Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-11906

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11906. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு பெரும்குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாதவரை உலக முடிவு நாள் வராது. அவ்விரு குழுக்களுக்குமிடையே பெரும் போர் நிகழும். ஆனால், அவ்விரண்டும் முன் வைக்கும் வாதம் ஒன்றாகவே இருக்கும்.

மேலும் அவ்விரண்டு குழுவினர்களுக்கிடையில் (கிளர்ச்சியாளர்கள்) கூட்டம் ஒன்றும் தோன்றும். இரு பிரிவினரில் சத்தியத்திற்கு மிக நெருக்கத்திலிருக்கும் பிரிவினர் அவர்களைக் கொன்றொழிப்பார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)


«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَقْتَتِلَ فِئَتَانِ عَظِيمَتَانِ، دَعْوَاهُمَا وَاحِدَةٌ، تَمْرُقُ بَيْنَهُمَا مَارِقَةٌ يَقْتُلُهَا أَوْلَاهُمَا بِالْحَقِّ»


Musnad-Ahmad-10864

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10864. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு பெரும்குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாதவரை உலக முடிவு நாள் வராது. அவ்விரு குழுக்களுக்குமிடையே பெரும் போர் நிகழும். ஆனால், அவ்விரண்டும் முன் வைக்கும் வாதம் ஒன்றாகவே இருக்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَقْتَتِلَ فِئَتَانِ عَظِيمَتَانِ، تَكُونُ بَيْنَهُمَا مَقْتَلَةٌ عَظِيمَةٌ، وَدَعْوَاهُمَا وَاحِدَةٌ»


Musnad-Ahmad-10828

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10828. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யுகமுடிவு நாளுக்கு முன்பு (தன்னை நபி என்று வாதிக்கும்) ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் (உலகில்) தோன்றுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«بَيْنَ يَدَيِ السَّاعَةِ ثَلَاثُونَ كَذَّابًا»


Musnad-Ahmad-9818

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

9818. பெரும் பொய்யர்களான ‘தஜ்ஜால்கள்’ ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாத வரை இறுதி நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் அல்லாஹ்வின் மீதும், அவனது தூதரின் மீதும் பொய் கூறுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَخْرُجَ ثَلَاثُونَ كَذَّابًا دجَالًا كُلُّهُمْ، يَكْذِبُ عَلَى اللَّهِ وَرَسُولِهِ»


Musnad-Ahmad-9548

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

9548. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யுகமுடிவு நாளுக்கு முன்பு பெரும் பொய்யர்களான ‘தஜ்ஜால்கள்’ ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றுவார்கள். அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை நபி (இறைத்தூதர்) என்று வாதிடுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


بَيْنَ يَدَيِ السَّاعَةِ قَرِيبٌ مِنْ ثَلَاثِينَ دَجَّالِينَ كَذَّابِينَ، كُلُّهُمْ يَقُولُ: أَنَا نَبِيٌّ، أَنَا نَبِيٌّ


Musnad-Ahmad-9897

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

9897. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெரும் பொய்யர்களான ‘தஜ்ஜால்கள்’ ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாத வரை யுகமுடிவு நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான்.

(மேலும் யுகமுடிவு நாளின் நெருக்கத்தில்) செல்வம் பெருகிக் கொழிக்கும்; குழப்பங்கள் வெளிப்படும்; (பேராசையின் விளைவாக மக்களின் மனங்களில்) கருமித்தனம் உருவாக்கப்படும்; “ஹர்ஜ்” பெருகிவிடும்” என்று சொன்னார்கள். “மக்கள், “ஹர்ஜ்” என்றால் என்ன?” என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கொலை” என்று மூன்று தடவை கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَظْهَرَ ثَلَاثُونَ دَجَّالُونَ، كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ رَسُولُ اللَّهِ،

وَيَفِيضَ الْمَالُ فَيَكْثُرَ، وَتَظْهَرَ الْفِتَنُ، وَيَكْثُرَ الْهَرْجُ» قَالَ: قِيلَ: أَيُّمَا الْهَرْجُ؟ قَالَ: «الْقَتْلُ الْقَتْلُ» ثَلَاثًا


Musnad-Ahmad-10865

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10865. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெரும் பொய்யர்களான ‘தஜ்ஜால்கள்’ ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாத வரை இறுதி நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَنْبَعِثَ دَجَّالُونَ كَذَّابُونَ قَرِيبٌ مِنْ ثَلَاثِينَ، كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ رَسُولُ اللَّهِ»


Musnad-Ahmad-8137

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

8137. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெரும் பொய்யர்களான ‘தஜ்ஜால்கள்’ ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாத வரை இறுதி நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَنْبَعِثَ دَجَّالُونَ كَذَّابُونَ قَرِيبًا مِنْ ثَلَاثِينَ، كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ رَسُولُ اللَّهِ»


Musnad-Ahmad-7228

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7228. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெரும் பொய்யர்களான ‘தஜ்ஜால்கள்’ ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாத வரை இறுதி நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُبْعَثَ دَجَّالُونَ كَذَّابُونَ، قَرِيبٌ مِنْ ثَلَاثِينَ، كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ رَسُولُ اللَّهِ»


Musnad-Ahmad-14078

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

14078. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கல்வி அகற்றப்படுவதும்; அறியாமை வெளிப்படுவதும்; விபசாரம் பரவலாக நடைபெறுவதும்; மது (அதிகமாக) அருந்தப்படுவதும்; (குடும்பத்தில்) ஐம்பது பெண்களுக்கு ஒரே ஆண் நிர்வாகியாக இருக்கும் அளவுக்கு ஆண்கள் (எண்ணிக்கை குறைந்து) போய், பெண்கள் அதிகமாக ஆவதும் யுகமுடிவு நாளின் அடையாளங்களில் உள்ளவையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: கதாதா (ரஹ்)

அறிவிப்பாளர் ஹம்மாம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:

கதாதா (ரஹ்) அவர்களிடமிருந்து, மேற்கண்டவைகள் “யுகமுடிவு நாளின் அடையாளங்களில் உள்ளவை” என்றும், மேற்கண்டவைகள் “நிகழாமல் யுகமுடிவு நாள் ஏற்படாது” என்றும்-இந்த இருவகையிலும் செவியேற்றுள்ளேன்.

 


«مِنْ أَشْرَاطِ السَّاعَةِ» – قَالَ هَمَّامٌ: وَرُبَّمَا قَالَ: «لَا تَقُومُ السَّاعَةُ» ، قَالَ هَمَّامٌ: كِلَاهُمَا قَدْ سَمِعْتُ – «حَتَّى يُرْفَعَ الْعِلْمُ، وَيَظْهَرَ الْجَهْلُ، وَتُشْرَبَ الْخَمْرُ، وَيَظْهَرَ الزِّنَا، وَيَقِلَّ الرِّجَالُ، وَيَكْثُرَ النِّسَاءُ، حَتَّى يَكُونَ لِخَمْسِينَ امْرَأَةً الْقَيِّمُ الْوَاحِدُ»


Next Page » « Previous Page