில் ஒருவர் தாம் தொழுத இடத்திலேயே வீற்றிருக்கும்வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறார்கள். “இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இவருக்குக் கருணை புரிவாயாக! இறைவா! இவரது பாவமன்னிப்பை ஏற்பாயாக!” என்று அவர்கள் கூறுகின்றனர். அவர் சிறு துடக்கின் மூலம் தொல்லை தராதவரை (இது நீடிக்கும்).

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


صَلَاةُ الرَّجُلِ فِي جَمَاعَةٍ تَزِيدُ عَنْ صَلَاتِهِ فِي بَيْتِهِ وَصَلَاتِهِ فِي سُوقِهِ بِضْعًا وَعِشْرِينَ دَرَجَةً، وَذَلِكَ: أَنَّ أَحَدَكُمْ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ أَتَى الْمَسْجِدَ، لَا يُرِيدُ إِلَّا الصَّلَاةَ، ولَا يَنْهَزُهُ إِلَّا الصَّلَاةُ، لَمْ يَخْطُ خَطْوَةً إِلَّا رُفِعَ لَهُ بِهَا دَرَجَةٌ، وَحُطَّ بِهَا عَنْهُ خَطِيئَةٌ، حَتَّى يَدْخُلَ الْمَسْجِدَ، فَإِذَا دَخَلَ الْمَسْجِدَ كَانَ فِي صَلَاةٍ مَا كَانَتِ الصَّلَاةُ هِيَ تَحْبِسُهُ، وَالْمَلَائِكَةُ يُصَلُّونَ عَلَى أَحَدِهِمْ مَا دَامَ فِي مَجْلِسِهِ الَّذِي صَلَّى فِيهِ، يَقُولُونَ: اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ارْحَمْهُ، اللَّهُمَّ تُبْ عَلَيْهِ، مَا لَمْ يُؤْذِ فِيهِ، مَا لَمْ يُحْدِثْ فِيهِ


Musnad-Ahmad-9231

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

9231. நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் எவரும் என்னை விட அதிகமான ஹதீஸ்களை அறிந்திருக்கவில்லை; அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களைத் தவிர. காரணம் அவர் (ஹதீஸ்களை) எழுதி வைத்துக் கொள்வார். நினைவிலும் வைத்துக்கொள்வார். நான் நினைவில் வைத்துக்கொள்வேன்; கையால் எழுதி வைக்கமாட்டேன்; அவர் நபி (ஸல்)  அவர்களிடம் ஹதீஸ்களை எழுதிக்கொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அவருக்கு எழுத அனுமதி தந்தார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்கள்: முஜாஹித் (ரஹ்), முகீரா பின் ஹகீம் (ரஹ்)

 

 


«مَا كَانَ أَحَدٌ أَعْلَمَ بِحَدِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنِّي، إِلَّا مَا كَانَ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، فَإِنَّهُ كَانَ يَكْتُبُ بِيَدِهِ، وَيَعِيهِ بِقَلْبِهِ، وَكُنْتُ أَعِيهِ بِقَلْبِي، وَلَا أَكْتُبُ بِيَدِي، وَاسْتَأْذَنَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْكِتَابِ عَنْهُ، فَأَذِنَ لَهُ»


Musnad-Ahmad-7389

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

7389. நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் எவரும் என்னை விட அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கவில்லை, அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களைத் தவிர. (அவர்களிடம் சில நபிமொழிகள் இருந்தன). காரணம் அவர்கள் (ஹதீஸ்களை) எழுதி வைத்துக் கொள்வார்கள். நான் (நினைவில் வைத்துள்ளேன்) எழுதி வைத்ததில்லை என அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்)


«لَيْسَ أَحَدٌ أَكْثَرَ حَدِيثًا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنِّي إِلَّا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، فَإِنَّهُ كَانَ يَكْتُبُ، وَكُنْتُ لَا أَكْتُبُ»


Musnad-Ahmad-21579

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

21579. முத்தலிப் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு தடவை ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், முஆவியா (ரலி) அவர்களிடம் வந்தார். அப்போது முஆவியா (ரலி) அவர்களுக்கு , ஸைத் (ரலி) அவர்கள் ஒரு ஹதீஸை அறிவித்தார். முஆவியா (ரலி), (தன்னருகில் உள்ள) ஒருவரிடம் அந்த ஹதீஸை எழுதச் சொல்ல அவர் எழுதினார். உடனே ஸைத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்கள் கூறும் செய்திகளை எழுதவேண்டாம் என்று எங்களுக்குக் கட்டளையிட்டிருந்தார்கள் என்று கூறினார். எனவே (எழுதப்பட்ட) அந்த ஹதீஸை அவர் அழித்துவிட்டார்.


دَخَلَ زَيْدُ بْنُ ثَابِتٍ عَلَى مُعَاوِيَةَ، فَحَدَّثَهُ حَدِيثًا، فَأَمَرَ إِنْسَانًا أَنْ يَكْتُبَ، فَقَالَ زَيْدٌ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ نَكْتُبَ شَيْئًا مِنْ حَدِيثِهِ، فَمَحَاهُ»


Musnad-Ahmad-11536

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

11536. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் கூறுவதில் குர்ஆன் தவிர மற்றதை எழுதி வைக்காதீர்கள். குர்ஆன் தவிர மற்றதை என்னிடமிருந்து எவரேனும் எழுதி வைத்திருந்தால் அதை அவர் அழித்துவிடட்டும்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)


«لَا تَكْتُبُوا عَنِّي شَيْئًا غَيْرَ الْقُرْآنِ، فَمَنْ كَتَبَ عَنِّي شَيْئًا غَيْرَ الْقُرْآنِ، فَلْيَمْحُهُ»


Next Page » « Previous Page