Category: திர்மிதீ

Tirmidhi-2350

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

ஏழ்மையின் சிறப்பு பற்றி வந்துள்ளவை.

2350. அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து), “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களை நான் நேசிக்கிறேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை யோசித்து சொல்லுங்கள்” என்று கூறினார்கள். அந்த மனிதர், “அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களை நான் நேசிக்கிறேன்” என்று கூறினார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை யோசித்து சொல்லுங்கள்!” என்று கூறினார்கள். அந்த மனிதர், “அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களை நான் நேசிக்கிறேன்” என்று கூறினார். இவ்வாறு மூன்று முறை நடந்தது.

பிறகு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் (உண்மையிலேயே) என்னை நேசிப்பீர்களானால் வறுமையை எதிர்கொள்ள தக்க முன்னேற்பாட்டுடன் தயாராகிக் கொள்ளுங்கள்!. ஏனெனில், பள்ளத்தை நோக்கிச் செல்லும் வெள்ளத்தைக் காட்டிலும் என்னை நேசிப்பவரை நோக்கி வறுமை விரைவாக வந்துசேரும்” என்று கூறினார்கள்.

இந்த செய்தி இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ஹஸன் ஃகரீப் என்ற தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.

இந்த செய்தியில் இடம்பெறும் அபுல்வாஸிஉ அர்ராஸிபீ என்பவரின்

قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ. فَقَالَ لَهُ: «انْظُرْ مَاذَا تَقُولُ»، قَالَ: وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ، ثَلَاثَ مَرَّاتٍ، فَقَالَ: «إِنْ كُنْتَ تُحِبُّنِي فَأَعِدَّ لِلْفَقْرِ تِجْفَافًا، فَإِنَّ الفَقْرَ أَسْرَعُ إِلَى مَنْ يُحِبُّنِي مِنَ السَّيْلِ إِلَى مُنْتَهَاهُ»

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ شَدَّادٍ أَبِي طَلْحَةَ، نَحْوَهُ بِمَعْنَاهُ،


Tirmidhi-6

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6. நபி (ஸல்) அவர்கள் கழிவறைக்குள் நுழையும் போது “அல்லாஹும்ம இன்னீ அஊதுபி(க்)க மினல் குபுஸி வல்கபாயிஸ்” (பொருள்: இறைவா! அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியவற்றைத் தூண்டும் ஆண், பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்) என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا دَخَلَ الْخَلَاءَ، قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ»


Tirmidhi-5

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

கழிப்பிடத்திற்குள் நுழையும் போது சொல்ல வேண்டியவை.

5. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழையும்போது, “அல்லாஹும்ம இன்னீ அஊதுபி(க்)க மினல் குபுஸி வல்கபாயிஸ்” (இறைவா! அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியவற்றைத் தூண்டும் ஆண், பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்) என்று கூறுவார்கள்.

அப்துல்அஸீஸ் அவர்கள் ஒரு தடவை இந்த பிரார்த்தனையை, “அல்லாஹும்ம இன்னீ அஊதுபி(க்)க மினல் குப்ஸி வல்கபீஸ் அல்லது மினல் குபுஸி வல்கபாஇஸ்” என்றும், மற்றொரு தடவை, “அஊது பில்லாஹி மினல் குப்ஸி வல்கபீஸ் அல்லது மினல் குபுஸி வல்கபாஇஸ்”  என்றும் கூறியதாக ஷுஅபா அவர்கள் கூறினார்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:


كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْخَلَاءَ، قَالَ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ ” قَالَ شُعْبَةُ: وَقَدْ قَالَ مَرَّةً أُخْرَى: «أَعُوذُ بِاللَّهِ مِنَ الْخُبْثِ وَالْخَبِيثِ – أَوِ الْخُبُثِ وَالْخَبَائِثِ -»


Tirmidhi-2573

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய நரகத்தின் நிலைகளைப் பற்றிய பாடங்கள்.

பாடம்:

நரகத்தைப் பற்றிய வர்ணனை.

2573. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமைநாளில்) நரகம் எழுபதாயிரம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்படும். ஒவ்வொரு சங்கிலியுடனும் எழுபதாயிரம் வானவர்கள் இருந்து, அதை இழுத்து வருவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

(அல்அலாஉ பின் காலித் அல்காஹிலீ அவர்களிடமிருந்து அறிவிக்கும்) ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள், இந்த செய்தியை நபியின் கூற்றாக அறிவிக்கவில்லை என்று (எனது ஆசிரியர்) அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் கூறினார்.

இவ்வாறே (எனது ஆசிரியர்) அப்து பின் ஹுமைத் என்பவரும் ஸவ்ரீ வழியாக (நபித்தோழரின் கூற்றாக அறிவித்தார்). நபியின் கூற்றாக அறிவிக்கவில்லை.


«يُؤْتَى بِجَهَنَّمَ يَوْمَئِذٍ لَهَا سَبْعُونَ أَلْفَ زِمَامٍ، مَعَ كُلِّ زِمَامٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ يَجُرُّونَهَا»

قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ: «وَالثَّوْرِيُّ لَا يَرْفَعُهُ»

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ المَلِكِ بْنُ عَمْرٍو أَبُو عَامِرٍ العَقَدِيُّ، عَنْ سُفْيَانَ، عَنِ العَلَاءِ بْنِ خَالِدٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ «وَلَمْ يَرْفَعْهُ»


Tirmidhi-2679

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்த காரியங்களை தவிர்ந்து கொள்ளுதல்.

2679. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்குவிட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள். உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை (உங்களால் முடிந்த அளவிற்குச்) செய்யுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபட்டதும் தான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«اتْرُكُونِي مَا تَرَكْتُكُمْ، فَإِذَا حَدَّثْتُكُمْ، فَخُذُوا عَنِّي، فَإِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِكَثْرَةِ سُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ»


Tirmidhi-1480

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1480.


قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ وَهُمْ يَجُبُّونَ أَسْنِمَةَ الإِبِلِ، وَيَقْطَعُونَ أَلْيَاتِ الغَنَمِ، فَقَالَ: «مَا قُطِعَ مِنَ البَهِيمَةِ وَهِيَ حَيَّةٌ فَهِيَ مَيْتَةٌ»

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ الجُوزَجَانِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو النَّضْرِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ نَحْوَهُ،


Tirmidhi-3427

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 35

3427. உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது, “பிஸ்மில்லாஹி தவக்கல்த்து அலல்லாஹி; அல்லாஹும்ம இன்னா நவூது பிக மின் அன் நஸில்ல, அவ் நழில்ல அவ் நள்லிம அவ் நுள்லம அவ் நஜ்ஹல அவ் யுஜ்ஹல அலைனா” என்று கூறுவார்கள்.

(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் (புறப்படுகிறேன்) அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். யாஅல்லாஹ்! நாங்கள் உண்மையிலிருந்து நழுவுதல், அல்லது வழி தவறிப்போதல், அல்லது அநீதம் செய்தல், அல்லது அநீதத்திற்குள்ளாதல் அல்லது அறிவீனமாகச் செயல்படுதல் அல்லது அறிவீனமாக வழி நடத்தப்படுதல் ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறோம்)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ قَالَ: «بِسْمِ اللَّهِ، تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ أَنْ نَزِلَّ، أَوْ نَضِلَّ، أَوْ نَظْلِمَ، أَوْ نُظْلَمَ، أَوْ نَجْهَلَ، أَوْ يُجْهَلَ عَلَيْنَا»


Tirmidhi-1578

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

(அல்லாஹ்விற்கு) நன்றி தெரிவிக்க ஸஜ்தா செய்வது பற்றி வந்துள்ளவை.

1578. நபி (ஸல்) அவர்களுக்கு ஏதேனும் ஒரு செய்தி கிடைத்து அதனால் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால் உடனே அல்லாஹ்விற்கு நன்றி தெரிவிக்க ஸஜ்தாவில் விழுவார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَتَاهُ أَمْرٌ، فَسُرَّ بِهِ، فَخَرَّ لِلَّهِ سَاجِدًا»


Tirmidhi-3891

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

நபி (ஸல்) அவர்களின் மனைவியரின் சிறப்புகள்.

3891. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் (ஸஃபிய்யா-ரலி, அல்லது ஹஃப்ஸா-ரலி) மரணித்து விட்டார்கள் என்று ஸுப்ஹ் தொழுகைக்குப் பின் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சொல்லப்பட்டது. உடனே அவர்கள், ஸஜ்தாவில் விழுந்தார்கள். அப்போது அவர்களிடம் இந்த நேரத்தில் ஸஜ்தா செய்கிறீர்களே? என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர்கள், “ஏதேனும் ஒரு சோதனை -(துன்பத்தை) நீங்கள் கண்டால் (அல்லது கேட்டால்), ஸஜ்தா செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மனைவியர் இறப்பதைவிட பெரும் துன்பம் அளிக்கும் சோதனை வேறு எதுவாக இருக்க முடியும்? என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ஹஸன் ஃகரீப் எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இந்த செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே வந்துள்ளதாக நாம் அறிகிறோம்.


قِيلَ لِابْنِ عَبَّاسٍ بَعْدَ صَلَاةِ الصُّبْحِ مَاتَتْ فُلَانَةُ لِبَعْضِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَجَدَ، فَقِيلَ لَهُ: أَتَسْجُدُ هَذِهِ السَّاعَةَ؟ فَقَالَ: أَلَيْسَ قَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا رَأَيْتُمْ آيَةً فَاسْجُدُوا»، فَأَيُّ آيَةٍ أَعْظَمُ مِنْ ذَهَابِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ


Next Page » « Previous Page